மொட்டத் தலைக்கும் , முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் ஒரு புரட்(டு)சி ‘மார்க்சியவாதி’!


இலங்கையில் ஒரு காலத்தில் 100 சதவீதம் புரட்சிகர மார்க்சியவாதியாக வலம் வந்தவர் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன. ஆனால் புரட்சியிலும் நாடாளுமன்ற அரசியலிலும் ஏற்பட்ட மோசமான தோல்விகளால் துவண்டு
விரக்தியடைந்து போனதாலோ என்னவோ, அவரது முன்னோடி ரொட்ஸ்கிசத் தலைவர்களான பிலிப் குணவர்த்தன, கலாநிதி எம்.எம்.பெரேரா, எட்மன் சமரக்கொடி,
பாலா தம்பு போன்ரோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தானும் அடிசறுக்கத் தொடங்கியுள்ளார்.

ஜனாதிபதியும் , இரு அமைச்சர்களும ; பதவி விலக வேண்டும் ! ஜே.வி.பி. உறுப்பினர் வலியுறுத்து!!



ஜனாதிபதியும் இரு அமைச்சர்களும் கட்டாயமாகப் பதவி விலக வேண்டும் என வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் பங்குபற்றி உரையாற்றிய ஜே.வி.பியின்
நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அதற்கான பின்வரும் காரணங்களையும் அவர் தெரிவித்திருக்கிறார். அவையாவன:
ஐ.தே.கவைச் சேர்ந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் கீழுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சுக்கு
2017இற்கான வரவு செலவுத் திட்டத்தில் 19,782 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் 2017 செப்ரெம்பர் 30 வரை 6,000 மில்லியன் ரூபா மட்டுமே
பயன்படுத்தப்பட்டதாகவும், மிகுதிப்பணம் செலவழிக்கப்படாமல் திறைசேரிக்குத் திரும்பிவிட்டதாகவும் ரத்னாயக்க குறிப்பிட்டிருக்கிறார்.

ஊடகங்கள மீது அமைச்சர் மங்கள பாய்ச்சல்! --பி.வி


அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய நிதி மற்றும் ஊடக அமைச ;சர் மங்கள சமரவீர,ஊடகங்களின் தலைவர்களையும்,அவற்றின் ஆசிரியர்களையும் கடுமையாகச்
சாடியிருக்கிறார். அவரது கோபத்துக்குக் காரணம், சமீபத்தில் யுனெஸ்கோ
(UNESCO) ஆதரவுடன் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு அவர்களுக்கு
அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தும் அவர்கள ; யாரும் அதில் கலந்து
கொள்ளாததே. இதுபற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் மங்கள,
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்  அவர்கள்  ; கலந்து கொள்ளாதது குறித்துக் கேள்வி எழுப்பினார். இதுபற்றி நான் விசாரித்த போது ஊடகங்களின் தலைவர்கள ; மற்றும் அவற்றின் ஆசிரியர்கள் எல்லோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது தெரிய வந்தது.இருந்தும் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை” எனக் குறிப்பிட்டார்.


கட்சி தாவினால் இலஞ்சமாக அமைச்சுப் பதவி பெறலாம்!

உள்ளூராட்சித் தேர்தலில் தம்முடன்இணைந்து போட்டியிட மகிந்த ராஜபக்ச
தலைமையிலான கூட்டு எதிரணி முன்வரவில்லை எனக் கண்டதும்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி கூட்டு எதிரணியிலுள்ளவர்களை கட்சி தாவும் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க ஆரம்பித்துளளார்.

தமிழரசுக் கட்சியை மட்டுமல்ல, பிற்போக்குத்தமிழ் தேசியவாதத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும்! சுப்பராயன்


இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் இந்த எதிர்ப்பு சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் மத்தியில்
பரவலாக உருவாகவில்லை என்பதும், தமிழ்த் தேசியவாத சக்திகளிடமே அதிகமாகக் காணப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். தற்போதைய எதிர்ப்பு நிலைமை வேகம்
பெற்றதற்கு அண்மையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலும் ஒரு காரணம். இருந்தாலும் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை இதற்கு முன்னரும் பல ஏற்ற இறக்கங்களை
அக்கட்சி கண்டுள்ளது.

1949இல் உருவான தமிழரசுக் கட்சி அதன் முன்னோடிக் கட்சியான தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து
உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அதன் காரணமாக அவ்விரு கட்சிகளும் 1952, 1960 (இரு தேர்தல்கள்), 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் எதிரும்
புதிருமாகவே போட்டியிட்டு வந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் கடுமையான எதிரிகள் போலச் செயற்பட்டாலும் சாராம்சத்தில் ஒரே வர்க்கங்களை, அதாவது தமிழ் மேட்டுக் குழாமின், அதிலும் குறிப்பாக யாழ். உயர்சாதிப் பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளாகவே இருந்து வந்துள்ளன.
தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அக்கட்சியை .தே.கவிலிருந்து மாறுபட்ட, ஏகாதிபத்தியஎதிர்ப்பு தேசியவாதிகளின் கட்சியாக உருவாக்கினார். அதன் மூலம் இலங்கை
முதலாளித்துவ வர்க்கத்தில் விதேசிய சார்பு, தேசிய சார்பு என இரு அணிகள் இருப்பதை வெளிப்படுத்தினார்.

