Indian Secular Front leader Abbas Siddiqui (Photo | Youtube screengrab)
Addressing a press conference, Siddiqui said the Left Front has agreed to leave for it 30 seats as part of the Left-Congress-ISF alliance.
FURFURA SHARIF: The Indian Secular Front (ISF), led by Pirzada Abbas Siddiqui of Furfura Sharif, said on Friday that it has sealed a seat-sharing agreement with the Left Front for the West Bengal assembly elections, while talks with the Congress are underway.
Addressing a press conference, Siddiqui said the Left Front has agreed to
leave for it 30 seats as part of the Left-Congress-ISF alliance.
"We have already sealed our alliance with the Left Front. We have got 30 seats
as per our choice and are in talks regarding three-four more," he said.
Justice and Prison Reforms Minister President’s Counsel Ali Sabry said that the Government totally condemns United Nations High Commissioner for Human Rights Michelle Bachelet’s one-sided report which has completely ignored all positive developments taking place in Sri Lanka.
The Minister in an interview with the Sunday Observer said when they come out with such damning reports, it further polarises the community here on the ground. He said “That is why we are saying, they need to be cautious, reasonable and understand the battle was not against our Tamil people instead we liberated them. Actually, the Tamil people were running out of the clutches of the LTTE and coming towards the Government. If they were suffering from the Government, they would have run against that. So, these are the matters that we need to bring to their attention.”
Excerpts
Q: The Opposition has raised concern on the appointment of yet another six-member Committee, comprising Government Ministers to study the report of the Presidential Commission of Inquiry (PCoI) into the Easter Sunday attacks. Could you explain?
A: That was an appointment made by the President. Now the whole Commission report is in the public domain after it had been made available to the Parliament. With that, there is nothing to hold back and everything is within the public knowledge. However, if you look carefully at the whole report, there are a number of recommendations and findings.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிஷெல் பஷ்லே (Michelle Bachelet) யின் அறிக்கை இலங்கையின் உண்மை நிலைமை பற்றிய யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை என்றும், இலங்கை அடைந்துள்ளமுன்னேற்றங்கள் குறித்து அது முறையாக ஆராயவில்லை என்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து வெளிவரும் சண்டே ஒப்சேர்வர் ( Sunday Observer) பத்திரிகைக்கு, 14.02.2021 அன்று அளித்த பேட்டியில் அமைச்சர், ஏன் இந்த குற்றச்சாட்டுகள் களத்தின் உண்மை நிலைபற்றி ஆராயாமல் செய்யப்படுகின்றன என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். நாங்களும் ஐ.நா.வின் ஓர் அங்கத்துவ நாடாக இருப்பதால், ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற இலங்கை ஈடுபாடு காட்டும் பகுதிகள் குறித்து இலங்கை அரசு ஏற்கனவே பதிலளித்தும், மேலதிக விளக்கங்களைத் தெரிவித்துமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச விவகாரங்களில் ஏனைய நாடுகளைப் போலவே இலங்கை கூட்டுப்புரிந்துணர்வை கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் குணவர்த்தனதெரிவித்தார். மிகக் குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில்சீர்குலைக்கும் நடவடிக்கையைச் செய்வதை விட, எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான இறையாண்மை மற்றும் ஜனநாயகத்திற்கான கொள்கைகளுக்கான எங்களது அழைப்பு முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
கேள்வி: ஜெனீவாவில் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் எவ்வாறு தயாராக உள்ளது?
தமிழ் தேசியர்களில் ஒரு பகுதியினர் அண்மையில் ‘பொத்துவில் முதல்
பொலிகண்டி வரை’ என ஓர் ஊர்வலத்தை நடத்தினர். சில கோரிக்கைகளை முன்வத்து நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை சிவில் சமூகமும், பொது அமைப்புகளும், மதகுருமார்களும்தான் ஏற்பாடு செய்தனர் என்று சொல்லப்பட்டாலும், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிலரே, குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், சாணக்கியனும்தான் பின்னணியில் நின்று ஏற்பாடு செய்தார்கள் என்ற விடயம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
இந்த ஊர்வலத்தை ஏன் திடீரென்று ஏற்பாடு செய்தார்கள் என்பதும், இதில்
ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோ,
பங்காளிக் கட்சிகளோ, இதர தமிழ் தேசியக் கட்சிகளோ பங்குபற்றவில்லை
என்பதும் போன்ற பொதுமக்களால் விளங்கிக்கொள்ள முடியாத கேள்விகள்
இருக்கின்றன.
