Nameless:The Corpses of Ganga |How India's Holiest River Became A Mass Graveyard |Mojo Investigation


 

 

Courtesy: mojostory

https://www.youtube.com/redirect?event=video_description&redir_token=QUFFLUhqbFZjazBMNTZqUUZHMFIzQnBWRmtkVC1BQmFhZ3xBQ3Jtc0tuVWhxb2dUOTZoeTZXMno1RE9veGtBNFMzWE5xd0pySF9vTGhoSDNVc19UZTNJcjNoNnVKd1ZOZWwwYklqZTBtUTM1M1Ixc1pxZ3ZqdnpVTVpZdnRiNlZ5amRpVTFKVDlEb2VaSlRxYlZXWGdfNC1lTQ&q=https%3A%2F%2Frb.gy%2F5f3ppi

In memory of late Baddegama Samitha Thero-



Read more!

எம்மை விட்டுப் பிரிந்த மதிப்புக்குரிய பத்தேகம சமித தேரர்- எஸ்.எம்.எம்.பஷீர்

மதிப்புக்குரிய பத்தேகம சமித தேரர் கொரோனா  தொற்றின் காரணமாக தனது 69 வயதில் 30/05/2021 ஆம் திகதி அகால மரணமடைந்தார். அவருடன் கலந்துரையாடிய பல சந்தர்ப்பங்கள் நினைவு கூரத்தக்கவை. அவரது இடதுசாரி அரசியல் அடையாளம் மட்டுமல்ல அவரின் அரசியல்  அனுபவம் , ஆளுமை , மனித நேயம், நட்பினை பேணும் பண்பாடு, மக்கள் தொடர்பாடல்  என்பன மனதில் நினைவு கொள்ளத்தக்கவை . சில வருடங்களுக்கு முன்னர் கடைசியாக அவரை கொழும்பில் சந்தித்த பொழுது முஸ்லிம்கள் வழக்கமாக சொல்லும் "இன்ஷா  அல்லாஹ் " (இறைவன் நாடினால்) மீண்டும்  சந்திப்போம் என்று கூறியே விடை பெற்றார். அதன் பின்னர் அவரை நான் சந்திக்க கிடைக்கவில்லை .  பௌத்த பிக்கு என்பதைவிட ஒரு அற்புதமான மனிதர் அவர்.  பல்லின சமூகத்தில் பௌத்த தேரர்களின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தார். அவரின் வெற்றிடம் இலகுவில் நிரப்பப்படக் கூடியதல்ல.. 


 முஸ்லிம் வாட்ச் இணையத்தில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியான அவரின் நேர்காணல்  முஸ்லீம் சமூகம் தொடர்பான அவரின் கருத்துக்களை பிரதிபலிகின்றன.


Photo: with Baddegama Sobitha Thero

 

 

 

*உத்தமர்களாக வேண்டியது மனிதர்களே அன்றி இனமோ, மதமோ அல்ல” – சமித்த தேரர்

4478876972_74024812da-225x3001980 தொடக்கம் இனவாதத்திற்கு எதிராக தென்னிலங்கையில் இருந்து எழும் உறுதியான குரல். சமசமாஜக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர். இவரது கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், அரசாங்கத்திற்கு எதிராக துணிந்து பேசிவருபவர். “நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறோம், ஆகவே அரசாங்கத்திற்கு எதிராக எம்மால் வெளிப்படையாக பேசமுடியாது” என சொல்லிவருகின்ற துணிச்சலற்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளின் முகத்தை ஒருவகையில் அம்பலப்படுத்தும் நேர்காணல் இது.

(‘ஜனரல’ சிங்களச் செய்திப் பத்திரிகையில் (மே 2013) வெளியான தென்மாகாண சபை உறுப்பினர் சமித்த தேரரின் நேர்காணலில் ஒரு பகுதி. (சிங்களத்தில்: ஆஷிகா பிராமன))

தற்போது மேலெழுந்துள்ள இனவாத, மதவாத பிரச்சினைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தவறான முன்னுரிமைகள் புதுடெல்லியை மோசமான பெருந்தொற்று நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளது

 
See the source image 

 Photo: courtesy: pennlive.com

இந்தியாவின் கோவிட் - 19 பெருந்தொற்று நிலைமை கட்டுப்பாட்டை
இழந்துள்ளது. உண்மையில் இது இந்தியா பூகோள அரசியல்
விளையாட்டுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக கோவிட் - 19 சம்பந்தமான
போராட்டத்தில் கவனம் செலுத்துவதை வேண்டி நிற்கிறது. சிஎன்என் செய்திச் சேவை தெரிவிப்பதன் பிரகாரம் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) வரை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 200,000இற்கும் அதிகமான புதிய நோயாளிகள் உட்பட 259,170 கோவிட் - 19 நோயாளிகள் தொகை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 1,700இற்கும் அதிகமானவர்கள் இறந்தும் உள்ளனர். 

