சீர்திருத்தங்கள் மக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்கவேண்டும், மாறாக கொள்ளை லாபம் ஈட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கக்கூடாது--சீத்தாராம் யெச்சூரி

.


ப்போதும் நம்மிடம் கேட்கப்படும் கேள்வி, நீங்கள் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரா அல்லது எதிரானவரா என்பதாகும். உள்ளடக்கம் இல்லாமல் எந்த சீர்திருத்தமும் இருந்திட முடியாது. ஒவ்வொரு சீர்திருத்தமும் உள்ளடக்கத்தை, ஒரு நோக்கத்தைப் பெற்றிருக்கும். இடதுசாரிகள் ஒரு சீர்திருத்தத்தை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை இவைதான் தீர்மானிக்கின்றன. இங்கே மையமான பிரச்சனை என்ன வென்றால், மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நம் மக்களின் நலன்களுக்கானவையாக இருக்கின்றனவா, அவர்களின் வாழ்வாதாரங்களை அதிகப்படுத்து வதற்கானவையாக இருக்கின்றனவா மற்றும் நம் நாட்டின் பொருளாதார இறையாண்மையை வலுப்படுத்துவதற்கானவையாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். இவற்றின் அடிப்படையில்தான் நாட்டில், கடந்த பல பத்தாண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம், அவை குறித்த நம் அணுகுமுறையும் இருந்திருக்கிறது. இது நம் அணுகுமுறையாக இருப்பது தொடரும்.

ஒன்றிய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், வேளாண் உற்பத்திப் பொருள்களுக்குக்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் பின்னணியில்தான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் முப்பதாண்டுகள் வந்திருக்கின்றன. இவை, ஒரு நூற்றாண்டுக்கு முன், பீகார் மாநிலத்தில் சம்பரான் என்னுமிடத்தில் வலுக்கட்டாயமாக அவுரிச்செடி (இண்டிகோ) வளர்க்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற சத்தியாக்கிரகம், கார்ப்பரேட் விவசாயம், சிறு அளவிலான விவசாய உள்பத்தியை அழித்தொழித்தமை (மோடியின் பணமதிப்பிழப்பு) மற்றும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திலுள்ள தமிழ்மொழியுரிமை அலட்சியப்படுத்தப்படுவது ஏன்?-–த.மனோகரன்



ந்நாட்டில் நிலவிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாக அண்டை நாடான இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திருத்தம் இலங்கை அரசின் விருப்புடனோ அல்லது பாதிப்புக்குள்ளான தமிழர் தரப்பின் கோரிக்கைக்கமையவோ உருவாக்கப்பட்டதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முடிவின்றித் தொடர்ந்த இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஓரளவாவது தீர்வு காண இந்தியா தன்னிச்சையாக மேற்கொண்ட தீர்மானமே இலங்கை_ இந்திய ஒப்பந்தத்தின்படியான பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமாகும்.

இன்று உலக அரங்கில் இந்தியாவும் ஏனைய பல பொறுப்பு வாய்ந்த அமைப்புகளும் இலங்கை அரசாங்கம் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களது நலனைப் பேண வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன. 29 ஜுலை, 1987 இல் இருநாட்டு ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படியான மாகாண சபை அமைப்பு மற்றும் அதற்கான தேர்தல் நடத்துவது தொடர்பாகவே இன்று பெரிதாகப் பேசப்படுகின்றது.

ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அரசியலமைப்புத் திருத்தம் உருவாக்கப்பட்டு முப்பத்துநான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்தத் திருத்தத்திலுள்ள பல அடிப்படை விடயங்களை, தமிழர்களது தேவையைச் சகல தரப்பினரும் மறந்து விட்டனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

‘சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடுகிறோம்’: தோழர் என்.சங்கரய்யா


ந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரை நகரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்த அந்த இளைஞன். தனது இளமைக் காலத்தின் கனவுகளை உதறி எறிந்துவிட்டு, பற்றி எரியும் சுதந்திரத் தீயில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு, மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, எட்டு ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் வாழ்ந்து, சுதந்திரம் பெற்ற பின்பும் மக்கள் விடுதலைக்காக இன்றுவரை அதாவது 85ஆம் வயதிலும் (2008 ஆம் ஆண்டு இப்பேட்டி எடுக்கப்பட்டது) களப்போராளியாய் இயங்கி வருகிற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர், மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், முதுபெரும் தோழர், தமிழகப் பத்திரிகைகளால் எளிமைக்கு உதாரணம் காட்டப்படும் வெகுசிலரில் ஒருவர் தோழர் சங்கரய்யா அவர்களைப் ‘புத்தகம் பேசுது’ இதழுக்காகச் சந்தித்தோம். 70 ஆண்டுகளுக்கு முன்புள்ள அனுபவங்களைக்கூட யோசிப்புக்கு அதிக அவகாசம் எடுக்காமல் சரளமாய் சொல்லுகிற ஆளுமை அவரிடம் உள்ளது.. இனி அவரோடு……

தமிழகத்தின் ஆரம்பகாலத் தொழிலாளர் இயக்கத்தின் நிலையை சொல்லுங்களேன்…

தேச விடுதலைப் போராட்டத்தின்போது 1906ல் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவாவுடன் சேர்ந்துகொண்டு தூத்துக்குடியில் இருந்த அன்னியர்களுக்குச் சொந்தமான ஹார்வி டெக்ஸ்டைல் மில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அந்தத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அவர்கள் இருவரும் தலைமையேற்று நடத்தியதுடன், பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதுவே தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தோற்றுவாயாக இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது.