அத்துடன், வழமையாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக அரசியல் செய்யும்
இவர்கள், இம்முறை அரசாங்கம் முஸ்லீம் மக்களின் ஜனாசா எரிக்கும்
பிரச்சினையையும் ஒரு கோசமாக வைத்திருந்தனர். இது முஸ்லீம்
மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடும் ஒரு முயற்சி என்பதை
விளங்கிக்கொள்ள விசேட பாண்டித்தியம் எதுவும் தேவையில்லை. ஆனால்
இவர்களது சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொண்ட முஸ்லீம் அரசியல்
கட்சிகளோ, மத அமைப்புகளோ இந்த ஊர்வலத்தில் பங்குபற்றவில்லை.
அண்மைக்காலமாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவுகளில் சில தளும்பல்கள் அல்லது உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்னரும் இப்படியான நிலைமைகள் வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கின்றன.
தற்போதைய முரண்பாடுகளுக்கு உடனடிக் காரணம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கையின் முந்தைய அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி இந்தியாவுக்கு (யப்பானுக்கும் சேர்த்து) வழங்கவில்லை என்பதில் தொடங்கியது. அது பின்னர் வட மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் மின்சக்தி நிலையங்களை அமைப்பதற்கான உரிமையை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதில் வந்து நிற்கின்றது.
கவிஞரும் "பத்திரிகையாளருமான" கருணாகரன் முக்கியமான திறமையான சமகால ஈழத்தமிழ் எழுத்தாளர். அவரது வாழ்வும் பணியும் மதிப்பிடப்படுவதும் விமர்சிக்கப்படுவதும் நியாயமான பணி. "சட்டப்படி"
நட்சத்திரன் செவ்விந்தியன்
2009 ல் ஈழப்போர் முடிந்தபின் அகதிமுகாமிலிருந்து கருணாகரன் காலச்சுவட்டில் எழுதிய "ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்ததென்ன" என்ற கட்டுரை மிக நியாயமான அறப்பதிவு. அதைப்படித்தபின் அவரில் மதிப்பேற்பட்டு அவர் முகநூல் நண்பனானேன். தொலைபேசினோம்.
காலச்சுவடு 2009 ஆகஸ்டு
நான் அவரைக் கண்டதில்லை. அவர் சிறுவனான என்னைக் கண்டிருக்கிறார். 2ம் ஈழ யுத்தம் தொடங்கிய காலம். புலிகளின் பத்திரிகையான ஈழமுரசு பத்திரிகை காரியாலத்தில். அப்போது ஈரோசின் பால நடராச ஐயர்(சின்ன பாலா) புலிகளோடு ஐக்கியமாகி ஈழமுரசில் இலக்கிய பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். ஈழக்கவிதைகளைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதி ஈழமுரசில் பிரசுரிப்பதற்காகக் கொடுத்திருந்தேன். அக்கட்டுரையில் காசி ஆனந்தனதும் புதுவை இரத்தினதுரையினதும் கவிதைகள் கவித்துவமானவை இல்லையென்றும் பிரச்சாரக்கவிதைகள் என்றும் எழுதியிருந்தேன். 2ம் தடவை போனபோது பால நடராச ஐயரை நேரே சந்தித்தேன். "கட்டுரை பிரசுரிக்கப்படாது. நீங்கள் ஏன் ஆனந்தனையும் இரத்தினதுரையையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று" ஒரு சண்டையே ஆரம்பித்தது. நான் என் நியாயங்களைச் சொன்னேன். அவர் கோவமாகி ஏற்றுக் கொள்ளவில்லை. அக்காலம் பேனை மையால் ஒரே பிரதியே எழுதும் காலம். சரி என் பிரதியை திருப்பித் தாருங்கள் என்று கேட்டேன். தர முடியாது என்று மிரட்டினார். நானோ அப்போது பாடசாலை மாணவன். பிறகு கெஞ்சி அழுது மண்டாடித்தான் அவரிடமிருந்து எனது பிரதியை மீளப்பெற முடிந்தது.
