பயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் பிரதேசங்களில் மீள் நிர்மாணமும் ஜனநாயகமயமாக்கலும் குறித்து ஒரு பகுப்பாய்வு



(பயங்கரவாதத்தின் பின்னர்: இலங்கையின் முரண்பாட்டுப் பிரதேசங்களில் மீள் நிர்மாணமும் ஜனநாயகமயமாக்கலும் குறித்து ஒரு பகுப்பாய்வு எனும் தலைப்பில் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகத்தில் 5 யூன் 2009 . இடம்பெற்ற நிகழ்வில் எஸ் .எஸ். எம் பஷீர் ஆற்றிய உரை)


இன்று பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மீள் நிர்மாணமும், ஜனநாயக மயப்படுத்தலும் என்பது தொடர்பான இன்றைய நிகழ்வில் முஸ்லிம் மக்களின் கண்ணோட்டத்தினை வெளிப்படுத்த கிடைத்த இச்சந்தர்ப்பம் ஒரு சிறப்புரிமையாகும். கிழக்கில் புலிகளினால் துன்புறுத்தப்பட்டு பேச்சு சுதந்திரம், நடமாடும் சதந்திரத்திற்காகவும் போராடியவர்களில் நானும் ஒருவன். நாங்கள் ஜனநாயக நிலைப்பாடுபற்றி பேசும்போது பேச்சுரிமையும், நடமாடும் உரிமையும் பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அடைந்திருக்கின்றோமா என்பது தொடர்பில் பேசுவது முக்கியமானதாகும். புலிகளால் சுதந்திரமான நடமாட்டமும், பேச்சுரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து நானும் வந்தவன். ஒரு காலகட்டம் இருந்தது முஸ்லிம் பிரமுகர்கள் எவரேனும் வெளிப்படையாக புலிகளை விமாச்சித்தபோது அவர்கள் கடத்தப்பட்டு ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய சம்பவங்கள் ஒன்றல்ல நூற்றுக்கணக்கில் இடம்பெற்றன. ஒரு தடவை ஒரு வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினரை அடித்து குற்றுயிரும், கொலையுயிருமாக கடத்தியபோது நாங்கள் சட்டச்சிக்கல் காரணமாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆட்கொணர்வு மனுவினை கொழும்பு நீதிமன்றத்தில் கொண்டுவர நேர்ந்தது. அதன் விளைவாக எச்சரிக்கைத் தொலைபேசி எனது வீட்டிற்கு விடப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில்தான் நாங்கள் வாழநேரிட்டது. நாங்கள் அடிமைகள்போல புலிகளின் கட்டுப்பாட்டில் வாழவேண்டிய நிலை எற்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள். அவர்கள் 24மணித்தியாலத்திற்குள் 500ரூபாய் பிரித்தானிய நாணயத்தில் 2பவுணுடன் வெளியேற்றப்பட்டார்கள். இந்த துக்ககரமான சம்பவம் மன்னிக்கப்படலாம் ஆனால் இலகுவாக மறக்கப்படக்கூடியதல்ல. இது தமிழ் சமூகத்தினால் செய்யப்படவில்லை, புலிகளினால் செய்யப்பட்டது. நான் பிறந்த கிராமத்திலும் மற்றும் ஏனைய முஸ்லிம் கிராமங்களிலும் கிழக்கிலே முஸ்லிம்கள் புலிகளால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். எனது அயலவர்கள் கொல்லப்பட்டாhகள். புலிகளுக்கு சற்று கூடுதலான நேரம் கிடைத்திருந்தால் சுமார் 200கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் வாழ்ந்த எமது குடும்பமும் பலியாகிப்போயிருக்கும். நான் கொழும்பில் வாழ்ந்தபடியினால் புலிகளிடமிருந்து அக்கால கட்டத்தில் தப்பிக்கமுடிந்தது. காத்தான்குடி பள்ளிவாசல்களிலும், முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள், எனது உறவினர்களும் அதில் கொல்லப்பட்டார்கள். புலிகளினால் பல பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு இலக்குகளாக திகழ்ந்தன. நாங்கள் இவ் அனுபவங்களைத் தாண்டி இப்போது உயிருடன் இருக்கின்றோம். எமது சமூகத்தின் சார்பாக குரல் கொடுக்கும் சந்தாப்பம் இன்றும் எனக்கு கிடைத்திருக்கின்றது. எனது நண்பா (ஈ.