நீதி....நீதி....நீதி- பொ.செல்வநாயகம். ஹட்டன்



மரணித்த மலையக சிறுமி ஹிஷாலினிக்கு நீதி வேண்டுமென்பதிலே எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் , சில விடயங்களை சிந்திக்க வேண்டிய கடப்பாடு சிறுப்பான்மை சமூகத்துக்கு உண்டு.

ஹிஷாலினி என்பவர் மரணித்த நேரத்திலே 16 வயதை பூர்த்தி செய்திருந்தார்.

ஆனால் , 12 வயதிலேயே கொழும்புக்கு வேலைக்கு சென்றிருந்தார்.

இந்த நான்கு வருட இடைவெளியிலே , கடைசி ஆறு மாதங்கள் மாத்திரமே முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வீட்டிலே அவர்  பணியாற்றியுள்ளார்

அதற்கு முன்னைய காலத்திலே வேறு இடங்களிலேயே அவர் பணி புரிந்துள்ளார்.

அவர் ரிசாத் வீட்டிலே வேலைக்கமர்த்தப்பட்டு ஏழு மாதங்களே .
ஆனால் , கடந்த இரண்டு வருடங்களாய் ரிசாத்தின் குடும்பமே பல சோதனைகளை சந்தித்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையிலே , அவர்களே இன்னொரு சோதனையை இழுத்திருப்பார்களா என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டும்.

அத்தோடு , ஹிஷாலினிக்கு நாட்பட்ட பாலியல் தொடர்புக்கள் உள்ளதாகவே அறிக்கைககள் கூறுகின்றன.

அப்படியானால் அவர் கொழும்புக்கு வந்த 4 வருடங்களை ஆராய்வதா ?
ரிசாத் வீட்டிலே இருந்த கடைசி ஏழு மாதங்களை ஆராய்வதா ?

அது மாத்திரமல்ல , ஹிஸாலினியின் அம்மா இரண்டாம் தடவையாக ஒருவரை மணமுடித்துள்ளார்.
இப்போதும் அவரோடேயே வாழ்கிறார். இந்த சம்பவத்தின் பின்பே ஹிஷாலினி கொழும்பு வந்துள்ளார்.

அம்மா மறுமணம் முடித்தமையால் ஹிஷாலினிக்கு என்ன பிரச்சினைகள் என்றும் விசாரிக்க வேண்டும்.

இதையெல்லாம் வைத்து பார்க்கிற நேரம் , ஹிஷாலினி வாழ்விலே பல நெருக்குவாரங்கள் இருந்தேயுள்ளது.

அவர் மனதளவிலே பாதிப்பான ஒருவராகவே இருந்தும் இருப்பார்.

மனம் பாதிப்பாகி Depression லே இருப்போரே தற்கொலை முயற்சிகளையும் செய்வதுண்டு.
இதுவே ஹிஷாலினிக்கும் நடந்துள்ளது.



அவர் விடயத்திலே சரியான விசாரனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவளின் அம்மா இரண்டாம் தடவை திருமணம் செய்த காலத்திலே இருந்து , இவள் கொழும்புக்கு வந்தது , பணி புரிந்தது , என்று நீண்ட விசாரணை தேவை.

கடைசி ஏழு மாதங்களை வைத்து மட்டும் விசாரணைகள் நடைப்பெறுவதானது , அரசியல் நோக்கமுடையது மட்டுமல்லாது , பல உண்மைகள் புதைந்து போகவும் வழி வகுக்கும்.

இங்கே ஊடகங்களும் , சமூக ஊடகங்களும் மாத்திரம் நீதிபதிகளாகாது , உண்மையான நீதி நிலைநாட்டப்படல் வேண்டும்.

மனோ கணேசன் , ராதா கிருஷ்ணன் , வேலுக்குமார் போன்றோர் அவர்களின் அரசியல் இயலாமையை ரிசாத் மூலம் நிமிர்த்த முயலக்கூடாது.
இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்த ரிசாத்தை பகடையாக்க முடியாது. ஹிஷாலினி போல மலையக பெண்கள் பலர் கொழும்பிலே வேலைகளில் உள்ளனர். முடிந்தால் அவர்களுக்கும் வழி செய்ய வேண்டும்.

இறுதியாக , ஹிஷாலினியை ரிசாத் வீட்டிலே சேர்த்தவர் தரகர் கிடையாது.

ஏற்கனவே ஐந்து வருடங்கள் ரிசாத் வீட்டிலே பணியாற்றிய ஒரு பெண்ணின் தந்தையே , ஹிஷாலினியை அங்கு சேர்த்து விட்டுள்ளார்.

அப்படியானால் , ஏற்கனவே அந்த பெண் எப்படி ஐந்து வருடங்களை அங்கு நல்ல விதமாய் பூர்த்தி செய்தார் என்றும் யோசிக்க வேண்டுமே ?

தனது மகள் ரிசாத் வீட்டிலே , நல்ல விதமாய் ஐந்து வருடங்களை கழித்தமையினால் தானே , அந்த தந்தை இன்னொரு பெண்ணான ஹிஷாலினியை சேர்த்திருக்கிறார்.

இதையெல்லாம் நாம் யோசிக்க வேண்டும்.

