மேதினத்தன்று காலிமுகத்திடலில் திரண்ட சன சமுத்திரம் சொல்லும் சேதி என்ன ? தோழர்மணியம்



தென்னாசிய நாடுகளிலேயே  இலங்கையில்தான் மேதினம் வெகுசிறப்பாகக் கொண்டாடும்  வழக்கம் உள்ளது எனச் சொல்லலாம். அதேநேரத்தில்
இங்குதான் தொழிலாளர்களின் கட்சிகள ; மட்டுமின்றி, கடைந்தெடுத்த  முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக்க ட்சியும் பிற்போக்கு தமிழ் கட்சிகளும் மேதினத்தைக் கொண்டாடும் விந்தையும்
நடைபெறுகிறது. ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்தியம்  இலங்கையை
அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் மட்டுமின்றி,  1948இல் இலங்கைக்கு
சுதந்திரம் கிடைதத்த பின்னர் ஐ.தே.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூட  19656இல் எஸ் . டபிள்யு .ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சி அமையும் வரை இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மேதினத ;தை சுதந்திரமாகக் கொண்டாட ஐ.தே.க. அரசு அனுமதிக்கவில்லை.
பண்டாரநாயக்க ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னரே மேதினம் சம்பளத ;துடன் கூடிய விடுமுறை தினமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட 1966இல் அப்போதைய ஐ.தே.க. தலைமையிலான அரசில் பிற ;போக்கு தமிழ் கட்சிகளான
தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ ; கட்சியும் இணைந்திருந்ததால் அக்கட்சிகளின் தூண்டுதலால் யாழ்ப்பாணத்தில் மட்டும் மேதினம் தடை
செய்யப்பட்டது. ஆனால் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அந்தத  தடையையும் மீறி யாழ்ப்பாணத ;தில் மேதின ஊர்வலத ;தையும், பொதுக் கூட்டத ;தையும் நடாதத்தியது.


ஹக்கீமுக்கு ஏற்பட்ட காலம் பிந்திய ஞானோதயம்! -இத்திரீஸ



''இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ அமைப்பினால் கொண்டுவரப்பட்ட
பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்து கொள்ளாமை சர்வதேச ரீதியாக தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது.
பாலஸ்தீனம் தொடர்பிலான எமது நிலைப்பாட்டை நாம் அறிவிக்க வேண்டும். பாலஸ்தீனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. இவ்விரு நாடுகளுக்குமிடையிலான நட்பு பலமாகக் காணப்படுகிறது. அந்நாட்டு மக்களின் குறிக்கோள்கள் தொடர்பாக எமது வெளிநாட்டுக் கொள்கையிலும் பிரதானமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

‘நல்லாட்சி’ அரசு இராணுவ அரசாக உருமாறப் போகிறதா?



ரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் “நல்லாட்சி” என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இன்றைய மைத்திரி – ரணில் அரசாங்கம், தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமலும், நாட்டில் பூதாகரமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமலும் தத்தளிக்கின்ற சூழ்நிலையில், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தால் தமது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் எனக் கூடுதலாக எதிர்பார்த்தவர்கள் நாட்டின் சிறுபான்மை இனங்களைச் சேரந்த மக்களே. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தனர். அதற்குக் காரணம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி மைத்திரி – ரணில் கூட்டை ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, “நல்லாட்சி”யின் மூலம் தமிழ் மக்களின் அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும் எனக் கொடுத்த அபரிமிதமான நம்பிக்கைதான்.

மோடியின் கோட்பாடான “பிரிக்கமுடியாத பரஸ்பர பாதுகாப்பு” ஸ்ரீலங்காவின் தேசிய நலன்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது கலாநிதி.தயான் ஜயதிலகா


