பரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்!--மு.இராமனாதன்



coronovirus-rumors
சீனாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் இந்த வைரஸ் இப்போதுதான் உள் நுழைகிறது. வெகு வேகமாகப் பரவுகிறது. இதுவரை 25 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டவர்களைப் பாதித்திருக்கிறது. இதில் 99% பேர் சீனர்கள்தான். நோயின் கொடுங்கரங்களுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இந்த வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாடுபடுகிறது சீனா. இந்த வைரஸைக் காட்டிலும் வேகமாகப் பரவும் விஷயங்கள் இரண்டு: வதந்தியும் சீனாவின் மீதான வன்மமும்.
ஜனவரி தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட பதிவு இது: ‘இந்த கரோனா வைரஸின் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும். ஏனெனில், இது சீனாவில் தயாரிக்கப்பட்டது.’ கூடவே, பொங்கிச் சிரிக்கிற மஞ்சள்நிற வட்ட முகச் சித்திரங்கள் இரண்டு. அதாவது, இது நகைச்சுவை என்றறிக என்கிறார்கள் இதை எழுதியவர்களும் அனுப்பியவர்களும். இதேரீதியிலான இன்னொரு பதிவு: ‘சீனர்கள் கண்டதையும் தின்றதால்தான் அங்கே கரோனா வைரஸ் பரவியது என்கிறார்கள். சீனர்கள் கண்டதையும் தின்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் நான்கு கால்கள் உள்ளவற்றில் ஒன்றையும் பறப்பனவற்றில் ஒன்றையும் தின்பதில்லை. அவை முறையே நாற்காலி, விமானம்.’ இதற்குக் கீழேயும் நகைக்கும் சித்திரங்கள்.

British MP Who Criticised Government On Article 370 Stopped At Airport, Deported British MP Debbie Abrahams said, "Even the person who seemed to be in charge said he didn't know and was really sorry about what had happened. So now I am just waiting to be deported"




NDTV -New Delhi: 

British MP Debbie Abrahams said, "Even the person who seemed to be in charge said he didn't know and was really sorry about what had happened. So now I am just waiting to be deported"
Image result for British MP Debbie Abrahams

Debbie Abrahams

A British MP critical of the government's decisions on Kashmir under Article 370 was stopped at the Delhi airport on Monday and deported to Dubai. Debbie Abrahams was not allowed entry into India and was told upon her arrival at the Delhi airport that her e-visa had been rejected. The chairperson of the All Party Parliamentary Group for Kashmir in Britain, Ms Abrahams had said in a statement that she was "treated like a criminal".
Government sources said Ms Abrahams did not have a valid visa to visit India and that she had been informed about it before her travel. Sources said she had been told she could apply for a regular visa when her e-visa was cancelled.
The British High Commission has said they are in touch with Indian authorities to understand why the MP was denied entry to India.

அமெரிக்க ஜனநாயகம் செத்துவிட்டது-நாகேஸ்வரி அண்ணாமலை



மனிதன் முடியாட்சியிலிருந்து முன்னேறி குடியாட்சிக்கு வந்துவிட்டான் என்று மகிழ்ந்திருந்த சமயம் உலகின் நாடுகளுள் முன்னணியில் இருக்கும், ஜனநாயகத்திற்கு ஒரு உதாரணமாக விளங்கிய அமெரிக்கா இப்போது ஜனநாயக்தை இப்படிச் சாகடித்துவிட்டதே என்பதை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.  சென்ற சில மாதங்களாக அமெரிக்காவில் நடந்துவந்த நிகழ்ச்சிகள் மனதில் கவலையைத் தோற்றுவித்தாலும் ‘என்ன இருந்தாலும் இது அமெரிக்கா, ஜனநாயகம் எளிதில் இங்கு தோற்றுவிடாது என்று நம்பிக்கொண்டிருந்தேன்.  அந்த நம்பிக்கை பொய்த்துவிட்ட பிறகு இது கனவா, நனவா என்ற எண்ணத்தில் மனது உழல்கிறது.

