‘வானவில்’ ஜெமினிக்கு அஞ்சலி

 






2001 ஆம் ஆண்டிலிருந்து ஜெர்மன் - 2001 ஸ்ருட்காட் நகரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘தேனீ’ இணையத்தளத்தின் நிறுவனர் 22.01.2021 இல் காலமாகினார். புங்குடுதீவினை பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு 56 வயதாகின்றது.

இலங்கையிலிருந்து 1985 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்த இவர் மிகுந்த சமூக அக்கறை கொண்டவராக விளங்கினார். அதனால் ஆரம்ப காலங்களில் பொதுவாக எல்லா தமிழ் இளைஞர்கள் போலவேää தமிழ் தேசியவாத கருத்தியலின் மீது ஈடுபாடு காட்டினார்.

மீண்டும் ஆரம்பமாகியுள்ள சீன விரோத கூச்சலின் பின்னணி என்ன?- எஸ்.கணேசவேல்

 இலங்கை தமிழர்களின் அரசியலிலும், ஊடகங்களிலும் சீன விரோதம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருவது. இந்த சீன விரோதப் போக்கின் பொதுவான அடிப்படை இலங்கைத் தமிழர்களின் நிலப்பிரபுத்துவ பழமைவாதம் ஏகாதிபத்திய சார்புப் போக்கு என்பனவற்றின் மீது தோன்றிய கம்யூனிச விரோதப் போக்கே. தமிழ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்பு நிலப்பிரபுத்துவவாதி.

 

அவர் 1956 பொதுத் தேர்தலின் போது பருத்தித்துறை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்ட பொன்கந்தையாவுக்கு எதிராக அல்வாய் மாலுசந்தியில் நடைபெற்ற தமிழ் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது,கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் வெற்றி பெற்றால் கோயில்களை இடிப்பார்கள்ää நளம் பள்ளுகளை கோயிலுக்கை போக விடுவார்கள்எனப் பகிரங்கமாகவே பேசினார். பின்னர் தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்துபோய் தமிழரசுக் கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் பொன்னம்பலத்துக்கு குறைந்தவர் அல்லஅவர் வெளிப்படையாக சாதிவாதம் கம்யூனிச எதிர்ப்பு பேசாவிட்டாலும், வரும்  பொன்னம்பலத்தின் அடிச்சுவட்டையே பின்பற்றினார்.

நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன!

 நாட்டில் 30 வருட அழிவுகரமான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு அழிவுகரமான நிலைமையை உருவாக்குவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு நாசகார சக்திகள் தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளன. முன்பு போல இனப்பிரச்சினை வடிவத்திலேயே மீண்டும் அந்த வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக சகல பிற்போக்கு தமிழ் தேசியவாத சக்திகளும் ஓரணியில் திரட்டப்பட்டு வருகின்றன.

இலங்கையில் தோன்றிய இனப்பிரச்சினை என்பது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தமது காலனியாதிக்க தேவைகளுக்காக மக்களைப் பிரித்தாளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு, அவர்களது உள்நாட்டு அடிவருடிகளான சிங்கள – தமிழ் முதலாளித்துவ சக்திகளால் வளர்க்கப்பட்ட ஒன்றாகும்.

பிரித்தானியர் தென்னாசியாவில் – குறிப்பாக இந்தியாவில் தமது காலனியாதிக்கத்துக்கு எதிராக எழுந்த சுதந்திரப் போராட்ட அலை காரணமாக இலங்கையையும் விட்டு 1948 இல் வெளியேற நேர்ந்தாலும், தமது உள்நாட்டு அடிவருடிகள் மூலம் இலங்கை அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருந்தனர். அதற்கு ஏதுவாக சுதந்திர இலங்கையின் முதலாவது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியும், தமிழ் பிற்போக்கு மேட்டுக்குழாமும் செயற்பட்டன.

கொவிட் நோயினால் மரனிக்கும் முஸ்லிம்களை அடக்கும் உரிமை

கோவிட்-19 என்ற போர்வையில், மோடி ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது- பேரா. ராமச்சந்திர குஹா


ஜனவரி 16, 2021

ந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல்,ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்துக்கே 2020ஆம் ஆண்டு பெரும் துயரங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. அதிகாரத்துவத்துக்கு பேர் போன மோடி ,அமித் ஷா கூட்டணி இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தை உருக்குலைத்து, தங்கள் ஆளுமையை,அழுத்தத்தை அரசு மற்றும் சிவில் சமூகத்தை இந்த பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி நிலைகுலைய வைத்துள்ளனர் . அவர்களின் இலக்குகளை முழுமையாக அடைந்திட, இந்திய நாடாளுமன்றம், கூட்டாட்சி, ஊடகம், சிவில் சமூக அமைப்புகளின் மீது பன்முக தாக்குதலை தொடுத்துள்ளனர்.

இலங்கை – வடபுல மூத்த இடதுசாரி தோழர் சி.தருமராசன் மறைந்தார்-தோழர் மணியம்

 


னடாவில் வாழ்ந்து வந்த தோழர் சின்னத்துரை தருமராசன் எம்மைவிட்டு, இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்டார். 88 வயதில் 2021 ஜனவரி 03 ஆம் திகதி அதிகாலை 01 மணியளவில் முதுமை அவரை காவு கொண்டுவிட்டது. இறுதிவரை தான் வரித்துக்கொண்ட மார்க்சிய நிலைப்பாட்டிலிருந்து வழுவாது வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார் தோழர் தருமராசன்.

தோழர் தருமராசன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அயலூரான கல்லுவத்தில் திருமணம் செய்தார். (கல்லுவத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தோழர் விசுவானந்ததேவன் போன்றவர்களை இடதுசாரிகளாக உருவாக்கியது தோழர் தருமராசன் அவர்களே) இரண்டு ஆண் மக்கள் உண்டு. (கனடாவில் வாழ்கின்றனர்)

தமது இளம் வயதிலேயே இடதுசாரி அரசியலில் நாட்டம் கொண்டுவிட்டார். சிறு வயதில் வடமராட்சியில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி அரசியல்வாதியான தர்மகுலசிங்கத்தால் (ஜெயம்) ஈர்க்கப்பட்டார். பின்னர் 1956 இல் பொன்.கந்தையா கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பருத்தித்துறைத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டபோது, சிறுவனாக இருந்த தருமராசன் அவரது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அக்கறையுடன் கலந்து கொண்டார்.

உலகம் நீண்ட காலத்துக்கு கொரோனா வைரஸுடன் வாழ பழக வேண்டியிருக்கும் – திஸ்ஸ விதாரண


ஜனவரி 16, 2021

லங்கையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவலாக பரவியுள்ளது. பலரும் நோய்த் தொற்றுக்கான காவியாக இருக்க முடியும் என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்தல் தொடர வேண்டும், ஆனால் இப்போது சமூக அடிப்படையிலான அணுகுமுறையும் அவசியம். கொவிட்19 வைரஸ் இன்னும் பல பகுதிகள், கிராமப்புறங்கள் மற்றும் நகரங்கள் போன்ற அதிக நெரிசலான பகுதிகளுக்கு பரவக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...