டெல்லி முதலமைச்சர் அரவிந் கெய்ரிவால் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்
18) கூறுகையில், டெல்லி வைத்தியசாலைகளில் 100இற்கும் குறைவான அதிதீவிர சிகிச்சைக் கட்டில்களே இருப்பதாகவும், ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள இந்திய மக்கள் பலர் வைத்திய உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள
தட்டுப்பாட்டைக் கண்டனம் செய்துள்ளனர்.

கனடாவில் முன்னாள் சுதேசிகள் பாடசாலை வளவில் 215 குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!


னடாவின் உறைவிடப் பாடசாலைகள் (Residential School) 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பழங்குடி சிறுவர்கள் வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் அரசாங்கமும் மத அதிகாரிகளும் நடாத்திய கட்டாய உறைவிடப் பாடசாலைகளாக இருந்தன.

கனடாவின் கம்லூப்ஸ் இந்தியன் உறைவிடப் பாடசாலை (Kamloops Indian Residential School) அமைப்பில் மிகப்பெரியது. 1890 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க நிர்வாகத்தின் கீழ் திறக்கப்பட்ட இந்தப் பாடசாலையில் 1950 களில் 500 மாணவர்கள் இருந்தனர்.

1969 ஆம் ஆண்டில் மத்திய அரசு பாடசாலையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது, 1978 ஆம் ஆண்டு வரை – அது மூடப்படும் வரை – உள்ளூர் மாணவர்களுக்கான இல்லமாக செயல்பட்டது.

சுமார் 1863 முதல் 1998 வரை, 150,000 க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரித்து அழைத்துச் செல்லப்பட்டு, இந்த பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். இந்த குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் சுதேசிய மொழியைப் பேசவோ அல்லது அவர்களின் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கவோ அனுமதிக்கப்படவில்லை, மேலும் பலர் தவறாக நடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்-–பாலகிரி

 



சில விடயங்களை அல்லது நபர்களை நோக்கும்போது அவை அல்லது அவர்கள் எதிர் எதிரானவையாக அல்லது எதிரும் புதிருமானவர்களாக இருப்பது போலத் தோன்றும். அதற்குக் காரணம் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரெதிராகப் போடும் கோசங்கள்தான். ஆனால் பெரும்பாலான விடயங்கள் யதார்த்தத்தில் அப்படி இருப்பதில்லை. தோற்றத்தளவில் மட்டுமே அப்படி இருக்கின்றன.

ஒரு விடயத்தின் தன்மையை அளவிடுவதற்கு அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளை அல்லது கருத்துக்களை மட்டும் வைத்து அளவிட முடியாது. அவர்களது வார்த்தைகளை விட அவர்களது செய்கைகள் என்னவிதமான விளைவுகளை என்பதை ஆராய்ந்து பார்ப்பதே சரியான வழிமுறையாக – உரைகல்லாக இருக்க முடியும்.

உதாரணமாக, உருவத்தில் உண்மையான பொன் போலத் தோற்றம் அளிக்கும் ‘கிலிட்’ தங்கத்தை இனம் காண்பதற்கு பொற்கொல்லர்கள் அதை அதற்கென இருக்கும் உரைகல்லில் உரைத்துப் பார்ப்பது வழமை. ‘உரைகல்’ என்ற சொல்லே அங்கிருந்துதான் தோன்றியது.

இன்னொரு அரசியல் ரீதியான உதாரணத்தையும் இங்கு குறிப்பிடலாம். இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து சிங்கள இனவாதிகளும் தமிழ் இனவாதிகளும் மாறிமாறி இனவாதத் தீயைக் கக்கி வந்துள்ளனர். இவர்களால் 1958, 1977, 1982, 1983 ஆண்டுகளில் பல இனவன்செயல்களும் அரங்கேறி மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கும் உள்ளானார்கள்.

