ஜெயம்பதியும் சறுக்குமரமும்! ஜெயம்பதியும் சறுக்குமரமும்!- -பா.சிவலிங்கம்


ஜெயம்பதி விக்கிரமரத்ன இலங்கையின் பிரபல அரசியல் அமைப்பு விவகார
நிபுணர். அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் நீண்டகால மத்திய குழு
உறுப்பினரும் கூட. 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது சமசமாஜக் கட்சி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பது எனத் தீர்மானித்ததைத் தொடர்ந்து (மகிந்த தலைமையிலான அரசாங்கத்தில் சமசமாஜக் கட்சியும் நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்தது),ஜெயம்பதியும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கட்சியில் இருந்து வெளியேறி; ‘மாற்று அணி
ஒன்றை’ அமைத்தனர். அந்த அணிக்கு “ஐக்கிய இடது முன்னணி” எனப்
பெயரும் வைத்தனர்.

‘யுத்தம் வென்ற நாளே சிறந்த நாள்’




கமல்
நாட்டிலுள்ள அப்பாவி மக்கள் எவரும் யுத்தத்தை விரும்பாவில்லை எனவும் யுத்தங்கள் அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டவை என்பதாலுமே தான் யுத்தம் முடிவுற்ற நாள் சிறந்த நாள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வானொலிச் சேவை ஒன்றுக்கு இது குறித்து அவர்  சற்று முன்னர் வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் வாழும் அப்பாவி மக்கள் மூன்று வேளை உணவு உண்டு நிம்மதியாக வாழ வேண்டும் எனவே விரும்புகிறார்கள் என்றும்,  மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்கப்பட்டால் 90 வீதமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதற்கு நிகரானது என்றும் தெரிவித்தார்.
அரசியல் பற்றி தான் அறியாததால் அதனைப்ப பற்றி பேசவில்லை என்றும், அதேபோல், அரசமைப்பில் சகலரினதும் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதலில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியதே அவசியம் எனவும் தெரிவித்தார். 
குறிப்பாக, யுத்தங்கள் அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தபட்டவை என்றும் , 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் அப்பாவி மக்களும் யுத்தத்தை ஒருபோதும்  விரும்பவில்லை எனவும், அதனாலேயே தான் யுத்தம் நிறைவடைந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாள் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். 
அத்தோடு யுத்த காலத்தில் நாட்டிலுள்ள சகல இன மக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டதோடு, யுத்தம் நிறைவடைந்த பின்பு நாட்டில் இரத்த ஆறு ஓடுவதும் தடைப்பட்டதென தெரிவித்த அவர், மீண்டும் இரத்த ஆறு ஓட வேண்டும் என்ற நிலைப்பாடு இல்லாத காரணத்தாலேயே மேற்குறித்த நிலைப்பாட்டை தான் வகிப்பதாகவும் தெரிவித்தார். 
அத்துடன், தான் மலையகத்தில் அரசியல் பிரசாரம் செய்யப்போவதாக வதந்திகள் பரப்பபடுவதாகவும் , மக்களுக்கு சேவை செய்யாத அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் கண்டு அஞ்சுவது போல தன்னையும் கண்டு சில அரசியல் வாதிகள் அச்சப்படுகின்றனர் என்று சாடினார்.
அ​தேபோல், தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டு மக்கள் திருப்தி அடையும் வகையிலான சேவைகளை செய்திருக்கும் பட்சத்தில் அவர்களை தக்கவைத்து  கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு செய்திருக்காவிட்டால் இந்த ஆட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் தேசிய பாதுகாப்பு முதற்காரணியாக பார்க்கப்பட வேண்டும் எனவும், அதனுடன் பிணைந்த சங்கிலிகளாவே பொருளாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
-தமிழ்மிரர்
2019/10/2019

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு: இலங்கையின் வரலாற்றை மாற்றப் போவதற்கான கட்டியம் கூறலா?


-பிரதீபன்
SLPP wins all 17 Wards in Elpitiya PS poll
லங்கையின் தென் மாகாணத்தில் காலி மாவட்டத்திலுள்ள எல்பிட்டிய பிரதேச சபைக்கு 2019 ஒக்ரோபர் 11ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் அந்த சபையின் 17 வட்டாரங்கiளிலும் வெற்றிபெற்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி ஈட்டியுள்ளது.
இந்தத் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்றது (கிடைத்த ஆசனம் 17). ஐக்கிய தேசியக் கட்சி 10,113 வாக்குகளைப் பெற்றது கிடைத்த ஆசனம் 7). ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5,273 வாக்குகளைப் பெற்றது (கிடைத்த ஆசனம் 3). ஜே.வி.பி. 2,435 வாக்குகளைப் பெற்றது (கிடைத்த ஆசனம் 2).

கோத்தபாய ராஜபக்ச சகல மக்களினதும் நலன்களுக்கான தீர்வை முன்வைப்பது அவசியம்!