உள்ளூராட்சித் தேர்தல்: ‘நல்லாட்சி’ அரசுக்கும் அடிவருடிகளுக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு!


‘நல்லாட்சி’ அரசாங்கம் பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடாத்தாது இழுத்தடித்துவிட்டு இறுதியாக அடுத்த வருட முற்பகுதியில் தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் வேட்பு மனுக்கள் கோரப்பட்டு கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தி வருகின்றன.
இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் எமது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் உள்ள அநாகரிகமான போக்குகளும், எமது ஜனநாயகத்தில் உள்ள ஓட்டை ஒடிசல்களும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு வெளிப்படத் தொடங்கியுள்ளன.

இதுவரை காலமும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல நடித்த சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும், பங்காளிக் கட்சிகளும், பதவி என்று வந்ததும் அடிதடியிலும், குடுமிப்பிடிச் சண்டையிலும் இறங்கியுள்ளனர். பலர் தமது கட்சிகளில் இருந்து வெளியேறி புதிய கூட்டணிகளை ஆரம்பித்துள்ளனர். கட்சித் தாவல்களும் தாராளமாக நடைபெறுகின்றன. அரசாங்கமும் அதன் மேல்மட்டத் தலைவர்களுமே கட்சித் தாவல்களை ஊக்குவிக்கின்றனர். அப்படித் தாவுபவர்களுக்கு இலஞ்சமாக பதவிகளும் வழங்கப்படுகின்றன.

போரிற்கு பின்னரான எட்டாண்டு கால இலங்கை


இலங்கை உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோது இலங்கையின் எதிர்காலம் எப்படியிருக்குமென்று எதிர்வு கூறுவது சாதாரணமாக எல்லோருக்குமே மிகக்கடினமாக இருந்தது. புலிகளிலிருந்து இலங்கை இராணுவம் வரை, தமிழ், சிங்கள, முஸ்லீம் இனங்களைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்களென பல ஆயிரக்கணக்கனோர் யுத்தத்தால் மடிந்திருந்தனர். இவ்வாறு மடிந்தவர்களின் எண்ணிக்கைக்கு பல மடங்கு அதிகமாகவே, காயமுற்று அங்கங்களை இழந்தவர்களும் பாரிய தழும்புகளை சுமந்தவர்களும் இருந்தார்கள். நான்கு இலட்சம் பேரளவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதைவிட புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 13000 பேருக்கு மேற்பட்டவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டிருந்தனர்.

Sri Lanka to hand port to Chinese firm, receive $300 million -NewsIn.Asia

Colombo, Dec 6 (Reuters) – Sri Lanka will hand over commercial activities in its main southern port to a Chinese company on Saturday and receive around $300 million out of a $1.1 billion deal soon after, Ports Minister Mahinda Samarasinghe said.
 The deal, signed in July, will see China Merchants Port Holdings (0144.HK), handling the Chinese-built Hambantota port on a 99-year lease.
“After one month, we will be getting another 10 percent ($100 million) and in six months we will get the balance,” Samarasinghe told reporters in Colombo.
But the deal triggered protests by opposition groups and trade unions, saying they feared China would take control of the port.

-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ( Road to Nandikkadal) By Raj Selvapathi




மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கொமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன். வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 பயங்கரவாதிகளின் உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன்.

லெனின் மீது அவதூறு பொழியும் அமைச்சர் ராஜித!


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அன்பையும் ஆதரவையும் ஒருங்கு சேரப்பெற்ற  சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன எப்பொழுதும்
இடக்குதத் தனமாகவும் துடுக்குத்தனமாகவும் பேசி சிக்கலில் சிக்குபவர் எனப் பெயர் பெற ;றவர்.
அத்தகைய அதிமேதாவி அண்மையில் சோவியத் ; மக்களின் மாபெரும் தலைவரும், உலகப்
புரட்சியாளருமான மாமேதை லெனின் அவர்களை வம்புக்கிழுத்து அவரை அவதூறு செய்திருக்கிறார்.
அதாவது, இன்றைய இலங்கை மாணவர்கள் சிலரின் நடவடிக்கைகளைப் பார்ப்பதற்கு
லெனின் இன்று உயிரோடு இருந்திருந்தால், அவர்களது நடவடிக்கையைபயங்கரவாதச்
செயல்கள்என வர்ணித்திருப்பார்  என ராஜித கூறியிருக்கிறார்.

Bring LTTE to the book against their human right violations.by Jeyatheeswaran Palippody


Bring LTTE to the book against their human right violations.