ராவுல் கஸ்ட்ரோவைக் கொலை செய்ய்யவும் சீ.ஐ.ஏ. திட்டமிட்டது!

See the source image
 Photo: ராவுல் கஸ்ட்ரோ Courtesy: onthisday.com

அமெரிக்காவின் 11 ஜனாதிபதிகள் காலத்தில் கியூபாவின் தலைவராகப் பதவி
வகித்த புரட்சித் தளகர்த்தர் ஃபிடல் கஸ்ட்ரோவை கொல்வதற்கு அமெரிக்க
உளவு அமைப்பான சீ.ஐ.ஏ. 638 தடவைகள் முயற்சி செய்து அதில்
தோல்விகண்ட வரலாறு ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்பொழுது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி 1960ஆம் ஆண்டு
ஃபிடலின் சகோதரரும், அவருக்குப் பின்னர் கியூபாவின் ஆட்சிப்பொறுப்பை
வகித்தவருமான ராவுல் கஸ்ட்ரோவையும் (சுயரட ஊயளவசழ) சீ.ஐ.ஏ. கொல்வதற்குத் திட்டமிட்ட விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டனைத் தளமாகக் கொண்டு
செயற்படும் தேசிய பாதுகாப்பு சுவடிகள் ஆய்வுக்கழகம் வெளியிட்டுள்ளது.


அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோஸ் ராவுல் மாட்டினேஸ் (துழளந சுயரட ஆயசவiநெண) என்பவர் ஒரு விமானி. அவர் ஓட்டிய விமானம் ஒன்றில் 1960ஆம் ஆண்டில் ராவுல் கஸ்ட்ரோ செக்கோஸ்சிலோவாக்கியாவின்
தலைநகரான பிராக்கிலிருந்து கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு திரும்புவதற்குத் திட்டமிட்டிருந்தார். அந்த விமானியை கூலிக்கமர்த்திய சீ.ஐ.ஏ. அந்த விமானப் பயணத்தின்போது, “விபத்து” ஒன்றை ஏற்படுத்தி ராவுல் கஸ்ட்ரோவைக் கொன்றுவிடும்படி ஆலோசனை வழங்கியிருந்தது.
அந்த விமானியின் இந்தச் செயலுக்காக அவருக்கு சன்மானமாக 10,000
டொலர்களை வழங்கவும் சீ.ஐ.ஏ. ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன்,
எதிர்பாராதவிதமாக இந்தச் சம்பவத்தின்போது அந்த விமானி
உயிரிழக்க நேர்ந்தால் அவரது இரண்டு மகன்களுக்கு பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் சீ.ஐ.ஏ. வாக்குறுதி அளித்திருந்தது.

Interview: Socialism with Chinese characteristics enriches Marxist theory, says former Sri Lankan party chief -by Shiran Illanperuma

 See the source image

 Photo: courtesy: colombo gazette

COLOMBO, May 28 (Xinhua) -- The Communist Party of China (CPC) has made valuable contributions to Marxist theory by achieving China's development over the 100 years since its founding, a veteran Sri Lankan communist leader has said.

Former General Secretary of the Communist Party of Sri Lanka (CPSL) D.E.W. Gunasekera, in an interview with Xinhua, conveyed his greetings to the CPC on its 100th anniversary and hailed the party's historic achievements.

The CPC has formulated a successful development model for China by drawing on the experiences of both developed and developing countries, Gunasekera said, noting the party has successfully combined markets and state intervention in China's economic development, while remaining true to the country's history and culture.

"Socialism with Chinese characteristics relates to the concrete conditions existing in China," said Gunasekera.

பிரேமதாஸா எப்படி படுகொலை செய்யப்பட்டார்?


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக்கூடாத கதைகள் பல உள்ளன. அதுதொடர்பில், சுதத் சில்வா, சகோதர பத்திரிகையான ‘லங்காதீப’விடம் பேசியுள்ளார்.  

சுதத் சில்வா, இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் கடமையாற்றிய உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். அரச தலைவர்களுக்கு மிகநெருக்கமாக இருந்த அவர், ‘தகவல் களஞ்சியம்’ போன்றவர். அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இக்கட்டுரை எழுதப்பட்டது.