2019 நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தத் தேர்தலில் 30இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றபோதும், பிரதான கட்சிகளான பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களே கவனத்துக்குரியவர்களாக இருக்கின்றனர். இரண்டு அணிகளும் பல சகோதரக் கட்சிகளை இணைத்துக்கொண்டே தேர்தலைச் சந்திக்கின்றன. இலங்கை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்திருக்கின்றன. 2015இல் பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகளால் நிறுத்தப்பட்டு வெற்றீட்டிய மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகளே தீர்க்கமான பங்களித்திருந்தன. அதாவது, வடக்கு கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவும், மலையக மற்றும் தென்னிலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தன. இந்த சிறுபான்மை இனங்களின் வாக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால் சிங்கள மக்களின் வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் அத்தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கே கிடைத்திருந்தன. அந்த வகையில் எதிர்வரும் தேர்தலிலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிக்கக்கூடும். அப்படிப் பார்க்கையில், சிறுபான்மை இனங்களில் கூடுதலான வாக்காளர்களான தமிழ் மக்களின் வாக்குகளை வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என இதுவரை தீர்மானிக்காது காலம் கடத்தி வருகின்றது. இதற்குக் காரணம் அவர்களுக்குள் உள்ள குழப்ப நிலையா அல்லது தந்திரமா தெரியவில்லை. ஏனெனில், தமிழ் தலைமைகள் காலம்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே கூட்டு வைத்து வந்திருக்கின்றன. அதனால் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்தப் பலாபலனும் கிடைக்காத போதும், அவர்களது ஏகாதிபத்திய சார்பு மற்றும் முதலாளித்துவ வர்க்க அரசியல் நிலைப்பாடு காரணமாக அவர்கள் ஐ.தே.கவுடன் கூட்டுச் சேர்வதே இயல்பாக இருந்து வந்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் கூட்டமைப்பு தலைமை ஐ.தே.க. நிறுத்திய வேட்பாளர்களையே நிபந்தனை எதுவுமின்றி ஆதரித்து வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, தற்போது பதவியில் இருக்கின்ற ரணில் தலைமையிலான அரசாங்கத்தையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டமைப்புத் தலைமை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து வருகின்றது. இந்த ஆதரவு காரணமாக கூட்டமைப்பு தலைமைக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி உட்பட சில அனுகூலங்கள் கிடைத்தாலும் சாதாரண தமிழ் பொதுமக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் இன்றைய அரசாங்கத்தின் மீது மட்டுமல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீதும் அதிருப்தியும் வெறுப்பும் நிலவுகின்றது. இதன் காரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தல்களின் போது செய்தது போல கூட்டமைப்பு தலைமை எடுத்த எடுப்பிலேயே ஐ.தே.க. நிறுத்திய வேட்பாளரை ஆதரிக்க முடியாமல் திண்டாடி வருகிறது. அதனால்தான் ‘பிரதான கட்சிகள் இரண்டுடனும் பேசி அவர்களது தமிழ் மக்கள் சம்பந்தமான கொள்கைகளைத் தெரிந்துகொண்டு அதன்பின்னர்தான் யாரை ஆதரிப்பது என முடிவு செய்வோம்’ என கூட்டமைப்பு தலைமை தமிழ் மக்களுக்கு சாக்குப்போக்கு சொல்லி வருகிறது. ஆனால் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயமான அடிப்படையில் தீர்க்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குறுதி அளிக்கப் போவதில்லை. ஏனெனில் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இலங்கையின் சனத்தொகையில் 74 சத வீதத்தைக் கொண்டிருக்கும் சிங்கள மக்களின் வாக்குகள்தான் முக்கியமானது. எனவே இலங்கையின் சனத்தொகையில் வெறுமனே 12 வீதத்தை மட்டும் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக, அதிலும் அந்த தொகையிலும் சுமார் 5 வீதத்தை மட்டும் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளுக்காக ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியைப் பாதிக்கும் திட்டங்கள் எதையும் முன்வைக்கப் போவதில்லை. எனவே, அவர்கள் பொதுவாக ‘தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்’ என பொத்தாம் பொதுவாகச் சொல்லவிட்டு அப்பால் நகர்ந்துவிடுவார்கள். நிலைமை இதுதான் என்றபோதிலும் கூட்டமைப்பு தலைமை இறுதியில் ஐ.தே.க. வேட்பாளரை ஆதரிப்பது என முடிவு எடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், இலங்கை ஆட்சி அதிகாரத்தில் ஏகாதிபத்திய சார்பான ஒருவர் தவிர வேறு எவரும் வெற்றிபெறக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாகவும், திடமாகவும் இருக்கின்றனர். அதனால்தான் கூட்டமைப்பு தலைமை யாரை ஆதரிப்பது என இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனக் கூறினாலும், அவர்களது இரண்டாம் மட்ட தலைமைகள் ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஏற்கெனவே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர். இது ஒருபுறமிருக்க, முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஐ.தே.க. வேட்பாளரை ஆதரிப்பது என ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டது. ஆனால் ஐ.தே.க. