Bazeer Lanka
An Opening of a Pandora's Box
Tuesday, 15 May 2012
Sunday, 13 May 2012
Sunday, 6 May 2012
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய காங்கிரஸ் அங்குரார்பணமும் தமிழ் பயங்கரவாதமும் !!
எஸ்.எம்.எம்.பஷீர்
இலங்கைத் தமிழ் கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ் தேசியக் காங்கிரஸ் எனும்
அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு 30 ஏப்ரல் 2012ல் பிரித்தானிய
நாடாளுமன்ற குழு அரை இலக்கம் பத்தில் என்பீல்ட் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்
அன்டி லவ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட
அயர்லாந்தின் துணை முதல் மந்திரி மார்டின் மக்கினஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து
கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்ட போதும் அந்நிகழ்வில் அவர் கலந்து
கொள்ளவில்லை ! மாறாக நியூஹாம் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரிபன் ரிம்ஸ்
கலந்து கொண்டார். பொன்னாடை போர்த்தி கவுரவிக்கவும் பட்டார் .
Saturday, 21 April 2012
புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்
எஸ்.எம்.எம்.பஷீர்
.
"அன்பினால்
கோபக்காரனை வெல்,
நன்மையால் தீய குணத்தோனை வெல்"
தம்மபதம் (பௌத்த நீதி நூல்)
நன்மையால் தீய குணத்தோனை வெல்"
தம்மபதம் (பௌத்த நீதி நூல்)
சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில்
காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள
முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின்
அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக
"கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத
இயக்கம்
என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு
உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை
மேற்கொண்டு வரும் தம்புள்ளை
பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பௌத்த மத பரப்புரை வானொலியான ரங்கிரி
வானொலி மூலம் , அவ்வானொலியின்
போஷகராக செயற்படும் ரஜ வன.
இனமுல்ல சிறி சுமங்கல தேரோ . விதைத்த தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கெதிரான
நச்சுக் கருத்துக்களை உள்வாங்கிய சிங்கள தீவிரவாத சக்திகளால் தம்புள்ளையில் சுமார் ஐந்து தசாப்தமாக இயங்கி வந்த முஸ்லிம்களின்
ஒரே ஒரு பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் சித்திரை மாதம் இருபதாம்
திகதி வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
Tuesday, 17 April 2012
குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்
சையட் பசீர் ::- தமிழர்கள் என்று மட்டுமல்ல முஸ்லீம்கள் என்றும் சேர்த்துப் பேசப்பட வேண்டும். இப்போது முகாம்களில் உள்ள மக்களின் அவலம் வேதனையானது. அவர்கள் மீளவும்குடியமர்த்தப்பட வேண்டும். அதேசமயம் பலவருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளம் முகாம்களில் தான் வாழ்கிறார்கள். அதற்காக எந்தக் கூட்டமும் கலந்துரையாடலும் நடாத்தப்படாதது மனவருத்தமானது.
Tuesday, 13 March 2012
ARE THE LTTE TERRORISTS FREE AT LARGE AND FREE AT LAST IN GENEVA?
S.M.M.Bazeer
“Fighting terrorism is like being a goalkeeper. You can make a hundred brilliant saves but the only shot that people remember is the one that gets past you.”
PAUL WILKINSON, London Daily Telegraph,
Sep. 1, 1992
It is ironic that the rumps of the LTTE, a designated Foreign
Terrorist Organization by the European Union and the USA, have staged a protest
against Sri Lanka on 5th March 2012 at the precincts of the UN Office in Geneva.
The tiger protesters called for an international intervention by passing
the USA initiated resolution against Sri Lanka and handed in a memorandum to Ms
Navaneetham Pillai , The United Nations High Commissioner for Human Rights.
The LTTE ‘s Geneva Protest was ignited by a long walk by
three Tamil youths and sent out a message to the LTTE and
it's supporters that it was the gathering of the LTTE . The three
Tamil youths who ventured a long walk from Belgium to Geneva praised their
leader, Pirabkaran all along their way to Geneva.
Sunday, 11 March 2012
US soldier shoots Afghan civilians
US soldier shoots Afghan civilians

A US soldier has shot Afghan civilians, it has been confirmed
Villagers showed an Associated Press photographer 15 bodies, including women and children, and alleged they were killed by the American.
The shooting looks certain to deepen strains between US forces and their Afghan hosts after weeks of violence triggered by Americans burning Muslim holy books at a US base.
Nato officials apologised for the shootings.
"I wish to convey my profound regrets and dismay at the actions apparently taken by one coalition member in Kandahar province," said a statement from Lieutenant General Adrian Bradshaw, the deputy commander of Nato forces in Afghanistan. "One of our soldiers is reported to have killed and injured a number of civilians in villages adjacent to his base. I cannot explain the motivation behind such callous acts, but they were in no way part of authorised ISAF military activity."
The shooting took place in two villages in the Panjwai district of southern Kandahar province - Balandi and Alkozai. The villages are about 500 yards away from a US base.
The shooting started around 3am, said Asadullah Khalid, the government representative for southern Afghanistan and a member of the delegation that went to investigate the incident. He said that he had counted 16 dead. There was no way to immediately reconcile the different death tolls.
Alkozai resident Abdul Baqi said he heard the gunshots during the night but only found out about the deaths afterward when he talked neighbours who said the man had come into their homes shooting.
"When it was happening in the middle of the night, we were inside our houses. I heard gunshots and then silence and then gunshots again," Mr Baqi said.
An AP photographer saw 15 bodies between the two villages. Some of the bodies had been burned, while others were covered with blankets.