ஜனாதிபதி பிரேமதாஸ வாழ்க்கையின் கடைசி தருணம் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றையதினம், ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணி, இரண்டு வழிகளில் வந்துகொண்டிருந்தது. மெசஞ்சர் வீதி பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். பகல் 12.15யை அண்மித்திருந்தது.

“சுதத், மைத்தானத்தில் மக்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்”?  

ஜனாதிபதி பிரேமதாஸ சுதத் சில்வாவிடம் கேட்டார். அப்போது, பிரேமதாஸ, சுகததாஸ உள்ளரங்கத்துக்கு அண்மையிலுள்ள வீதியொன்றில் இருந்தார்.

 “சேர், மைதானம் நிரம்பி வழிகிறது” என ஜனாதிபதியிடம் சுதத் தெரிவித்தார். 

அந்த வசனத்தை கேட்டவுடன், பிரேமதாஸவின் முகத்தில் ஒருவிதமான புத்துணர்ச்சி தென்பட்டது. பெரும் சந்தோஷம் சூழ்கொண்டிருந்தது. அதற்கான காரணங்களும் இருந்தன. ஐ.தே.கவின் பிரபலங்களான லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க ஆகிய இருவரும், கட்சியில் இருக்கவில்லை. ஜனாதிபதி பிரேமதாஸ, தனியாகவே மே தினப் பேரணியை நடத்தினார். அதில், பெருந்திரளான மக்கள் கூட்டத்தை கூட்ட முடியாமல் போய்விடுமோ, என்ற பயம் அவருக்கு இல்லாமலும் இல்லை.  

சுகததாஸ, விளையாட்டரங்குக்கு அருகில் வாகனத்திலிருந்து இறங்கிய ஜனாதிபதி பிரேமதாஸ, ஆமர்வீதிவரை நடந்தே வந்​தார்.  

நேரம் 12.30 மணியிருக்கும், கைக்கடிகாரத்தை பார்த்த ஜனாதிபதி, அருகிலிருந்த ஜனாதிபதியின் செய்திச் செயலாளரான எவன்ஸ்ட் குரே என்பவரை அழைத்தார். “வானொலியில் 12.45க்கு செய்தி இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் மேதினப் பேரணியில், இலட்சத்தை விடவும் அதிகமான சனத்திரள்” என, செய்தியை ஒலிபரப்புமாறு கேட்டுக்கொண்டார்.  

கடாபி உண்மையில் ஒரு சர்வாதிகாரியா?


See the source image

Photo: Courtesy: Yahoo


அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் நலன்களுடன் சமரசம் செய்யாமல் தனது மக்களினது தேசிய நலன்களையும், முழு ஆபிரிக்க
மக்களினதும் நலன்களையும் பாதுகாத்து நின்றதன் காரணமாக கடாபி ஒரு
சர்வாதிகாரி எனவும், மனித உரிமைகளை மிகவும் கொடூரமாக
துஸ்பிரயோகம் செய்பவர் எனவும் முத்திரை குத்தப்பட்டு வந்துள்ளார்.
கடாபியின் கீழ் லிபியா எண்ணெய் வளமிக்க ஒரு புகழ்மிக்க நாடாக
இருந்து வந்துள்ளது. லிபிய மக்கள் முழுமையான சமாதானம், மகிழ்ச்சி,
செல்வம் என்பனவற்றை அனுபவித்தனர். மின்சாரம், இலவச மருத்துவம், கல்வி உட்பட பெரும்பாலான எல்லாவற்றையும் கடாபியின் அரசாங்கம் மக்களுக்கு அளித்தது.


அவர் வீட்டு நிர்மாணக் கடன்கள், அரச வங்கிகளிலிருந்து வட்டியற்ற கடன்கள்,
பிரசவ விடுமுறை, விவசாயத்துக்கு மானியங்கள், தானியங்கள், நிலம் மற்றும்
எல்லா வகையான உபகரணங்களுக்கும் மானியங்கள், ஒரு கார் வாங்குவது
உட்பட கட்டணமற்ற வேறு பல அரசாங்க வருமானங்கள் என்பனவற்றை
மக்களுக்கு வழங்கினார். எல்லா தனிப்பட்ட பயணங்களுக்குமான
கட்டணத்தில் அரைவாசியை அரசாங்கமே செலுத்தியது. கடாபி ஒரு பெரிய ஆற்றை உருவாக்கி லிபிய மக்களில் 75 சத வீதமானோருக்கு சுத்தமான குடிநீரை வழங்கியதுடன், அடிக்கடி நாட்டில் ஏற்படும் வரட்சியையும் தடுத்து நிறுத்தினார். உலகிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தைக் கொண்டிருந்த இந்த ஆற்றை நேட்டோ படைகள் 2011இல் அழித்தன. 

