இன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் இலங்கை
மத்திய வங்கி ஆளுநராக தனது நெருங்கிய நண்பரான அர்ச்சுனா
மகேந்திரன் என்பவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.
அவரோ நாட்டின் முதுகெலும்பான மத்திய வங்கியை தனது சொந்த
வீட்டுச் சொத்தாகப் பாவித்து பிணை முறிகள் ஊடாக பல கோடி
ரூபாபணத்தைச் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.இந்த விவகாரம் முதலில் சில மத்திய வங்கி அதிகாரிகளினாலும்,பின்னர் பொருளாதார
வல்லுனர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு, பின்னர்பல்வேறு அரசியல் கட்சிகளினதும் பேசுபொருளாகி, இறுதியில் அரசாங்கமே ஜே.வி.பி.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்ட
‘கோப்’ விசாரணைக்குழு அறிக்கையின் மூலம் நிரூபணமாகிவிட்டது.
இருந்தும்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்ää அவரது ஐக்கிய
தேசியக் கட்சி சகாக்களும், அர்ச்சுனா மகேந்திரனை
குற்றமற்றவராக, தூய்மையானவராகக் காட்டப் படாதபாடுபடுகின்றனர்.