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இன்னொரு முக்கிய கட்சியான அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்காமல் மதில்மேல் பூனையாக இருந்து வருகிறது. அதேநேரத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு உள்ள முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய மக்கள் காங்கிரஸ் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறது. மறுபக்கத்தில் கடந்த காலத்தில் மகிந்த அணியில் இணைந்து இருந்தவரும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு உள்ளவருமான ஹிஸ்புல்லா இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். இது ஐ.தே.கவுக்கு செல்லும் முஸ்லீம் வாக்குகளைத் தடுப்பதற்கான ஒரு தந்திரோபாயம் எனக் கருதப்படுகிறது. மலையக மக்களைப் பொறுத்தவரை, அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என முடிவு செய்திருக்கிறது. அதேநேரத்தில், ஐ.தே.கவின் மறைமுக கிளையாகக் கருதப்படும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி வழமைபோல ஐ.தே.க. வேட்பாளரை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளது. இதேநேரத்தில், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்ததான பெரிய கட்சிகளான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) தலைமையிலான தமிழ் மக்கள் சுதந்திர முன்னணி என்பன கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளன. சிறுபான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலை இவ்வாறாக இருந்தபோதிலும், அவர்களது மொத்த வாக்கு வங்கி இலங்கை சனத்தொகையில் 26 சத வீதம் மட்டுமே. எனவே பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைக் கூடுதலாகப் பெறும் வேட்பாளரே வெற்றி பெறும் சூழல் இருக்கின்றது. கடந்த காலங்கள் போன்று சிறுபான்மை மக்களின் வாக்குகள்தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தி என அறுதியிட்டுக் கூறிவிடவும் முடியாது. அதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம். 1965 பொதுத் தேர்தலில் பிரதான கட்சிகள் இரண்டும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. இருப்பினும் அன்றைய ஐ.தே.க. தலைவர் டட்லி சேனநாயக்க தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி உட்பட வேறு சில சிறிய கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு ஏழு கட்சி கூட்டரசாங்கம் ஒன்றை நிறுவினார். அவரது இந்த முயற்சியை சிங்கள மக்கள் ஏற்கவில்லை. அதேபோல தமிழ் கட்சிகள் அவரது அரசாங்கத்தில் இணைந்ததை தமிழ் மக்களும் ஏற்கவில்லை. அதன் பிரதிபலிப்பை அடுத்து வந்த 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டின. அந்தத் தேர்தலில் சிங்கள மக்களின் பெருந்தொகையான வாக்குகளைப் பெற்று சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தது. அதேநேரத்தில் தமிழ் மக்களும் தமிழரசு – தமிழ் காங்கிரஸ் தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் போன்றோரைத் தோற்கடித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். தற்போது ரணில் தலைமையில் இருக்கும் அரசாங்கத்துக்கும், அதன் மக்கள் விரோத செயல்களை நிபந்தனை ஏதுமின்றி ஆதரித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராகவும் 1970இல் இருந்தது போன்று இன்றும் சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு நிலைமை உருவாகி உள்ளது. அதை நிரூபிப்பது போல, ‘ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்’ என்பது போல 2019 ஒக்ரோபர் 11ஆம் திகதி நடைபெற்ற தென் மாகாணத்திலுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் முடிவுகள் வெளிவந்துள்ளன. இத்தேர்தலில் போட்டியிட்ட சிறீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபையின்17 வட்டாரங்களிலும் அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐ.தே.க. உட்பட இதர கட்சிளுக்கு போனஸ் ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதுமாத்திரமின்றி, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் முடிவு எடுத்துவிட்டதால், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் சேர்ந்து பெற்ற மொத்த வாக்குகளான 69 வீதம் கோத்தபாயவின் வெற்றியை உறுதிப்படுத்திவிட்டது எனலாம். இந்தத் தேர்தலில் இன்னொரு ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் ஐ.தே.க. வெறுமனே 24.3 வீதத்தையே பெற்றிருக்கிறது. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவை வைத்துப் பார்க்கையில், சிங்கள மக்களில் 60 வீதத்துக்கு அதிகமானோர் கோத்தபாயவுக்கே வாக்களிப்பர் என்பது புலனாகின்றது. அதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது எனலாம். இந்த நிலைமை இவ்வாறு இருக்க, இம்முறை தேர்தலில் சிறுபான்மை இனங்களான தமிழ் – முஸ்லீம் மக்களில் கணிசமானோரும் கோத்தாவுக்கே வாக்களிப்பர் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசாது, இலங்கையின் சிறுபான்மை இன மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் அடிப்படை நலன்களை நிறைவேற்றக்கூடிய குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஒன்றையாவது ஜனாதிபதி வேட்பாளரான (தெரிவாவார் என எதிர்பார்க்கப்படும்) கோத்தபாய ராஜபக்ச முன்வைப்பது அவசியமானது. வானவில் இதழ் -2019

ரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்! -புனிதன்


அண்மையில் நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டமொன்றில்
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான
தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்குபிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயன்றார்.ஆனால் அவரது அரசின் பங்காளிக் கட்சிகள் மட்டுமின்றிää அவரது சொந்தக் கட்சியினர் சிலரே அவரது அந்த முயற்சியை எதிர்த்ததால் ரணில் பின்வாங்க வேண்டி ஏற்பட்டுவிட்டது. இவ்வளவு காலமும் கண்ணை
மூடிக்கொண்டு இருந்துவிட்டு ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி
அறிவிக்கப்படவிருந்த சூழலில் ரணில் இப்படியொரு திட்டம் போட்டதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது காரணம் ஐ.தே.க. சார்பில் ரணில் அல்லது சஜித் பிரேமதாச
இருவரில் யார் ஜனாதிபதி தேர்தலில் போடடியிட்டாலும் நிச்சயமாகத்
தோல்விதான் என்ற பயம். இரண்டாவது காரணம், ஐ.தே.க.சார்பாக சஜித்தையே தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள்
வலுத்து வருவதால்,  அதன் காரணமாக கட்சி இரண்டாக உடையக்கூடிய
நிலையிலிருந்து தப்புவதற்கான நரித்தந்திரம்.மூன்றாவது காரணம், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட்டால் பிரதமருக்கே அதிகாரம் கிடைக்கும். அப்படியான ஒரு சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சில முஸ்லீம் மற்றும் மலையகக் கட்சிகளின்
ஆதரவுடன் தானே பிரதமராகப் பதவி வகிக்கலாம் என ரணில் போட்டுள்ள
கணக்கு.

Image result for sumanthiran mp

நான்காவது காரணம், தற்போதைய நிலையில் ஜனாதிபதி ஒருவர் தெரிவு
செய்யப்படுவதில் சிறுபான்மை இனங்களின் வாக்குகள் தீர்மானிக்கும்
சக்தியாக இருக்கின்றன. எனவே ஜனாதிபதி முறையை ஒழித்துவிட்டால்
சிறுபான்மை இனங்களில் தங்கி நிற்கத் தேவையில்லை என்ற பேரினவாத
சூழ்ச்சி எண்ணம். ஆனால் ரணில் போட்ட திட்டத்தை அவரது கட்சியினர்,  சஜித் பிரேமதாச அணியினர் உட்பட அனைவரும் எதிர்த்ததால் அவர் மண்கவ்வ வேண்டி வந்துவிட்டது.

இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில்ää ஐ.தே.கவுக்கும் தமிழ்
தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே தரகராகச் செயற்படும் எம்.ஏ.சுமந்திரன் ரணிலின் திட்டம் நிறைவேறாமல் போனதையிட்டு தெரிவித்திருக்கும் மனவேதனைதான். அரசியல் அமைப்புக்கு 20ஆவது திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என அவர் தன் உள்ளக்கிடக்கையை
வெளியிட்டிருக்கிறார்.

“சோழியன் குடுமி சும்மா ஆடாது” என ஒரு முதுமொழி உண்டு. அதுபோன்றதே சுமந்திரனின் மன ஆதங்கமும். ஜனாதிபதி தேர்தல் நடந்து அதில் மகிந்த சார்பானவர் வெற்றிபெற்றால், 2015இல் இருந்து தாங்கள் நடத்தி வரும் ஆட்டம் முடிந்துவிடும் என்ற கவலை அவருக்கு.
தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் சில தீய
அம்சங்கள் இருந்தாலும்,பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சிறுபான்மை
இனங்களுக்கு பேரம் பேசும் சாதகமான அம்சமும் இருக்கின்றது. அந்த சக்தியை மக்களிடமிருந்து பறிக்க வேண்டும் என்பதுதான் பேரினவாத ஐ.தே.க. தலைவர் ரணிலின் எண்ணம். ஆனால் சிறுபான்மை இனமொன்றின் பிரதிநிதியாக இருக்கும் சுமந்திரனும் அதில் உடன்படுவது விந்தையாக இருப்பினும், அதுதான் அவர்கள் இரு தரப்பினதும் வர்க்க – அரசியல் ஒற்றுமையாகும்.

அது எப்படியென்றால்ää ஜனாதிபதி முறை இல்லாமல் போனால் சிறுபான்மை இன மக்களுக்குத்தான் நஸ்டம். அவர்களது பேரம்பேசும் சக்தி இல்லாமல் போய்விடும். ஆனால்ää தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு அதனால் எதுவித நஸ்டமும் இல்லை. ஏனெனில் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் தமது குறிப்பிட்ட உறுப்பினர்களை
வைத்துக்கொண்டு பதவிக்கு வரும் அரசாங்கத்துடன் (அவர்களது தெரிவு
பெரும்பாலும் ஐ.தே.கதான்) பேரம்பேசி தமக்கான வசதி வாய்ப்புகளைப்
பெற்றுக்கொள்ள முடியும்.