சீனா – 2050: ஆதிக்கவாதியல்ல, ஆனால் தலைவர்!


சீனா 2030இல் நான்கு விமானந்தாங்கி கப்பல்களைக் கொண்டிருப்பதுடன்,
2050இல் 8 முதல் 10 வரையிலான கப்பல்களைக் கொண்டிருக்கும். இது ஒரு
பெரிய எண்ணிக்கையாகும்.2019 வரை சீனா 335 யுத்தக் கப்பல்களைக்
கொண்டிருந்தபோதும், அவற்றின் தரம் தாழ்வானதாகும். லீ குவான் யீ
(முன்னாள் சிங்கப்பூர் பிரதமர்) ஒருமுறை கூறும்போது, “சீனா இப்பொழுதும்
தாழ்ந்த நிலையிலேயே உள்ளது.


ஆனால் அடுத்து, அதற்கும் அடுத்து, அதற்கும் அடுத்து, சீனா உயர்வாகவும்
பலமாகவும் இருக்கும்” என்றார். டெங் ஸியாவோபிங் ஒருமுறை அறிவுரை
கூறும்போது, “அவர்களிடம் (மேற்குலகிடமிருந்து) கற்றுக் கொள்ளுங்கள், அவர்களைப் பிரதி பண்ணுங்கள், பின்னர் அதைச் செழுமைப்படுத்துங்கள், பின்னர் அவர்களை முந்துங்கள், அதன் பின்னர் அவர்களைத் தோற்கடியுங்கள்” எனச் சொன்னார்.


லீ குவான் யீன் கூற்றுப்படி, 2050இல் சீனா அமெரிக்காவுடன் சமாமான
நிலையையும் பலத்தையும் பங்கிட்டுக் கொள்ளும். அத்துடன், சீனா
முதலிடத்துக்கு வரவே விரும்புகிறதே தவிர, கௌரவமான அங்கத்தவராக
இருக்க விரும்பவில்லை என அவர் கருதுகிறார். அதேநேரத்தில், சீனாவின்
தந்திரோபாயம் மற்றும் முதல்தரமான திட்டம் என்பனவற்றின் அடிப்படையில், 2035இல் பொருளாதாரம், நவீன தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் என்பனவற்றில் தொழில்நுட்ப ரீதியாகவும், இராணுவ
ரீதியாகவும் நடுத்தரமான செழுமையை அடைந்துவிடும். மாபெரும் தேசிய
புத்துயிரூட்டல், முன்னேறிய தொழில்நுட்பம், புனர்நிர்மாணம்
என்பனவற்றினூடாக 2050இல் சீனா நாகரீகம், முன்னேறிய கலாச்சாரம்,
உலகத்தரம் வாய்ந்த இராணுவம் என எல்லாத்துறைகளிலும் பலமான,
சக்திவாய்ந்த மாபெரும் நவீன சோசலிஸ நாடாக மாறிவிடும்.

கொழும்பு துறைமுக நகரமும் ஒரு சீன ‘கடன் பொறி’யா?-கே.மாயா மயூரன்

 

 கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் ஓசைமிக்க வர்த்தகத்
தலைநகரான கொழும்பை மத்திய வியாபார கேந்திரமாக விரிவுபடுத்தும்
புத்தம்புதிய நகர வளர்ச்சித் திட்டமாகும். கொழும்பு துறைமுகத்திற்கும் பழைய நகர மத்திக்கும் இடைப்பட்ட 269 ஹெக்டயர்கள் பரப்பளவு கடல்
பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த
நகரமானது எதிர்காலத்தில் தென்னாசியாவின் பிரதான குடியிருப்பு,
சில்லறை வர்த்தக மற்றும் வியாபாரக் கேந்திரமாக அமைவதுடன், இந்து
சமுத்திரத்தின் மிதமான வெப்பமுள்ள தண்ணீரில் வாழக்கூடிய ஒப்புவமையற்ற திட்டமிட்ட நகருமாகும்.


