எப்படித் தப்பினாய் ஜெயபாலா ! (2)




                        எஸ்.எம்.எம்.பஷீர்
                          
                            நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
                         
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே   ( நல்வழி)

                      "கோழியிலிருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா" என்ற புதிரான விஞ்ஞான விசாரம் போல் அஸ்ரபை தனக்கு சேகு தாவூத் பசீருக்கு முன்னரே தெரியும் என்று ஜெயபாலன் குறிப்பிடலாம். ஆனால் அஸ்ரப் கொழும்பு வந்த பின்னர்   அதுவும் சேகு தாவூத் பசீர் உடனான நட்பின் மூலம் ஒரு கனதியான அறிமுகம் அவருக்கு அஸ்ரபிடம் கிடைத்தது.ஏனெனில் படுவான்கரையின் மூலம் இருவருக்குமே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது.  
 
டம்: புலிகளின் பின்னால் வ.ஐ.ச ஜெயபாலன்




"முஸ்லிம்கள் தனித்துவமான சக்தியாக உள்ளனர்" எஸ்.எம்.எம்.பஷீர்


 "தீர்வுத் திட்டங்களில் தமிழ் பேசும் மக்கள் என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம் மக்களுக்கான உரிமையை வழங்குவது பற்றி தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிகள் முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று முஸ்லிம் மக்கள் தங்கள் முடிவுகளை தாங்களே எடுப்பார்கள் எனவும் சட்டத்தரணி பசீர் கருத்து வெளியிட்டார். முஸ்லிம்கள் தனித்துவமான சக்தியாக உள்ளனர் , அவர்களை தமிழ் பேசும் மக்கள் எனப் பார்ப்பது பிற்போக்குத்தனமானது எனவும் பசீர் அங்கு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில் ஈபீடிபி கட்சியின் மனித உரிமை மீறல்கள் பற்றி வருகின்ற குற்றச்சாட்டுகள் பற்றி அமைச்சர் பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்"

எப்படித் தப்பினாய் ஜெயபாலா!




எஸ்.எம்.எம்.பஷீர்

தனக்கின்னா வித்தி விளைத்து வினை விளைப்பக்
 காண்டலிற் பித்தும் உளவோ  பிற. ( அறநெறிச் சாரம் )

முன்னாள் இலங்கைப் பிரஜையும் . தற்பொழுது நோர்வே பிரஜையுமான வ.ஐ ச. ஜெயபாலன் சினிமாவில் நடித்துப் பெற்ற விளம்பரத்தை விட அதிக விளம்பரத்தை அண்மையில் அவர் இலங்கையில் காவல் துறையினரால்  வீசா விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக;    குற்றம் சுமத்தப்பட்டு , கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது;  பெற்றுக் கொண்டார். உலகின் பிரபல செய்தி இஸ்தாபனங்கள் மூலம் இலங்கை அரசுக் கெதிரான ஒரு பிரச்சாரத்தை இலகுவாக  முன்னெடுக்க தன்னையே ஆகுதியாக்கினார்

நெல்சன் மண்டேலாவின் மறைவுடன் மறையாத மாண்புகள்




எஸ்.எம்.எம்.பஷீர்




"வாழ்வதில் பெரும்சிறப்பு ஒரு பொழுதும் விழவில்லை என்பதிலில்லை , ஒவ்வொரு  தடவையும் விழும் பொழுது எழுந்து நிற்பதில் தான்  உள்ளது”                                            
                                                                     நெல்சன் மண்டேலா


“The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall,”                                                            Nelson Mandela
இந்த புத்தாயிரமாம் ஆண்டில் காலடி எடுத்த வாய்த்த பொழுது இந்த நூற்றாண்டின் தலைவர்களில் உங்களைக் கவர்ந்த உலகத் தலைவர் யார் என்று சர்வதேசம் தழுவிய செய்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில் பொழுது நெல்சன் மண்டேலா முன்னணியில் நின்றார். இப்பொழுது அவர் நம்மிடையே இல்லை என்பதையும் அவரின்  இருத்தலின் கனதியையும்  மிக அழுத்தமாக நம்மை சுற்றியுள்ள தொடர்பு சாதனங்கள்  உணரப்பன்னுகின்றன. 

