பிரதேசவாதம் உண்மையும் கற்பனையும்.

-- எஸ். எம். பசீர்


"என்னைத் துரோகியென்று சொல்லும் எல்லோருக்கும் சொல்லுவேன். நான் செய்ததையிட்டு நான் பெருமைப்படுவேன்."
--திரு. எம்.வாணுறுää இஸ்ரவேல் அணுகுண்டுத் திட்டத்தின் ஊதுகுழல் தனது 18 வருட சிறைவாசத்தின் பின் இவ்வாறு கூறினார்.

பிரதேசவாதம் யதார்த்தமோ கற்பனையோ?

இலங்கையில் எப்பவோ சொல்லப்பட்ட ஒரு செய்தி என்னவென்றால் ;மலைநாட்டுச் சிங்களவருக்கும் கரையோரச் சிங்களவருக்குமிடையே வித்தியாசங்கள் உண்டு. அவர்களது புவியியல் சார்ந்த  வாழ்விலும் சாதிரீதியிலும் இனரீதியிலும் வித்தியாசமானவர்கள். இந்த வித்தியாசம் இந்த இரணடு பிரதேசங்களதும் நாளாந்த வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. கண்டிய ரத்வத்தை குடும்பம் தெற்கின் பண்டாரநாயக்காவை இரண்டு பரம்பரைக்கு முன்பு மணம் முடித்து இருந்த போதும் வடக்குத் தமிழர்களுக்கும் கிழக்குத் தமிழர்களுக்குமிடையே வித்தியாசம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கீழ்மாகாணத் தமிழர்கள் வடமாகாணத் தமிழர்களால் வஞ்சிக்கப் பட்டார்கள் என்று விளக்கங்கள் கூறப்படுகின்றன. வடமாகாணத்தவரின் உயர்கல்விச் சாதனை,  பொருளாதார வளர்ச்சி போன்றன இதனைக் காட்டுவதாக எடுத்தியம்பப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வடமாகாணத்தார் கீழ்மாகாணத்தாரை அடக்கி ஆளுவதாக உணரும் மனத்துன்பங்கள் நிலவுகின்றது. கருணாவின் கீழ்படியாமையும் கிளர்ச்சியும் இந்த அடக்கி ஆளுகைக்கு எதிராக ஏற்பட்டதென்று ஒரு பகுதியினர் உணருகின்றனர். இந்த மனவேதனையானது. கீழ்மாகாண சமூக உற்பத்திச்சாலையில் பலதசாப்தமாக உற்பத்தி செய்யப்பட்ட சமூக விளைபொருள் ஆகும். கருணா இந்தப் பிரச்சனையை தனது இராணுவ அங்கீகாரத்தின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார். வட கீழ் மாகாணத் தமிழரிடையே நிலவும் மனக்கிலேசமானது பலசங்கதிகளாக பிரதிபலித்துள்ளது.

மறைந்த நவீன கவிஞனான வி.ஆனந்தன் இதை வெளிப்படுத்தும் கவிதையொன்றை எழுதியுள்ளார்.

"வந்தாரை வாழ வைத்து
சொந்த மண்ணில் பிறந்தாரை
சாகடிக்கும் சிங்காரமான
மட்டக்ககளப்புச் சீமையான்
வேறு என்ன சிரைப்பான்"

இந்தக் கவியானது மட்டக்களப்பு மக்கள் வந்து குடியேறுவோருக்கு இரக்கமுள்ளவர்களாக நடக்கும் அதே வேளையில் அங்கே பிறந்தவர்களை கொல்லும் மனப்பான்மை உடையவர்கள். இது வடக்கிலிருந்து குடியேறியவரை வாழவைத்து குறிப்பாகப் படித்தவர்களை வாழ வைத்தது.