இத்திட்டம் நிதிப் பிராந்தியம், மத்திய குடியிருப்பு தரிப்பிடம், தீவு வாழ்க்கை,
மரீனா மற்றும் சர்வதேச தீவு உட்பட ஐந்து வித்தியாசமான பகுதிகளாக
அமைந்துள்ளது. கொழும்பு துறைமுகத் திட்டம் பூர்த்தியானதும், அது 5.6
மில்லியன் சதுர மீட்டர்கள் பரப்பளவைக் கொண்டிருப்பதுடன், உலகத்தரம்
வாய்ந்த வைத்திய வசதி, கல்வி, பொழுதுபோக்கு, ஹோட்டல்கள், உணவு
விடுதிகள், சில்லறை வணிகம், அலுவலகங்கள் என்பனவற்றுடன்,
அவற்றுடன் இணைந்த கடற்கரையையும், கடல் வழங்கிய வாழ்க்கையை வாழும் வசதிகளையும் கொண்டிருக்கும்.


கொழும்பு துறைமுக நகரம் சீன முயற்சியான ஒரு தடம் மற்றும் ஒரு
பாதை திட்டத்துடன் பிரதான இணைப்பைக் கொண்டிருப்பதுடன்,
இலங்கையின் வளர்ச்சித் தந்திரோபாயத்துடன் இணைந்த, கூட்டான இலக்குகளைக் கொண்டதாகவும் இருக்கும். சீன தொடர்புகள் நிர்மாண கொம்பனி லிமிட்டெட்டின் ஒரு அங்கமான சீன துறைமுக பொறியியல் கொம்பனியின் ஒரு பிரிவான கொழும்பு துறைமுக நகர லிமிட்டெட் கடலிலிருந்து நிலத்தை மீட்டெடுக்கவும், சந்தைக் கேந்திரத்தையும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், 1.4 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை இதுதான் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு நேரடி வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்ட மிகப்பெரிய தனியொரு திட்டமாகும். இந்தத் துறைமுக நகரத்தில் மொத்தமாக 15 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன்,
உள்நாட்டவர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்குமாக 80,000 தொழில் வாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


269 ஹெக்டயர்கள் நிலம் கடலிலிருந்து மீட்டெடுக்கும் பணி 2019 ஜனவரியில்
பூர்த்தியடைந்த பின்னர், தற்பொழுது நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் வசதிகள் மற்றும் வசதிகளுக்கான பொதுக் கட்டமைப்பு வேலைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் 2041இல் முடிவடையும் என
எதிர்பார்க்கப்படுவதுடன், கொழும்பு துறைமுக நகரம் பூர்த்தி செய்யப்பட்ட
பின்னர் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வருடாந்தம் 11.8
பில்லியன் டொலர்கள் வருவாயைப் பங்களிக்குமென ( Price Water House Coopers) (PWC) என்ற நிறுவனம் செய்த சுயாதீனமான ஆய்வில் இருந்து தெரிய
வருகிறது. இந்தத் திட்டம் இலங்கையை தென்னாசியப் பிராந்தியத்தில்
வர்த்தக மற்றும் நிதிக் கேந்திரமாக மாற்றியமைக்கும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.


வரப்போகும் கொழும்பு துறைமுக நகரத்துக்குள் அமையவிருக்கும்
கரையோர நிதிப் பிராந்தியத்தின் கொழும்பு சர்வதேச நிதி நகரம் இலங்கைக்கு விளையாட்டு மாற்றுனராக இருக்கப்போகின்றது. இலங்கை
யுத்ததந்திர ரீதியில் பிரதான நிதிச் சந்தைகளுக்கு இடையிலும்,
பொருத்தமான நேர அமைவிடத்திலும் இருக்கின்றது. மேற்கே நியுயோர்க்,
இலண்டன், ஃபிராங்பேர்ட் மற்றும் துபாய் என்பனவற்றிலிருந்து கிழக்கே
டோக்கியோ, ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் சிட்னி வரை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் முக்கியமான நிதிச் சேவைகளை வழங்கும் வங்கிகள், பிணைமுறிச் சந்தைகள், மூலதனச் சந்தை, காப்புறுதிக் கொம்பனிகள் மற்றும் மறுகாப்புறுதியாளர்கள் ஆகியோருக்கு சேவை வழங்கும் மத்திய நிதி நிலையமாக இது இருக்கப்போகின்றது.