Mr. Vice-President

In this gathering where the human right issues are discussed I am, Palippody jeyatheeswaran, a Tamil from east part of Sri Lanka, being the son of a father whose rights to live was denied by LTTE and my call for justice to this inhuman act, has resulted in my becoming a perpetual handicapped person.
I wish to bring to your notice that I being one of the thousands of victims who suffered tremendously as a result of LTTE terrorist acts must emphasize that it is absolutely incorrect to believe that the Tigers fought for the Tamil community. They even killed a large number of Tamils who were against their ideology. In fact they denied our fundamental rights.

In the concluded war both parties committed crimes. The misconducts should be investigated. The exact offender should be identified and legal actions taken accordingly.

"த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு முழுத் துரோகம் இழைத்துள்ளது!"


லங்கையில் மைத்திரி – ரணில் தலைமையில் அமைந்திருக்கும் மேற்கத்தைய சார்பு வலதுசாரி அரசாங்கம் நாட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வரும் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த அரசியல் அமைப்பின் நோக்கம் நாட்டில் எழுந்துள்ள பூதாகரமான பிரச்சினைகளான பொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசியுயர்வு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது, கல்வி – சுகாதார – அரச சேவைகளை மேம்படுத்துவது, ஊடக சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் வலுப்படுத்துவது போன்றவற்றுக்கும், நாட்டின் தலையாய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பது அல்ல.

மாறாக, எந்த அந்நிய சக்திகள் இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றினார்களோ, அந்த அந்நிய எஜமானர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின் வளங்களை அவர்களுக்குத்; தாரை வார்த்தல், விலைவாசிகளை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய வட்டிக்கடைக்காரர்களின் ஆணைப்படி அதிகரித்தல், கல்வி, சகாதார, வங்கி மற்றும் அரச சேவைகளை தனியார்மயப்படுத்தல், சிறிய தேசிய இனங்களின் தனித்துவத்தை அழித்தொழித்தல், ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்தல் போன்ற தேவைகளுக்காகவே இந்த அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வருகிறது.

மாவீரர் நாள் புனித நாளா? விஜய பாஸ்கரன்



மாவீரர் நாளை புனித நாளாக கொண்டாடுமாறும் அதை அரசியல் கலப்பின்றி கொண்டாடுமாறும் மாவை சேனாதிராசா அறிக்கை விட்டுள்ளார்.
புலிகளை வைத்தே அரசியல் ஆதாயம் தேடுமுகமாக அவரே அறிக்கைவிட்டு அரசியல் கலப்பு வேண்டாம் என்கிறார்.என்ன வேடிக்கையான அறிக்கை.இவரது அறிக்கை எந்த வகையில் நியாயமானது? அவரது கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நாட்டை விட்டே விரட்டியதை மறந்துவிட்டுப் பேசுகிறார்.
அமிரத்லிங்கம்,யோகேஸ்வரன்,சரோஜினி யோகேஸ்வரன்,நீலன் திருச்செல்வம் ,தங்கதுரை இப்படி பலரை பலியெடுத்த கூட்டத்தினரை எதற்காக புனிதப்படுத்துகிறார்? இவரே அவர்களால் விரட்டப்பட்டவர்.அவர்களுக்கு அஞ்சியே வாழ்ந்தவர்.அவரே இப்படிச் சொன்னால் எப்படி?
இப்படி இவர் அறிக்கை விடுவதால் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கவேண்டி உள்ளது.அமிர்தருக்கு உரிய கதிரையில் இவரே உட்கார்ந்தவர்.இதுபோலவே சம்பந்தரும் தங்கதுரையின் கதிரையில் உடகார்ந்தவர்.
புலிகள் என்ன புனிதர்களா? கண்முன்னே சொந்த சகோதரர்களை வீதியிலே எரியும் நெருப்பிலே உயரோடு எரித்தவர்கள்.பெற்றவர்கள் முன்னாலேயே பிள்ளைகளை துடிதுடிக்க கொன்றவர்கள்.எத்தனை குழந்தைகளை கொன்றார்கள்? இவர்கள் புனிதர்களா?மாவீரர்களா? மாவை சேனாதிராசா எந்த அடிப்படையில் புலிகளை புனிதர்கள் என்கிறார்?

"யார் பயங்கரவாதிகள்" By Vijaya Baskaran


---------------------------
1983 இனக்கலவரம் நடந்தபின் ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் நடமாடத் தொடங்கின.ஏதோ நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது போன்ற ஒரு உணர்வுகளோடு இருந்தோம்.இலங்கை இராணுவமும் சிங்கள மக்களும் எதிரிகளாக தெரிந்தனர்.அவர்களைக் கண்டு அச்சப்பட்டோம்.தென்னிலங்கை செல்லும்போது எந்த சிங்கள மக்களைக் கண்டாலும் ஒரு அச்ச உணர்வு தானாகவே வரும்
காலம் உருண்டோடியது.1986 இல் ரெலோ அமைப்பின் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியது.அந்த அமைப்பின் உறுப்பினர்களை கொலை செய்தது.அந்த அமைப்பை மீண்டும் இயங்கவிடவில்லை.

