மொட்டத் தலைக்கும் , முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் ஒரு புரட்(டு)சி ‘மார்க்சியவாதி’!


இலங்கையில் ஒரு காலத்தில் 100 சதவீதம் புரட்சிகர மார்க்சியவாதியாக வலம் வந்தவர் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன. ஆனால் புரட்சியிலும் நாடாளுமன்ற அரசியலிலும் ஏற்பட்ட மோசமான தோல்விகளால் துவண்டு
விரக்தியடைந்து போனதாலோ என்னவோ, அவரது முன்னோடி ரொட்ஸ்கிசத் தலைவர்களான பிலிப் குணவர்த்தன, கலாநிதி எம்.எம்.பெரேரா, எட்மன் சமரக்கொடி,
பாலா தம்பு போன்ரோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தானும் அடிசறுக்கத் தொடங்கியுள்ளார்.

ஜனாதிபதியும் , இரு அமைச்சர்களும ; பதவி விலக வேண்டும் ! ஜே.வி.பி. உறுப்பினர் வலியுறுத்து!!



ஜனாதிபதியும் இரு அமைச்சர்களும் கட்டாயமாகப் பதவி விலக வேண்டும் என வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் பங்குபற்றி உரையாற்றிய ஜே.வி.பியின்
நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அதற்கான பின்வரும் காரணங்களையும் அவர் தெரிவித்திருக்கிறார். அவையாவன:
ஐ.தே.கவைச் சேர்ந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கீழுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சுக்கு
2017இற்கான வரவு செலவுத் திட்டத்தில் 19,782 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் 2017 செப்ரெம்பர் 30 வரை 6,000 மில்லியன் ரூபா மட்டுமே
பயன்படுத்தப்பட்டதாகவும், மிகுதிப்பணம் செலவழிக்கப்படாமல் திறைசேரிக்குத் திரும்பிவிட்டதாகவும் ரத்னாயக்க குறிப்பிட்டிருக்கிறார்.

ஊடகங்கள மீது அமைச்சர் மங்கள பாய்ச்சல்! --பி.வி


அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய நிதி மற்றும் ஊடக அமைச ;சர் மங்கள சமரவீர,ஊடகங்களின் தலைவர்களையும்,அவற்றின் ஆசிரியர்களையும் கடுமையாகச்
சாடியிருக்கிறார். அவரது கோபத்துக்குக் காரணம், சமீபத்தில் யுனெஸ்கோ
(UNESCO) ஆதரவுடன் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு அவர்களுக்கு
அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தும் அவர்கள ; யாரும் அதில் கலந்து
கொள்ளாததே. இதுபற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் மங்கள,
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்  அவர்கள்  ; கலந்து கொள்ளாதது குறித்துக் கேள்வி எழுப்பினார். இதுபற்றி நான் விசாரித்த போது ஊடகங்களின் தலைவர்கள ; மற்றும் அவற்றின் ஆசிரியர்கள் எல்லோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது தெரிய வந்தது.இருந்தும் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டார்.


கட்சி தாவினால் இலஞ்சமாக அமைச்சுப் பதவி பெறலாம்!

உள்ளூராட்சித் தேர்தலில் தம்முடன்இணைந்து போட்டியிட மகிந்த ராஜபக்ச
தலைமையிலான கூட்டு எதிரணி முன்வரவில்லை எனக் கண்டதும்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி கூட்டு எதிரணியிலுள்ளவர்களை கட்சி தாவும் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க ஆரம்பித்துளளார்.

தமிழரசுக் கட்சியை மட்டுமல்ல, பிற்போக்குத்தமிழ் தேசியவாதத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும்! சுப்பராயன்


இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் இந்த எதிர்ப்பு சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் மத்தியில்
பரவலாக உருவாகவில்லை என்பதும், தமிழ்த் தேசியவாத சக்திகளிடமே அதிகமாகக் காணப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். தற்போதைய எதிர்ப்பு நிலைமை வேகம்
பெற்றதற்கு அண்மையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலும் ஒரு காரணம். இருந்தாலும் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை இதற்கு முன்னரும் பல ஏற்ற இறக்கங்களை
அக்கட்சி கண்டுள்ளது.