பி.டி.பி ) சார்பில் கலந்துகொண்ட எஸ் தவராஜா சொன்னார் நேற்று அமைச்சர் திரு போகொல்லாகம அவர்களுடனான லண்டன சந்திப்பின்போது; அமைச்சர் யுத்த வெற்றிகுறித்து உரையாற்றியபோது அங்குவந்திருந்த எந்தத் தமிழரும் கரகோசம் எழுப்பவில்லை எனக் குறிப்பிட்டார். நண்பர் தவராஜா தமது தலைவருக்கு என்ன நடந்தது என விபரித்திருந்தார். ஆனால் அத்தகைய துன்பங்களை ஏற்படுத்திய அந்த மனிதன் இறந்தவிட்டான். என்பதையிட்டு அவர் கைதட்டுவதற்கு தயாராக இருக்கவில்லை. இது ஒரு முரண்நகை நிலைப்பாடாகும். (இங்கு உரையாற்றிய தவராஜா அவர்கள் தமது தலைவர்மீதும் தன்மீதும் எத்தனித்த கொலைமுயற்சிகள் பற்றியும் தாங்கள் அவற்றில் தப்பித்தமை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். நான் பகிரங்கமாகவே மகிழ்ச்சியடைகின்றேன் என்பதனை தெரிவிக்க விரும்புகின்றேன். என்னிடம் தமிழ் தலைவரின் (பிரபாகரன்) இறப்புப் பற்றியும் புலிகளினுடைய அழிவுபற்றியும் மகிழ்ச்சியடைந்தாக கூறிய தமிழர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் சொன்னார்கள் இதுதான் பயங்கரவாதத்தின் முடிவு எனச் சொன்னார்கள். ஏனெனில் அவர்களை (புலிகளை) எதிர்த்தவர்கள் அங்கு வாழமுடியவில்லை. அவர்கள் அங்கிருந்து ஒடிவந்து மேற்குலகிலே வாழவேண்டி நேரிட்டது அவர்கள் இப்போது அவ்வாறான பயங்கரத்திலிருந்த விடுபட்டு சுதந்திரமாக வாழ்கின்றார்கள.; அத்துடன் அங்கு சுதந்திரமாக போகமுடியுமெனவும் நம்புகின்றார்கள்.. இப்போது நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோமா எனக் கேட்கப்படுமானால் அதற்கான பதில் ஆம் என்றுதான் இருக்கும.; அதனை அங்குள்ள மக்கள் உறுதிசெய்கின்றார்கள். அவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடமுடியுமென்பது குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள். நான் கிழக்க மாகாண முதலமைச்சரையும் அவர்களுடன் உள்ளவர்களையும் சந்தித்தபொழுது ஏன் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்தீர்கள் என்று கேட்ட பொழுது அவர்கள் நாங்கள் சாதாரண சிப்பாய்கள் எங்களுக்கு வன்னியிலிருந்து விடப்படும் தலைமைத்துவத்தின் ஆணையினை நிறைவேற்றாமல் இருக்கமுடியாது எனவும் அதற்காக வருந்துவதாகவும் மன்னிப்பும் கோரினார்கள். 1990களில் புலிகளால் இளைக்கப்பட்ட அநீதிகளுடன் 1915ம் ஆண்டு சிங்கள –முஸ்லிம் வன்முறையை ஒப்பிட்டால் சில வருடங்களில் சிங்கள –முஸ்லிம் உறவுகள் மீளமைக்கப்பட்டதுடன் இன்று இலங்கையின் மத்திய பிரதேசத்திலே முஸ்லிம்கள் அரசியலிலும், பொருளாதாரத்திலும் செயற்திறன்மிக்க சமூகமாக திகழ்கின்றார்கள். ஆனால் 18வருடங்களாக வடக்கிற்கு மீளப்போகமுடியாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அகதி முகாம்களில், குடிசைகளில், கொட்டில்களில் புத்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் சிங்கள