1995 ஆயுதப் போராட்டம் நிலவிய நாட்களில் துக்ளக் ஆசிரியரான சோ இராமசாமி 1-14 டிசம்பர் துக்ளக் இதழில் பின்வருமாறு எழுதினார்.
"கீழ்மாகாணத்தில் வாழும் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை". இருந்தபோதும் இந்தப் பிரிவினையானது மேலுக்குத் தலைகாட்டவில்லை. தமிழர்களின் ஆயுதப் போராட்டம்  அரசியல் மேடையில் துளிர்த்த இந்த வித்தியாசத்தை மேவி அமத்தி வைத்தது. "கருணாவினது பிரதேசவாதமானது திரு ஹக்கீமது தலைமை சம்பந்தமாக விமர்சித்த பொழுதே தெரிந்தது. 2003 பாரிஸ் கூட்டத்திற்குப் பிறகு அவர் ஒரு வெளிநாட்டு ஊடத்திற்குக் கூறிய பொழுது " சிறீலங்கா முஸ்லீம் தலைவர் ஹக்கீம் கீழ்மாகாணத்து முஸ்லீம்களைப் பொறுத்த மட்டில் ஒரு வெளியார். கீழ்மாகாணத்து முஸ்லீம்கள் தங்களது கீழ்மாகாணத்து மகனொருவனே தங்களுக்குத் தலைவராக வரவேண்டும் என்று விரும்புகின்றனர்." இந்த மனோபாவமானது அவர் வன்னித் தலைமையைப் பகைத்து தனது தலைமைக்குக் கீழ் வரவேண்டுமென்பதிலே தெளிவாகியது.

மட்டக்களப்பைச் சேர்ந்தவரான எம்.ஏ.சீ.ஏ. ரகுமான் ( பழைய ஏறாவூர் நகரசபைத் தலைவர்) வீ.எல்.எம்.ஏ. காதர்(பழைய அதிபரும் சமூகத் தொண்டரும்) இருவரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள்  திரு. அகமட் லெப்பை (பழைய காத்தான்குடி நகரசபைத் தலைவர்) போன்றோர் முஸ்லீம் தமிழ் சமூகங்களின் ஐக்கியத்திற்காகப் பாடுபட்டோராவர். இவர்கள் முஸ்லீம் மக்கள் சம்பந்தமான அரசியல் விடயங்கள் அடையாளம் காணப்பட்டுச் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்று பாடுபட்டவர்களாவர்.. முஸ்லீம் தமிழ் சமூகத்தலைவர்களை இதிலே ஈடுபடுத்தப் பாடுபட வேண்டுமென்று இதை எழுதுபவரோடு கலந்துரையாடினார்கள்.

திரு .வேணுதாஸ் புலியிலுள்ள மற்றய அங்கத்தவர்களிலும் பார்க்க முஸ்லீம் பிரச்சனைகளை விளங்கியவராகும். அவர் மேலும் ஒன்றைச் சொன்னார். 1987 இல் பிரேரிக்கப்பட இருந்த வடகீழ்மாகாண இடைக்கால நிர்வாகத்தில் ஓர் அங்கத்தவராகத் தானும் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இது நிதர்சனமாகவில்லை. 1987 ஒக் டோபரில் புலிக்கும் இந்திய சமாதானப் படைக்கும் போர் தொடங்கியது. அவர் பிற்காலத்தில் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்.

கருணாவும் முஸ்லீம்களும்

பரீஸ் கூட்டத்திற்குப் பின்பு முஸ்லீம்கள் சம்பந்தமாகக் கருணாவைக் கேட்டபொழுது "அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலிகளே முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள். அதன் பின்பு புலிகள் முஸ்லீம்களோடு பேசி அவர்களின் தேவைகளை அறிவார்கள்" புலிகள் முஸ்லீம்கள் சம்பந்தமாகத் தசாப்தங்களாக வைத்திருந்த நிலைப்பாடே கருணாவினது நிலைப்பாடாகும்.

இதை எழுதியவர் ஒரு தடவை கருணாவைப் புலிகளின்; காரியாலயத்தில் சந்தித்தபொழுது ( அதன்முரண்நகை என்னவென்றால் அது பழைய மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இராஜன் செல்வனாயகத்தின் வீடு.அவரே வடமாகாண விரோதத்திற்குப் பேர்போனவர்.) அது மட்டக்களப்பில் யூலை-ஆகஸ்ட் 1987 இந்திய சமாதானப் படை வந்தபின்பு. கருணா இதை எழுதியவருக்குப் பின்வருமாறு சொன்னார்.:-புலிகள் முஸ்லீம்களின் ஆசை அபிலாசைகளை அறிவதற்காக அவர்களோடு கலந்துரையாடுவார்கள் என்று சொன்னார். இது ஒரு சின்னச் சந்திப்பே. இந்தச் சந்திப்பானது இவரின் நண்பரான திரு வேணுதாஸ் சட்டத்தரணியின் மூலம் ஒழுங்கு செய்யப் பட்டது. இருந்தபோதும் திரு . வேணுதாஸ் 1987இல் வட கீழ் மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாகத்திலே முஸ்லீம் பிரதிநிதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை இதை எழுதுபவரோடு கலந்துரையாடியுள்ளார். இது 1987 முடிவில் அமைக்கப்படப்போவதாகப் பிரேரிக்கப் பட்டது. எங்கள் எல்லோருக்கும் தெரியும்ää புலிகளின்; துப்பாக்கிகளும் கொடுவாள்களும் எப்படி வடகீழ் மாகாணத்து முஸ்லீம்களோடு பேசியதென்று.
குறிப்பாக இந்திய அமைதிப்படை போனபின்பு எப்படிப் பேசியதென்று எல்லோருக்கும் தெரியும்.