Nato spokesman Justin Brockhoff said a US service member had been detained as the alleged shooter. The victims were evacuated to Nato medical facilities, he said.
Saturday, 3 March 2012
காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.! - பாகம் இரண்டு
எஸ்.எம்.எம்.பஷீர்
"ஒரு மதத்தினால் , ஒரு கலாச்சாரத்தினால் எங்களுக்கே சொந்தமான வாழ்க்கை முறையால் நாங்கள் ஒரு தனி இனத்தவராகவுள்ளோம் .இவைகளை எல்லாக் காலங்களுக்கும் நாம் பாதுகாக்க வேண்டும் முன்னெடுத்துச் செல்லவேண்டும். " தமிழ் பேசும் மக்கள்" என்ற கூற்றின் கீழ் அடக்கி , அதன் மூலம் மறைமுகமாக முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் , அவர்களுக்காகப் பேசவும் உரிமை கொண்டாடவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் , தமிழ் காங்கிரசினதும் முயற்சிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்"
( 1966 , அக்டோபர் ஆறாம் திகதி கொழும்பில் நடைபெற்ற இஸ்லாமிய சோசலிஸ்ட் முன்னணியின் முதலாவது வருடாந்த மாநாட்டில் முன்னாள் கல்வி அமைச்சர் மறைந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத் ஆற்றிய உரையிலிருந்து. )
இலங்கையின் சட்டவாக்க சபையிலிருந்து இன்றைய ஜனாதிபதி ஆட்சிக் காலம் வரை இனரீதியான அரசியல் கூர்ப்பினை அரசியல் அதிகாரக் கட்டமைப்பினூடாக மிகச் சுருக்கமாக பார்த்தால் , இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்பிருந்த பிரதேச பிரதிநிதித்துவம் போதிய தகுந்த பிரதிநிதித்துவமின்மை போன்ற மனக்குறைகள் மெது மெதுவாக மாற்றமுற்று வந்துள்ளதால் மனக்குறைகள் தீர்வதற்கு பதிலாக அரசியல் ரீதியில் தமிழ் தேசிய வாத அரசியலின் கள நிலவரங்கள் இன ரீதியான முரண்பாட்டு அரசியலை கூர்மையடையச செய்தன , அதனால் சிங்களவர்கள் தமிழர்கள் என்ற அரசியல் இனத்துவ முரண்பாடுகள் முஸ்லிம்களையும் தங்களின் தனித்துவம் தேட வேண்டிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தன என்பது வரலாறு. எனவே மனக்குறைகள் கண்டிய சிங்களவர் -கரையோரச் சிங்களவர் முஸ்லிம்கள்- தமிழர் , இலங்கை பூர்வீகத் தமிழர் -மலையகத் தமிழர் என்றெல்லாம் விரிவுபட்டு சென்றது என்பது நமது கண்முன் விரிந்து கிடக்கும் வரலாறு.
Tuesday, 28 February 2012
காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!
காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!
எஸ்.எம்.எம்.பஷீர்
"உண்மையான
மனக்குறை ஏதாவது ஒரு சமூகத்திற்கு இருக்குமாயின் , அது கண்டிப் பிரதேச
சமூகத்திற்கும் , அத்தோடு முஸ்லிம் சமூகத்திற்குமேயாகும் , இன்றுள்ள
பிரதிநிதித்துவ முறை , நாலு லட்சம் முஸ்லிம்களுக்கு , ஐந்து லட்சத்து
ஐம்பது ஆயிரம் இலங்கை தமிழர்களுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து , இந்த
கவுன்சிலில் உரிய பிரதிநிதித்துவத்தை பெற முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது.
இன்றுள்ள நிலைமை என்ன ? இராஜாங்கக் கவுன்சிலில் இலங்கைத் தமிழர்களுக்கு
ஏழு ஸ்தானங்கள் இருக்கின்றன.ஆனால் தமிழர்களுக்கு அடுத்தபடியாக ,
ஜனத்தொகையில் சொற்பமே குறைவாகவுள்ள முஸ்லிம்களுக்கு பிரதேசவாரியாக
பிரதிநிதித்துவம் வகிக்க ஒரு தொகுதிகூட இல்லை . ஒன்றோ இரண்டோ அங்கத்தவர்களை
நியமனம் செய்யும் கவர்னரின் தயவில் அவர்கள் தங்கி இருக்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது. இதுதான் அவர்களின் உண்மையான மனக்குறையாகும் " எஸ்.டப்ளியு.
ஆர் .டி . பண்டாரநாயகா
(
1939 ஆம் அண்டு இராஜாங்க கவுன்சிலில் திரு எஸ்.டப்ளியு. ஆர் .டி .
பண்டாரநாயகா உறுப்பினராகவிருந்தபோது ஆற்றிய உரையில் ஒரு சிறு பகுதி இது.
)
மாகாணசபை
சட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்று கூறும் பிரதான தமிழ் அரசியல் தரப்பினர் ,
இப்போது கிழக்கில் மாகான சபைகள் விரும்பியோ விரும்பாமலோ செயற்பட்டுக்
கொண்டிருக்கும் சூழலில் , வடக்கிலும் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறும் சூழல்
தோன்றுவதாலும் , மறுபுறம் மாகாணசபை அதிகாரங்களை பூரணமாக அமுல் படுத்தக்
கோருவதையும் , வட கிழக்கு இணைப்பை கோருவதையும் அண்மைக்கால செய்திகளாகவே
கேட்டு வருகிறோம்.
Subscribe to:
Posts (Atom)