CHANNEL FOUR’S CIRCUS TOUR -2





S.M.M.Bazeer

"He that is without sin, cast the first stone” –Verse  7:53-8:11, Gospel of John

This is the final instalment of my previous article entitled “Channel 4’s Circus Tour ". (http://www.bazeerlanka.com/2013/11/channel-fours-circus-tour-1.html) Since writing the first part of this article in July 2011, I have avidly followed Channel 4 circus troupe till it finally landed in Sri Lanka on the pretext of saving the Tamils of the North and the East from the clutches of Sri Lanka's President.
With the diplomatic credential awarded to the British Prime minister, Channel 4’s anchor-man; Jon Snow snuck into Jaffna, with David Cameron, overlooking the purpose and role of his visit as a guest at the Commonwealth Heads of Government Meeting 2013.
Upon arrival in the North, Cameron was endowed with godly reverence, not dissimilar to that of Pirabakaran or Lord Muruga (Hindu God of war and victory), in the hope that he would bring the Tamils a solution to their problems by his “divine intervention” .It seems that the Tamils, have found a replacement, to fill the god-shaped void of Pirabakaran, in the form of his Western masters who once fostered terrorists as liberators.

புல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்!




எஸ்.எம்.எம்.பஷீர் 

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.  ( குறள்)

திருகோணமலை மாவட்ட மறைந்த முன்னாள் துறைமுகங்கள் கப்பற்துறை ராஜாங்க அமைச்சர் எம்.ஈ எச்.எம் . மஹ்ரூப் 20 வருடங்கள் , தனது மரணம் வரை நாடாளுமன்ற அங்கத்தவராக இருந்தவர், அமைச்சர் பதவி வகித்தவர். அவர் தமது பிரதேச மக்களுக்கு ஆற்றிய பல்வேறு பணிகளில் கல்வி சார்ந்து அவர் ஆற்றிய பணிகள் குறித்து நூல் ஒன்று வெளியிடும் வைபவம் இன்று காலை மூதூரில்  இடம்பெறப் போவதாக ஒரு செய்தி கண்ணில் பட்டது.

“மறப்போம்! மன்னிப்போம்!! “




எஸ்.எம்.எம்.பஷீர்

எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு, அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை   ( ஒஸ்கார் வைல்ட் )
“Always forgive your enemies; nothing annoys them so much.” (  Oscar Wilde)


"மறப்போம் மன்னிப்போம்", எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை விடவும் , அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும் செயலே  வரலாறாகி நிற்கிறது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு உஹத் எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது  சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழுது அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக் கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக் கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்).
உலகின் மிகப் பெரும் பழமை வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென்  ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "மன்னிப்போம் மறப்போம்"  நிகழ்வுகள் மனதை நெருடச்செய்வன.   

Channel Four's Circus Tour - 1








Published On:Wednesday, July 6, 2011
Posted by Sri Lanka Guardian


In the course of this long talk show on Sri Lanka, only one side of the story which comfortably glossed over the unrelenting terrorism of the LTTE and its destructive path of “national Struggle” was portrayed.
by S.M.M.Bazeer 

தேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத சந்தேக நபர் முஹம்மது அகமதும்!




எஸ்.எம்.எம். பஷீர்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
     பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
                                                                                           உலகநாதர்

அண்மையில் பிரித்தானியாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப் ( கண்களைத்  தவிர்த்து  முகத்தின் பெரும் பாகம் உட்பட உடல் முழுவதையும் மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் புர்க்கா எனப்படும் ( கண்களையும் சேர்த்து மறைக்கும் உடை )  அணிவது தொடர்பிலும்  சர்ச்சைகள்  ஐரோப்பாவின் சில நாடுகளில் புர்க்கா தடை செய்யப்பட்டதை  தொடர்ந்து சூடு பிடித்தது. சில கல்லூரிகளில் புர்க்கா அணிய  தடை விதிக்கப்பட்டது. நீதி மன்றுகள் கூட வழக்குகளில் சாட்சி வழங்கும் அல்லது , விசாரிக்கப்படும்  பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்ற விடயத்தில் பெண்கள் தங்களின் முகத் திரையை விலக்கி தங்களின் அடையாளத்தை ஒரு  பெண் காவல் துறை அதிகாரியிடம் உறுதி செய்த பின்னர் புர்க்கா அணிந்து  சாட்சி வழங்கலாம் அல்லது  விசாரிக்கப்படலாம் என்று இலண்டன் குற்றவியல் நீதிமன்ற வழக்கொன்றில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. சரி சுற்றி வளைக்காமல் எமது தலைப்புக்கு வருவோம்.