புலிகளின் சர்வாதிகாரம் மேலோங்கியது.தானாகவே சரண்டைந்த ஈரோஸ் அமைப்பைவிட சகல அமைப்புகளையும் புலிகள் தடை செய்தனர்.அந்த அமைப்புகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.பலர் கொல்லப்பட்டனர்.பலர் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் தப்பி ஓடினர்


Wheeler Dealer Muslim Politicians and Helpless and Voiceless Muslim Community By Latheef Farook


The island’s Muslim community continues to suffer from political and religious leadership crisis .Unless the civil society come forward and rescue, the community is heading towards a potentially disastrous future.

Under the existing circumstance the community cannot afford to hand over its destiny to corrupt politicians and equally corrupt religious leaderships. This is   in view of the growing animosity towards the community by small groups of Sinhala racist mercenaries with their own agendas. It becomes worse with government indifference and the presence of global forces which are raping and ravaging Muslim countries all over.

The irony is that most Muslim parliamentarians do not represent the community as they entered into deals with winning parties and secured positions.

For example Muslim parliamentarians opposed the Provincial Council Elections (Amendment) Bill pointing out how and why it was detrimental to the interest of the community.   However they voted in favor of the Bill saying their suggestions were accepted though   these changes were of no use to the community.

“மக்கள் சீனத்தை பிரமாண்டமான அதிநவீனமான சோசலிச நாடாக மாற்றுவோம்!”

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின்

19ஆவது மாநாட்டில் சூளுரை!!

2050ஆம் ஆண்டிற்குள் மக்கள் சீனத்தை “உலகிலேயே மிகப்பிரம்மாண்டமான, அதிநவீனமான சோசலிச நாடாக” மாற்றுவோம் என சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மாநாடு சூளுரைத்துள்ளது.
சீன்கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மாநாடு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமன்றத்தில் அக்டோபர் 18 புதனன்று துவங்கியது. மாநாட்டின் துவக்க நிகழ்வுகளுக்கு பிரதமரும் கட்சியின் அரசியல் நிலைக்குழு உறுப்பினருமான லீ கே கியாங் தலைமை வகித்து உரையாற்றினார்.

மாநாட்டை துவக்கி வைத்து கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியுமான ஜீ ஜின்பிங் (Xi Jinping) உரையாற்றினார். பிரதிநிதிகள் அமர்வில் ஜீ ஜின்பிங் தாக்கல் செய்த பொதுச் செயலாளர் அறிக்கையில், மக்கள் சீனத்தின் புதிய சகாப்தத்திற்கான புதியசிந்தனைகளை முன்வைத்தார். இந்த அறிக்கை மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. “சீன மண்ணுக்கு ஏற்ற சோசலிசம் என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாதை, ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்திருக்கிறது. எதிர்வரும் காலத்தில் கட்சி அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு நீண்டகால வழிகாட்டுதலாக புதிய சகாப்தத்திற்கான சீன குணாம்சத்துடன் கூடிய சோசலிச சிந்தனை அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மரணத்தை அஞ்சும் பறவை

மரணத்தை அஞ்சும் பறவை  

                (பரீத் உத் தீன் அத்தார் - பாரசீக கவிஞர் 1120 எழுதிய பறவைகளின் மாநாடு எனும் கவிதை நூலிலிருந்து  )

இன்னொரு பறவை உரத்துப் பேசியது
"பாதை நெடியது;, நானோ துணிவும் வலுவுமற்றவனாவேன்
மரணத்தினால் அச்சமுற்றுள்ளேன்
எனது முதற்கட்டம் நிறைவுறுமுன்
இறக்க வேண்டுமென வறிவேன்,

சாவு நெருங்கும் வேளை ,  அவ்வெண்ணத்தில் நடுங்குகிறேன்
ஒப்பாரியிடும் அச்சத்தில் நான் முனங்கி கீச்சிடுவேன்
என்பதையும் யானறிவேன்,   
தனது வாளுடன் மரனத்தை எதிர்கொள்ளும் எவரும்
அறுதித் தோல்வியைச் சந்திக்கத்  தவறார்
அவனது வாளும் கரமும்  நொறுங்கிக் கிடந்தன
ஐயகோ ! தங்களின் நம்பிக்கையாய் 
வாளைப் பிடித்தோரைப் பிடித்த துயர் எதுவோ.! 

தமிழ் மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர்  


வட இலங்கை இடதுசாரி முன்னோடிகளில் எம்.சி.சுப்பிரமணியம் -வி.சின்னத்தம்பி

(இலங்கையின் வட பகுதியில் தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை 1946இல் முதன்முதலாக ஸ்தாபிப்பதற்கு உதவிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் எம்.சி.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு (1917 – 2017) நினைவையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.)

லகளவில் இடதுசாரி இயக்கங்களின் செயற்பாட்டில் தேக்கம், சோர்வு, பின்னடைவு உள. இலங்கையிலும் அதன் தாக்கம் புலப்படுகிறது. ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகிய பிற்போக்கு சக்திகள் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தைப் பின்னடையச் செய்ய பிரதேச, மத, இன, மொழி உணர்வுகளைத் தூண்டி அதன் வழிப் போராட்டங்களுக்குத் தீனி போட்டு ஊக்குவித்து வருகின்றன.