பிரதம மந்திரி மோடியின் ஸ்ரீலங்காவுக்கான இரண்டு நாள் விஜயம் அரசியல் சார்பற்றது என்று dayan jayatilakaகூறப்பட்டது. இருந்தம் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த சர்வதேச வெசாக் மாநாட்டில் அவர் உரையாற்றும்போது, இந்தோ - லங்கா உறவுகளுக்கு அதுவும்  விசேடமாக ஸ்ரீலங்காவுக்கான மோடியின் கோட்பாட்டை நிலை நிறுத்தினார்.
அவருடைய செய்தி அரிதாக அரசியல் அல்லாத ரீதியிலோ அல்லது முற்றிலும் கலாச்சாரம் மற்றும் நாகரிக ரீதியில் இருந்தது என்று சொல்வதை விட தர்ம அசோகனுடையதாக இருப்பதைக் காட்டிலும் அதிகம் கவுட்டிலியனுடையதாகவே இருந்தது. நாட்டின் உயர் தலைமைகள்  தற்போதைய அரசாங்கம் - எதிர்க்கட்சி என்பனவற்றுக்கு அவர் நாட்டின் இறையாண்மை இருப்புகளின் வரம்புகளை பரிந்துரைத்தார்.
இப்படித்தான் அவர் சொல்கிறார் “பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புஃமூலோபாயம் ஆகியன நாடுகளுக்கு இடையேயான அதிகார உறவுகள் என்னும் ஒரே அம்சத்தின் கூறுகளாக உள்ளன:

"இலங்கை – சீன உறவுகள்: 1952ஆம் ஆண்டுக்கு திரும்பி ஓடிய பிரதமர் ரணில்! "-சச்சிதானந்தன்



இலங்கையின் தற்போதைய மேற்கத்தைய சார்புஅரசாங்கத்தின் ஐக்கிய தேசியக்
கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஏப்ரல் மாதத்தில்தான் விரும்பாத ஒரு நாட்டுக்குஅதாவது மக்கள் சீனத்திற்குபிச்சா பாத்திரம் ஏந்தி ஒரு நடைபோய்விட்டு வந்திருக்கிறார். சுமார்ஒன்றேகால் வருடத்திற்கு முன்னர்இதே அரசாங்கத்தின் ஜனாதிபதி,
பிரதமர் உட்பட பெரும்பாலானதலைவர்கள் கிளப்பிய சீன விரோதவெறிக்கூச்சலைப்
பார்த்தவர்களுக்கு, பிரதமரின் சீனவிஜயம் ஆச்சரியத்தைக்கொடுத்திருக்கும் என நம்பலாம்.
வரலாறு சில தனிமனிதர்கள்விரும்பியவாறு செல்வதில்லை என்பதற்கு தற்போதைய இலங்கைஅரசாங்கத்தின் சீனா பற்றிய கொள்கையில் ஏற்பட்டுள்ள 180
பாகை பல்டியடிப்பு ஒரு உதாரணம்.

2015 ஜனவரி 08ஆம் திகதிஇலங்கையில் ஜனாதிபதித்தேர்தல் நடைபெற்ற போது,
முன்னொருபோதும் இல்லாத வகையில் சீனாவுக்கு எதிரானபிரச்சாரம் உச்சத்தை எட்டியது.
பாரம்பரியமாக சோசலிச எதிர்ப்பிலும், சீன எதிர்ப்பிலும் மூழ்கி எழுந்த ஐ.தே.க. மட்டுமின்றி,
எதிரணி ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு
ஆதரவாக மாறிய, சீன நட்புறவைஎப்போதும் பேணி வந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சில
உறுப்பினர்கள் கூட சீன எதிர்ப்பு வாந்தி எடுத்தனர்.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இலங்கையை சீனாவின் கொலனியாக மாற்றிவிட்டதாக
அவர்கள் கூச்சல் போட்டனர். தாம் ஆட்சிக்கு வந்தால் மகிந்த அரசு சீனாவுடன் செய்து கொண்டுள்ள  அத்தனை ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்யப்போவதாகவும்
சூளுரைத்தனர். அவ்வாறே ஜனவரி 8இல் மைத்திரி ஜனாதிபதியாகத் தெரிவானதும், சீனாவின்  உதவியுடன் நிர்மாணிக்கப்படவிருந்த கொழும்பு துறைமுக நகரத்
திட்டத்தை நிறுத்தி வைத்தனர். அதுபோல சீன உதவியுடன் நிறுவப்பட்ட அம்பாந்தோட்டை
துறைமுகம், மத்தள சர்வதேச விமான நிலையம் உட்பட பல சீன உதவித் திட்டங்களையும் நிறுத்தி வைத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும்
இடையிலான உறவுகள் தீவிரமாக வளரத் தொடங்கின. இலங்கை அரச தலைவர்கள் இந்த
நாடுகளுக்கு அடிக்கடி போய்வந்தனர். அந்த நாடுகளின் உயர்மட்டத் தூதுவர்கள் ஒருவர்
பின் ஒருவராக இலங்கைக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். இலங்கையின்
பொருளாதார நெருக்கடியைத்  தீர்ப்பதற்கு மேற்கு நாடுகளிடமும் இந்தியாவிடமும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள்
என்பனவிடமும் இலங்கை யாசகம் செய்தது. ஆனால் எதிர்பார்த்த பயன் ஏதுவும்
ஏற்படவில்லை. இலங்கையில் திட்டமிட்ட முறையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, தமக்குச் சார்பான அரசொன்றை ஆட்சியில் இருத்திய மேற்கு நாடுகளும், இந்தியாவும், இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உதவத் தயாராக இருக்கவில்லை.
இந்த நிலைமையிலேயே வெட்கத்தை விட்டு தாம் எட்டி உதைத்த சீனாவிடம் இலங்கை
பிச்சைக் காவடி எடுக்க வேண்டி  ஏற்பட்டது.

