பயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi

3896_n
**********************************************
(மாணவிகள் கொல்லப்பட்டமை தொடபில் அரசாங்கத்தின் பதில்)

வள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமின் மீது நடத்தப்பட்ட விமானத்தக்குதல்களில் 53மானவிகள் அந்த முகாமில் இருந்த ஏனையோர் என மொத்த்ம் 62 பேர் கொல்லப்பட்டும் 129 பேர் படுகாயங்கள் அடைந்த இந்த துயரசம்பவத்துக்கு கொழும்பை மையாமாக இயங்கும் ஊடகங்களும் , சர்வதேச ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கமல் விட்டன. அன்றைய தினம் கொழும்பில் நடந்த இன்னும் ஒரு சம்பவமே இதற்காக காரணமாக அமைந்தது. பாகிஸ்தானின் 60வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொள்ளுபிட்டிக்கு வந்த பாக்கிஸ்தான் தூதுவர் பஷீர் வாளி மொஹம்மட் புலிகளின் கிளைமோர் தாக்குததலுக்கு உள்ளானார்.

அரசாங்கத்தை மிரள வைத்த பாதயாத்திரை! -இக்பால் இத்திரீஸ்


protest
ன்றுபட்ட எதிரணியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கண்டியிலிருந்து கொழும்பு வரை மேற்கொண்ட மூன்றுநாள் பாதயாத்திரை பெரும் வெற்றியளித்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், மைத்திரி – ரணில் அரசை ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இறுதி யுத்த நேரத்தில் இறந்தவர்களது உண்மையான தொகை எவ்வளவு?-அம்பலவாணன்


nytimes

லங்கையில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுற்று ஏழு வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என ஒரு முடிவுக்கு வருவதில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இன்னமும் திண்டாடிக்கொண்டு இருக்கின்றன.
புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களின் தொகை ஒன்றரை இலட்சம், இரண்டு இலட்சம் என நாளொரு தொகையை வாய்க்கு வந்தபடி கூறி வருகின்றன. அதேநேரத்தில், ஐ.நாவும், சில மேற்கு நாடுகளும் நாற்பதாயிரம் வரையிலான மக்கள் மக்கள் இறந்ததாகக் கூறி வருகின்றன.

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே! – சுப்பராஜன்



மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய மேற்கத்தைய சார்பு, நவ – தாராளவாத அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து அதன் ஜனாதிபதியும், பிரதமரும், நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் செய்து, இனப் பிரச்சினைக்கும், நாட்டின் ஏனைய சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்போவதாகச் சொல்லி வருகிறார்கள்.
மறுபக்கத்தில், அவர்கள் கூறுவதை மறுபேச்சில்லாமல் அப்படியே ஏற்கும்படியும், இந்த வருட முடிவுக்குள் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்.

அரசாங்கம் பதவி விலக வேண்டும்!


maithri-and-ranil_colour
2015 ஜனவரி 8ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், அதே ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்தர்ப்பவாத ‘தேன் நிலவு’ முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் இணைந்து உருவாக்கிய தற்போதைய அரசாங்கத்திற்குள் ஆரம்பம் முதலே ஏராளமான முரண்பாடுகளும், இழுபறிகளும் இருந்து வந்தபோதிலும், இரு தரப்பினரதும் பரஸ்பர நலன்களுக்காக அவை மூடி மறைக்கப்பட்டே வந்தன.

‘நல்லாட்சி’யின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா?- vaanavil-71_2016


good-governance-1
லங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன.

பயிரை மேய்ந்த வேலிகள் (26)- ராஜ் செல்வபதி

4158_n
**********************************************
(சர்வதேச சமூகத்தினரின் எதிர்வினைகள்.)

இப்போது விமான குண்டு வீச்சுகுள்ளான வள்ளிபுனம் பயிற்சி முகாம் மீண்டும் செஞ்சோலையாக மாற்றப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்று அவசரமாக நடந்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவர் செஞ்சோலை மாணவிகள் மீதான இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்தார்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...