எஸ்.எம்.எம்.பஷீர்
“நீங்கள்
அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும்
செய்யாதீர்கள் “ - குர்ஆன் 2:42. .
கிழக்கு மாகாணசபைத்
தேர்தல் இனவாத மதவாத அரசியல் கலவையுடன் களை கட்டத் தொடங்கி விட்டது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும் , தமிழர் பிரச்சினையில் சர்வதேசத்தை திரும்பிப்
பார்க்க வைக்கவும் கிழக்கு மாகான சபைக்கான தேர்தல் ஒரு சந்தர்ப்பம் என்று தமிழ் தேசியத் தரப்பு
தம்பட்டம் அடிக்க ( தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும்
ஒரு பக்கம் தோலால் மூடப்பட்டிருக்கும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும்.) முஸ்லிம்
காங்கிரஸ் தரப்பு தம்புள்ளை பள்ளிவாசலை , தெகிவளை பள்ளிவாசலை அவ்வப்போது , ஆங்காங்கே நடைபெறும்
பௌத்த தீவிரவாத சக்திகளின்
அடாவடித்தனங்களை, தமது கட்சியின் உள்ளூர் மட்ட அரசியல்
வாதிகள் மூலம் ,கிழக்கில் மட்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக றபான் அடிக்க ( றபான் ஒரு
தோல் இசைக் கருவி ) தெஹியத்தகண்டிய சிங்களவர்கள் சிலரும் முஸ்லிம்
காங்கிரஸின் " சிங்களப் போராளிகளாக " பேரினவாதிகளாகவிருந்து அல்லது
பேரினவாதிகளின் கட்சிகளிலிருந்து விலகி புனர் ஜென்மம் எடுக்கிறார்கள்.