‘இலங்கை மீதான மனித உரிமை குற்றச் சாட்டு போலியாக உரு வாக்கப்பட்ட பொறியாகும்’ என்று கூறுகின்றார் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன.
30வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கு கட்டளையிட்ட இராணுவத் தலைவர்களுக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றது. நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோம். இம்முறை பெப்ரவரி மாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறுவுள்ள மகாநாட்டில் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் தயாராகி வருகின்றார்.
நீண்ட பயணம் தொடங்கிய நாள்: 1934 ஒக்ரோபர் 16, முடிவுற்ற நாள்: 1935 ஒக்ரோபர் 25.
ப்யூக்கின் என்ற தென் சீன நகரிலிருந்து 95,000 வீரர்களோடு தொடங்கிய இந்தப் போர்நடைப்பயணம் 368 நாட்கள் நடந்தது. அவற்றில் 235 நாட்கள் நடப்பதில் செலவாயின. நடைப்பயணம் நிறுத்தப்பட்ட நாட்கள் 100. அந்த 100 நாட்களில் பயணத்தை மறித்து அதன் நோக்கத்தை முறியடிக்க முயன்ற சியாங்கே ஷேக் அரசின் சேனையோடு செஞ்சேனை போர் புரியச் செலவிட்ட நாட்கள் 56.
நீண்ட பயணத்தின் மொத்த தூரம்
சீனக் கணக்கில் 180 88 வீ
அன்றையக் கணக்கில் 6,000 மைல்கள்
இன்றையக் கணக்கில் 10,000 கிலோ மீட்டர்கள்
அதாவது சென்னையிலிருந்து டெல்லிக்கு நான்கு முறை சென்று திரும்பும் தூரம்! நாள் ஒன்றுக்குச் சராசரி 42 கிலோ மீட்டர் நடந்திருக்கிறார்கள். நடைப்பயணம் என்பது நம்மில் பலர் நினைப்பது போல் சமவெளிப் பயணம் அல்ல; சாலை வழிப்பயணமும் அல்ல. நடந்த வழி நெடுகிலும் இருண்ட காடுகள், காடுகள் செறிந்த மலைகள், வெள்ளப் பெருக்கெடுத்த ஆறுகள், ‘கண்ட இடங்களில் கொல்லுவோம்’ என்று சீனர்கள் மீது ஜென்மப்பகை கொண்ட ஆதிவாசிகள் அடங்கிய ஆறு மாவட்டங்கள், விமானம் மூலம் வேவு பார்த்து பாலங்களையும் பாதைகளையும் தகர்க்கும் அரசுப் படைகள் – இவ்வாறு எண்ணிலடங்கா இடையூறுகள்!இவ்வளவுக்கும் மத்தியில் நெடும் பயணம்!
கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தவறியுள்ளது. அத்துடன் இதனை கட்டுப்படுத்த விஞ்ஞான ஆய்வுகளுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான ஜீ. வீரசிங்க தெரிவித்தார்.
‘மல்லிகை ஜீவா’ என எல்லோராலும் அறியப்பட்ட டொமினிக் ஜீவா, தனது 94ஆவது வயதில், ஜனவரி மாதம் 29ஆம்திகதி மாலை, கொழும்பில் காலமானார் என்பதை, அத்தனை முகப்புத்தக சுவர்களும் காட்டி நின்றன! இந்திய, புலம்பெயர் இணையத்தளங்கள், பத்திரிகைகள் பேசின! சமூகப் போராளி, பேச்சாளர், எழுத்தாளர், சஞ்சிகை ஆசிரியர், விமர்சகர், பதிப்பாளர் என எல்லா முகங்களையும் ஒருங்கே கொண்ட இலக்கிய உழைப்பாளி! வர்த்தகர்களையும் இலக்கியத்துக்குள் இழுத்துவந்த இலக்கிய விநியோகஸ்தர்! இலக்கிய உற்பத்தி என்பது ‘கற்றோர் மாட்டன்று’ என்பதை சரித்திரமாக்கிய வரலாறு எழுதி!
