எஸ்.எம்.எம்.பஷீர்
.
"அன்பினால்
கோபக்காரனை வெல்,
நன்மையால் தீய குணத்தோனை வெல்"
தம்மபதம் (பௌத்த நீதி நூல்)
நன்மையால் தீய குணத்தோனை வெல்"
தம்மபதம் (பௌத்த நீதி நூல்)
சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில்
காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள
முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின்
அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக
"கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத
இயக்கம்
என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு
உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை
மேற்கொண்டு வரும் தம்புள்ளை
பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பௌத்த மத பரப்புரை வானொலியான ரங்கிரி
வானொலி மூலம் , அவ்வானொலியின்
போஷகராக செயற்படும் ரஜ வன.
இனமுல்ல சிறி சுமங்கல தேரோ . விதைத்த தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கெதிரான
நச்சுக் கருத்துக்களை உள்வாங்கிய சிங்கள தீவிரவாத சக்திகளால் தம்புள்ளையில் சுமார் ஐந்து தசாப்தமாக இயங்கி வந்த முஸ்லிம்களின்
ஒரே ஒரு பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் சித்திரை மாதம் இருபதாம்
திகதி வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.