1949இல் உருவான தமிழரசுக் கட்சி அதன் முன்னோடிக் கட்சியான தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து
உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அதன் காரணமாக அவ்விரு கட்சிகளும் 1952, 1960 (இரு தேர்தல்கள்), 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் எதிரும்
புதிருமாகவே போட்டியிட்டு வந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் கடுமையான எதிரிகள் போலச் செயற்பட்டாலும் சாராம்சத்தில் ஒரே வர்க்கங்களை, அதாவது தமிழ் மேட்டுக் குழாமின், அதிலும் குறிப்பாக யாழ். உயர்சாதிப் பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளாகவே இருந்து வந்துள்ளன.
தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அக்கட்சியை .தே.கவிலிருந்து மாறுபட்ட, ஏகாதிபத்தியஎதிர்ப்பு தேசியவாதிகளின் கட்சியாக உருவாக்கினார். அதன் மூலம் இலங்கை
முதலாளித்துவ வர்க்கத்தில் விதேசிய சார்பு, தேசிய சார்பு என இரு அணிகள் இருப்பதை வெளிப்படுத்தினார்.

உள்ளூராட்சித் தேர்தல்: ‘நல்லாட்சி’ அரசுக்கும் அடிவருடிகளுக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு!


‘நல்லாட்சி’ அரசாங்கம் பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடாத்தாது இழுத்தடித்துவிட்டு இறுதியாக அடுத்த வருட முற்பகுதியில் தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் வேட்பு மனுக்கள் கோரப்பட்டு கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தி வருகின்றன.
இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் எமது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் உள்ள அநாகரிகமான போக்குகளும், எமது ஜனநாயகத்தில் உள்ள ஓட்டை ஒடிசல்களும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு வெளிப்படத் தொடங்கியுள்ளன.

இதுவரை காலமும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல நடித்த சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும், பங்காளிக் கட்சிகளும், பதவி என்று வந்ததும் அடிதடியிலும், குடுமிப்பிடிச் சண்டையிலும் இறங்கியுள்ளனர். பலர் தமது கட்சிகளில் இருந்து வெளியேறி புதிய கூட்டணிகளை ஆரம்பித்துள்ளனர். கட்சித் தாவல்களும் தாராளமாக நடைபெறுகின்றன. அரசாங்கமும் அதன் மேல்மட்டத் தலைவர்களுமே கட்சித் தாவல்களை ஊக்குவிக்கின்றனர். அப்படித் தாவுபவர்களுக்கு இலஞ்சமாக பதவிகளும் வழங்கப்படுகின்றன.

போரிற்கு பின்னரான எட்டாண்டு கால இலங்கை


இலங்கை உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோது இலங்கையின் எதிர்காலம் எப்படியிருக்குமென்று எதிர்வு கூறுவது சாதாரணமாக எல்லோருக்குமே மிகக்கடினமாக இருந்தது. புலிகளிலிருந்து இலங்கை இராணுவம் வரை, தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்களென பல ஆயிரக்கணக்கனோர் யுத்தத்தால் மடிந்திருந்தனர். இவ்வாறு மடிந்தவர்களின் எண்ணிக்கைக்கு பல மடங்கு அதிகமாகவே, காயமுற்று அங்கங்களை இழந்தவர்களும் பாரிய தழும்புகளை சுமந்தவர்களும் இருந்தார்கள். நான்கு இலட்சம் பேரளவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதைவிட புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 13000 பேருக்கு மேற்பட்டவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தனர்.