அவர்களின் கருத்துப்படி மக்களிடம் பேரம்பேசும் சக்தி இருக்கக்கூடாது.
ஆனால் அது தம்மிடம் மட்டும் இருக்க வேண்டும் என்பதே. ரணில், சுமந்திரன் போன்றவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைப்பதன் விளைவே இதற்கெல்லாம் காரணம்.

மூலம்: வானவில் இதழ் 105

இவர்கள் கோமாளிகளா அல்லது சதிகாரர்களா?-சுப்பராயன்


ஜே.வி.பி. இம்முறை தனது ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர்
அனுர குமார திசாநாயக்கவை நிறுத்தியுள்ளது. ஜே.வி.பியின்
வரலாற்றை நன்கு அறிந்தவர்கள்  தவிர ஏனையோர் சிலர் "ஜே.வி.பி.
இலங்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் மாற்று சக்தியாக
இருக்கும்’ என அப்பாவித்தனமாக நம்புகின்றனர்  (இவர்களுக்கு எமது
அனுதாபங்களைத் தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை)
ஜே.வி.பி. என்ற சிறு முதலாளித்துவ சிங்கள இனவாத கட்சியின்
கொள்கைகளைப் பற்றி திரும்பத் திரும்ப பேசுவதில் பயனில்லை.
ஏனெனில் அவர்கள் முன்னர் மறைமுகமாகவும்,  கடந்த நான்கு
வருடங்களாக வெளிப்படையாகவும், ஏகாதிபத்திய சார்பு - இலங்கையின்
பெருமுதலாளித்துவ சக்திகளின பிரதிநிதியான ஐ.தே.க. அரசுக்கு
முண்டு கொடுத்து வருகின்றனர் . அத்துடன்  அவரகள் இலங்கையின்
தேசிய சிறுபான்மை இனங்களுக்கு – குறிப்பாக தமிழ் மக்களுக்கு
எதிரானவர்கள் என்பதும் பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜே.வி.பி. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதின் நோக்கம் என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். ஜே.வி.பியின் ஸ்தாபகத்  ; தலைவர்  ரோகண விஜேவீர முதன்முதலாக ஜே.வி.பி சார்பாக 1982 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது அவர் பெற்ற மொத்த வாக்குகள் ; 2 இலட்சத்து 73,428. அதாவது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில்
4.19 சதவீதம். பின்னர் ரோகண விஜேவீர, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐ.தே.க.
அரசாங்கத்தால் கொல்லப்பட்ட பின்னர், 1999இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. சார்பாக நந்தன குணதிலக போட்டியிட்டார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் மூன்று இலட்சத்து 44173. அதாவது அளிக்கப்பட்ட வாக்குகளில் 4.08 சதவீதம். இது  விஜேவீரவை விட நந்தன குணதிலக 18 வீத வாக்குகள் குறைவாகப் பெற்றதை எடுத்துக் காட்டுகிறது. பின்னர் நந்தன குணதிலக ஜே.வி.பியை விட்டு விலகி ஐ.தே.கவில் நேரடியாகச் சங்கமம் ஆகிவிட்டார்.

அதாவது ஐ.தே.கவின் வாலான ஜே.வி.பியில் இருப்பதைவிட, நேரடியாக
தலையான ஐ.தே.கவில் இருப்பது மேல் என நந்தன குணதிலக எண்ணி அந்த
முடிவை எடுத்திருக்கலாம்.  இப்பொழுது எதிர்வரும் நொவம்பர் 16இல்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. சார்பாக அதன் தலைவர்
அனுரகுமார திசநாயக்க போட்டியிடுகின்றார். ஜே.வி.பி. கடந்த காலத்தில் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அனுரகுமார 5 வீதமான
வாக்குகளுக்கு மேல் பெறமாட்டார் என்பது திண்ணம். இருந்தும் ஜே.வி.பி. ஏன் இத்தேர்தலில் போட்டியிடுகின்றது என்ற கேள்வி இருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால்  ஜே.வி.பி. இந்தத் தேர்தலில் 3 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையிலான வாக்குகள் பெற்றால் அது ஐ.தே.க. நிறுத்தும்
வேட்பாளருக்குத்தான் சாதகமாக அமையும். அது எப்படியென்றால், 2015 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 62 இலட்சத்து 17162. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 57 இலட்சத்து 68,090. இரண்டு பேருக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் 4 இலட்சத்து 49,072
ஆகும். இந்த வித்தியாசமான வாக்குகளில் 2 இலட்சத்து 25 ஆயிரம்
வாக்குகளை மகிந்த கூடுதலாகப் பெற்றிருந்தால் அவர்தான்
ஜனாதிபதியாகத் தெரிவாகி இருப்பார்.

