மார்ச் 23ஆம் திகதி ஜெனிவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, மேற்கு ஜெர்மனி உள்ளிட்ட மேற்குலகின் பலம் வாய்ந்த வலதுசாரி முதலாளித்துவ நாடுகளால் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வாக்களிக்கத் தகுதி பெற்ற 47 நாடுகளில் 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. தீர்மானத்தை எதிர்த்து 11 நாடுகள் வாக்களித்துள்ளன. 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதாவது, 47 நாடுகளில் அரைவாசிக்கும் குறைவான 22 நாடுகளின் ஆதரவுடன்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன் மூலம் தீர்மானம் கொண்டு வந்தவர்களின் நோக்கம் உண்மையில் தோல்வி கண்டுள்ளது.