விக்னேஸ்வரன ; தலைமையிலான அணி மாற்று அணியாகுமா? விக்னேஸ்வரன ; தலைமையிலான அணி மாற்று அணியாகுமா? -புனிதன்

முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்று உருவாகியிருக்கிறது. இந்தக்
கூட்டணியில் விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
என்.சிறீகாந்தா,  அனந்தி சசிதரன் ஆகியோரின் தலைமையிலான கட்சிகள்
இணைந்துள்ளன. இப்படியான ஒரு கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாகும் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் இணைய மறுத்துள்ளமைதான்.
பொன்னம்பலம் இணைய மறுத்தமைக்கு அரசியல் ரீதியிலான கருத்து
முரண்பாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாது. அது பெரும்பாலும் தனிநபர் முரண்பாடு சம்பந்தப்பட்ட காரணம்தான். எனவே அவர் வடக்கு அரசியலில் எந்தவிதமான காத்திரமான பங்களிப்பையும் வழங்க முடியாதவராகவே இருக்கப் போகின்றார்.

சிறுபான்மையின மக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் என்ன செய்யப் போகிறார்கள்?

2019 நொவம்பர் 16இல் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில் அப்போதைய எதிரணி சார்பாகப் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச அமோக வெற்றியீட்டினார். அதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு பதவி விலக கோத்தபாய அணியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி ஏற்றது. ஆனால் அந்த அரசு சிறுபான்மை அரசு.
இந்த நிலைமையை மாற்றி பலமிக்க ஒரு அரசாங்கத்தை நிறுவுவதற்காக, அரசியலமைப்புப் பிரகாரம் நான்கரை ஆண்டுகளின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்ற அரசியல் அமைப்பு விதியைப் பயன்படுத்தி விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தகைய ஒரு சூழலில் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த தமிழ் – முஸ்லீம் மக்கள் பொதுத் தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்து நிற்கிறது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...