எனவே இனி நடைபெறப் போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி வேட்பாளர் சுமார் 5 இலட்சம் வாக்குகள் பெற்றால் அது ஐ.தே.க. வேட்பாளரின் வெற்றிக்கு அனுகூலமாக அமையும். ஏனெனில், ஜே.வி.பி. வேட்பாளர் ஐ.தே.க. வேட்பாளரின் வாக்குகளை உடைக்கப் போவதில்லை. ஜே.வி.பியினர் போடுகின்ற சோசலிச வேசம், போடுகின்ற சிவப்பு
சட்டை,  ஏந்தியிருக்கும் சிவப்புக் கொடிகள்,  வைத்திருக்கும் மார்க்ஸ்,
எங்கெல்ஸ், லெனின் படங்கள் எல்லாம் அவர்களை பொதுமக்கள் மத்தியில்
இடதுசாரிகள் என நம்ப வைத்து அவர்களில் ஒரு சிறு பிரிவினராவது
ஜே.வி.பிக்கு வாக்களிப்பர். அந்த வாக்குகள் அத்தனையும் ஐ.தே.கவுக்கு
எதிரான முற்போக்கு சக்திகளின் வாக்குகள். அதாவது ஐ.தே.கவுக்கு
எதிரான வேட்பாளருக்கு விழவேண்டிய வாக்குகள். எனவே, ஜே.வி.பி. தனது வேட்பாளரை நிறுத்தியிருப்பதன் நோக்கம் எதிரணி வேட்பாளரின் வாக்குகளை உடைத்து, ஐ.தே.க. வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே. ஜே.வி.பியின் இந்த சதித் திட்டத்தை இன்னுமொரு வகையிலும் விளங்கிக் கொள்ளலாம்.

இப்பொழுது நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி. 2015இல்
நடைபெற்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என நீங்கள் கேட்டுப்
பார்க்கலாம். அந்தத் தேர்தலில் ஐ.தே.கவின் பின்னணியில் மகிந்தவுக்கு
எதிராக பொது வேட்பாளர் என்ற போர்வையில் மைத்திரி நிறுத்தப்பட்டதால்
தாமும் போட்டியிட்டால் மைத்திரியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்று சரியாகக் கணிப்பிட்டே ஜே.வி.பி. போட்டியிடவில்லை. ஆனால் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் மகிந்த அணியினர் நிறுத்தும்
வேட்பாளர் வெற்றிபெறக்கூடிய சூழ்நிலை இருப்பதால் அந்த வேட்பாளரின்
வாக்குகளை உடைத்து ஐ.தே.க. வேட்பாளரை வெற்றிபெற வைக்கவே
ஜே.வி.பி. போட்டியிடுகின்றது. இதில் எந்தவிதமான சந்தேகத்துக்கும்
இடமில்லை.
மூலம்: வானவில் 105 

மீண்டும் ‘பிரேமதாச யுகம்’ தோன்ற மக்கள் அனுமதிப்பார்களா?

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இடம்பெற்று வந்த இழுபறி ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளது. அதன் பிரகாரம் சஜித் பிரேமதாச ஐ.தே.க. சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ஒருமனதாக(?) அங்கீகரிக்கப் பட்டுள்ளார். சஜித் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இறுதி நிமிடம் வரை கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வந்தார். கட்சியின் மூத்த தலைவர்களும் அவருக்கு ஆதரவாக இருந்தனர். இருந்தபோதும், கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் கொடுத்த பலமான அழுத்தம் காரணமாக ரணில் தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வேண்டி ஏற்பட்டுவிட்டது. இந்த நிலைமை ஏறத்தாழ ரணிலின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும், சஜித்தின் தந்தை ஆர்.பிரேமதாசவுக்கும் 1989 ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் ஏற்பட்டது போன்றது. அப்பொழுது ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்த ஜே.ஆர்., ஐ.தே.கவின் தலைவர் என்ற ரீதியில் தனது இடத்துக்கு புதியவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். அந்த இடத்துக்கு ஜே.ஆரின் அரசாங்கத்தில் பிரதமராக இருந்த ஆர்.பிரேமதாச வர விரும்பினார்.