இனி, அவரது உடல் இந்தப் பூமியிலும் இல்லை; பூமிக்குள்ளும் (உடல் புதைக்கப்படவில்லை) இல்லை. ஆனால், மறுக்க முடியாத, மறக்க முடியாத ஒரு சக்தியாகத் துருத்திக்கொண்டு, எப்போதும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் நிலைத்திருப்பார் என்பதுதான் உண்மை.
‘சமூகத்தின் நன்மைக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் தங்களை அர்ப்பணித்து, உழைத்துப் பிழைத்துவரும் பாமர மக்களின் ஆசாபாசங்கள், வாழ்க்கை முறைகள், அநுபவங்கள் எல்லாம், சரித்திர வரலாறு அடைப்புக்குறிக்குள் அடங்கமுடியாதவைகளா?’ இதுதான், ஜீவா அவர்களின் இளமைக்கால சிந்தனைப் புள்ளியாக இருந்தது. இதை அவர் தனது சுயசரிதையான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சிந்தனைப்புள்ளி, யாழ்ப்பாண சமூகத்திலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சிக்கலுக்குரியதும் ஒவ்வாத சிந்தனையுமாகும். ஏனெனில், யாழ்ப்பாணச் சமூகம், சாதிய கட்டமைப்பில் இறுக்கமாக இயங்கிய சமூகமாகும். கல்வியும் அதனால் பெற்ற செல்வமும் உயர்வர்க்க நிலவுடைமையாளர்களிடம் இருந்தது. இலக்கியம், மொழி என்பன பண்டிதர்களின்பால் சிறைப்பட்டிருந்தன. அதுவே, மொழியின் தூய்மை என பார்க்கப்பட்ட காலம் அது. சாமானிய மக்களின் வாழ்க்கையை, சிந்தனைகளைப் பொதுவெளிக்கு கொண்டுவருதல் என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. நவீன ஊடகங்கள் வரும்வரைக்கும், தகவல்களைப் பொதுவெளியில் வைப்பதில், பிரதான ஊடகங்கள் எவ்வாறு தமது அதிகாரத்தைச் செலுத்தினவோ, அதேபோல் சாமானியர்களின் சிந்தனைகளைத் தணிக்கை அல்லது, தடை செய்யக்கூடிய வல்லமையைப் பண்டிதர்களும் உயர் வர்க்கத்தினரும் கொண்டிருந்தனர்.
முற்போக்கு எழுத்தாளரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா, ஜனவரி 28 அன்று தனது 94-வது வயதில் கொழும்பில் காலமானார்.
மல்லிகை மாதாந்த சஞ்சிகையினை பல்லாண்டுகள் தொடர்ந்து வெளியிட்டு சாதனை புரிந்த பிரபல எழுத்தாளர் டோமினிக் ஜீவா அவர்களின் மறைவு குறித்து ஒரு மிகச் சிறிய குறிப்புரை :
இலங்கையின் புகழ்பெற்ற முற்போக்கு எழுத்தாளரும், இடதுசாரிச் சிந்தனையாளரும், இதழாளரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா, ஜனவரி 28 அன்று தனது 94-வது வயதில் கொழும்பில் காலமானார்.
1940-களில் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்த ஜீவா, இறுதி சில ஆண்டுகள் முதுமை காரணமாக இயங்க முடியாமல் போனதைத் தவிர, தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வொழிச்சல் இன்றி எழுதியவர். இலங்கை இலக்கியப் பரப்பின் தவிர்க்க முடியாத ஆளுமை அவர். 1960-ல் வெளிவந்த டொமினிக் ஜீவாவின் முதல் சிறுகதைத் தொகுதியான ‘தண்ணீரும் கண்ணீரும்'தான் இலங்கை சாகித்திய மண்டல விருதைப் பெற்ற முதல் தமிழ் நூல்.
1950-களில் ஆரம்பிக்கப்பட்ட ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் செயல்பாடுகளில் ஆரம்பத்திலிருந்தே ஈடுபாடு காட்டிவந்த ஜீவா, அதன் வளர்ச்சிக்கான சகல முன்முயற்சிகளிலும் தவறாது பங்குபற்றி உழைத்துள்ளார்.