மக்களுடனும், தமிழ் மக்களுடனும் வாழ முடிந்தது. இதற்கு தடையாக இருந்தவர்களே புலிகள்தான். இங்கே தமிழ் பேசும் மக்கள் என்ற பதம்குறித்து ஒரு தவறான புரிதல் உண்டு. எனெனில் தமிழ் அரசியல்வாதிகள் நாங்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்ற ஒரே மக்கள் என்ற அடிப்படையில் பயன்படுத்தினர். ஆனால் அது உண்மையல்ல. அப்பிரயோகம் அரசியல் இலாபத்திற்காகவே உபயோகிக்கப்பட்டது. அது உண்மையாக இருந்திருக்குமானால் ஆயிரக்கணக்கான வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் யாவரும் ஒரே மொழி பேசுபவர்களாயின் ஏன் வெளியேற்றப்பட்டார்கள். நாங்கள் பயங்கரவாதத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது, ஜனநாயக வழிமுறைமூலமே போராடவேண்டும் சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை இலங்கை பூரணத்துவமாக நடந்து வருகின்றது என நான் சொல்லவில்லை நாங்களும் சிறுபான்மை என்ற மனப்பதிவிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பது குறித்தும் கவனத்தை குவிக்கவேண்டியுள்ளது. எவ்வாறு நாங்கள் இலங்கையனாக அடையாளங் காண்பது எனவும் சிந்திக்கவேண்டும் .இலங்கையை பிரித்தானியர் விட்டுச்சென்றபோது அவர்கள் அறிமுகப்படுத்திய பிறப்புச் சான்றுப்பத்திரத்தினை எடுத்துக்கொண்டால் அது இனரீதியாக மக்களை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என வகைப்படுத்தியிருந்தது. ஆனால் பிரித்தானியாவில் அவ்வாறு இனரீதியாக அடையாளப்படுத்தும் பிறப்புச்சான்றிதழ் பத்திரம் இல்லை. ஒரு குழந்தை பிறந்தவுடன் எந்த இனத்தைச்சேர்ந்தது என்பதனை இங்கு பிறப்புச்சான்றிதழ் பத்திரத்தில் காட்டப்படுவதில்லை. பிரித்தானியரே இதனை எமக்கு அறிமுகப்படுத்தினர். இதிலிருந்தும் நாம் விடுபடவேண்டும். இந்த வேண்டுகோளை இந்த அவையிலே இருக்கின்ற அமைச்சரிடம் (டொக்டர் சரத் அமுனுகம) நான் வேண்டிக்கொள்கின்றேன். வேறு வழிமுறையில் இன அடையாளத்தினை சுட்டிக்காட்டும் படிவத்தினை அறிமுகப்படுத்துங்கள். (பிரித்தானியாவில் இருப்பதுபோல்) அந்தப் படிவத்திலிருந்து இனத்தினைத் தேர்ந்து எடுத்தக் கொள்ளலாம். இனத்தினைக் குறிப்பிட விரும்பாதவர்கள் வேண்டுமானால் ” ஏனையோர்” (ழுவாநசள) என்று குறிப்பிடலாம்” நாங்களும் முஸ்லிம்களும் புலிகளின் அதிகாரத்தின்கீழ் வாழ நேரிட்டபோது பல்வேறுபட்ட பிரேரணைகளை தனியான மாகாணசபை போன்ற தீர்வுகளை தமிழ் தாயகக்கோட்பாட்டுக்கு எதிராகவே முன்வைக்கவும் நேரிட்டது. நாங்கள் ஒத்துழைக்காவிட்டால் பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம்; பிரிந்தபோது இடையில் அகப்பட்ட பாகிஸ்தானின் நாடற்ற பிஹாரி முஸ்லிம்களை ஒத்தநிலை எமக்கு எற்படுமென தமிழ் தரப்பினரால் எச்சரிக்கை விடப்பட்டது. முஸ்லிம் தலைவர்கள் சிலர் இந்தியாவிற்குச் சென்று புலிகளின் பிரதிநிதிகள் கிட்டுவுடன் முஸ்லிம்களின் துன்பங்களுக்கு தீர்வுகாணுமுகமாக ஒரு கருத்தொருமைப்பாட்டினை அடைய எத்தனித்தனர். முஸ்லிம் மாகாணசபை கோரிக்கை என்பதும் தமிழர்களின் தாயகக்கோட்பாட்டு கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் அரசியல் கட்சியினால் முன்வைக்கப்பட்டதுதான். ஆனால் அத்தகைய