தற்போதைய மைத்திரி  ரணில் அரசு எடுத்த முட்டாள்தனமான சீன விரோத நிலையால், சீன அரசாங்கத்துக்கு மட்டுமின்றி, இலங்கை அரசாங்கத்துக்கும் பல நூறு கோடி ரூபாக்கள் நஸ்டம் ஏற்பட்டதைப் பற்றி அரசாங்கம் எதுவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. முன்னைய
அரசு பல கோடி ரூபாக்களை  வீணடித்ததாக குற்றம் சாட்டும் தற்போதைய அரசு, தனது
முட்டாள்தனத்தால் ஏற்பட்ட நஸ்டம் குறித்து கவலை ஏதும் இன்றி இருக்கின்றது.
இவர்களுடைய நடவடிக்கையைப் பார்க்கும் போது, இவர்கள் வரலாற்றிலிருந்து எந்தவிதமான பாடங்களையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
சீனா இலங்கையின் எல்லா நெருக்கடிகளின் போதும் தன்னலமற்று உதவிய வரலாற்றையும் புரிந்து கொண்டதாகவும் தெரியவில்லை.

1952இலும் அன்று ஆட்சியிலிருந்த டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க.
அரசாங்கத்தை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து சீனா எப்படிக்
காப்பாற்றியது என்பதைக்கூட மறந்து இவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள்.
1952இல் இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஒன்று உருவானது. 1948இல்
சுதந்திரமடைந்த இலங்கையை ஆட்சி செய்த ஐ.தே.க. தலைமையிலான அரசு முழுக்க


முழுக்க மேற்கத்தைய சார்பாக இருந்தது. அந்தக் காலத்தில் இலங்கையில் நபர் ஒருவருக்கு
வாராவாரம் 2 றாத்தல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டுவந்தது. ஆனால் இரண்டாம் உலக
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாகவும், இலங்கையில்அரிசி உற்பத்தி வீழ்ச்சிஅடைந்ததினாலும், உலகச்சந்தையில் அரிசி விலை
அதிகரித்ததினாலும், இலங்கையில் அரிசிக்குப் பெரும் தட்டுப்பாடுநிலவியது. ஆனால் இலங்கைக்கு அது ஆதரித்த எந்த மேற்கு நாடும் இன்றுபோல் அன்றும் உதவ
முன்வரவில்லை. அதுமாத்திரமின்றி, இலங்கைக்கு அந்நியச் செலாவணி ஈட்டித்தந்த
இயற்கை இறப்பரையும் உலகச் சந்தையில் செயற்கை இறப்பர்வந்ததால் விற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இலங்கை வேறு நாடுகளிடமிருந்து அரிசியைஇறக்குமதி செய்வதற்கு அந்நியச் செலாவணியும் இருக்கவில்லை. மறுபக்கத்தில், சீனா இலங்கையை
விட ஒரு வருடம் பிந்தி 1949இல் விடுதலை அடைந்தபோதும், அது சோசலிச நாடாக இருந்ததால், மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அரிசியில் தன்னிறைவு அடைந்திருந்தது. ஆனால் மேற்கத்தைய சார்பான இலங்கை சோசலிச சீனாவுடன் இராஜதந்திர
உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. (1956இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்தபின்னர்தான் இலங்கை, சீனா, சோவியத் யூனியன் போன்ற சோசலிச நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தியது)  இத்தகைய ஒரு சூழ்நிலையில் டட்லியின் அரசில் வர்த்தக அமைச்சராக இருந்த ஆர்.ஜீ.சேனநாயக்க (பிற்காலத்தில் தீவிர சிங்கள இனவாதியாக
அறியப்பட்டவர்) ஒரு துணிச்சலான செயலில் இறங்க முன்வந்தார். அவர் டட்லியின் அனுமதியைப் பெற்று சீனாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவிடமிருந்து
அரிசி பெறுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை மிகச் சாதுரியமாகச் செய்து முடித்தார்.


