யாழ்ப்பாண முஸ்லிம்களின் அன்புக்குரியவர் அமரர் கார்த்திகேசன்- எம்.ஏ.சி. இக்பால்


கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்று யாழ்ப்பாண மக்களால் அன்பாக
அழைக்கப்பட்ட அமரர் மு.கார்த்திகேசன் ஒரு சிறந்த ஆங்கில
ஆசிரியராகவும், சமூக சேவையாளராகவும்ää சுவாரசியமான ஹாஸ்ய பேச்சாளராகவும்,  சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார் என்பது சகலரும் அறிந்ததே. அன்னார் காலமாகி பல வருடங்கள்
கடந்துவிட்டாலும், அவருடன் சேர்ந்து வாழ்ந்தவர்கள், சேர்ந்து செயற்பட்டவர்கள்,  நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் சகலரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அமரர் கார்த்திகேசனுடனான தமது தொடர்புகளை நினைவுபடுத்தி தமக்கிடையில் பேசி அகமகிழ்ந்து அன்னாரைப் புகழ்ந்து அவரது நினைவுடன் பிரிந்து செல்வது வழக்கமான ஒரு விடயமாகும்.
அவருடைய பணிகளில் மிகவும் சிறந்த பணியாக அன்று அமைந்தது அவரது
அரசியல் பணி என்றால் அது மிகையாகாது. யாழ்ப்பாணத்தில்
கம்யூனிஸ்ட் கட்சியை அறிமுகப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர்.



எம்.ஏ.சி. இக்பால்

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்?


ஈஸ்டர் ஞாயிறு தினமான ஏப்ரல் 21ந் திகதி இலங்கையில் நடந்த
தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் ஊடுருவிவிட்டதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒப்பீட்டளவில் குறைந்தளவிலான இஸ்லாமிய மக்களைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பலமாகக்
காலூன்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானதாகவே உள்ளன என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே. அதிலும் இலங்கையில் பௌத்தமதத்திற்கும் (70.2மூ) இந்துமதத்திற்கும் (12.6மூ) அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலேயே இஸ்லாம் (9.7மூ) இருப்பதால், முதலிரு இடங்களிலுள்ள மதங்களை மீறி இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்களை சுலபமாகப் பரப்பவும் முடியாது. அதற்காக, இலகுவாகத் தகவல்களைப் பரிமாற்றங் செய்யக்கூடிய இன்றைய உலகில் இலங்கையில்
வாழும் இஸ்லாமியர்களில் சொற்ப அளவிலானோரை அடிப்படைவாதக் கருத்துக்களின்பால் ஈர்க்கப்படுவதைத் தடுத்துவிடவும் முடியாது.

இலங்கையின் பயங்கரவாதத் தாக்குதல்களின் பலாபலன்களை அறுவடை செய்த நரேந்திர மோடி! அடுத்த இலக்கு என்ன?-வானவில் தலைப்புக்கு கட்டுரை


லங்கையில் இவ்வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், நடசத்திர விடுதிகள் மீதும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் தாக்கமே சமகால இலங்கையின் சகல விடயங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது.
நிச்சயமாக இது பாரதூரமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் என்பதில் சந்தேகமில்லை. அதற்கும் அப்பால் இது பிராந்திய ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதிலும் சந்தேகமில்லை.

ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு


ஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நடைபெற்ற 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இந்த நாட்டில் இன, மத வன்முறைகளைத் தூண்டுகின்ற அனைத்துத் தரப்பினரினதும் செயற்பாடுகள் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட வேண்டும்.

சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு” (2) எஸ்.எம்.எம்.பஷீர்




 THENEEWEB  16TH JUNE 2019


இக்கட்டுரையின் முதல் பகுதியில்  எதிர்வு கூறியது போலவே இலங்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ராஜினாமா நாடகத்தின் சில அங்கங்கள் இதுவரை அரங்கேற்றப்பட்டு விட்டன. மிகுதி அங்கங்கள் தொடர்ந்து சுப முடிவுவரை அரங்கேற்றப்படும். பிரதி அமைச்சர்களுக்கான பதவி நியமனங்கள் அந்த நாடகத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்றன, ஆனாலும் இராஜினாமா செய்த முஸ்லீம் அமைச்சர்களுக்கான பதில் நியமனங்கள் இதுவரை இடம்பெறவில்லை.அவர்களின் அமைச்சுக் கதிரைகள் இவர்களை மீண்டும் எதிபார்த்தவாறு  காலியாகவே காத்திருக்கின்றன. முஸ்லீம் அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள் , ராஜாங்க அமைச்சர்களின் முதல் நாடகமே பிரதம மந்திரின் வாசஸ்தலத்தில் அரங்கேற்றப்பட்டது. இவர்கள் தங்களின் இராஜினாமா நாடகத்தினை தனிப்பட்ட ஒரு பொது இடத்தில் செய்யவில்லை, மாறாக  சென்ற வருட இறுதி பகுதியில் பிரதமரை ஜனாதிபதி நீக்கியது தவறு என்றும் , பதவி நீக்கம் சட்ட ஆட்சிக்கு உட்பட்டதல்ல என்றும்  இரவிரவாக முற்றுகைப் போராட்டம் நடத்திய அதே பிரதமந்திரின் அலரி மாளிகையிலே தங்களின் பதவிகளை ராஜினாமாச்  செய்தார்கள்.