இந்திய எதிர்ப்பில் இழையோடும் இஸ்லாமிய விரோதம்




எஸ்.எம்.எம்.பஷீர்

“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்!
                                                     திருவள்ளுவர்

இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகி சுமார் 26 வருடங்கள் முடிந்து விட்டன, வடக்கு கிழக்கு மாகாணங்களும்  பிரிந்து விட்டன, கிழக்கு மாகாணம் தனது இரண்டாவது தேர்தலையும் நடத்தி முடித்து சாவாதானமாக  செயற்படத் தொடங்கியிருந்து,.
எப்படியோ இறுதியில் தமிழ் ஈழக் கனவு பிரபாகரனின் அஸ்தமனத்துடன் , வட மாகாண சபைக்கான தேர்தலுடன் புலத்தில் கலைந்து போவது யதார்த்தமாகிப் வருகிறது,  ஆனால் புலம் பெயர் புலிகள் கடுப்பில் இருக்கிறார்கள் .

இருபத்தியொரு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் !! பொலன்னறுவை ( அக்பர்புரம் , அகமட்புரம் ) படுகொலைகள் (15/10/1992)



எஸ்.எம்.எம்.பஷீர்

இதே திகதியில் இன்றைக்கு சுமார் 21 வருடங்களுக்கு முன் அதிகாலைப் பொழுது புலர இன்னும் ஓரிரு  மணித்தியாலங்கள் இருந்தன. இன்னும் இருள் மண்டிக் கிடக்கிறது. கதிரவன் நாளை வழக்கம் போல் வைகறையில்  எழுவான் என்ற நம்பிக்கையுடன்தான்  அகமட்புரம் , அக்பர்புரம் கிராம மக்கள் அதற்கு முன் தினம் துயிலச் சென்றிருந்தனர்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக மறுநாள் காலை அக்டோபர் மாதம் பதினைந்தாம் திகதியை தங்களின் இரத்தமும் தசையும்  காக்கும் எத்தனத்தில் அல்லோல கல்லோலப்பட்டு அவலத்துடன் விடியப் போகிறது என்று அவர்கள் யாரும் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

நேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே !





எஸ்.எம்.எம்.பஷீர் 

"மெல்ல மெல்ல செல்லுகின்ற
தந்தை செல்வா நாயகம்
சொல்லுகின்ற பாதையிலே
செல்லுகின்ற வீரர் நாம்"
                  ( எஸ்.ஜே.  வீ. பற்றிய   ஒரு பாடல்) 
இலங்கையின் மூன்று மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றாலும் வட மாகாணத் தேர்தல் , அதுவும் மன்னார்  ஆயர் ராயப்பு ஜோசப் ஒப்பிட்ட  அரசியல் முள்ளிவாய்க்கால் கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டவுடன் அங்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இழந்தவுடன் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கிழக்கிலே மாகாண சபைத் தேர்தலிலே தோல்வியுற்றவுடன் ஆயர் சொன்னது போல் அங்கு நடந்தது அரசியல் முள்ளிவாய்க்கால் அல்ல , அது அரசியல் மாவிலாறு மட்டுமே , இப்பொழுதுதான் அரசியல் முள்ளிவாய்கால் முதற்போராட்டமே  ஆரம்பித்து,அதுவும் இன்றுடன்  போராட்டம் முடிவுக்கு வருகிறது,

“பிரித்தானியாவை வெறுத்த மனிதன்” ! (“The Man Who hated Britain” ! )


எஸ்.எம்.எம்.பஷீர்

“ஜனநாயகம் , சமத்துவம் , சமூக அசைவாற்றல் , வர்க்கபேதமின்மை, என்பவை அதிகம் அடையபெற்ற ஒரு சகாப்தத்தில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வாழ்க்கையின்  ஒரு அடிப்படை விஷயம் தொக்கி நிற்கிறது, இந் நாடுகளில் அநேக ஆண்களும் பெண்களும் பொருளாதாரத்தில் உயர் நிலையில்  உள்ள  ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ள வகுப்பினரால்  இழுக்கப்பட்ட  பிற மக்களால்  ஆட்சி செய்யப் படுகிறார்கள், பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள், நிர்வகிக்கப்படுகிறார்கள், நீதி செய்யப்படுகிறார்கள் யுத்தத்திற்கு ஆணையிடப்படுகிறார்கள்."  ( ரால்ப் மில்லிபண்ட் Ralph  Miliband) 

"இலங்கையிலும் தந்திக்கு மூடுவிழா'



"இலங்கையிலும் தந்திக்கு மூடுவிழா'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2013 - 15:51 ஜிஎம்டி

இந்தியாவை அடுத்து இலங்கையிலும் தந்திச் சேவை முடிவுக்கு வருகிறது. ஏனைய பல வசதிகள் வந்துள்ள நிலையில், அதன் தேவை அருகி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 155 ஆண்டுகளாக தபால் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வந்த தந்திச் சேவை இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
இது குறித்து பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதற்குள் எங்கே இவர்கள் !!






