வடக்கு கிழக்கு
பிரிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபையில் ரவூப்
ஹக்கீம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாது அல்லது போட்டியிட முடியாது என்பதை
நன்கு அறிந்திருந்தார். ஆகவேதான் ஹக்கீம் தமிழர்களின் வாக்குகளையும் பெற்று
எப்படியாது தானே கிழக்கின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டார்.ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தலில்
வெற்றி பெறுவதுஎன்பது அவரின் அரசியல்
எதிர்காலத்துக்கு, குறிப்பாக கிழக்கை
தளமாகக் கொண்ட ஒரு அரசியல்கட்சி என்ற வகையில்அவசியம் என்று உணரப்பட்டது.
மறுபுறத்தில் ஆட்சியில்
இருந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களில் ஹிஸ்புல்லாவும்
தானே முதலமைச்சராக முடியும் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். இதில்
ஹிஸ்புல்லாஹ் கிழக்கு தனியான மாகாணமாக இருக்க வேண்டும் என்பதில் முன்னாள்
அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாவுல்லாவுடன் சேர்ந்து ஒருமித்து குரல்
எழுப்பி வந்தவராவார் .
பிரபல இடதுசாரி செயற்பாட்டாளரான தோழர் ‘ சண்’
என நண்பர்களால் அழைக்கப்படும் சண்முகநாதன் அவர்கள் சமீபத்தில்
(07-04-2016) காலமான செய்தியை இந்த இணையத் தள மூலம் பலரும்
அறிந்திருப்பீர்கள்.
இந்த அலட்டியல் ஆய்வாளர்களின் இம்சை இன்னும் முடியவில்லை. கனடாவில் சில அலட்டியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.“டாம் சிவடாஸ்”இவர் ரிவிஐ தொலைக்காட்சி, சிஎம்ஆர் வானொலி ஆகியவற்றின் ஆஸ்தான அலட்டியல் ஆய்வாளர். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத இவர் அரசியல் ஆய்வு என்ற பெயரில் வந்து அலட்டுவார். திருகோணமலையில் புலிகள் சுழியோடிச் சென்று கப்பல் ஒன்றைத் தாக்கியபோது புலிகள் நிலத்தை மட்டுமல்ல நீருக்கடியிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர் என்று சிரித்துக்கொண்டே சொன்னவர்.“குவின்ரஸ் துரைசிங்கம்”“தங்கவேலு”(நக்கீரன்) என்று இன்னும் சில புலி ஆதரவுப் பிரக்கிருதிகள் அலட்டியல் ஆய்வாளர்களாக இருக்கின்றனர். இவர்கள் அலட்டி ஆராய்வு செய்ததில் புலிகளின் நிலைமை எப்படிப் போய் முடியும். புலித்தலைவரின் முடிவு என்னாகும் என்பதை ஆய்ஞ்சு கண்டுபிடிக்க முடியவில்லை!
'Muslims are routinely portrayed as less-than-human, at best haters of all that is good' - Arzu Merali
'More than 90% of people surveyed said they witnessed Islamophobia in the media'
When the Islamic Human Rights Commission (IHRC) started out, we were focused mainly on issues and causes outside of the UK. Myself and a number of colleagues had worked on other campaigns, such as the War Crimes Watch project, before founding the organisation. Others were advocates for UK-based discrimination cases, another had specialisation in Bosnia, another in North Africa, another in South East Asia.
அஸ்ரப் முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையை நியாயப்படுத்த பிரதான காரணம்.
வடக்கு கிழக்கு ஒப்பந்தத்தின் பின்னர் வடக்கில் இருந்து கிழக்கு
பிரிக்கப்படுமா என்பது பற்றி சித்திப்பதற்கு அவரால் முடியாதிருந்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வடக்கு கிழக்கு
மாகாணங்களுக்கான சபை நடத்தப்பட்டு கலைக்கப்பட்டு போனாலும் , கிழக்கை
பிரிப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பைப் பற்றிப் பேசவோ, அல்லது
மக்களின் இறைமையை கருத்திற்கொண்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ்
இணைக்கப்பட்ட கிழக்கை பிரிப்பது பற்றி ராஜீய ரீதியில் இந்தியாவை அணுகவோ
இலங்கை அரசியல் தலைவர்கள் துணியவில்லை. இந்தியாவினை மீறி செயற்படும் திராணி
எந்த அரசியல் தலைவர்களுக்கும் இருக்கவில்லை . இந்தியாவிற்கும் வடக்கு
கிழக்கு இணைந்த பிரதேசமே அதன் புவி சார் நலன்களை உறுதி செய்வதாக
அமைந்திருந்தது. நிர்வாக ரீதியில் வடக்கு கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட
பின்னரும் யாழ் மையவாத தமிழ் தேசிய நிர்வாக அடக்குமுறைகள் வடக்கு கிழக்கு
மாகாண சபைகளிலே கிழக்கு மாகாணம் பிரிக்கப்படும் வரை நிலவி வந்தது. ( அது
பற்றிய ஆய்வுகளை முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் திரட்டி இருந்தனர்.
அவர்களுடனான சந்திப்புக்கள் , அக்கறைகள் என்பன இக்கட்டுரையின் நீளம் கருதி
இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. ) . இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை
நிர்வாக அடக்குமுறைகளினால் மிக நீண்ட காலம் முஸ்லிம்கள்
புறக்கணிக்கப்பட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான நிர்வாக
அடக்குமுறைகள் பற்றி ஒரு பொழுதும் குரல் கொடுக்கவில்லை.
சந்திரிக்காவின் அரசியல் யாப்பு சீர்திருத்த மசோதாவின் மூலம் இணைந்த வடக்கு
கிழக்கு மாகாணப் பிரதேசங்களுக்கான ஒரு இடைக்கால அலகு பற்றிய சிந்தனைகளுடனே
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சந்திரிக்காவை முன்னிறுத்தியது. ஆனால்
சந்திரிக்காவுடன் யுத்த நிறுத்தம் செய்ய , சமாதானம் பேச முன் வந்த புலிகள் ,
அதற்கு முன்னரே 1993 ஆகஸ்டில் தமிழ் ஈழத்துக்கான பெருந் திட்டம் (Master
Plan) வகுத்திருந்தனர். அந்த திட்டம் வகுக்கு முன்னர் , அதற்கு தகுந்தவாறு
வடக்கு கிழக்கினை தயார் படுத்தினர்.