ஆனால் அவர் வருவதை ஜே.ஆர். கொஞ்சமும் விரும்பவில்லை. அதற்குக் காரணம் பிரேமதாச ஒருமுறை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக வந்துவிட்டால் ஐ.தே.கவின் தலைமை நிரந்தரமாகவே பிரேமதாச குடும்பத்திடம் சென்றுவிடும் எனப் பயந்தார். அதுமாத்திரமின்றி, 1978இல் தான் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மதித்து இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்காது தான் ஒதுங்கிக் கொண்டது போல பிரேமதாச இருக்கமாட்டார். அரசியல் சட்டத்தை மாற்றி ஆயுள் பூராவும் தானே ஜனாதிபதியாக இருக்க பிரேமதாச முயற்சிப்பார் எனவும் ஜே.ஆர். அஞ்சினார். ஆனால், கட்சியின் கீழ்மட்டத்தினர் கொடுத்த பலத்த அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி இறுதியில் ஜே.ஆர். ஒதுங்கிக் கொண்டு பிரேமதாசவுக்கு வழிவிட வேண்டியதாயிற்று. பின்னர் இந்திய அமைதிப் படைக்கு எதிரான போராட்டத்தில் புலிகள் பிரேமதாசவை பயன்படுத்திவிட்டு, தமக்கு அவர் தேவையில்லை எனக் கருதியபோது தற்கொலை குண்டுதாரி மூலம் 1993இல் பிரேமதாசவை கொலை செய்துவிட்டனர். அதனால் ஜே.ஆர். அஞ்சியது போல ‘பிரேமதாச யுகம்’ ஒன்று உருவாக வழியில்லாமல் போய்விட்டது.


 பிரேமதாசவை புலிகள் ஒழித்துக்கட்;டாமல் இருந்திருந்தால், ஐ.தே.கவிலும், நாட்டிலும் பிரேமதாசவின் குடும்ப ஆட்சி உருவாகியிருக்கும் என்பது ஒருபுறமிருக்க, பிற்காலத்தில் ஜனாதிபதிகளாக வந்த சந்திரிகாவோ அல்லது மகிந்த ராஜபக்சவோ அல்லது பிரதமராக வந்த ரணிலோ ஒருபோதும் அவ்வாறு வந்திருக்கவும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். ஆனால் தற்போதைய நிலவரம் சற்று வித்தியாசமானது. தனது மாமனார் ஜே.ஆர். செய்தது போல ரணில் ஒதுங்கிக்கொள்ளப் போவதில்லை. ரணிலைப் பொறுத்தவரை சஜித்துக்கு எதிரான போராட்டத்தை அவர் இத்துடன் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை.

சஜித்துக்கு தேர்தல் சின்னமாக ஐ.தே.கவின் யானை சின்னத்தை வழங்காததின் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம். சஜித்துடனான ரணிலின் போராட்டம் வெறுமனே பதவி சம்பந்தமானது அல்ல. அது ரணிலைப் பொறுத்தவரை வாழ்வா சாவா என்ற வகையிலான போராட்டம். சஜித் ஜனாதிபதி வேட்பாளராக வருவதைத் தடுக்க முடியாது எனக் கண்ட ரணில் தனது நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சில நிபந்தனைகளை முன்வைத்துப் பார்த்தார். அதாவது, கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தானே தொடர்ந்தும் இருப்பதை ஏற்க வேண்டும் எனக் கூறினார். அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க உடன்பட வேண்டும் எனவும் கூறினார்.


அவரது தகப்பனார் ஒரு சாதாரண கீழ்மட்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வன்முறை நடவடிக்கைகளின் மூலமே அரசியலுக்கு வந்தவர். அவரது வன்முறைக்காகவே கொழும்பு மாநகர சபையில் அரசியல் செய்த ஐ.தே.க. தலைவர்கள் அவரை அரவணைத்து பயன்படுத்தினர். அவ்வாறுதான் அவர் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். அந்தச் சந்தர்ப்பத்தை பிரேமதாச நன்கு பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதி பதவி வரை வளர்ந்தார்.
இன்னொரு பரிமாணமும் பிரேமதாசவுக்கு உண்டு. அவரது ஞானகுரு ஏ.ஈ.குணசிங்க என்பவர். பிரபலமான தொழிற்சங்கவாதியான இந்த குணசிங்கதான் முதன்முதலாக இலங்கையில் இனவாதத்தைத் தூண்டியவர். அந்தக் காலத்தில் கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி துறைமுகத் தொழிலாளர்களே கூடுதலாக வேலை செய்தனர். இவர்கள் குணசிங்கவின் தொழிற்சங்கத்தை நிராகரித்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் இணைந்து கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த குணசிங்க, “மலையாளிகளைத் திருப்பி அனுப்ப வேண்டும்” என கோசமெழுப்பியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியை “கொச்சிக் கட்சி” என விளித்தும் இனவாதம் பேசினார். அவரது சீடப்பிள்ளையாக பிரேமதாச இருந்தார்.
பின்னர் பிரேமதாச அரசியலில் மேல்நிலை அடைந்ததும், தான் பிறந்து வளர்ந்த கொழும்பிலுள்ள ‘வாழைத்தோட்டம்’ என்ற பகுதிக்கு தனது ஆசானுக்கு நன்றிக்கடனாக “குணசிங்கபுர” எனப் பெயர் இட்டதுடன், அந்தப் பகுதியின் நுழைவாயிலில் குணசிங்கவின் பெரிய அளவிலான உருவச்சிலை ஒன்றையும் அமைத்தார்.
பிரேமதாசவுக்குள் குணசிங்க மூலம் உருவாகியிருந்த இனவாத சிந்தனை காரணமாகவே அவர் இனப்பிரச்சினை தீர்வுக்காக இந்தியாவின் முன்முயற்சியால் 1987இல் உருவான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன் (இந்த ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பிரேமதாசவின் சொந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ஜே.ஆர். தான் ஒப்பமிட்டபோதும்), பின்னர் அந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப்படையை புலிகளுடன் சேர்ந்து திருப்பி அனுப்பியதுடன், அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவான ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபையையும் கலைத்து முடமாக்கினார்.