எஸ்.எம்.எம்.பஷீர்
“நல்லதோர் வீணை செய்தே. அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ!”
                                                                                                              பாரதியார்

வடக்கிலே முன்னர் இராணுவமும் புலிகளும் தங்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு பெயரிடுவார்கள் . புலிகளின் அஸ்தமனத்தின் பின்னர் வட  மாகாண சபைக் காண ஜனநாயகத் தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பாக விஷேட பெயரிடாவிட்டாலும் பொதுவாக "மூன்றாம் கட்டப் போராட்டம்" அல்லது “மூன்றாம் கட்டப் "போர்" என்ற நாமகரனங்களுடன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைகள முன்னெடுத்து வருகிறது. அதன் தேர்தல் விஞ்ஞாபனம் தெற்கிலே சர்ச்சைகளை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது. "பிறக்கும் பொழுது முடமாம் பேய்க்குப் பார்த்து தீருமா" என்ற கதையாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது.

ஜெனீவா பேச்சுவார்த்தை: உங்கள் கருத்து- BBC Tamil.com

 http://www.bbc.co.uk/tamil/images/furniture/bbc_banner_simplified_page.gif
 27 பிப்ரவரி, 2006

லண்டனிலிருந்து செய்யத் பசீர்

A large number of diaspora Tamil community believe that Pirabakarn will create them a Tamil homeland called "Tamileelam" and the LTTE's peace initiatives are always not genuine and intent on buying time to create a conducive climate to hunt down the opposed, intimidate Muslims and weed out the Tamil democratic forces in their preparation for a final war. However, the international involvement may not approve of the LTTE's aim (Thirst). The Muslims do  not tolerate Muslims being denied a chance to become a party to CFA and or PTOMS. The GOSL also ignored the Muslims and play the card aginst the LTTE. It is still a long way to go, to see who is genuine in the resolution of the Tamils and Muslims questions. For the time being there is no losers and both are winners but the lossers are always the people of Sri Lanka. We are not Tamils and we are Muslims of distinctive identity and we have our own political aspirations. Until and unless the people make their voices heard peace will be an illusion.

வட மாகாணத் தேர்தல் எத்தனையாங் கட்டப் போர் ?




எஸ்.எம்.எம்.பஷீர்
         
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
                          (  பாரதிதாசன் )

வட மாகாண சபைத் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற ஆரூடமும் அங்கலாய்ப்பும் அலசல்களும்  முடிவுக்கு வந்த பின்னர் ; , அதிலும் வட மாகாண சபையில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களின் முதலமைச்சர் வேட்பாளராக திரு விக்னேஸ்வரன் அவர்களைத் தெரிவு செய்த பின்னர் ;, அதுவரை "ஒரு கல்லைத் தன்னும் தூக்கிபோட "  அதிகாரமில்லாத மாகாண சபை  என்று பரிகசிக்கப்பட்ட மாகாண சபைக்கான தேர்தல் தமிழர் சுயாட்சிக்கான போராட்டத்தின் யுத்த களமாக மாறியுள்ளது, தேர்தலில் குதித்திருக்கும் வேட்பாளர்கள் தங்களின் தளபதி திரு விக்னேஸ்வரன் தலைமையில் அணி வகுத்து நிற்கிறார்கள். மாகாண சபைத் தேர்தல் போராட்டத்துக்கு , போராளிகள் மூன்றாம் கட்ட (ஈழ) யுத்தத்துக்கு முரசறைந்து நிற்கிறார்கள். நாளுக்கு நாள் போர் முரசம் தீவிரமாக ஒலிக்கிறது..