வரலாற்றில்“ இலங்கை –  சீன அரிசி –  ரப்பர் ஒப்பந்தம் ”  எனக் குறிப்பிடப்படும் இந்த ஒப்பந்தம் 1952 டிசம்பர் 18ஆம் திகதி கையெழுத்தானது. ஓப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் சோசலிச சீனாவின் புகழ்மிக்க முதலாவது பிரதமர் சௌ என்லாய் நேரடியாகக் கலந்து
கொண்டார். இந்த ஒப்பந்தம் முதலில் 5 வருடங்களுக்கெனச் செய்துகொள்ளப்பட்ட போதும்,
பின்னர் 6 தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, 30 ஆண்டுகள் அமுலில் இருந்து, 1982இல்
காலாவதியானது. இதில் இன்னொரு விசேட அம்சம் என்னவெனில் சீனா உலகச்
சந்தை விலையைவிட இலங்கைக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்கியதுடன்,
இலங்கையிடமிருந்து உலகச் சந்தை விலையைவிட கூடுதலான விலைக்கு இறப்பரை
வாங்கியதுதான்.

இவ்வாறு இலங்கை தனது  உணவுத் தேவைக்கு தத்தளித்த போது தன்னலம் பாராது உதவி
புரிந்த சீனாவுடன்தான் மைத்திரி – ரணில் அரசு நன்றியில்லாமல்  போக்கரித்தனமாக நடந்து
கொண்டது. என்றாலும் தானேவெட்டிய குழிக்குள் விழுந்த இலங்கை அரசு, திரும்பவும் சீன
அரசின் உதவியுடன்தான் மேலே எழும்பி வரவேண்டி இருந்திருக்கிறது. ஒருவகையில் பார்த்தால், வரலாற்றிலிருந்து பாடம் எதனையும் கற்றுக் கொள்ளாத இலங்கை அரசின் ஐ.தே.க. பிரதமர், திரும்பவும் 1952ஆம் ஆண்டுக்குத் திரும்பி ஓடி, சீனாவின் உதவியைப்
பெற்றிருக்கிறார். இனிமேலாவது இலங்கை அரசு மேற்கத்தைய சக்திகளினதும், இந்தியாவினதும் பூகோள நலன்களுக்கு தாளம் போடாமல் தனது உண்மையான
நண்பர்களை இனம்கண்டு நடந்து கொள்ளுமா என்பதைச் சற்றுப்
பொறுத்திருந்து பார்ப்போம்.