பிரேமதாச வன்முறையாளர், இனவாதி என்ற பிம்பங்களுக்கு மட்டும் உரியவரல்லர். அவற்றுக்கும் அப்பால் தான் ஒரு சர்வாதிகாரவாதி என்பதையும் நிரூபித்தவர். அவர் அதிகாரத்தில் இருந்த 1988 – 89 காலப்பகுதியில் ஜே.வி.பியினர் நடத்திய இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி ஒடுக்கியவர். கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களை மட்டுமின்றி, அதில் ஈடுபடாத இளைஞர்கள் உட்பட சுமார் அறுபதினாயிரம் பேரை கொன்று குவித்தவர்.
பிரேமதாசவின் இத்தகைய கொடூரத்தனங்களுக்கு மத்தியில் ‘தெருவில் தேங்காயை எடுத்து வழியில் பிள்ளையாருக்கு அடித்தது போல’, அரசாங்கப்பணத்தில் அவர் கிராமப்புற மக்களுக்கு அமைத்த வீடமைப்புத் திட்டங்கள் ஒரு பெரிய விடயமல்ல. (தமிழ் அரசியல்வாதிகள்தான் இதைச் சிலாகித்துப் பேசுவதுடன், அவர் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவானதும் ஐ.தே.க. ஆதரவு பழக்கதோசம் காரணமாக தமிழ் பகுதிகளில் மட்டும்தான் சந்தோச ஆரவாரமும் நடைபெறுகின்றது)
இத்தகைய ஒருவரின் புதல்வாரன சஜித் பிரேமதாச, தான் ஜனாதிபதியாக வந்தால் தனது தகப்பனாரின் கொள்கைகளைத் தொடர்வேன் என்கிறார். அவர் தகப்பனாரின் எந்தக் கொள்கைகளைத் தொடரப் போகிறார் என்பது இதன் மூலம் புலனாகின்றது.
எனவே இன்றுள்ள சூழ்நிலையில் இத்தகைய ஒருவர் நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக வருவதைத் தடுப்பதே மக்களுக்கும் நாட்டுக்கும் முன்னால் உள்ள அத்தியாவசிய கடமையாகும்.
இதற்கு இருக்கின்ற ஒரே வழி ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. நிறுத்தியுள்ள வேட்பாளரான சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதாகும். இது மக்கள் சக்தியினாலேயே முடியும்.
யார் கண்டது? சில வேளைகளில் சஜித்துக்கு எதிரான தனது போராட்டத்தின் இரண்டாவது கட்டமாக ரணிலே உள்ளேயிருந்து கழுத்தறுப்புச் செய்து அவரைத் தோற்கடிக்கவும் கூடும்.
ஏனெனில், ரணிலைப் பொறுத்தவரை சஜித்துக்கு எதிரான தனது போரில் (War) ஒரு நடவடிக்கையைத்தான் (Battle) முடித்திருக்கிறார். ஆனால் போர் இன்னமும் முடியவில்லை.
‘தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழையாக அமைய வேண்டும்’ என்ற நிலையில் ரணில் எதற்கும் துணியக்கூடும்.


 Source : vaanavil 105

Dew poses vital question as to what the world would be today if China is not an economic power-The Island




article_image
Communist Party General Secretary Dew Gunasekara recalled the arduous journey of China since the 1949 revolution to become the number two economy in the world against all odds through sheer determination and hard work, as the People’s Republic marked its 70th anniversary at Kingsbury Colombo recently.

Following are excerpts of Gunasekera’s address: The Chinese people are blessed with a long and proud history of over 3600 years. In its recorded history, China is now entering its golden period with its gigantic achievements.

The new China had its first turning point in the revolutionary year of 1949 under Chairman Mao. The first 31 years represent a period of international challenges and domestic turmoil, despite its socio-economic changes. The drawn-out Korean and Vietnamese wars with US aggression were formidable obstacles to development. China was prevented from occupying its role in the United nations for 22 long years. The US Government recognized the new China only as late as 1971. She was isolated from the international community. Sanctions, blockades and embargoes against her were the order of the day. Despite negative developments, Chinese Revolution moved on.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...