ஞானம் 150வது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது


ஞானம் 150வது இதழ் (ஈழத்து இலக்கியச் சிறப்பிதழ் )இலண்டனில் லூயிசாம் சிவன் கோவில் மண்டபத்தில் 24 அகஸ்து மாதம் 2013 அன்று  வெளியிட்டு வைக்கப்பட்டது. ஞானம் இதழ் ஆசிரியர் திரு. ஞானசேகரன் இலங்கையிலிருந்து தனது துணைவியாருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.


இலக்கியம்,அரசியல்,திரைப்டத்துறை,பெண்ணியம் பற்றிய கண்ணோட்டங்கள்; (3) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்:


 
இலக்கியம்,அரசியல்,திரைப்டத்துறை,பெண்ணியம் பற்றிய கண்ணோட்டங்கள்;  (3)
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வழங்கிய நேர்காணலிலிருந்து ஒரு பகுதி 

நேர்காணல்:
 
1. ஆரம்பத்தில் (2008) இலங்கை அரசுடன் பேச்சுவார்தை வைத்துக்கொள்ள நாங்களாகப் போகவில்லை.  2008ம் ஆண்டு, புலிகளுக்கும் அரசுக்கும் போர் நடந்து கொண்nருக்கும்போது, இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை அரசு தங்களின் ஆயுத பலத்தை மட்டும் நம்பியிராமல் அரசியல் முன்னெடுப்புக்களையும் தொடர்ந்தார்கள். ஆனால் அவர்களுடன் பேசத் தமிழ்த் தலைவர்கள் முன்வரவில்லை. தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட தமிழ்த் தலைவர்கள் புலிகளுக்குப் பயந்து, இலங்கையில் பதவியிலிருந்தவர்களுடன் தங்கள் முரண்பாட்ட அரசியலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். பெரும்பான்மையான புலம் பெயர்ந்த தமிழர்களும்,ஆயத பலத்தால் புலிகள் வெல்வார்கள் என்று நம்பினார்கள். எந்த விடுதலைப் போராட்டமும் எப்போதும் ஆயுத பலத்தை நம்பியிருக்குக் கூடாது, மக்களின் நன்மை கருதி பேச்சுவார்த்தைகள் தொடரப்படவேண்டும் என்று கருதும் லண்டன வாழ் சில சில தமிழர்களை இலங்கை அரசு நல்லிணக்கத் தூதுக்குழுவாக அழைக்கப் பட்டார்கள்..

அடையாளத்தை பேனுவதில் ஏற்படும் அச்சம் -நாழிகை -ஜூன் 2013



எஸ்.எம்.எம்.பஷீர் 

"நான் விரைவாக மரணிக்க வேண்டும்;. எனது மரணவேதனையை நான் நீடிக்க செய்ய முடியாது ;  நான் புத்தரின் தர்மத்தைப் பரப்ப இருபத்தைந்து தடவைகள் புனர்ஜென்மம் எடுக்க வேண்டும்"                         அநாகரிக தர்மபால மரணப்படுக்கையில் கூறியது,


இலங்கையின் வரலாற்றில் இனங்களுக்கிடையிலான முறுகல் என்பது பல்வேறு காலங்களில் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வந்திருக்கிறது. மகாவம்ச கதைகள் குறிப்பிடும் மிக முக்கிய இனப்பகைமை பற்றிய கதை ; எல்லாளன் துட்டகைமுனு கதைதான்.. என்றாலும் இந்தப் பகைமையின் பின்னணியாக தென்னிந்திய சோழ ராச்சியத்தின் ஆக்கிரமிப்பு ஆட்சியாளனாகவே எல்லாளன் காணப்பட்டாலும் , தெற்கிலே சுதேசிய ஆட்சியாளனான துட்டகெமுனுவுக்கும் , சோழ ஆக்கிரமிப்பின் பிரதிநிதியான எல்லாளனுக்குமிடையிலான ஆட்புல பகை முரண்பாடு  இனவாத  கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது , மகாவம்சம் பௌத்த இனவாதக் கூறுகளை  துலாம்பரமாக்குவதற்கு பிரதான காரணியாக அமைந்ததற்கு காரணம் அந்நூலை எழுதியவர்கள் பௌத்த தேசியவாத மதகுருக்களாகும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது,.