கருணாவின் அறிகையானது தசாப்தங்களாக வேறுமாதிரி இருக்கவில்லை. இனப் பிரச்சனை கூர்ப்படைந்த போதும் அது வேறுமாதிரி இருக்கவில்லை. புலித்தலைவர் பிரபாகரனும் அவர்போன்றுதான். 1993 மார்ச் 2 இல் பி.பி.சீ பிரபாகரனைப் பேட்டிகண்ட பொழுது முஸ்லீம்கள் சம்பந்தமாக உங்களது நிலைப்பாடு என்னவென்று கேட்டபொழுது திரு. பிரபாகரன் சொன்னார்:-
"நாங்கள் இந்தப் பிரச்சனையை இப்படிப் பார்க்கிறோம். முஸ்லீம்கள் ஒரு தேசிய இனக் குழு. அவர்களுக்கென்று ஒரு கலாச்சார அடையாளமுண்டு. அவர்களின் கலாச்சார அடையாளத்தையும் காணி வைத்திருக்கும் உரிமையையும் பாதுகாக்கும் அதே வேளையில் அவர்கள் தமிழ் மக்களோடு ஐக்கியப்பட்டு சேர்ந்துவாழ்வதன் மூலம் மாத்திரம்தான் அவர்களது சமூக அரசியல் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படும். சிங்களவர்களும் சுயநல முஸ்லீம் அரசியல்வாதிகளுமே தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையே பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறார்கள்"

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் புலிகளின் வரிகள் என்னும் மாறவில்லை என்பதே. கருணாவின் யூனியர் கொமாண்டர் றமேஸ்; இதை மீளவும் உறுதி செய்தார். வன்னியோடு முரண்பாடுகள் வருவதற்குச் சில மாதங்கள் முன்புää முஸ்லீம்களும் தமிழர்களும் ஒன்றேயென்று அவர் சொன்னார். சிங்கள அரசியல்வாதிகளும் சில வெளிச் சக்திகளும் முஸ்லீம் தலைவர்களினூடு பிளவுபடுத்துவதன் மூலம் போராட்டைத்தைப் பலவீனப்படுத்த முனைகிறார்கள். முன்பு முஸ்லீம்களும் தமிழரும் ஒன்றேயென்று சொன்ன கருணா அதை மறுதலித்து வன்னிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ;இதுதான் கருணா இன்று வன்னித் தலைமையால் குற்றஞ்சாட்டுப்பட்டுள்ளது: பழிக்குப் பழி.

ஹக்கீம் தலைமையும் பிரதேசவாத அரசியலும்.

ஹக்கீம் எப்பொழுதுமே ரணில் விக்கிரமசிங்காவிலும் பிரபாகரனிலும் நம்பிக்கையுள்ளவராகவே தன்னைக் காட்டிக் கொண்டார். அவர்கள் இருவருமே இவருக்கு எப்பொழுதும் உறுதி அளித்துள்ள மனிதர்கள். இரணடாம் கட்ட தாய்லாந்துப் பேச்சுவார்த்தை முடிந்தபின்பு ஹக்கீம் சொன்னார் "கருணாவுக்குப் பிரபாகரன்மேல் அளவற்ற விசுவாசம் இருக்கிறது. பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் கருணாசெய்த பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாதென்று கூறியுள்ளார்" முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் துப்பாக்கிக்கு மேலாகப் பாய்ந்து முஸ்லீம்களுக்கு உறுதி அளித்து பிற்காலத்தில் நடந்து முடிந்த சம்பவங்களை ஏதோவிதத்தில் நியாயப் படுத்தி விடுவார். கிழக்கு முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில் கிழக்கிலே நடைபெற்ற முஸ்லீம்களின் படுகொலைக்கு கருணாவும் கரிகாலனும் பொறுப்பாளிகள் என்ற நிலைப்பாடே உள்ளது. காத்தான்குடி ஏறாவூர் முஸ்லீம்கள் மேலான தாக்குதலின்போது கருணா மட்டக்களப்பில் இல்லாமல் வன்னியிலேயே இருந்ததாக இலங்கை ஆயுதப்படைகளின் உளவாளிகள் கூறியிருக்கிறார்கள். அவர் தனது போராளிகளுக்கு வௌ;வேறு கட்டளையிட்டு தொலைபேசித் தொடர்புகளை குறுக்கிட்டுக் கேட்டிருக்கிறார்கள்.