 வானவில், வைகாசி  2016

காலி முகம் - பசுமையில் இருந்து எழுதுவது சி.ஏ.சந்திரபிரேம


2016ல் நடந்ததை நினைவுபடுதினால், கூட்டு எதிர்க்கட்சியினர் கmayday rally 2017ிருலப்பொனயில் நடத்திய மே தின பேரணிக்கு நான் வந்தபோது நேரம் கிட்டத்தட்ட பி.ப 5.00 மணி, தொலைபேசி மூலம் நண்பர்கள் சொன்னது, ஐதேக மற்றும் ஜேவிபி என்பனவற்றின் பேரணிகளுக்கு வந்திருந்த கூட்டம் இரண்டையும் சேர்த்தால் வருவதைவிட அதிகளவு கூட்டம் அங்கு வந்திருந்தது என்று, நான் அவர்கள் சொன்னது எதையும் நம்பவில்லை. பேரணிகள் அதன் உச்சத்தை அடையும் நேரமான பி.ப 4.00 மணியில் இருந்து அந்த இரண்டு பேரணிகளையும் பார்வையிட்டதின் பின்புதான் நான் கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி நடக்கும் இடத்துக்கு நான் வந்தேன். ஐதேக மற்றும் ஜேவிபி ஆகிய இரண்டுக்கும் வந்த கூட்டத்தை ஒன்று சேர்த்தால் வருவதைவிட பெரிய கூட்டம் எதிர்க்கட்சிக் குழுவுக்கு திரண்டிருந்தது என்று கூறுவதை  அந்த நேரத்தில் சற்று ஆடம்பரமான அறிவிப்பாகவே கருத முடிந்தது. இது விசேடமாக எதனாலென்றால் அந்தக் கூட்டத்தில் நான் கண்ட காட்சிகள் அதை வெளிக்காட்டவில்லை. கிருலப்பொனவில் பங்குபற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் அந்கிருந்த மேடையின் பக்கம் ஒரு பார்வையைக் கூடச் செலுத்தாமல் சென்றுவிட்டார்கள்.