கொடாக்கண்டனும் விடாக்கண்டனும்!--பரிபூரணன்


க்கிய தேசியக் கட்சிக்குள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நடைபெறும் அதிகாரப் போராட்டம் தீவிரமடைந்திருந்தாலும் இப்போராட்டத்தில் ரணில் மீண்டுமொருமுறை வெற்றியீட்டியிருக்கிறார். அதாவது கட்சித் தலைவர் பதவியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
இருவருக்குமிடையிலான போராட்டம் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இடையில் 2015இல் ஐ.தே.க. தலையிலான அணியினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால் அதிகாரப் போட்டி சற்று தளர்ந்துபோய் இருந்தது. ஆட்சியை இழந்ததும் அது மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறது.
இந்த அதிகாரப் போட்டியின் மைய விடயம் ரணில் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி அதை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே. ஆனால் ரணில் அதற்கு இடம் கொடுக்காமல் பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லியும், குள்ளத்தனமான தந்திரோபாயங்களை நடைமுறைப்படுத்தியும் தலைவர் பதவியை தக்கவைத்து வருகின்றார். இருப்பினும் விக்கிரமாதித்தன் கதைபோல சஜித் தனது முயற்சியைக் கைவிடாதவராகவே இருக்கிறார்.
கடந்த நொவம்பர் 16இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித்தை வேட்பாளராக நியமிப்பதற்கும் கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கும் அவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர். இரண்டையும் சஜித்துக்கு வழங்க முடியாது என விடாப்பிடியாக நின்ற ரணில் இறுதியில் பணிந்து வந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டியிடுவதற்கு மட்டும் சம்மதம் தெரிவித்தார். இதற்கும் ரணிலின் கள்ள நோக்கமே பின்னணியில் இருந்தது. அதாவது தானோ அல்லது சஜித்தோ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துகொண்டே ரணில் சஜித்துக்கு வழிவிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்று அவரது அணியினர் அரசாங்கம் ஒன்றை அமைத்த பின்னர், யார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பது என்பதில் ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் மீண்டும் மோதல் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்காவிடின் தான் புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அதன் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதாக சஜித் மிரட்டியதால் ரணில் அந்தப் பதவியையும் அவருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.

கரோனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் தயங்கியது ஏன்?-– ஆர்.பிரசாத்




Afbeeldingsresultaat voor coronavirus who"
லகம் முழுவதையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். சீனாவில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களிடம் இந்த வைரஸ் பரவியிருப்பதை அவர்களுக்கு சளி, நிமோனியா காய்ச்சல், கடுமையான இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்பு ஆகியவற்றைச் சோதித்து அறிந்த பிறகே தெரிந்துகொள்ள முடியும். தெரிந்துகொள்ள நேரும்போது, நோய் முற்றி மரணத்தை நெருங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது.
இவ்வளவு கொடிய நோய்ப் பரவல் குறித்து, இதுவரை உலக அளவில் நெருக்கடி இருப்பதாக எச்சரிக்கப்படவில்லை. அதேவேளையில், சீனாவிலேயே இது பரவும் வேகத்தையும், இதற்குப் பலியானோரின் எண்ணிக்கை குறித்தும் உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கவில்லை. அந்தப் பக்கத்தை உலகம் முழுக்க 51 லட்சம் பேர், அதிலும் மருத்துவர்கள் உள்ளிட்ட விவரம் தெரிந்தோர் பின்பற்றுகின்றனர். எனவே, அது தொடர்ந்து தகவல்களைப் புதுப்பிப்பதுடன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எச்சரிப்பதும் அவசியம்.
சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் வூஹான் மாநகரில் மீன், நண்டு, நத்தை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை விற்கும் மொத்த விலைச் சந்தையிலிருந்து இந்த வைரஸ் கடந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31-ல் பரவியதாகக் கூறுகின்றனர். ஜனவரி 17-ல் உலக சுகாதார நிறுவனம் முதலில் இதை ட்விட்டரில் தெரிவித்தது. சீனாவில் ட்விட்டர் கிடைக்காததால் ‘வெய்போ’ என்ற சீன வலைப்பூ அமைப்புக்குத் தகவல்களைத் தெரிவித்தது. ஆனால், தகவல்கள் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் இல்லாமல் விட்டுவிட்டும் அரைகுறையாகவுமே இருந்தன. நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஜனவரி 21-ல்தான் தகவல்களைத் தரத் தொடங்கியது. அதிலும்கூட உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் பிராந்தியம் அளிக்கும் தகவல்களை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதில் தயக்கம் காட்டியது.

‘எனது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது’












னது அரசாங்கம் எப்பொழுதும் எதிர் அபிப்பிராயங்களை பொறுமையுடன் செவிமடுக்கத் தயாராக உள்ளது. எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று முழுமையான சுதந்திரம் இருக்கின்றது. எந்த ஒருவரும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம் என்றார்.
​சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 72ஆவது சுதந்திர தின பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ கால ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று இன்றோடு 72 வருடங்களாகின்றது. இன்றைய தினம் அரச தலைவர் என்ற வகையில் நீங்கள் பெற்ற சுதந்திரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக உறுதிபூண்டே உங்களுக்கு உரை நிகழ்த்துகின்றேன்.
இச்சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்குமாக தம்மை அர்ப்பணித்த சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பர்கர் ஆகிய தலைவர்களுக்கு எனது பெருமதிப்பை செலுத்துகின்றேன்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...