சமாதான பேச்சுவார்த்தையும் முஸ்லிம்களின் நிலையும் -தேசம் -ஜனவரி 2003


 தொகுப்பு ஜெயபாலன்

தற்போதைய சமாதான நடவடிக்கைகளில்முஸ்லிம்களின் நிலை என்ன என்பது பற்றியும் முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பற்றியுமான சந்திப்பும் கலந்துரையாடலும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. டிசம்பர் 7ம்திகதி (2003) மனோர்பார்க் போர்ட் சென்ரரில்இடம்பெற்ற இக்கூட்டத்திற்குபேராசிரியர் ஜனாப் எம்.வை.எம்.சித்தீக் தலைமை தாங்கினார். எஸ்.எம்.பாரூக், சட்டவல்லுனர் எஸ்.எம்.எம். பசீர் ,  ஜலால்தீன் தேசம் ஜெயபாலன் ஆகியோர் இதில் உரையாற்றினர் . சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஆலோசகராகக் கலந்து கொண்ட எம்.ஐ.எம். மொய்தீன் இச்சந்திப்பில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு இலங்கைச் சமாதானப் பேச்சுக்களும் முஸ்லிம்களின் நிலையம் என்பது பற்றிப் விளக்கினார்.கூட்ட  முடிவில் கலந்துரையாடலும் இடம் பெற்றது.

மூன்றாவது தமிழியல் மாநாடு - ரொறன்ரோ: தமிழியலா? அல்லது புலிகளுக்கு LOBBY இயலா?

by Nadchathran Chev-Inthiyan
7 ஆவது தமிழியல் மாநாடு இந்த மே மாதம் 11, 12 Toronto இல் கூட்டப்படுகிறது. 2009 ம் ஆண்டுவரை
(புலிகள் அழிவதுவரை) இதனை "லொக்கா" சேரன் எவ்வாறு புலிகளுக்கு வக்காலத்து வாங்க பயன்படுத்தினார் என்பதை நான் 2008 இல் விளக்கி எழுதிய கட்டுரை.

நட்சத்திரன் செவ்விந்தியன்.

கனடாவின் வின்சர் பல்கலைக்கழக சமூக மானுடவியல் துறையினரும் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கற்கைநெறிகளுக்கான அமையமும் இணைந்து நடத்தும் வருடாந்த கல்விசார் தமிழியல் மாநாடு என்ற கோதாவில் 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் இரண்டு மாநாடுகள் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. குறித்த அதன் அமைப்பாளர்களே மூன்றாவது மாநாட்டை எதிர்வரும் மே 16 ம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் கூட்டுகிறார்கள். இம்மாநாட்டின் அமைப்பாளர்களையும் அவர்களது உள்நோக்கங்களையும் இக்கட்டுரை அலசி ஆராய்கிறது.

தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது!


July 24, 2013 at 5:54am
 
 
1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்! நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்!

“அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை ( 10 )




எஸ்.எம்.எம்.பஷீர் 


தீதும் நன்றும் பிறர்தர வாரா !”
                                  பூங்குன்றனார்

( முன்னாள் நீதியரசர் திரு .விக்னேஸ்வரன் அவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் புறநானூற்றின் பாடல் வரிகளில் ஒன்றே இக்கட்டுரைக்கு தலைப்பாக இடப்பட்டுள்ளது ) 




அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (8)




"தொடங்குவார் சிலர் அதை முடிப்பதில்லை!"
 எஸ்.எம்.எம்.பஷீர் 

வரங்கொடுக்கும் தேவதைகள்
வந்தபோது தூங்கினேன்
வந்தபோது தூங்கிவிட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்

கரங்கொடுக்கும் வாய்ப்புக்களை
கை கழுவி வீசினேன்
கை கழுவி வீசிவிட்டு
காலமெல்லாம் பேசினேன்
                         மு.மேத்தா  ( கண்ணீர்ப் பூக்கள் )


தடம் மாறிய தாய்வழிச் சொந்தங்கள் - இறுதிப் பகுதி=bbc



கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜூன், 2013 -


இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையிலான உறவுகள் குறித்த பெட்டகத்தொடரின் இறுதிப் பகுதி.
இனிமேல் உறவுகள் மேம்படுவதற்காகச் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இது ஆராய்கிறது.
தயாரித்து வழங்குகிறார் பூபாலரட்ணம் சீவகன்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/06/130623_tamuendpart.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (7)




எஸ்.எம்.எம்.பஷீர்

சிறிய தற்காலிக பாதுகாப்பினை பெறுவதற்காய் யார் அடிப்படையான சுதந்திரங்களை  கைவிடுகிறார்களோ , அவர்கள் சுதந்திரத்திற்கோ  பாதுகாப்பிற்கோ  அருகதையற்றவர்கள்” 

                                                                                       பெஞ்சமின் பிராங்ளின் 

( “They that can give up essential liberties to obtain a little temporary safety deserve neither liberty nor safety”- Benjamin Franklin)

நிஜம், !  நிழல்!!, நிதர்சனம் !!!