அவரும் கூட , ஹிஷாலினி எப்படியான கட்டத்திலே இருந்த நேரம் , அவரை ரிஷாத் வீட்டிலே சேர்த்தார் என்றும் விசாரிக்கப்பட வேண்டும்.

நம்மை பொறுத்தளவிலே ஹிஷாலினி விடயத்திலே ஆரம்பம் முதல் கடைசி வரையும் விசாரனை தேவை.

மாறாக , கடைசி கட்டங்களை மாத்திரம் வைத்து , அரசியல் நாடகமாடுவதையும் , வெவ்வேறு விடயங்களையும் கிரியேட் செய்வதையும் கண்டிக்கிறோம்.

ஏற்கனவே , சிங்களவர்களிடம் ரிசாத்தை காட்டி செல்வாக்கை அதிகரித்த இந்த அரசு , ஒன்றாகவுள்ள சிறுப்பான்மை மக்களையும்  சிதறடிக்கிறதா என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டும்.

உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாது சிந்திப்போமாக


‘பெகாசஸ்’ விவகாரம்: பி.கே, ராகுல் தொடங்கி முன்னாள் உச்சநீதிமன்ற பெண் ஊழியர் வரை நீளும் பட்டியல்!-–சே. பாலாஜி



ஜுலை 18ந் திகதி இரவு வெளியான பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus-spyware) மென்பொருள் பயன்பாட்டு அறிக்கையானது இந்தியாவில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசிகள் இந்த ஸ்பைவேரை பயன்படுத்தப்பட்டு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமான முழு பட்டியலானது தற்போது வரையிலும் வெளியாகவில்லை. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் என 18ந் திகதி இரவு , 19ந் திகதி காலை என வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த புலனாய்வு அறிக்கை பட்டியலில் பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது இந்திய அரசியலை அதகளப்படுத்தியிருக்கிறது. அதேபோல், 2019-ல் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் அளித்த முன்னாள் உச்சநீதிமன்ற பெண் ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசிகள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒற்றறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

FBI Using the Same Fear Tactic From the First War on Terror: Orchestrating its Own Terrorism Plots-By Glenn Greenwald


Questioning the FBI's role in 1/6 was maligned by corporate media as deranged. But only ignorance about the FBI or a desire to deceive could produce such a reaction.

NBC's Today Show, Oct. 9. 2020

The narrative that domestic anti-government extremism is the greatest threat to U.S. national security — the official position of the U.S. security state and the Biden administration — received its most potent boost in October 2020, less than one month before the 2020 presidential election. That was when the F.B.I. and Michigan state officials announced the arrest of thirteen people on terrorism, conspiracy and weapons charges, with six of them accused of participating in a plot to kidnap Michigan’s Democratic Governor Gretchen Whitmer, who had been a particular target of criticism from President Trump for her advocacy for harsh COVID lockdown measures.

The headlines that followed were dramatic and fear-inducing: “F.B.I. Says Michigan Anti-Government Group Plotted to Kidnap Gov. Gretchen Whitmer,” announced The New York Times. That same night, ABC News began its broadcast this way: "Tonight, we take you into a hidden world, a place authorities say gave birth to a violent domestic terror plot in Michigan — foiled by the FBI.”

Democrats and liberal journalists instantly seized on this storyline to spin a pre-election theme that was as extreme as it was predictable. Gov. Whitmer herself blamed Trump, claiming that the plotters “heard the president’s words not as a rebuke but as a rallying cry — as a call to action.” Rep. Maxine Waters (D-CA) claimed that “the president is a deranged lunatic and he’s inspired white supremacists to violence, the latest of which was a plot to kidnap Gov. Whitmer,” adding: “these groups have attempted to KILL many of us in recent years. They are following Trump’s lead.” Vox’s paid television-watcher and video-manipulator, Aaron Rupar, drew this inference: “Trump hasn't commended the FBI for breaking up Whitmer kidnapping/murder plot because as always he doesn't want to denounce his base.” Michael Moore called for Trump's arrest for having incited the kidnapping plot against Gov. Whitmer. One viral tweet from a popular Democratic Party activist similarly declared: “Trump should be arrested for this plot to kidnap Governor Whitmer. There’s no doubt he inspired this terrorism.”

New York Governor Andrew Cuomo instantly declared it to be a terrorist attack on America: “We must condemn and call out the cowardly plot against Governor Whitmer for what it is: Domestic terrorism.” MSNBC's social media star Kyle Griffin cast it as a coup attempt: “The FBI thwarted what they described as a plot to violently overthrow the government and kidnap Michigan Gov. Gretchen Whitmer.” CNN's Jim Sciutto pronounced it “deeply alarming.”

தெற்காசியாவின் அடையாளமாகிறதா வங்கதேசம்?--முகம்மது ரியாஸ்



ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றிருந்தபோது, ‘ஹோர் அல் அன்ஸ்’ (Hor Al Anz) வீதியில் உள்ள ‘டீ மேன்’கடையையொட்டிய நடைபாதையில் ஒரு வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதில் கண்ட ஒரு காட்சி இன்னும் என்னுள் உயிர்ப்புடன் இருக்கிறது. வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமை என்பது பொது விடுமுறை தினம். பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்றவர்களுக்கு வியாழக்கிழமை மாலையும், வெள்ளிக்கிழமையும் கொண்டாட்டத்துக்கான தருணங்கள். மாலை நேரத்தில் உணவு விடுதிகளில், தேநீர் கடைகளில் நண்பர்களின் கூடுகை நிகழும். பண்டிகை தினம்போல் அது காட்சியளிக்கும்.

