எஸ்,எம்.எம். பஷீர்
“இருக்கிறதோ
இல்லையோ பிரச்சினைகளை தேடிப்பிடித்து அதனைத தவறாக அறிகுறி
கண்டு , பிழையான நிவாரணத்தைப் பிரயோகிப்பதே அரசியல்
கலையாகும் “ -ஏர்நெஸ்ட் பெண்
(Politics is the art of looking
for trouble, finding it whether it exists or not, diagnosing it incorrectly,
and applying the wrong remedy. ~Ernest Benn)
இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு சூழ்நிலையில் பௌத்த மத தீவிர சிறுபான்மை தனிமங்களுக்கும் முஸ்லிம்களுக்கும்
இடையிலான இடைவெளியை நிரப்பும் ஒரு அரசியல் மிக வேகமாக (பலத்துடன்) இருபுறமும்
செயற்பட்டு வருகிறது என்பதை அவதானிக்க முடிகிறது. ஆசாத் சாலின் முஸ்லிம் சமூக அடக்குமுறைகளுக் கெதிரான ஆவேச பிரதிபலிப்பும் , உணர்வு மயப்படுத்தப்பட்ட உரைகளும் , அதனைத் தொடர்ந்த அவரின் கைதும் , முஸ்லிம்களுக்குள் இன மத குரோத உணர்வுகளுக்கு உரமூட்டுவதையும் பௌத்த
தீவிரவாத சக்திகளை உஷார் படுத்துவதையும் இன்று
காணமுடிகிறது. இந்தப்
பின்னணியில் முஸ்லிம் சமூக , மத
அரசியல் தலைமைத்துவங்களை , அவற்றின் ஆளுமைகளை,
முஸ்லிம்களே கேள்வி குட்படுத்துவதையும் காணாமலிருக்க முடியவில்லை. "அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்"
என்று காத்திருந்த சின்ன சின்ன அரசியல் கட்சிகளும்
, இயக்கங்களும் இதை விட்டால் பெரிய முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்களை உள்ளூர்த் மட்டத் தலைவர்களை உண்டு இல்லை என்று
பண்ண சந்தர்ப்பம் வராது என்று தமது இன உணர்வினை வெளிப்படுத்தும் விதத்தில் தாங்களே
உண்மையில் சமூக அக்கறைகள் கொண்டவர்கள் என்று வெகு
வேகமாக செயற்பட்டு வருகின்றனர்.
அண்மையில் இலங்கை தேசிய ஐக்கிய முன்னணிக்
கட்சியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயருமான
எம்.ஆசாத் சாலி. சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலங்கைத்
தமிழர்களுக்கான வாழ்வுரிமைக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் ,
ஜூனியர் விகடன் எனும் வார இதழுக்கு
வழங்கிய பேட்டி அமைதியை விரும்பும்; , கடந்த காலங்களில்
வடக்கு கிழக்கில் புலிகள் நடத்திய இனச் சுத்திகரிப்பு
, இனப் படுகொலை உட்பட்ட சகல மிலேச்சத்தனமான புலிகளின் பயங்கரவாத
நடவடிக்கைளின் போதும் அமைதி காத்த முஸ்லிம் சமூகத்தை சங்கடத்தில்
ஆழ்த்தியுள்ளது.