இலங்கையில் 1971இல் ஜே.வி.பி.இன் எதிர்ப்புரட்சிக் கிளர்ச்சி, தமிழ் தேசிய இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகள், இடதுசாரி இயக்கங்களின் தலைமையில் திட்டமில்லாத, கோட்பாடற்ற தேசிய முதலாளித்துவத்துடன் இணைந்த போக்கு என்பன இடதுசாரி இயக்கங்களே இல்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. தேசிய முதலாளித்துவ சக்திகள் அல்லது விதேசிய முதலாளித்துவ சக்திகளே இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகள் என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளது.



கியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது!

ஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர்

உரை


ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba)  வெளிவிவகார அமைச்சர் Bruno Rodriguez Parrilla  அவர்கள் நிகழ்த்திய உரையின் முக்கியமான பகுதிகள் எமது வாசகர்களுக்காக கீழே தரப்பட்டுள்ளன.
தலைவர் அவர்களே,

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இங்கு பேசும்போது, தனது நோக்கங்களில் ஒன்று, நாடுகளினதும் தனிநபர்களினதும் செல்வத்தைப் பெருக்குவதே என்று கூறினார். ஆனால் உண்மையான உலகத்தைப் பொறுத்தவரையில்ல், உலகிலுள்ள 3.6 பில்லியன் (Billion)  மக்களிடமுள்ள மொத்த செல்வத்துக்கு நிகரான அளவுக்கான செல்வம் எட்டே எட்டு மனிதர்களிடம் குவிந்து கிடக்கிறது. உண்மையில் மனித குலத்தை வறுமைக்குள் தள்ளியது யார்?

உலகில் பெரும் வருமானத்தைக் கொடுக்கும் 100 நிறுவனங்களில் 69 பல்தேசியக் கம்பனிகளாகும், அரசுகளல்ல. உலகிலுள்ள மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களின் (Corporations)  வருமானம் உலகிலுள்ள 180 நாடுகள் ஈட்டும் மொத்த வருமானத்தை விடக் கூடுதலாகும்.


கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் படைப்புகள்


லங்கை மக்களைப் பொறுத்தவரையில் தோழர் கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் அவர்களைத் தெரியாதவர்கள் இல்லை எனச் சொல்லலாம். அவ்வளவுதூரம் அவர் இலங்கை மக்களுடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்தவர்.

அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். தலைசிறந்த ஆசிரியர். யாழ்.மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர். ஓய்வொழிச்சல் இல்லாத மக்கள் ஊழியர். இப்படிப் பல தகைமைகளின் சொந்தக்காரர்.

அதுமட்டுமின்றி, தனது வாழ்நாள் முழுவதும் எழுதியும் குவித்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை அவர் மேற்கொண்ட காலத்தில் அங்கு மாணவர் அமைப்பு வெளியிட்ட ‘Student News’ என்ற ஆங்கில செய்தி ஏட்டின் ஆசிரியராகத் தனது எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

"When people rise against political hypocrisy" By MYM SIDDEEK




article_image
This is a very recent example to demonstrate how Muslim voters have been deceived by politicians to grab their votes.

Sainthamaruthu-Malikaikkadu Jummah Mosque, which is the only Jummah Mosque for more than 28,000 people, has declared in public, at a very large gathering, that the people of Sainthamaruthu – Malikaikkadu will not support the political activity of any party, until a Gazette notification is published for the creation of a separate local government authority for Sainthamaruthu. They have declared they will field independent candidates to contest any future elections under the direction/guidance of the Trustee Board of the Grand Mosque if this does not happen. They have also decided not to invite any politician to Sainthamaruthu-Malikaikkadu area to any event/function until the notification is published.

This is an unprecedented move in the political history of Sri Lankan Muslims. This clearly demonstrates a political awakening of the people of the area, especially the youth who have been voting for these politicians and political parties. They also burned the effigies of some politicians, including SLMC leader Rauf Hakeem, at a very large gathering in the village. These are very rare events in a village where law-abiding and God-fearing people live.

"WHO IS TO BLAME " By NOOR NIZAM -Tittle-Tattle


Ravi Karunanayake met with Faiz Musthapa to obtain legal advice as to how to get out of the "Bond Scam".

Ravi Karunanayake being a "very close friend" of Ganassara Thera, it is clear that the suspicion that the anti-Mahinda forces/UNP had a hand in the Aluthgama/Beruwela and other mosque violence's in June 2014, can be assumed as "TRUE",. The delay by the "Yahapalana Government" not to appoint a Presidential Inquiry that was promised in the run-up to the Presidential and General elections up to date confirms the guilt of the present government.

But, the main reason for a peace move to be made by a leading Muslim Lawyer and President's Council was in fact to safeguard Azad Sally, Mujeebu Rahuman and the ACJU/Rizvi Mufti from being hauled before the "Rule-of-Law in the case taken up by the Police/CID on the complaints made by the Ravaya Balaya and the BBS against the above 3 Muslims and which would have ended up in the above Muslims been sent behind bars. With the peace suggestion that this deceptive Muslim lawyer had put in place, it is rumored that BBS will withdraw the police complaint and advice court that an amicable settlement between both parties have been arrived at and there is no need for the Police/CID to proceed with the court case.