அப்படியான, ஒரு வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதில் ‘ஹோர் அல் அன்ஸ்’ வீதியின் நடைபாதையில், கையில் தேநீர் குவளையுடன் ஒருபுறம் வங்கதேசிகள், ஒருபுறம் பாகிஸ்தானிகள், ஒருபுறம் இந்தியர்கள் தங்கள் நண்பர்களுடன் அளவலாவிக் கொண்டிருந்தனர். சிலர் தாயம் விளையாடிக்கொண்டிருந்தனர்; சிலர் சுவற்றில் சாய்ந்துகொண்டு தேநீர் குவளையை உற்றுநோக்கியபடி இருந்தனர்; சிலர் கடல் கடந்து இருக்கும் தங்கள் குடும்பத்தினரிடம் பேசிக்கொண்டிருந்தனர். மூன்று தேச மக்களையும் ஒரே இடத்தில் அருகருகே பார்த்தபோது ஒருவகையான துயர் உணர்வு ஏற்பட்டது. 1947 ஆகஸ்டு வரையில் ஒரே நாடாக இருந்தவர்கள், தற்போது சமூகரீதியாக, கலாச்சாரரீதியாக பொருளாதாரரீதியாக வேறுவேறு தளத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். தனித்தனி துயர வரலாறுகள்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த 16 வயது மலையக சிறுமி!


May be an image of 2 people and people standing

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார். கடந்த 03 ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15 ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இன்று (19.07.2021) தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனின் வீட்டுக்கு வேலைக்கு சென்று மர்மமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமிக்கு நீதி வேண்டி பல்வேறு முறைபாடுகளை செய்துள்ளதாகவும் இவருக்கு நீதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் கலாநிதி சிவபிரகாசம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் அரசியலில் துரதிருஷ்டமான இலக்கமா 13?- –எஸ். எம். வரதராஜன்



மெரிக்க மக்கள் தொகையில் குறைந்தது பத்து சதவீதத்தினருக்கு 13 என்ற எண்ணில் ஒருவித அச்சம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர் என அண்மையில் படித்தேன். இப்பதிவை இடுவதற்கு அந்தத் தகவலும் முக்கியமான காரணம் எனலாம்.

இங்கு நான் குறிப்பிடுவன இவற்றோடு தொடர்பான மூத்த ஊடகவியலாளர் அமரர் த. சபாரத்தினம், அமரர் சிவசிதம்பரம் ஆகியோர் சொன்னவையும் அவை தொடர்பாகத் தேடியவையுமாகும்.

சபாரத்தினம் அவர்கள் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தோடு நெருக்கமாக செயற்பட்டவர்களுடன் அந்நேரத்தில் தொடர்பிலிருந்த ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர். டிக்சிட், பூரி, ஜெய்சங்கர்,காமினி,தேவநாயகம், ரொனி டி மெல், தொண்டமான், அமிர்தலிங்கம், சிவா, சம்பந்தன் ஆகியோருடன் தொடர்புகளைப் பேணியவர்.

13ம் திகதி வெள்ளிக்கிழமை என்றால் அதற்குப் பயப்படுபவர்கள் மேலைத்தேய நாடுகளில் இன்றும் அதிகம் உள்ளனர். மேற்கத்தைய நாடுகளுடான வர்த்தகத் தொடர்பு இலங்கையிலும் பெருநிறுவனங்களிடத்திலும் இந்த நம்பிக்கையையும் ஊற விட்டுள்ளது. 2000ம் ஆண்டு ஓர் ஊடக நிறுவனத்திற்காக அதன் தலைவரின் வேண்டுகோளின்படி யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய பிரதான வீதியில் ஒரு கட்டடத்தைப் பார்வையிட நானும் எனது அலுவலக நண்பரும் போயிருந்தோம்.

Over 1,200 doctors and scientists condemn UK COVID-19 policy as “dangerous and unethical”- By Thomas Scripps

 

 

 

 UK Prime Minister Boris Johnson chairs a Covid-19 press conference with Chief Scientific Adviser, Sir Patrick Vallance and Chief Medical Officer, Professor Chris Whitty on July 12, 2021. At the press conference Johnson gave the go-ahead, with the backing of Whitty and Vallance, to end all Covid restrictions on July 19, 2021 (Credit: Andrew Parsons/No 10 Downing Street/Flickr)

On Monday, eleven of these signatories issued an emergency statement sharpening their criticisms of Britain’s coronavirus policy.

The statement correctly identifies the Conservative government’s strategy as one of “herd immunity by mass infection,” which will “place 48% of the population (children included) who are not yet fully vaccinated, including the clinically vulnerable and the immunosuppressed, at unacceptable risk.”

120 million people pushed to extreme poverty by COVID-19 pandemic- By Kevin Reed

In addition to four million deaths worldwide from COVID-19, between 119-124 million people were pushed back into poverty and chronic hunger and 255 million full-time jobs were lost from the pandemic, according to a United Nations (UN) report published on Tuesday.

The figures come from the UN’s Sustainable Development Goals Report 2021, which said the pandemic had created major setbacks for efforts to eliminate poverty. In releasing the report, UN Under-Secretary-General Liu Zhenmin said, “The pandemic has halted, or reversed, years, or even decades of development progress.”