ஸ்னோடென் மொஸ்கோவிலுள்ள விமான நிலையத்தில் இருப்பதனை ரஸ்சிய அரசு உறுதி செய்திருந்தது. இதுவரை அவரின் அகதி விண்ணப்பத்தை எக்குவடோர் அரசு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது , அமெரிக்க உப ஜனாதிபதி எக்குவடோர் ஜனாதிபதியிடம் ஸ்னோடெனுக்கு புகலிடம் வழங்க வேண்டாம் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார். அமெரிக்க அரசியல் மனித உரிமை, சர்வதேச சட்டங்கள் ராஜீய உறவுகள் மீறல் தொடர்பான அயோக்கியத்தனம் பற்றிய செய்திகள் வெளிவர வெளிவர , அமெரிக்க அரசு  மறு புறத்தில் ரஷ்யா சீனா என்று தனது கடுப்பினைக் காட்டி வருகிறது , ராஜீய உறவு குறித்து அச்சுறுத்தல்களையும் மேற் கொண்டு வருகிறது. விமான நிலைய வாழிட நாடற்ற மனிதனாக அமெரிக்கா தனது கடவுச் சீட்டையும் இரத்துச் செய்தவுடன் ஸ்னோடென் எத்தனை காலம் அசாஞ்சே இலண்டன் எக்குவடோர் தூதுவராலயத்தில் வாழ்வதுபோல் வாழப்போகிறார் என்கின்ற போது. முதன் முதல் பிரான்சில் விமான நிலையத்தில் வாழ்ந்த   மெஹ்ரன் கரிமி  நஸ்சரி கதை ஞாபகத்துக்கு வருகிறது.


அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (6)






எஸ்.எம்.எம்.பஷீர்

"பெரியண்ணா கண்காணிக்கிறார்" (Big Brother is watching) 

நான் ஒரு  துரோகியோ , அல்லது ஒரு வீரனோ அல்ல . நான் ஒரு அமெரிக்கன் “     எட்வர்ட்  ஸ்னோடென்
 “I am neither a traitor, nor a hero. I am an American”   ( Edward Snowden )
ஒரு புறம் பிராட்லி மான்னிங்கின் வழக்கு  விசாரணைகள் இராணுவ நீதிமன்றில் நடந்து கொண்டிருக்கும் வேளையில்   இன்னுமொரு பூதம் அமெரிக்காவிற்கு எதிராக கிளம்பியுள்ளது

அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (5)




எஸ்.எம்.எம்.பஷீர்


உண்மை  அமெரிக்காவின்  தேச விரோதி!

யார் எவர் என்ற  வேறுபாடில்லாமல்  மக்கள் உண்மையைக் காண வேண்டும் , ஏனெனில் தகவல்கள் இன்றி  பொதுமக்கள் விபரமறிந்த முடிவுகளை மேற்கொள்ள முடியாது

                                                         பிராட்லி எட்வர்ட் மான்னிங்  (Bradley Edward Manning)

அமெரிக்காவின்  அந்தரங்கங்களை  அகிலத்துக்கு எடுத்துக்காட்டி  உலகம் தழுவிய ஒரு பொது விவாதத்  தளத்தை , கலந்துரையாடலை ஏற்படுத்தப் போவதாக  நம்பியே கேபிள் (கம்பி வடம்) செய்திகளை  வெளிக் கொண்டு வந்தார் பிராட்லி மான்னிங் . அமரிக்காவின் இராணுவ பிரிவில்   ஒரு பனி ஆணையற்ற இராணுவ புலனாய்வு தொகுப்பாளராக கணனித் தகவற்  தொழிநுட்ப பகுதியில் இராக்கில்  பணியாற்றிய பொழுது  பிராட்லி மான்னிங்  அமெரிக்காவின் ஜனநாயகம் , மனிதத்துவம் பற்றிய பொய் முகத்தினை , தனது கைகளையும் கண்களையும் தாண்டிச் செல்லும் செய்திகளை   கண்டு மன உளைச்சலுக்கு மனச்சாட்சி உறுத்தலுக்கு உட்பட்டார்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...