"Zero devolution: The Sinhala far right’s political final solution" By Dr. Dayan Jayatillake

Hundreds of thousands of people, mostly young, died violently or were maimed, and tens of thousands disappeared, and unknown numbers were tortured, in the less than four decades between April 1971 and May 2009 on this small island. 

Something must have been wrong, something must have gone wrong, somewhere, for all this horror to result among so much natural beauty and tranquility. We are all implicated in different ways and in different degrees. The least we can do is accept that there were huge mistakes and seek to rectify them through reform. For this, we must turn the searchlight inwards and not content ourselves with pointing the finger outwards.

After the April 1971 insurrection we implemented drastic reforms: a new, Republican Constitution, and two waves of Land Reform. After the 1986-1989 Southern insurrection we had the Youth Commission, the reintroduction of merit as the criterion of employment, the Janasaviya Poverty alleviation program, the Land Task Force to distribute uncultivated land, the free school uniforms and free school midday meals programs, the 200 garment factories, the massive housing programs, the 15,000 projects program.

Orumiththa Nadu’ and ‘Ayikkiya Nadu’ is mere word play TNA deceiving the people with word games

Panchamee Hewavissenti
The Jaffna District MP, former Minister and the Leader of the Ealam People's Democratic Party (EPDP) Douglas Devananda said that Amendments are the Constitution needs to amended and interested parties should decide what Amendments are to be made. He added that the confusion between the Orumiththa Nadu and Ayikkiya Nadu is mere word play of the TNA to deceive the Tamil People.
Devananda denied any alliance with or support to Joint Opposition's Podu Jana Peramuna and stressed that he remains an independent party member. He believes that former President Mahinda Rajapaksa can be a good leader and win the people's hearts once again, as he might have realized by now the errors committed in the past.

அரசின் தனியார்மயப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக சோசலிசக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்!



இலங்கை கம்யூனிஸ்ட் .கட்சி மாநாட்டில் டியு வேண்டுகோள் இலங்கை கம்யூ.கட்சி மாநாட்டில் டியு வேண்டுகோள்

“சோசலிசக் கட்சிகளின் முன்னுரிமையான சோபணி தமது பலத்தை வலுவாக்கிää இந்த அரசாங்கம் இலங்கை வங்கிää மக்கள் வங்கிää தேசிய சேமிப்பு வங்கி மற்றும் ஊழியர் சேமலாப நிதி (நுPகு)இ ஊழியர்
நம்பிக்கை நிதியம் (நுவுகு) என்பனவற்றைத் தனியார்மயப்படுத்த
எடுத்திருக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராடி முறியடிப்பதாகும்”.
எனத் தெரிவித்திருக்கிறார்.

Image result for dew gunasekera


புல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி! பி.வீரசிங்கம்


இலங்கை ஒரு விவசாய நாடு. இங்கு நெல்வயல்களில் புல்லுப் பிடுங்குவது குறித்து அனைவருக்கும் தெரியும். நெல் வளருவதானால் அது அவசியம். ஆனால் இதே நாட்டில் சிலர் புல்லுக்குள் நெல் பிடுங்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் எதிரிகள் என நினைத்து சிலர் மீது எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் அப்படித்தான்  பார்க்கின்றனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தன்மீது விசுவாசம் காட்டாத, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொகுதி அமைப்பாளர்கள் மீது மைத்திரி தொடர்ச்சியாகப் பதவி பறிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

புதிய அரசியலமைப்பு: மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை!



லங்கையின் இன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் விரைவில் ஒரு புதிய அரசியல் அமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.

இதிலுள்ள முதலாவது பிரச்சினை என்னவென்றால், வரப்போவது முற்றிலும் ஒரு புதிய அரசியல் அமைப்பா அல்லது தற்போதைய அரசியல் அமைப்புக்குத் திருத்தங்களா என்பது அநேகருக்குத் தெளிவில்லாமல் உள்ளது. அரசாங்கமோ அல்லது இதைத் தயாரிக்கவுள்ள அரசியல் சாசன நிபுணர்களோ இது எந்த வகையானது என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு வசதிக்காக வரப்போவது புதிய அரசியல் சாசனம் என்றே வைத்துக் கொண்டு மேலே செல்வோம்.
அடுத்ததாக, இந்த புதிய அரசியல் அமைப்பு என்ன நோக்கத்துக்காகக் கொண்டு வரப்படுகிறது என்பது குறித்தும் தெளிவில்லாமல் இருக்கின்றது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளுக்காக முதலில் அகிம்சை வழியில் போராடி அது தோற்றுப்போகப் பின்னர் ஆயுதம் தாங்கிப் போராடி அதிலும் பெரும் இழப்புகளையும் தோல்விகளையும் கண்ட சூழ்நிலையில், தற்போதைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவே புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்படுகிறது என அரசாங்கமும், தமழர்களின் பிரதான அரசியல் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒருபக்கத்தில் பிரச்சாரம் செய்கின்றன.