A woman looks to a homeless Lebanese man who sleeps on the ground at Hamra trade street, in Beirut, Lebanon, Friday, July 17, 2020. (AP Photo/Hassan Ammar)

Prior to the pandemic there were 700 million people going hungry and 2 billion people suffering food insecurity. The UN data shows that an additional 83–132 million people likely experienced hunger during the pandemic in 2020.

Life expectancy, which had been increasing, has also been reduced as the pandemic halted or reversed progress in health care and posed major threats beyond COVID-19. Meanwhile, the mortality figures and true impact of the pandemic remain incomplete due to a lack of accurate data in many parts of the world.

தலிபான்- ஆப்கன் மோதல்: புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!


டேனிஷ் சித்திக் (Danish Siddiqui)

ப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்நாட்டின் ராணுவப் படைகளுக்குமான போரில் அமெரிக்கா தனது ராணுவ படைகளை அனுப்பி தலிபான் பயங்கரவாதிகளை அழிக்க ஆப்கன் படைகளுக்கு உதவியது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டு பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலம் முதலே தனது படைகளை அமெரிக்கா அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக திரும்பப் பெற்று வந்தது. அந்த வகையில் தற்போது தான் அமெரிக்கப் படைகள் 90 சதவீதம் அளவுக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பியிருக்கின்றன.

அமெரிக்கப் படைகள் முழு வீச்சில் வெளியேறி வருவதை தொடர்ந்து, இனி நாட்டை பாதுகாக்கும் முழு பொறுப்பும் ஆப்கன் படைகளிடம் தான் என்றாகி விட்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் சில ஆண்டுக் காலம் பதுங்கி இருந்த தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அதனால், தலிபான்களின் கை சமீபமாக அங்கு ஓங்கியிருக்கிறது. அதன் காரணமாக, கடந்த சில வாரங்களாக மீண்டும் தலிபான்களுக்கும் ஆப்கன் படைகளுக்கும் இடையே பயங்கர மோதல் நிலவி வருகிறது.

விடுதலைப் போராட்டம் முதல்… சாதி ஒழிப்புப் போராட்டம் வரை’ – தோழர் சங்கரய்யாவை அறிந்துகொள்வோம்!--ஆ.பழனியப்பன்



ந்திய அளவிலான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா 100 வது வயதில் இன்று (2021.07.15) அடியெடுத்துவைத்துள்ளளார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் நான்கு ஆண்டுகள் சிறை வாழ்க்கை. விடுதலைக்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் சிறை வாழ்க்கை. மூன்றாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை எனப் பல தியாகங்களைச் செய்து, தன் வாழ்நாள் முழுவதையும் உழைப்பாளி மக்களுக்கு அர்ப்பணித்த என்.சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது, ஒரு தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல… அது தமிழகத்தின் அரசியல் வரலாறு… தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டக் கனலில் தகித்துக்கொண்டிருந்த காலத்தில், மதுரை மண்ணில் சங்கரய்யாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது, விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார். மதுரையில் மாணவர் சங்கம் ஆரம்பிப்பது என்று அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முடிவுசெய்தனர். சங்கத்தைத் தொடங்கிவைக்க பிரபல இளம் கம்யூனிஸ்ட் மோகன் குமாரமங்கலம் அழைக்கப்பட்டார். மதுரை மாணவர் சங்கம் என்ற அந்த அமைப்பின் செயலாளராக சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார். அமெரிக்கன் கல்லூரியின் மாணவர் மன்றச் செயலாளராகவும் ஆனார்.

கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்ட சங்கரய்யா, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மாணவர்களைத் திரட்டினார். அதனால் ஆத்திரமடைந்த கல்லூரி நிர்வாகம், சங்கரய்யாவை கல்லூரியிலிருந்து நீக்க முடிவுசெய்தது. அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். உடனே, கல்லூரி நிர்வாகம் பின்வாங்கியது. “நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல… நாட்டு விடுதலைக்காகப் போராடுபவர்கள்” என்று மாணவர்கள் மத்தியில் ஆர்ப்பரித்தார், சங்கரய்யா. பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வை எழுதுவதற்கு15 நாள்களுக்கு முன்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் கல்லூரித் தேர்வை எழுத முடியவில்லை. அப்போது, 18 மாதங்கள் சிறைக்கொடுமைகளை அனுபவித்தார்.

விவசாயிகள் போராட்டம்: அடிக்கடி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா அளிக்கும் பதில்கள்


தேவிந்தர் சர்மா (Devinder Sharma)

ந்திய மக்களிடம் மூன்று புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளை கொண்டு செல்கின்ற வகையிலே மத்திய அரசும், ஊடகங்களுக்குள் இருக்கின்ற அதன் ஆதரவாளர்களும் கூடுதலாகப் பணியாற்றி வந்தாலும், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்ற விவசாயிகள் அந்த மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.  