பேஸ்லைன் வீதியில் சிக்கியிருந்த கூட்டத்தால் மேடை அமைக்கப் பட்டிருந்த திசையில் கூட பார்வையைச் செலுத்த இயலவில்லை, கூட்டம் மிகவும் அடர்த்தியானது ஒருவர் தனது வழியை அதனூடாக தள்ளிக்கொண்டு செல்வது மிகவும் சிரமமான ஒரு முயற்சியாக இருந்தது. நான் அந்தப் பேரணிக்கு கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு அருகாலேயே வந்தேன் ஆனால்  நுகேகொட முடிவு வரை அந்த கூட்டம் எவ்வளவுக்கு நீண்டிருந்தது என்பதை அவதானிக்கும் வகையில் கூட்டத்தை தள்ளிக்கொண்டு செல்ல என்னால் இயலவில்லை. அல்லாமலும் நாரகேன்பிட்டியை நோக்கி பேஸ்லைன் வீதி வழியாக கூட்டம் எவ்வளவு தூரம் நீண்டிருந்தது என்பதையும் என்னால் காண முடியவில்லை. 2016ல் ஐதேக மற்றும் ஜேவிபி பேரணிகளின் மொத்தக் கூட்டத்தை விட கிருலப்பொன பேரணியில் கூட்டம் அதிகம் என்று நான் சொல்லும்போது அது நம்பிக்கையைக் காட்டிலும் நான் எதிர்கொண்டது அதிகமாக இருந்தது, அதைப்பற்றி நான் பத்திரிகைகளிலும் எழுதியிருந்தேன். எவ்வாறெனினும் இந்த முறை காலிமுகத்தில் இடம்பெற்ற பேரணி அதன் சொந்த தரம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. கொழும்பில் நடைபெறும் மே தின பேரணிகள் அனைத்தையும் அவதானிப்பதை நான் வழக்கமாக கொண்டிருந்த போதிலும், இந்த வருடம் அதைச் செய்வதற்கு அவசியம் ஏற்படவில்லை. காலிமுகத்தில் என்ன நடைபெற்றதோ அதுதான் எல்லாவற்றையும் வரையறை செய்யும் நிகழ்வாக அமைந்திருந்தது.
உண்மையில் மே தினத்துக்கு முதல் நாளான ஞ}யிறு அன்று, கூட்டு எதிர்க்கட்சியால் காலிமுகத்தை கூட்டத்தால் நிரப்ப முடியுமா என்பதை கணிக்கும் முகமாக நான் நான் காலிமுகத் திடல் வழியாக வாகனத்தை செலுத்திச் சென்றேன், எனது சொந்தக் கணிப்பு அவர்களால் அதைச் செய்ய முடியாது என்பதாகவே இருந்தது. இந்த கணிப்பு காலிமுகத் திடலை மட்டுமே கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது, கடலோரம் வழியாக உள்ள பரந்த நடைபாதை மற்றும் காலிவீதியின் அருகாமை என்பனவற்றை தவிர்த்து காலிமுக புல்தரையை மட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஆனால் மே தினத்தன்று நாங்கள் கண்ட நிகழ்வு இந்த நாட்டில் வேறு எவரும் கண்டிராத ஒன்று. காலிமுகத் திடல், கடலோரம் மற்றும் பிரதான வீதி அருகாக உள்ள பரந்த நடைபாதை முழுவதும் மட்டுமன்றி கடலெனத் திரண்டிருந்த தலைகளை காலிமுக ஹோட்டல் முதல் பண்டாரநாயக்கா சிலைவரை உள்ள சமவெளிப் பிரதேசம் மற்றும் அதற்கு அப்பாலும் காண முடிந்தது. கிங்ஸ்பரி மற்றும் கலதாரி ஹோட்டல் சுற்று வட்டம் வரையான வீதி நெடுகிலும் மக்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். பிற்பகல் சுமார் 5.00 மணியளவில் அந்தப் பேரணியை பார்வையிடுவதற்காக நான் லோட்டஸ் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் இருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். வழக்கமாக இப்படியான கூட்டங்களில் இருந்து பிற்பகல் 6.00 மணியளவில்தான் மக்கள் வீடு திரும்புவார்கள். இந்த முறை அவர்கள் நேரத்துடன் திரும்பியது எதனாலென்றால் எல்லாமே நேரத்துடன் ஆரம்பமானதால்தான்.
வழக்கமாக பேரணியின் உச்சக்கட்டம் பி.ப 5.00 முதல் பி.ப 6.00 மணி வாக்கில்தான் இடம்பெறும். இந்தமுறை காலிமுக பேரணியின் உச்சக்கட்டம் சுமார் பி.ப 4.00 முதல் பி.