கொழும்பு சர்வதேச நிதி நகரத்தின் பிரதான நோக்கம், தென்னாசிய
நாடுகளையும், வங்காளக் குடா நாடுகளையும் இணைக்கும் ஒரு
முக்கியமான நிதி நிலையாக வருவதே. இந்தியாவில் பகல் வேளைகளில்
செயற்படும் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச நிதி நிலையம் எதுவும் இல்லாததால்,
கொழும்பு சர்வதேச நிதி நகரம் அதைப் பயன்படுத்தி தன்னை பிராந்திய நிதி
நிலையமாக வளர்த்துக்கொள்ள முடிவதுடன், விசேடமாக 20 மைல்
தூரத்திலுள்ள இந்தியாவின் வளர்ந்து வரும் இயந்திரத்தை இலக்கு
வைப்பதாகவும் இருக்கும். கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு
செய்யுமாறு இலங்கை அரசாங்கம் உலகம் முழுமைக்கும் அழைப்பு
விடுத்துள்ளதுடன், கொழும்பு துறைமுக நகரம் சீன முதலீடுகளுக்கானது மட்டுமேயானதல்ல இங்கு எந்தவொரு நாடும் முதலீடு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.

 

 இந்தமாத (ஏப்ரல்) ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் ‘கொழும்பு துறைமுக
நகர பொருளாதார ஆணைக்குழு’ என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒரு
சட்டமூலத்தின்படி கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்த ஒரு விசேட பொருளாதார வலயம் உருவாக்கப்படும்.
இந்தச் சட்டமூலம் உருவாக்கப்படும் ஆணைக்குழுவுக்கு விசேட பொருளாதார வலயத்தில் பதிவுகளை வழங்குதல், அனுமதிப்பத்திரங்கள், அங்கீகாரங்கள் மற்றும் வியாபாரங்களுக்கான அங்கீகாரங்கள் என்பனவற்றுக்கான அதிகாரங்களை அளிக்கும். ஐந்து முதல் ஏழு பேர் வரையிலான அங்கத்தவர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழு பொருளாதார வலயத்தில் சிறிய முதலீடு செய்துள்ள வர்த்தக நிறுவனத்தைக் கூட அடையாளம் கண்டு அதை முன்னேற்றவும், விசேட பொருளாதார வலயத்திற்குள் வியாபார
தந்திரோபாயத்தின் முக்கியத்துவத்தை முன்னேற்றுவதற்கு சில
விதிவிலக்குகளை அளித்து முன்னேற்றுவது உட்பட விசேட பொருளாதார வலயத்தின் எல்லா நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்யும்.


நன்கு கட்டமைக்கப்பட்டதும் போட்டிபோடக்கூடிய சட்ட, வரி,
ஒழுங்கமைப்பு மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொறிமுறை மூலம்
முதலீட்டாளர்கள், தொழில்வல்லுனர்கள், புதுமுயற்சியாளர்கள், கொம்பனிகள், நிதி நிறுவனங்கள் என்பனவற்றைக் கவர்வதன் மூலம் துபாய், சிங்கப்பூர், ஹொங்கொங் போன்ற இடங்களிலுள்ள முதலீட்டு மையங்களுடன் கொழும்பு துறைமுக நகரம் போட்டிபோடுவதிலேயே இந்தத் திட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது.


இருந்தபோதிலும், சீனாவின் ஒரு தடம் மற்றும் ஒரு வழி என்ற திட்டத்தின்
ஒரு பகுதியாக இலங்கையில் சீனாவின் திட்டங்கள் அதிகரித்து வருவதால்,
இலங்கை ‘சீனக் கடன்பொறி இராஜதந்திரத்துக்குள்’ சிக்கிக்
கொண்டுள்ளது என சில நியாயமான எண்ணிக்கையிலான விமர்சனங்கள்
முன்வைக்கப்படுகின்றன. 2006 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சீனா
இலங்கையில் செய்துள்ள உள்கட்டுமான முதலீட்டின் மொத்தத்தொகை 12.1
பில்லியன் டொலர்கள் எனக் குறிப்பிடும் Chatham House நிறுவன ஆய்வறிக்கை, இதனால் உள்ளுர் மக்கள் இலங்கை சீனாவுக்கு விற்கப்பட்டுள்ளதாக கருதுவதாகக் குறிப்பிடுகின்றது.