ஓர் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி இதை எழுதுபவரோடு  கதைத்தபொழுது காத்தான்குடி ஏறாவூர் படுகோலைகளின்போது கருணா ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகுத்ததை அவரால் உறுதிப்படுத்த முடியாமலே இருந்தது. ஆனால் அவரின் உக்கிரமான கட்டளைகளையும் கொடூரமான மொழிப்பாவனைகளையும் விமர்சித்திருக்கிறார். கருணாவினது குழுவிற்குக்குறிப்பெயர் கிலோ நவெம்பர். அவரது செய்திகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. நியூட்டன் என்பவர் கருணாவினது கட்டளையைக் கேட்டுக்கொண்டிருந்தர்ர். நியூட்டன் என்பது கரிகாலனது குழுக்குறிப்பெயர். கரிகாலன் அந்நாளில் கிழக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்.
இவர்களுக்கு மாறாக கிழக்கு முஸ்லீம்கள் எப்பொழுதுமே தெற்கிலிருந்து வந்தவர்களைத் தமது பிரதிநிதிகளாக வரவேற்றிருக்கிறார்கள். பேரியல் அஸரறப்பும்ää றவ் ஹக்கீமும் டிக்கமாதுளைப் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார்கள். இருவருமே கண்டியிலிருந்து வந்தவர்கள். பரிதாபகரமாக இப்படியொரு அதிஷ்டம் கிழக்குமாகாண முஸ்லீம்களுக்குக் கிட்டியதில்லை. தெற்கிலுள்ள முஸ்லீம்களே தெற்குமுஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தெரிவு செய்யப் பட்டுள்ளார்கள். பல்தேசிய இனங்கள் வாழும் கொழும்பில் வரலாறு சிறிது பிரத்தியேகமானது. சேர் மாக்கான் மாக்கார்,  சே றாசீக் பாரீட்,  கலாநிதி பதியுதீன் முகமது போன்றவர்கள் கிழக்கிலே இலகுவாக வெற்றியீட்டக் கூடியவர்கள் என்று தெரிவு செய்யப் பட்டவர்களாகும்: ஆனால் கிழக்கு முஸ்லீம்கள் வேண்டப்படாதவர்களாக ஒதுக்கப் பட்வர்களாகும். நாற்பது வருடங்களுக்கு; முன்னர் மட்டக்களப்பிலே மாக்கான் மாக்காரின் ஏஜண்டுகள் எவ்வாறு வறிய முஸ்லீம்களுக்குக் காசுகொடுத்து வாக்குகள் விலைக்கு வாங்கப் பட்டதை ஞாபகத்தில் வைத்துள்ளனர். மற்றய தென்னிலங்கை வேட்பாளர்களிலும் பார்க்க ஹக்கீம் வித்தியாசமானவர். அவர் திரு அஸ்ரப்பின் மரணத்தின்பின் இலங்கை தழுவிய முஸ்லீம்களின் தேசியத் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்றவராகும். தான் எங்கு தேர்தலில் போட்டியிடுவது என்று நிர்ணயிப்பது தனது பிரத்தியேக உரிமை என்றும் சொநத ஊரில் உள்ளவர்களோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டிய கடமை தனக்கு இல்லையென்றும் அடித்துக் கூறியுள்ளார்.