ப 4.30 மணி வரை இடம்பெற்றது. இந்த நேரத்துக்குள் விமல்வீரவன்ச மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் தங்கள் பேச்சை முடித்துவிட்டார்கள், சோர்வடைந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரும்பிச் சென்று விடmayday rally 2017-1்டார்கள். மக்கள் நேர காலத்துடன் வெளியேறுவதற்கு சகிக்க முடியாத வெப்பநிலையும் ஒரு காரணம். உண்மையில் பேரணியில் பங்குபற்றிய இரண்டு வயதானவர்கள் நெரிசலில் சிக்கி இறந்துபோனது வழமைக்கு மாறான ஒரு நிகழ்வு. யாராவது நசுங்கியோ அல்லது மூச்சுத் திணறியோ மரணமடைந்திருந்தால் அது கடந்த வருடம் கிருலப்பொன கூட்டத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும், அங்குதான் கூட்டம் மிக அடர்த்தியாகவும் நெரிசல் மிக்கதாகவும் இருந்தது, ஒருவரால் அதை தள்ளி முன்னேற முடியாமல் இருந்தது. மறுபுறத்தில் காலிமுகம் திறந்த ஒரு பரந்த வெளி என வரையறுக்கப்படுகிறது. உண்மையில் இந்த நாட்டில் பரந்த திறந்த வெளி பற்றி சாதாரணமாக உரையாடும்போது அதற்கு உதாரணமாக காலிமுகத் திடலையே வரையறை செய்வார்கள். உண்மையில் அப்படியான ஒரு இடத்தில் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழப்பாரானால் அதன் தெளிவான அடையாளம் உச்சக்கட்ட சமயத்தில் அங்கு எவ்வளவு அடர்த்தியான சனக்கூட்டம் இருந்திருக்கும் என்பதுதான். சுமார் 3.30 மணியளவில் காலிமுக ஹோட்டலின் அருகில் இருந்து நண்பர் ஒருவர் இந்த எழுத்தாளருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இரண்டு அவசர மருத்துவ ஊர்திகள் அங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். காலிமுகத்திடலில் அந்த நேரத்தில் கூட்டத்தில் நெரிசல் உச்சக் கட்டத்தை அடைந்திருக்க வேண்டும் ஏனென்றால் காலிமுகத்தின் இரு பக்கத்தில் இருந்தும் அதிகளவான மக்கள் அதை நோக்கி தொடர்ந்து வந்துகொண்டிருக்க வேண்டும்.
பொதுக்கூட்டங்களுக்கு வரும் சனக்கூட்டத்தை வைத்துத்தான் அரசியல் காற்று எந்தப்பக்கம் வீசுகிறது என்பது எப்போதும் கணிக்கப்படும். தங்களின் ஐம்பது வயதுகளின் நடுப்பகுதியில் உள்ளவர்கள் 1977ல் மருதானையில் நடைபெற்ற மே தினக்கூட்டத்தை நினைவு படுத்திப் பார்க்கலாம், அது அந்த நேரத்தில் அனைத்து அரசியல் கூட்டங்களினதும் தாயாகக் கருதப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் மருதானை வீதிகள் இப்போது உள்ளதைபோல அகலமானதாக இருக்கவில்லை. பின்னர் 2015 ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற சமயத்தில், வஜிர அபேவர்தனா இந்த எழுத்தாளருடன் பேசும்போது சிறிசேன வெற்றி பெறுவார் ஏனென்றால் அவரது பேரணிகளுக்கு கூடும் கூட்டம் அதிகரித்து வருகிறது எனக் கணித்துக் கூறினார். அதுதான் விடயம் என்றால் காலிமுக பசுமை வெளியில் எப்போதும் கூடியிராத மிகப்பெரிய ஒரு அரசியல் ஒன்றுகூடல், உண்மையில் பொதுவாக நாட்டிலேயே கூடிய மிகப் பெரிய கூட்டம் வெளிப்படுத்தும் தவறில்லாத செய்தி என்ன? கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னோடியில்லாத இந்த அரசியல் அறிக்கையை வெளிப்படுத்த இயலுமாக இருந்தது ஏனென்றால் அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியை குறைவாக எடைபோட்டு காலிமுகத் திடலை அவர்களால் ஒருபோதும் நிரப்ப இயலாது என்கிற எண்ணத்தில் அதை அவர்களுக்கு கொடுத்திருந்தது.
குறிப்பாக அரசாங்கம் இது காட்சிப் படுத்துவதற்காக பல இடங்களிலிருந்தும் ஏற்றி வரப்பட்ட கூட்டம் என்று எண்ணித் தங்களைத் தாங்களே தப்பான நம்பிக்கையில் ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. அந்த மக்கள் ஒவ்வொருவரும் மகிந்த ராஜபக்ஸவுக்காக உயிரைக் கொடுக்குமளவுக்கmaydayrally-2ு அவரின் தீவிர ஆதரவாளர்கள். அவர்கள் ஆர்வமும் உற்சாகமுமாக இருந்தார்கள். பேரூந்துகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கலாம், ஆனால் எந்த பேரூந்து சேவையாலும் இத்தனை பெரிய கூட்டத்தை ஏற்றி வந்திருக்க முடியாது. நான் கூட்டத்துக்கு செல்வதற்கு தாமதித்து விட்டேன் ஏனென்றால் இந்தக் கூட்டத்துக்கு போகும் முன்பு கொட்டாஞ்சேனையில் உள்ள இந்த பத்திரிகை அலுவலகத்துக்கு முச்சக்கர வண்டியில் செல்லவேண்டி இருந்தது, மற்றும் கோட்டைப் பகுதியில் கூட்டம் இருக்காது ஏனென்றால் காலிமுகக் கூட்டத்துக்கான நுழைவாயில் அநேகமாக கொள்ளுப்பிட்டி பக்கமாகத்தான் இருக்கும் என்று எண்ணியிருந்தேன். நான் கோட்டைக்குச் சென்று கோட்டை வை.