தவறான தகவல்கள், உண்மைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள சராசரி நகர்ப்புற இந்தியர்கள் இப்போது ஐம்பது நாட்களையும் தாண்டியுள்ள விவசாயிகள் போராட்டத்தின் சிறப்புகள், குறைபாடுகள் குறித்து சற்றே குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர். தங்கள் வழியிலே செல்ல வேண்டும் என்பதில் தீர்மானத்துடன் இருந்து டெல்லி எல்லைகளிலே முகாமிட்டுள்ள விவசாயிகள் எதற்காகப் போராடி வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதை, தங்களுடைய கிராமப்புற சகாக்களைக் காட்டிலும் மிகவும் மாறுபட்ட உலகத்திலே வாழ்ந்து வருகின்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் கடினமாகவே உணர்கிறார்கள் என்பது குறித்து கடந்த ஏழு வாரங்களில் அதிக அளவிலே தெளிவு ஏற்பட்டிருக்கிறது. போராட்டங்களின் ‘பின்னணிக் கதை’ அவர்களுக்குத் தெரியாததே அதற்கான  முக்கிய காரணமாக இருக்கிறது.   

70 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மலேரியாவை ஒழித்த சீனா!

70 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மலேரியாவை ஒழித்த சீனா!

லேரியா காய்ச்சலை முழுவதுமாக சீனா ஒழித்துள்ளது. சீனாவின் 70 ஆண்டுகால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது என உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. சீனாவில் 1940ம் ஆண்டுகளில் சுமார் 3 கோடி பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மலேரியாவை ஒழித்துக்கட்ட 1950-களில் இருந்து அந்நாடு கடுமையாக போராடியது. அதன் வெளிப்பாடாக கடந்த 4 ஆண்டுகளாக சீனாவில் ஒரு மலேரியா காய்ச்சல் பாதிப்பு கூட பதிவாகாமல் சீனா சாதித்துள்ளது. மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மலேரியா காய்ச்சல் ஏற்படாவிட்டால், அந்த நாடுகள் உலக சுகாதார அமைப்பின் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, மலேரியா மீண்டும் ஏற்படாது என்பதற்கான நடவடிக்கைகளையும் காட்ட வேண்டும்.

அதன்படி, மலேரியாவை ஒழித்துக்கட்டி உலக சுகாதார அமைப்பின் சான்றிதழை சீனா பெற்றது. இது தொடர்பாக அவ்வமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறுகையில், ‘மலேரியா நோயில் இருந்து மீண்ட சீன மக்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி கடினமான உழைப்பின் பலனாகும். மிகத்துல்லியமான நடவடிக்கையின் காரணமாகதான் சீனாவினால் இதை சாதிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் மலேரியா இல்லாத உலகை உருவாக்க முடியும் என்பதில் சீனா முன்னோடியாக திகழ்கிறது,’ என்றார்.

இதற்கு முன், அவுஸ்திரேலியா (1981), சிங்கப்பூர் (1982), புருணை (1987), பராகுவே, உஸ்பெகிஸ்தான் (2018), அல்ஜீரியா, ஆர்ஜென்ரீனா (2019), எல் சால்வடார் (2021) ஆகிய நாடுகளும் மலேரியாவை முற்றிலும் ஒழித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர்: ஒன்றிய அரசின் சூழ்ச்சித்திட்டம்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

 


மோடி-அமித்ஷா இரட்டையர் ஜம்மு-காஷ்மீரின் குணாம்சத்தைத் தங்களின் இந்துத்துவா சித்தாந்தத்திற்கேற்ப மாற்றியமைத்திடும் வெறித்தனத்தில் உறுதியுடன் இருக்கிறார்கள்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வந்த 14 அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தது வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 2019 ஆகஸ்ட் 5க்குப் பின்னர், மோடிஅரசாங்கம் ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை  ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததற்குப்பிறகு, அம்மாநிலத்தில் இயங்கிவந்த பிரதான அரசியல்கட்சித் தலைவர்களை சிறை மற்றும் வீட்டுக்காவல்களில் அடைத்துவைத்து, அவர்களை ஊழல் பேர்வழிகள் என்றும் தேசவிரோதிகள் என்றும் முத்திரை குத்தி அவமானப்படுத்தியும் வந்தது. அவர்களின் அரசியல் செயல்பாடுகளை முடக்குவதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

திலீப் குமார்: சினிமா வெறியின் குறியீடு! - ஷாஜி

 

.dilip-kumar

 

என்னுடைய ‘சினிமா வெறியின் 40 ஆண்டுகள்’ புத்தகத்தின் அட்டையை வடிவமைத்தபோது, இந்திய, உலக சினிமாவில் என்னைப் பாதித்த நடிகை - நடிகர்களின் முகங்களைத்தான் அதன் முகப்பாக வைத்தேன். ஆயிரம் சொன்னாலும் சினிமாவின் முகம் என்பது என்றைக்கும் நடிகர்களே! அட்டைப்படத்தின் முதல் வரிசையின் எல்லாப் படங்களுமே கறுப்பு வெள்ளையில் அமைய, நடுவே வந்த திலீப் குமாரின் படம் மட்டும் வண்ணப் படமாக அமைந்தது வெறும் தற்செயலல்ல என்றே நினைக்கிறேன். 1950-களில் இந்தித் திரைப்படங்களின் முகமாகவே இருந்தவர் திலீப் குமார்.

நான் ஹைதராபாதில் இருந்த காலத்தில், அங்குள்ள முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளான லால் தர்வாஸா, கோஷா மகால், மெஹ்திப் பட்டணம் போன்ற பகுதிகளுக்குச் சென்றபோது, அங்கே நூற்றுக்கணக்கான மாட்டுக்கறி பிரியாணிக் கடைகளைப் பார்த்தேன். பெரும்பாலும் ‘யூசுப் கான் கல்யாணி பிரியாணி’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்த உணவுக் கடைகளின் பெயர்ப் பலகைகள் அனைத்திலும் திலீப் குமாரின் வண்ணப் படம் அழகாக வரையப்பட்டிருந்தது. இதற்கு ஒரு கதையைச் சொன்னார்கள்.

