மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

 

 

 

 

எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது என்பதற்கு இன்னும் தான் எனக்கு விடைதெரியவில்லை. இன்னும் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. 2006 மாவிலாறு மூடியதிலிருந்து 2009 ஜனவரிவரை இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் புலிகள் இராணுவம் பொதுமக்கள் என கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு ஆயிரமளவிலேயே இருந்தது. யுத்தத்தை அப்போதே நிறுத்துங்கள் மக்களைக் கொல்லக் கொடுத்து யுத்தத்தை வெல்ல முடியாது. கொல்லப்பட்டவர்களுக்கு மனிதவுரிமை கோஷம் எழுப்புவதில் பயனில்லை என பதிவுக்கு மேல் பதிவுகள் எழுதினேன். எழுதினோம். என்ன ஆச்சு. கொத்துக்கொத்தாக கொல்லக் கொடுத்தார்கள். எனக்கு இன்னமும் புரியாத விசயம் கொல்லப்படுவதை நிறுத்துவது நல்லதா? அல்லது கொல்லப்பட்ட பின் அதை வைத்து மனித உரிமைக்காகப் போராடுவது நல்லதா?

இக்கீழுள்ள பதிவை மணியம் சண்முகம் டிசம்பர் 26 அன்று தன் முகநூலில் பதிந்துள்ளார். என்னை ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பதிவு மிகவும் ஈர்த்தது. அதிஸ்ட் வசமாக சம்பந்தப்பட்டவர் ஒன்றரை வருடங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் விடுவிக்கப்படாமல் ‘அங்காலை அனுப்பப்பட்டவை எத்தனைபேர்? துரதிஷ்டவசமாக இங்கு மனித உரிமைகள் பேசுகின்ற பெரும்பாலானோர் அவர்கள் தனிமனிதர்களாக இருந்தாலென்ன அமைப்புகளாக இருந்தாலென்ன, நாடுகளாக இருந்தால் என்ன? சமாதானத்துக்காக நோபல் பரிசு வழங்கும் நாடாக இருந்தாலென்ன அவர்கள் ஒன்றும் மனித உயிர்கள் மீதும் மனித நேயத்தின் மீதும் அக்கறைகொண்டவர்கள் கிடையாது. அவர்கள் மனித உரிமையை ஒரு அரசயல் ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர். அதனால் தான் மனித உரிமைகள் மனிதம் அற்ற வெற்றுக் கோஷங்கள் ஆகிவிட்டது. மனித உரிமையைச் பேசுவோர் தான் எப்போதும் வன்முறையை உற்பத்தி செய்பவர்களாகவும் வன்முறையை ஏற்றுமதி செய்பவர்களாகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளனர். மனிதவுரிமை என்பது கேலிக் கூத்தாக்கப்பட்டு ஆண்டுகள் தசாப்தங்கள் கடந்துவிட்டது.

இலங்கையில் எட்டாவது அதிசயம் நிகழுமா?

 

 

லகில் மனிதர்களைப் பிரமிக்க வைக்கும் எட்டு அதிசயங்கள் இருப்பதாக நாம் கேள்விப்பட்டு வந்திருக்கிறோம் அவற்றில் சில மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பதையும் நாம் அறிவோம். எனவே மனிதர்கள் நினைத்தால் எந்தவொரு அரும் பெரும் சாதனைகளையும் சாதிக்க முடியும் என்பது நிரூபணமாகிறது.

அவ்வாறான ஒரு முயற்சி தற்பொழுது இலங்கையில் ஆரம்பமாகி இருக்கிறது. அது நிறைவேறினால், உலகின் எட்டாவது அதிசயமாகக்கூட அது திகழலாம். அது வேறொன்றுமல்ல, இலங்கையில் சுமார் ஒரு நூற்றாண்டாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சி.

திருவாளர் (ஜனாதிபதி) ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டின் நீண்டகாலப் பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுகண்டு, தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாகக் ‘கங்கணம்’ கட்டியிருக்கிறது.

உலகம் உற்றுநோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு--எம்.ஏ.பேபி



சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு ஒக்ரோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இதில், தோழர் ஷிச்சின்பிங் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் சார்பில் அறிக்கை வழங்கினார்.