Leftist forces should help moderate Tamils to assert their political positions: DEW

The much needed change in policy cannot be brought about without a change in the balance of forces.


The 21st Congress of the Communist Party was held on Friday, September 29 at the Shalika Hall, Narahenpita, Colombo. Former Minister and the General Secretary of the Communist Party D.E.W. Gunasekera delivered the keynote address.

Imperialism now resorts to selective strategies namely: Destabilization of States, Regime Change and Military Aggression
As pledged the Government is called upon to speed up the Constitutional Reforms
The positive democratic and progressive elements are in a state of disarray and frustration

Excerpts:
The rise of the Asian economy after a period of 500 years was the central factor which brought about the decisive turn in the balance of world economic powers.   
Its ability and potentiality to cope up with challenges posed by the 4th Industrial Revolution, particularly in the sphere of ICT is a factor to be reckoned with. India becoming the fastest growing economy in the world, is strengthening Asian economy as a whole.   

A political tittle-tattle


The former strongman was taking his lunch at the council canteen last week. There were only a few council members in the canteen at this time. In fact, the former strongman was alone at the table. 
On seeing the former boss taking his lunch, a purohita in yahapalanaya headed in that direction. A typical turncoat, who had switched from one party to another from time to time, this worthy, hailing from a legal family, has now hitched his political wagon to the Maitri star. 
In fact, he served as a deputy in the previous regime too. And on the eve of the last big poll, he broke ties with the former strongman to become one of his vociferous critics. 

"சீனா இன்று! " மருதன்

“நான் ஒருவேளை செல்வந்தராக இருந்தால்,  இந்தியாவில் பிறக்கவே
விரும்புவேன். இங்கே என்னால் தொல்லையின்றி நிம்மதியாக வாழ
முடியும். அரசு என் வாழ்வில் குறுக்டுகிடுமா , என் சொத்துக்களை
அபகரித்துக் கொள்ளுமா என்றெல்லாம் நான் அஞ்சவேண்டியதில்லை. என்
அனுமதியின்றி என்னிடம் எதுவும் பறிக்கப்படமாட்டாது. ஆனால் 
ஏழையாக இருக்க வேண்டுமானால் , நான் சீனாவில் பிறக்கவே விரும்புவேன்."  மருதன்


வரலாற்றில் முதல்முறையாக வ ‘இன் தி நேம் ஆஃப் பீப்பிள்’ (In the Name of People) ) என்னும் சீனத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் (NEtflix)  சீரியல்களுக்குப் போட்டியாக உலகை ஆண்டுகொண்டிருக்கிறது. டிகிடிதூடி என்னும் இணையச் சேவையில் 55 எபிசோடுகள் வெளிவந்த இத்தொடரை 55 பில்லியன் பேர் இதுவரை கண்டுகளித்திருக்கிறார்கள். சீனாவின் சாதனைகளையும் சறுக்கல்களையும் மதிப்பிட ஒரேவழி,  திறந்த மனதுடன் அந்நாட்டை அணுகுவதுதான். “ஒரே ஒருமுறை சீனா சென்று திரும்பினால் போதும்  அந்நாடு குறித்து மீடியாவில் வரும் பெரும்பாலான செய்திகள் பிழையானவை என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்” என்கிறார் ஸ்காட் யங் என்னும் அமெரிக்க இளைஞர். “சீனா பகுதியளவில் சுற்றுச்சூழல்  மாசால் சீர்கெட்டிருப்பது உண்மை. ஆம் என்னால் அங்கே ஃபேஸ்புக் பார்க்க முடியவில்லை. ஆம்  சீனமொழி கற்பதற்குக் கடினமானது. ஆனால் பல பகுதிகளில் சுத்தமான காற்றை நான் சுவாசித்தேன்,  இணையத்தை உபயோகித்தேன்,  மண்டரின் ஓரளவு கற்றுக் கொண்டேன். சீனர்களுக்கு வெளிநாட்டினரைப் பிடிக்காது என்று எச்சரித்து அனுப்பினார்கள். நான் போன முதல் நாளே நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டேன்.
சீனாவில் சதந்திரமாக இருக்க முடியாது  என்றார்கள். நான் மூன்றுமாத காலம் சீனாவை அச்சமின்றிச் சுற்றி வந்தேன்.


"போர்க்குற்ற விசாரணை என்ற அரசியல் "



பிரேசில், ஆர்ஜன்ரீனா,கொலம்பியா, சிலி, பெரு, சூரினாம் ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகப் பணி பரிந்த இலங்கை முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியாவிற்கு எதிராக போர்க்குற்ற
விசாரணை நடைபெற்றால்ää அவருக்கு எதிராக சாட்சியங்களை
வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக, இலங்கையின் இன்னுமொரு முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இலங்கைத் தூதுவர் பணியிலிருந்து கடந்த ஓகஸ்ட் 31ந் திகதி ஓய்வுபெற்ற ஜகத் ஜயசூரியா மீதுää பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் சில மனித உரிமை
குழுக்கள் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. சரத் பொன்சேகா இராணுவத்தளபதியாக பதவி வகித்த இறுதி யுத்தத்தின்போதுää வவுனியா கட்டளைத்தளபதியாக ஜகத் ஜயசூரியா பணி புரிந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


த.தே.கூ ஜே.வி.பி. உதவியுடன் அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறித்துள்ளது ‘நல்லாட்சி’அரசு!