 

Thankar Bachchan documentary on KI.RAA


 

ஒரு மகளின் நினைவுக் குறிப்புகள்…-சு. அருண் பிரசாத்

 



சின்ன வயசுல இருந்தே கதைள்னா எனக்கு ரொம்ப விருப்பம்… தேடித் தேடி வாசிப்பேன். பொட்டலம் மடிச்சிருக்க காகிதத்துல கூட என்ன இருக்குனு வாசிப்பேன். இந்த வாசிப்பு ஆர்வம் ராஜபாளையம் காந்தி கலை மன்றம் நூலகத்துல இருந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்குனது மூலமா விரிவடைஞ்சது. அப்படித் தான் ‘அப்பா’ கி.ரா.வோட ‘கோபல்ல கிராமத்து மக்கள்’ நாவல் வாசிச்சேன்… அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உடனே ‘உங்களைச் சந்திக்க விரும்புறேன்’ன்னு அவருக்கு ஒரு போஸ்ட் கார்டு அனுப்புனேன்” என்று கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணனுடனான தன் முதல் அறிமுகத்தில் இருந்து பேசத் தொடங்குகிறார் பாரத தேவி!

கி.ராவுக்குப் பிறகு கரிசல் காட்டிலிருந்து முளைத்து வந்த இன்னொரு படைப்பாளி பாரத தேவி. ராஜபாளையத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கும் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த இவர் தனித்தும், கி.ரா.வுடன் இணைந்தும் ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறார். தான் ‘அப்பா’ என்று அழைத்த கி.ரா.வின் மறைவையொட்டி அவர் குறித்த தன்னுடைய நினைவுகளை பாரத தேவி பகிர்ந்துகொள்கிறார்.

“என்னோட லெட்டருக்கு அவர் பதில் போட்டிருந்தார். எந்தச் சிரமமும் இல்லாம அவர் வீட்டுக்கு வர்றதுக்கான விலாசத்த அதுல எழுதிருந்தார். என் கணவர், மகன், நான் மூணு பேரும் முதல்முறையா அவரைப் பாக்க இடைசெவலுக்குப் போனோம். லெட்டர்ல அவர் எழுதிருந்த மாதிரியே ரொம்பச் சரியா அவர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். எங்க வீட்டுல இருந்த மாதிரியே அவர் வீட்டுக்கு முன்னயும் மாடுங்க இருந்துச்சு. நாங்க போன சமயத்துல ஏற்கெனவே சிலர் அவரோட பேசிட்டு இருந்தாங்க; சிலர் வந்து போறதா இருந்தாங்க. இவங்க எல்லாம் ‘கோபல்லபுரம்’ நாவல்ல வர்ற கதாபாத்திரங்களோனு நான் மனசுல நெனச்சுட்டே இருந்தேன்” என்று நினைவில் மலரும் அந்த முதல் சந்திப்பை விவரிக்கிறார்.

அரசின் வெற்றிப் பயணத்தில் பசில் ராஜபக்‌ஷவின் வருகை மேலும் உத்வேகமளிக்கும்!


சில் ராஜபக்ஷ அவர்கள், 08.07.2021 அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் பெயர், கட்சியின் தலைமைச் செயலாளர் சாகர காரியவசமினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு 07.07.2021இல் பசில் ராஜபக்ஷவைப் பாராளுமன்ற உறுப்பினராகதை் தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மறைவு - திரைத்துறையினர் இரங்கல்

 

 

legendary-actor-dilip-kumar-passes-away-at-98

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார். அவருக்கு வயது 98.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

சீனாவின் நூறு பூக்கள்-மு.இராமனாதன்

 

 chinese-communist-party-century

 

 

எல்லாப் பேரியக்கங்களின் பயணமும் சிறிய அடிவைப்பில்தான் தொடங்கியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணமும் அப்படித்தான் ஆரம்பமானது. நூறாண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் (ஜூலை 1, 1921) ஷாங்காய் நகரில், ஒரு ஓட்டு வீட்டில் கட்சி நிறுவப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, அங்கே நடந்த கூட்டத்தில் 57 பேராளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஹூனான் விவசாயி மகன் ஒருவரும் இருந்தார். பீஜிங் பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் மா சேதுங். அவரது படம்தான் இப்போது தியானென்மென் சதுக்கத்தின் முகப்பை அலங்கரித்துவருகிறது.

போராட்டங்களுக்கு இவர் கொடுத்த விலை: ஸ்டேன் சாமியின் வாழ்வும், அவர் சந்தித்த பிரச்னைகளும்!- –கார்த்தி



84 வயது முதியவரின் மரணம் பெரிதாய் என்ன செய்துவிடும்? ஒன்றும் செய்யாது. ஆனால், நம் தேசம் இன்னும் ஜனநாயகத்துடன் இருக்கிறதா என்பதையே கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கியிருக்கிறது இந்த மரணம்.