அவர் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் கட்சி மற்றும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 3 சாதனைகள் பெறப்பட்டுள்ளன. முதலில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 100ஆவது ஆண்டு நிறைவை வரவேற்றது. இரண்டு, சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் புதிய யுகத்தில் நுழைந்தது. மூன்று, வறுமை ஒழிப்பு, குறிப்பிட்ட வசதியுடைய சமூகத்தின் உருவாக்கம் ஆகிய கடமைகளை நிறைவேற்றி, முதல் நூற்றாண்டு குறிக்கோளை நனவாக்கியது. இந்த சாதனைகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் ஒற்றுமையுடன் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி மட்டுமல்லாமல், உலகத்துக்கும் செல்வாக்கு மிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியும் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு, உலக மொத்த பங்கில் 18.5 விழுக்காடு வகிக்கிறது;7.2 விழுக்காட்டு புள்ளிகள் அதிகரிப்புடன், உலகின் 2ஆவது இடம் பிடித்துள்ளது. 140க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது. இவற்றுடனான மொத்த வர்த்தக மதிப்பு, உலகின் முதல் இடம் பிடித்தது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பது, வெளிநாடுகளில் முதலீடு செய்வது ஆகியவற்றிலும் சீனா முன்னணியில் உள்ளது. மேலும் பெருமளவில் விரிவான ஆழமான முறையில் வெளிநாட்டுத் திறப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில், தூய நீரும் பசுமை மலையும் செல்வம் என்ற கருத்தில் சீனா ஊன்றி நின்று, சுற்றுச்சூழல் நாகரிக அமைப்பு முறையின் கட்டுமானத்தை மேலும் முழுமைபடுத்தியுள்ளது. இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரலாறு காணாத அளவில் பன்முகங்களிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டு நிர்வாகத்தை சீனா ஆழமாக முன்னேற்றி, காற்று, நீர், நிலம் ஆகியவற்றின் தரத்தைத் தொடர்ந்து பேணிக்காத்து வருகிறது.

இந்து என்பது அரசியல் ஆயுதம்! ஆதிக்கத்தின் குறியீடு!--சாவித்திரி கண்ணன்



ந்து என்பது ஆதிக்கத்திற்கான மந்திரம்! அரசியல் பிழைப்பாளர்களின் தந்திரம்! இன்னும் சிலருக்கு வயிறு வளர்க்கும் உபாயம்! இதை நாம் அம்பலப்படுத்தினால் வருகிறது கோபம்! எழுகிறது வன்மம்! எல்லா மதங்களையும் தின்று செறித்ததே இந்து மதம்? ராஜராஜ சோழனை யாராவது இந்து எனச் சொல்லி இருந்தால் தலையை சீவீ இருப்பான்!

மூச்சுக்கு முன்னூறு முறை இந்து, இந்து எனச் சொல்பவர்கள், இந்து மதம் தான் பழமையானது என பீற்றிக் கொள்பவர்கள் இதற்கு மனசாட்சியைத் தொட்டு பதில் சொல்லட்டும்!

சனாதனிகளின் மூன்று பிரதான நீதி நூல்கள் உபநிடதம், பகவத் கீதை, வேதாந்திர சாஸ்திரம்! இந்த மூன்றில் எது ஒன்றிலுமே இந்து என்ற வார்த்தை கிடையாது!

சனாதனிகள் போற்றும் சாஸ்திரங்களான  கர்ம சாஸ்திரம், மோட்ச சாஸ்திரம், யோக சாஸ்திரம், பக்தி சாஸ்திரம், ஞான சாஸ்திரம்,அ மரத்துவ சாஸ்திரம் ஆகிய ஒன்றிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா?

Karnataka: Post Dussehra, Madrasas on target of Hindutva Outfits, Government-By Saurav Kumar

 

On the night of October 6, during a Dussehra procession, a group of people forcibly barged into the ancient Mahmud Gawan madrasa situated in Bidar town. They shouted Hindu religious slogans and performed puja rituals.
Mahmud Gawan Madrasa, Bidar: Courtesy:Karnataka Travel Blogspot

Mahmud Gawan Madrasa, Bidar: Courtesy:Karnataka Travel Blogspot

In the midst of Karnataka making headlines for Congress’s Bharat Jodo Yatra, madrasas in the state have become the target of Hindutva organisations.

On October 10, Hindu Rashtra Sene protested in front of the Davangere district collector's office, demanding to ban madrasas across Karnataka. Through the protest, Hindu Rashtra Sene claimed that madrasas were centres of hate and fanaticism.

Anand Raju, a social activist based in Davangere town, informed NewsClick that "Few members of the Hindu Rashtra Sene demanded action on madrasas functioning in Karnataka.”

“The demand to ban madrasas is part of the larger plan of the BJP government to brew hate in society and electoral benefits by polarising the society," Raju told NewsClick.