Sri Lanka to hand port to Chinese firm, receive $300 million -NewsIn.Asia

Colombo, Dec 6 (Reuters) – Sri Lanka will hand over commercial activities in its main southern port to a Chinese company on Saturday and receive around $300 million out of a $1.1 billion deal soon after, Ports Minister Mahinda Samarasinghe said.
 The deal, signed in July, will see China Merchants Port Holdings (0144.HK), handling the Chinese-built Hambantota port on a 99-year lease.
“After one month, we will be getting another 10 percent ($100 million) and in six months we will get the balance,” Samarasinghe told reporters in Colombo.
But the deal triggered protests by opposition groups and trade unions, saying they feared China would take control of the port.

-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ( Road to Nandikkadal) By Raj Selvapathi




மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கொமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன். வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 பயங்கரவாதிகளின் உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன்.

லெனின் மீது அவதூறு பொழியும் அமைச்சர் ராஜித!


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அன்பையும் ஆதரவையும் ஒருங்கு சேரப்பெற்ற  சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன எப்பொழுதும்
இடக்குதத் தனமாகவும் துடுக்குத்தனமாகவும் பேசி சிக்கலில் சிக்குபவர் எனப் பெயர் பெற ;றவர்.
அத்தகைய அதிமேதாவி அண்மையில் சோவியத் ; மக்களின் மாபெரும் தலைவரும், உலகப்
புரட்சியாளருமான மாமேதை லெனின் அவர்களை வம்புக்கிழுத்து அவரை அவதூறு செய்திருக்கிறார்.
அதாவது, இன்றைய இலங்கை மாணவர்கள் சிலரின் நடவடிக்கைகளைப் பார்ப்பதற்கு
லெனின் இன்று உயிரோடு இருந்திருந்தால், அவர்களது நடவடிக்கையைபயங்கரவாதச்
செயல்கள்என வர்ணித்திருப்பார்  என ராஜித கூறியிருக்கிறார்.

Bring LTTE to the book against their human right violations.by Jeyatheeswaran Palippody


Bring LTTE to the book against their human right violations.

Mr. Vice-President

In this gathering where the human right issues are discussed I am, Palippody jeyatheeswaran, a Tamil from east part of Sri Lanka, being the son of a father whose rights to live was denied by LTTE and my call for justice to this inhuman act, has resulted in my becoming a perpetual handicapped person.
I wish to bring to your notice that I being one of the thousands of victims who suffered tremendously as a result of LTTE terrorist acts must emphasize that it is absolutely incorrect to believe that the Tigers fought for the Tamil community. They even killed a large number of Tamils who were against their ideology. In fact they denied our fundamental rights.

In the concluded war both parties committed crimes. The misconducts should be investigated. The exact offender should be identified and legal actions taken accordingly.

"த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு முழுத் துரோகம் இழைத்துள்ளது!"


லங்கையில் மைத்திரி – ரணில் தலைமையில் அமைந்திருக்கும் மேற்கத்தைய சார்பு வலதுசாரி அரசாங்கம் நாட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வரும் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த அரசியல் அமைப்பின் நோக்கம் நாட்டில் எழுந்துள்ள பூதாகரமான பிரச்சினைகளான பொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசியுயர்வு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது, கல்வி – சுகாதார – அரச சேவைகளை மேம்படுத்துவது, ஊடக சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் வலுப்படுத்துவது போன்றவற்றுக்கும், நாட்டின் தலையாய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பது அல்ல.

மாறாக, எந்த அந்நிய சக்திகள் இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றினார்களோ, அந்த அந்நிய எஜமானர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின் வளங்களை அவர்களுக்குத்; தாரை வார்த்தல், விலைவாசிகளை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய வட்டிக்கடைக்காரர்களின் ஆணைப்படி அதிகரித்தல், கல்வி, சகாதார, வங்கி மற்றும் அரச சேவைகளை தனியார்மயப்படுத்தல், சிறிய தேசிய இனங்களின் தனித்துவத்தை அழித்தொழித்தல், ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்தல் போன்ற தேவைகளுக்காகவே இந்த அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வருகிறது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...