அரசியல் அதிகாரமும் அரசியற் கீழ்படிவும்

"அரசியற் கீழ்படிவு இல்லாமல் ஒருவர் அரசியல் அதிகாரத்தைப் பெற முடியாது. ஒரு தேசிய அடையாளமில்லாமல் ஒருவரால் ஒரு பலமான தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்த முடியாது." மானிட முன்னோக்குக்கான தேடல் என்ற புத்தகத்தில் றொபேட் ஹைல்புறோனர்.
இதுவே கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் பொருந்தும். கீழ்படியாத வெறுக்கின்ற கிழக்குத் தமிழர்களது பிரதிநிதி கருணாவென்ற எண்ணக்கரு இருக்குமானால் முஸ்லிம்களின் பிரதிநிதி யார்? முஸ்லிம்கள் பிரபாகரனுக்கோ கருணாவுக்கோ கீழ்படியவேண்டிய கடமைபாடு உள்ளவர்கள் அல்லர். அவர்கள் ஒட்டு;மொத்த தமிழ் தேசிய அடையாளத்தை ஏற்கமாட்டார்கள். பிரதேச வாஞ்சையைப் புறக்கணித்து பின்விளைவுகளை யோசியாமல் முடிவுகளை எடுத்தால் பிரதேசவாஞ்சையானது மீண்டும் திருப்பித் தாக்கும் என்பது இப்பொழுது தெளிவாகவே விளங்குகிறது. முஸ்லிம்கள் ஒரு திட்டவட்டமான இனக்குழுவும் தேசிய இனமுமாதலால் கருணாவிடயப் படிப்பனவுகளிலிருந்து புலிகள் தமது முஸ்லீம் சம்பந்தமான நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். 2004 பொதுத்தேர்தலிலே மூன்று முஸ்லீம்களை தமிழ் தேசியக் கூட்டின்சார்பில்; போட்டியிட நிறுத்தி தமிழ் முஸ};லீம் உறவுகளை வெளிகாட்டியது போன்ற நாடகமானதுää தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு முஸ்லீமைக்கூட தேர்ந்துகொள்ள மனமில்லாத தன்மையை நன்றாகவே நிறுவிக்காட்டியுள்ளது. புலிகளோடும் அரசாங்கத்தோடும் பேரம்பேசுவதில் இராஜதந்திரரீதியாகக் கடுமிடுக்காக இருக்வேண்டுமென்பதைää இந்த நிகழ்ச்சியானது முஸ்லீம்களுக்கும் ஒரு சிறந்த படிப்பனவைக் கொடுத்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள தமிழ் ஊடகங்கள் என்ற நிறப்பிரிகையினூடு பார்க்கும்பொழுது கருணா பிரச்சனையென்பது பிரதேசவாதமும் கள்ளத்தனமும் என்றே தோன்றுகிறது. கருணா பின்வாங்கி விட்டிட்டு ஓடி ஒளித்தாலும் கருணாவிடயம் புதிரைக் கிளப்பியதோடு புலிகளின் குழந்தைப்பிள்ளைகளை இராணுவத்தில் சேர்த்தல்ää ஆயுதங்களை வாங்கிக் குவித்தல்ää அரசியல் படுகொலைசெய்தல்ää பாரபட்சமாகத் தமிழ் ஊடகங்களினூடு ஒருபக்கம் சார்ந்து மொங்கான் போடுதல் என்பவற்றை அம்பலப்படுத்தியதேர்டுää முஸ்லீம்களின் இனம்சார்ந்த பிரதேசவாதத்தை நியாயப் படுத்தியுமுள்ளது. கீழ்மாகாணத் தமழர்களுக்;கு எதிர்காலம் என்ன சொல்லுமென்றால்ää முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் கருணா ஒரு மனிதர்களை விழுங்கி. அவர் அப்படி இல்லையென்று சொன்னாலென்ன சொல்லாது விட்டாலென்னää கருணாவும் புலிகளின் மற்றொரு புலிரகம் என்பதைத்தான் மட்டக்களப்பு; சொல்லும்.
"நீ என்னைப்பற்றி எந்த முடிவோடும் வந்திருக்கலாம், நாம் உண்மையைக்கொண்டு வந்திருக்கிறோம்"
--மைக்கேல் மூர்
9-11 பாறன்கைற் என்ற ஈராக் யுத்த விரோத சினிமாவின் இயக்குனர்.
முற்றும்.

இந்தக் கட்டுரையாளர் கீழ்மாகாண முஸ்லீம்களிடையேயும் தமிழ்மக்களிடையேயும் நன்றே அறிமுகமானவரும்ää சிறந்த சட்டவல்லுனரும்ää சர்வதேசசமூகவியல் அறிஞர்கள் அடங்கிய சிறிலங்கா ஜனனாயக அரங்கு என்ற சர்வதேச ஸ்தாபனத்தின்; ஊடகப் பேச்சாளருமாவார்.
Lines august 2004 ( Tamil Edition)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...