Jailed J&K Hurriyat Leader Altaf Shah Dies of Cancer at AIIMS by Anees Zargar

 

Altaf Ahmad Shah, a close associate and son-in-law of late Hurriyat stalwart Syed Ali Geelani, lost his battle with cancer a few days after being shifted to AIIMS for treatment.
Jailed J&K Hurriyat Leader Altaf Shah Dies of Cancer at AIIMS

Kashmiri separatist leader dies of cancer at AIIMS Delhi. Image Courtesy: Twitter

Srinagar: Senior Hurriyat leader Altaf Ahmad Shah, who was lodged in New Delhi’s Tihar jail, passed away at All India Institute of Medical Sciences (AIIMS) in the wee hours on Tuesday, his family said. 

“Abu breathed his last at AIIMS, New Delhi. As a prisoner,” his journalist daughter Ruwa Shah tweeted. 

The 66-year-old, a close associate and son-in-law of late Hurriyat stalwart Syed Ali Geelani, lost his battle with cancer a few days after he was shifted to AIIMS for treatment. He was earlier admitted at Ram Manohar Lohia hospital in the national capital, where his condition deteriorated rapidly, following which the Delhi High Court ordered his transfer. 

ராஜ ராஜ சோழன் இந்துவா?-–அப்துல் ராஃபிக்

 



லகத்தில் எந்த மூலையில் யார் சாதனைகளை நிகழ்த்தினாலும் அவர்களை உரிமை கொண்டாடுவதில் தமிழர்களுக்கு ஒரு அலாதிப்பிரியம் உண்டு.

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தொடங்கி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மரணித்த ராஜ ராஜ சோழன் வரை இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ஏற்கனவே ராஜ ராஜ சோழனை தங்களுக்குத் தான் சொந்தம் என சாதிய அமைப்புகள் போஸ்டர் அடித்து உரிமை கொண்டாடிவரும் நிலையில் பொன்னியின் செல்வன் படமும் அதை தொடர்ந்து நடைபெறும் உரையாடல்களும் புதிய புதிய விவாதங்களை கிளப்பி வருகின்றன.

சமீபத்தில் விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவனின் மணி விழாவில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும் ராஜ ராஜ சோழனை இந்து மன்னனாக காண்பித்தும் தமிழர்களின் அடையாளம் பறிக்கப்படுவதாக பேசினார்.

அவரது இந்த பேச்சு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து வலதுசாரி அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனங்களைச் சந்தித்தாலும் சமூக வலைதளங்களில் ராஜ ராஜ சோழன் இந்துவா? இல்லையா? எனும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

பிற்காலச் சோழர்களில் ஒருவரான சுந்தரச் சோழனின் மகன் தான் ராஜ ராஜ சோழன். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அருள்மொழி வர்மன்.

ராஜ ராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இதனால், சதய நாள் விழா உதியர் மண்டலந்தன்னில் வைத்தவன் என கலிங்கத்துப் பரணி பாடுகிறது.

இதுமட்டுமின்றி சதய நாளில் விழா நடத்துவதற்காக கோவில்களுக்கு நிவந்தங்களும் விடப்பட்டுள்ளன. தஞ்சை பெரிய கோவிலிலும் திருவையாறில் உள்ள உலோகமாதேவி கோவிலிலும் சதய நாளில் விழா நடைபெறுவது வழக்கமாக இருந்துள்ளது.

ஐப்பசி மாதம் சதய நாளை தொடர்ந்து 7 நாட்கள் விழா நடத்துவதற்காக திருவெண்காட்டு இறைவனுக்கும் ராஜ ராஜன் காலத்தில் நிவந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கி.பி. 985-ம் ஆண்டு சிறிய தந்தை உத்தம சோழனை தொடர்ந்து நாட்டின் அரியணையில் ஏறிய ராஜ ராஜ சோழன் 1014-ம் ஆண்டு வரை 29 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.

ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் காந்தளூரில் நடைபெற்ற போரில் சேரனுக்கு உதவ வந்த பாண்டிய மன்னனையும் ராஜ ராஜன் வெற்றி கொண்டு அவர்களது இருமுடிகளையும் கைப்பற்றினார்.

இதனால் அவருக்கு மும்முடி சோழன் என்றும் அரசனுக்கு அரசன் என்று பொருள்படும் ராஜ ராஜ சோழன் என்கிற பெயரும் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து அவரது உண்மை பெயரான அருமொழி வர்மன் என்கிற பெயரே மறந்துவிடும் அளவுக்கு ராஜ ராஜ சோழன் என்கிற பெயரே வரலாற்றில் நிலைபெற்று விட்டது.

ராஜ ராஜ சோழனை சிறுவயதில் முதலாம் கண்டாரதித்த சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியும் அவரது அக்கா குந்தவையும் தான் வளர்த்தனர்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...