இருந்து விலகிவிட வேண்டும். இந்த ஜனநாயக விரோதச் சரத்தை சட்டமூலத்தில் நீக்கும்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒரு திருத்தத்தைச் சமர்ப்பித்த போதும் அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத்
தெரிவிக்கும் முகமாக, சிறீ.ல.சு.கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டபிள்யு.ஜே.ஏம்.செனவிரத்ன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்
புறக்கணித்துள்ளார். தனது புறக்கணிப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் “இந்தத் திருத்தச் சட்டம்  அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதால்  இதை ஆதரித்து வாக்களிக்க எனது மனச்சாட்சி இடம் தரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் ‘நல்லாட்சி’ தூய்மையாகிவிடாது! வானவில் இதழ் -81 செப்ரெம்பர் 23 2017



ரண்டரை வருடங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 08இல் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவி ஏற்றபோது நாட்டு மக்களுக்கு ‘நல்லாட்சி’ வழங்கப்போவதாகச் சொல்லியே பதவி ஏற்றது.

குறிப்பாக, முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இடம் பெற்ற ஊழல், மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகம் எதுவும் தமது ஆட்சியில் இருக்காது என மைத்திரியும், ரணிலும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். அத்துடன், சிறுபான்மை தேசிய இனங்களின் – குறிப்பாகத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழ் மக்களின் பிரதான அரசியல் அமைப்;பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை எதுவும் இன்றி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கும், நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஆதரவளித்திருந்தது.

New book tells untold story of Sri Lanka’s 2009 victory at UN Human Rights Council- By P.K.Balachandran

While Sri Lanka’s decisive military victory over the Liberation Tigers of Tamil Eelam (LTTE) on May 19, 2009 is still talked about for its historic significance for Sri Lanka, the region and the world, the diplomatic  victory registered over the Western powers at Geneva has not got sustained recognition.

ஒரு இலங்கையனின் ஈடு செய்யமுடியாத இழப்பு : கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் எஸ்.எம்.எம்.பஷீர்



( 02 திகதி செப்டம்பர் மாதம் 2017 இல்  காலமான  கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் குறித்து எனது நினவுப் பகிரல்  )



"நாங்கள் இலங்கையர்கள் என்று வரவேற்கப்பட வேண்டும்
நாங்கள் அதை இயன்ற அளவு விரைவாக செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்
ஒரு இலங்கை தமிழராக அல்லாது ஒரு தமிழ் இலங்கையனாக இருக்க விரும்புகிறேன்"  டாக்டர் ராஜசிங்கம் நரேந்திரன்                        
                                               
       

களுத்துறை சிறையில் நடந்த தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன். நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

07.09.2017
ஊடகங்களின் பாவனைக்காக….
களுத்துறை சிறையில் நடந்த தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன்.
நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி
இவ் வர்த்தமானியின் பிரகாரம், கண்வில்லைகள்ஃ டெலிவெரி சிஸ்;;டத்துடன் கூடிய வில்லைகள் தொடர்பாக முப்பத்தி எட்டு (38) வணிகப் பெயர்ஃ அங்கிகரிக்கப்பட்ட பெயர் மற்றும் உற்பத்தியாளர்களின் விபரதdouglas2்துடன் அதிகூடிய சில்லறை விலையும் விற்கும் போது தெளிவான பற்றுச்சீட்டு ஒன்று வழங்குதல் வேண்டும் என்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


இறுதி நடையும் இறுதிப் பயணமும் : ஏ.ஆர்.எம்.மன்சூர் பற்றிய ஒரு நினைவுக்கு குறிப்பு





எஸ்.எம்.எம்.பஷீர்

"எனக்குப் பின்னால் நடக்காதே,
நான் வழிகாட்ட முடியாமல் போகலாம்
எனக்கு முன்னே நடக்காதே
நான் உன்னை பின்பற்ற முடியாமல் போகலாம் 
என்னுடனே நட , எனது நண்பனாக  இரு"

                                                            ( ஆல்பர்ட் கேமஸ் )  

  

25 ஜூலை 2017 இல் மறைந்த முன்னாள் அமைச்சரான ஏ ஆர்.எம். மன்சூரின் அரசியல் பதவி நிலை பற்றியும்  , அவரின் மக்கள் பணி பற்றியும் பலர் , அவரின் மரணத்தையொட்டி  இன்று சிலாகித்துக்  கூறுவதையும் ,பாராட்டி  எழுதுவதையும்  கேட்க , பார்க்க  கூடியதாக உள்ளது. அந்த வகையில் நானும் எனது பக்கப்  பார்வையை  
பகிர்ந்து கொள்கிறேன்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...