கோரிக்கை இன்று இல்லை. இவைகள் எல்லாம் எதிர்விளைவு (உழரவெநசிசழனரஉவiஎந) கோரிக்கைகளாகவே ஏற்பட்டன. இப்போது 13 வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இன்று நடைமுறையிலிருக்கும் மாகாண சபையினை மேல் தரமுயர்த்தும் அதிகாரங்கள் தேவைப்படலாம். ஆனால் அவை ஜனநாயக செயல்முறையூடாகவே அடையப்படவேண்டும். முப்பது வருடங்களுக்கு முந்திய மூலப்பிரச்சினைகள் இன்றில்லை அக்காலகட்டத்திற்கு நாங்கள் திரும்பிப்போக முடியாது.. பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தங்களுடைய துன்பங்களுக்க தீர்வுகாணப்படவில்லை என்று உணர்ந்ததால்தான் ஆயதப் போராட்டம் உருவானது. இன்றும் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என அவர்கள் உணர்வார் களேயானால் அவர்கள் இப்போது என்ன செய்யப்போகின்றார்கள் என்னும் கேள்வி எழும்புகிறது. இன்றைய வெற்றி குறித்து அனைத்து தமிழ் மக்களும் மகிழ்ச்சி அடையவில்லை என்ற பார்வை ஒரு சரியான கருத்தாக அமையாது. தரப்படுத்தல்பற்றிய அங்கலாய்ப்புக்கள் பொருத்தமான காரணியாக அமையாது. தரப்படுத்தல் அதிகளவில் யாழ்ப்பாண மாவட்டத்திலே எதிர்க்கப்பட்டது. மாறாக தமிழ் மக்கள் வாழ்கின்ற வவுனியா, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இன்று சர்வதேசப் பாடசாலைகள், கல்விநெறிகள் மிகுந்திருக்கின்ற காலம். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் பிரச்சினைகளுடன் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் இருந்து வந்திருக்கின்றது. ஏனெனில் நாங்களும் தமிழ்பேசும் சமூகம் என்று பொதுவான வகைப்படுத்தப்பட்டோம். இதன் அடிப்படையிலே முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி உருவானது நான் அந்தக் கட்சியின் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் செயலாற்றியுள்ளேன். இன்று பிரித்தானியாவில் என்ன நடக்கின்றதென்றால் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளர் தொழில் கட்சிக்கோ, அல்லது மரபுவாதக் கட்சிக்கோ அல்லது ஏனைய கட்சிகளுக்கோ வாக்களிக்காமல் தங்களுடைய வாக்குகளை தமிழ் வேட்பாளர் கபளீகரம் செய்துவருகின்றார். கட்சிகளிலாயினும் தமிழர்களுக்கு தமிழர்களே வாக்களிக்கவேண்டும் என்கிற பிரிவு மேலோங்கி வருகின்றது. இது ஜனநாயகத்திற்கு எதிரான, சமூக ஒருங்கிணைப்பிற்கு பெரும் ஆபத்தான விடயமாகும். இது இனரீதியான பிரிவினைக்கே இட்டுச் செல்லும். நாங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்னும் சமூக ஒற்றுமைக்கு தடைபோடுகின்ற காரணங்களை அடையாளங்கண்டு அணுகவேண்டும். இன்றைய அரசாங்கம் பயங்கரவாதத்தினை ஒழித்திருக்கின்றது ஆனால் ஊழல், பாதாள உலகம், வெள்ளைவான் கடத்தல் என்பவற்றிற்கெதிராய் யுத்தத்தினை முன்னெடுக்கவேண்டியிருக்கின்றது. நான் நேற்று அமைச்சருடன் கதைத்தபொழுது கிழக்கிலே இரவில் முஸ்லிம்கள் கடத்தப்பட்டும் ஒருவர் விடுவிக்கப்பட்டும் ஒருவர் விடுவிக்கப்படாமலும் இருப்பதனை சுட்டிக்காட்டினேன். இந்த நிலைமை தொடரக்கூடாது நாங்கள் இலங்கையராக இருப்பதிலே மகிழ்ச்சியடைகின்றோம்.


Mahavali. Thenee and Unmaikal

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...