"சொக்கா போட்ட நவாபு, செல்லாது உங்கள் ஜவாபு" எஸ்.எம்.எம்.பஷீர்




2019 ஏப்ரல் 21 ல் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களைத் தொடர்ந்து , அச் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக அடையாளம் காணப்பட்ட சில பயங்கரவாத முஸ்லீம் நபர்களுக்காக ,  இலங்கை வாழ் முழு முஸ்லீம் சமூகமும் இன்னலுக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தினமும் முஸ்லீம் மக்கள் மீது பல்வேறு விதமான இனவாத அடக்குமுறைகள் சிங்கள, பௌத்த  இனவாத சக்திகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிறித்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நீர் கொழும்பு சிலாபம் ஆகிய பகுதிகளில்  முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் கால்கொண்டன,  அதனையடுத்து  மிக விரைவாக  சிங்கள பௌத்த இனவாத தனிமங்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் தங்களின் முஸ்லீம் இனவாத கைவரிசையைக் காட்டத் தொடங்கின.  வழக்கம் போலவே இந்த இனவாத வன்முறைகளின் பொழுதும் அரச சட்ட ஒழுங்கு இயந்திரம் கைகட்டி நிற்பதை முஸ்லீம் மக்கள்  கண்டனர்.  ஆட்சிப் பொறுப்பிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் கையாலாகாத்  தனத்தையும் கண்டனர், தங்களின் கையறு நிலையையும்  உணர்ந்தனர்.


Photo: New York Times

எரியிற வீ ட்டிலை புடுங்கிறது இலாபம் என நினைக்கும் அரசாங்கம் ! - புனிதன்


இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளால்
மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களால் பலர் உயிரிழந்தும்ää
ஏராளமானோர் காயமடைந்தும் உள்ள நிலையில், நாட்டு மக்கள் மத்தியில்
பெரும் சோகமும் பயமும் கலந்த ஒரு சூழல் நிலவுகின்றது.
குறிப்பாக, “இது முடிவல்ல, தொடக்கம்” என ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ள
நிலையில்ää இலங்கையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அத்துடன், இலங்கையில் நடத்தப்பட்ட
தாக்குதல் சிரியாவில் ஐ.எஸ்.அமைப்புக்கு ஏற்பட்ட தோல்விக்கு
பதிலடி என்று ஐ.எஸ். தலைவர் அறிவித்துள்ள நிலையிலும், அண்மையில் நியுசிலாந்தில் இரு பள்ளிவாயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி என்றும் செய்திகள் வரும் சூழ்நிலையில்,  இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையிலும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுகின்றது.

நீதி எங்கே? நியாயம் எங்கே?-இத்ரீஸ்


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராஜ்யத்தில் ; கைது
செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவன் மகந்துர மதூசையும் அவனது சகாக்களையும் விடுவிப்பததற்காக சட்டத்தரணிகள் ; உட்பட பலர்  இலங்கையிலிருந்து எமிரேட்ஸ் பறந்து சென்றனர். அவனை விடுவிப்பதற்கு இலங்கையிலுள்ள  அரசியல்வாதிகள் பலரும் கூட முயற்சியில ; இறங்கினர்.

ஆனால ;  2013 இல் மூதூரைச் சேர்ந்த றிசானா நபீக் என்ற ஏழைச் சிறுமிக்கு சவூதி அரேபியாவில ; பகிரங்கமாக மரண தண்டனை
நிறைவேற்றப்பட்ட பொழுது இலங்கையிலிருந்து இந்த ‘தர்மவான்கள் ;’ யாருமே ஒரு  ஆதரவுக் குரல் ; கூடக் கொடுக்கவில்லை.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று (ஏப்ரல் 21 ஆம் திகதி) இஸ்லாமிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் சிலரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்து லங்கா சமசமாஜக் கட்சி பின்வரும் அறிக்கையை விடுத்திருக்கிறது:


இந்த தாக்குதல் குறித்து குற்றப் புலனாய்வுப்பிரிவின் பிரதிப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டு அவர் (அதிமுக்கியஸ்தர்கள் உட்பட)
சம்பந்தப்பட்ட பாதுகாப்பு உத்தியோகர்களுக்கு அறிவித்திருந்தார்.
ஏப்ரல் 11 ஆம் திகதியிட்ட கடிதத்தில் தாக்குதலுக்கான திகதி பற்றியும்,
தாக்கப்படப்போகும் இலக்குகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கோ, தாக்குதலுக்குள்ளான ஹோட்டல் நிர்வாகிகளுக்கோ அறிவிக்கப்பட்டு இருக்கவில்லை. அவ்வாறு
அறிவிக்கப்பட்டிருந்தால் உயிர் இழப்புகளையும் சேதங்களையும்
தவிர்த்திருக்க முடியும். ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இதுபற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறகின்றது. ஆனால் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது தகப்பனார் மூலம் இது பற்றி முன்னரே தான் அறிந்திருந்தாகவும், அதனால் தான் அன்றைய காலை பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினால் உத்தியோகபூர்வ தகவல்  வழங்கப்பட்டிருக்காவிடினும் அவர் 



மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...