எம்.பி.ஏ கட்டிடத்துக்கு அருகில் சுடியிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவில் சிக்கிக் கொண்டேன், எல்லோரும் லோட்டஸ் வீதி வழியாக காலிமுகத்தை நோக்கி நுழையும் நோக்கத்துடன்; நகர்ந்து கொண்டிருந்தார்கள். வை.எம்.பி.ஏக்கு அருகில் எனது வாகனத்தை கடந்து சென்ற மக்களின் எண்ணிக்கையே ஒரு தனியான மே தின ஊர்வலத்துக்கு போதுமானதாக இருந்தது. பதினாயிரக்கணக்கான மக்கள் அந்தக் கூட்டத்துக்கு முற்றிலும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வந்தார்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிந்தது.
அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியினர் போதியளவு கூட்டம் சேராமல் திணறவேண்டும் என்கிற நோக்கில் அவர்களைச் சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக மேடை எங்கு அமைக்கப்பட வேண்டும் என்கிற அளவிற்கு கூட கட்டளைகளைப் பிறப்பித்திருந்தது, ஆனால் இவை எல்லாம் அவர்களுக்கே எதிராகத் திரும்பியிருந்தன. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமா என அது நடத்திய பொது வாக்கெடுப்பைப் போல ஸ்ரீலங்காவில் தீவிரமான ஒரு மைல்கல் வெற்றியாக அமைந்து விட்டது. பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழில்கட்சி, லிபரல் ஜனநாயகக் கட்சி ஏன் ஸ்கொட்லாந்தின் தேசிய கட்சி உட்பட அனைத்து பிரபலமான அரசியல் கட்சிகளும் பிரித்தானியா வெளியேறக்கூடாது என பிரச்சாரம் நடத்திய போதிலும் வெளியேற வேண்டும் என்கிற கோரிக்கையே வெற்றி பெற்றது. அதேபோல ஸ்ரீலங்காவிலும் ஐதேக, ஸ்ரீ.ல.சு.க, மற்றும் ஜேவிபி ஆகிய அனைத்தும் வெளிப்படையாகவே காலிமுகப் பேரணியை எதிர்த்த போதிலும் கூட்டு எதிர்க்கட்சி ஒவ்வொருவரையும் புறந்தள்ளி நிலமையை சமாளித்துள்ளது. எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக அவர்கள் உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன கட்சிக்கு வெறும் ஒரு வயதே ஆகியுள்ளது, இருந்தும்; மக்கள் கூட்டத்தை சேர்ப்பதில் உள்ள சாதனைகள் எல்லாவற்றையும் அவர்கள் ஒருமுறை அல்ல பல தடவைகள் பல இடங்களில் முறியடித்துக் காட்டியுள்ளார்கள். காலிமுக காட்சி இன்னமும் வலிமையான மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும். இந்த நாட்டின் அரசியல் எதிர்காலம் நாட்டிலுள்ள பிரதான அரசியல் கட்சிகளுக்கு வெளியே உள்ள ஒரு அரசியல் சக்தியினால் தீர்மானிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Depeam Interview -King Ratnam-Bazeer (Part 2)


Deepam Interview-King Ratnam -Bazeer (part1 )


"ஜே.வி.பியும் தேசிய இனப் பிரச்சினையும்" -தோழர் மணியம்



1967 இல் ரோகண விஜேவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட “ஜே.வி.பி” என்று அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (தமிழில் மக்கள் விடுதலை முன்னணி) இப்பொழுது 50 வயது. அந்த இயக்கம் 1971 எப்ரலில் நடாத்திய முதலாவது ஆயுதக் கிளர்ச்சிக்கு (இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி ஒன்றும் 1988-89 காலப்பகுதியில் நடாத்தப்பட்டது. அப்பொழுதுதான் ரோகண விஜேவீரவும் ஜேவிபி தலைமையும் அரச படைகளால் கைது செய்யப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்) இப்பொழுது 46 வயது.

ஜே.விபிக்கு இனிமேலும் ஒரு ஆயுதக் கிளர்ச்சி செய்யும் உத்தேசம் இருப்பதாகத் தெரியவில்லை. அது இப்பொழுது முற்றுமுழுதாக முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஊறிய கட்சியாக மாறிவிட்டது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...