வரவர ராவ் ( 80 வயது), கௌதம் நவ்லகா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் (வயது 60), ஆனந்த் டெல்டும்டே (வயது 70) என இந்தியாவின் அறிவு சார் சமூகத்தைச் சேர்ந்த பலர் இக்கைதில் அடக்கம். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் அங்கம் என்றும், பிரதமர் மோடியை கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்களின் மேல் குற்றச்சாட்டுகள் எக்கச்சக்கம். இவர்கள் சதித்திட்டம் தீட்டி, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு களங்கம் விளைவித்தார்கள் என்பதும் இவர்கள் மீதான குற்றம். அந்தக் குற்றத்தின் விலைதான் 84 வயதான ஸ்டேனின் இறப்பு. இறப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான், “இதுவரையில் ஒருநாள்கூட விசாரணைக் காவலில் வைக்கப்படாத ஸ்டேனை எதற்காக கைது செய்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார் ஸ்டேன் சுவாமியின் வழக்கறிஞரான மிகிர் தேசாய். இந்தக் கேள்விக்கான விடை, ஸ்டேனுடன் புதைய இருக்கிறது.

ஸ்டேன் லூர்துசாமி போராடியது அந்த மாதிரியான மக்களுக்குத்தான். திருச்சியில் பிறந்த ஸ்டேன், எழுபதுகளில் இறையியல் படித்தவர். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ரோமன் கத்தோலிக்க பாதிரியரான ஸ்டேன், ஜார்கண்ட் மாநிலம் சென்று பழங்குடியின மக்களுக்காக பல தசாப்தங்களாக போராடிக்கொண்டிருந்தவர்.

24 வருடங்களிற்கு முன்னர் இவர் ஏன் ‘மேதகு’ வால் கொல்லப்பட்டார்?

 

 

 

5.07.1997 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போது பாசிச புலி பயங்கரவாதிகளால் குண்டுவைத்து கொலைசெய்யப்பட்டார்.

17.01.1936 இல் மூதூர் பிரதேசத்தில் உள்ள கிளிவெட்டி கிராமத்தில் பிறந்த அ. தங்கத்துரை தனது ஆரம்ப கல்வியை கிளிவெட்டி அ. த. க. பாடசாலையிலும், இடை நிலைக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும், உயர் தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பின்னர் 1979 – 1980 இல் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை கற்று சட்டத்தரணியானார்.

நீர்ப்பாசன திணைக்களத்தில் லிகிதராக (எழுதுநர்) அரச நியமனம் பெற்ற அ. தங்கத்துரை சோமபுரம், இரத்தினபுரி, கொழும்பு முதலான இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
கொழும்பில் நீர்ப்பாசன திணைக்களத்தில் பிரதம லிகிதராக கடமையாற்றிய சமயம் இலங்கையின் சிங்கள மொழிச் சட்டத்திற்கமைவாக 1970 இல் அமரர் அ. தங்கத்துரை அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

சமூகப் படுகொலையும், காணாமல் போய் விட்ட அரசும்- நிசிம் மன்னதுக்காரன்

 முரட்டுத்தனத்திடம் மட்டுமே முறையிடுகின்ற நிலைமையில் இருக்கின்ற
மக்களுக்கு கிளர்ழ்ந்தெழுவது அல்லது அந்த முரட்டுத்தனத்திடம் முற்றிலுமாக
அடங்கிப் போய் விடுவது என்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கும் என்ற
கேள்வியை ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் எழுப்பியிருந்தார். மக்களை அழித்தொழிக்கின்ற தொனியையே தற்போது இந்தியாவில் நாம் காணும்
காட்சிகள் கொண்டிருக்கின்றன. மருத்துவ வசதிகள் கிடைக்காமல் ஓர் உயிரை இழக்கும் போது மருத்துவமனை ஊழியர்களைத் தாக்குகின்ற குடிமக்கள், நடைபாதையில் ஒட்சிசன் சிலிண்டருடன் சுவாசிக்கப் போராடிக் கொண்டிருக்கின்ற குடிமக்கள் என்று இப்போது இந்தியாவில் பல மட்டங்களில் ஒரு நெருக்கடி நிலவி வருகிறது.


இந்த நெருக்கடியை ‘அமைப்பின் சரிவு’ அல்லது ‘அரசின் தோல்வி’ என்பதாக
எடுத்துக் கொள்வதைக் காட்டிலும், தற்போதைய நெருக்கடிக்கு இந்த அரசு
பொறுப்பல்ல என்பதாக அரசு ஆதரவாளர்களிடையே இருக்கின்ற
உரையாடல்களே மிகவும் அதிர்ச்சியூட்டுபவையாக இருக்கின்றன.
அந்த உரையாடல்கள் இந்தியாவிற்கான மிக மோசமான நேரத்தையே
காட்டுகின்றன. இதுபோன்ற வாதங்கள் இந்திய ஜனநாயகத்தின் மீது மிகவும்
மோசமான விளைவுகளையே ஏற்படுத்தப் போகின்றன. தொழிலாளர்களின் வாழ்க்கைக்கான தேவைகளை நிறைவேற்றித் தராமல் அவர்களிடம் மிகக் கொடூரமான வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை உருவாக்கி உடல்நலக்குறைவு மட்டுமல்லாது முன்கூட்டிய மரணங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டிய நிலைமையை ஆங்கிலேய ஆளும் வர்க்கமும், அரசும் உருவாக்கின என்ற கருத்தை ஏங்கல்ஸ் முன்வைத்தார்.   

மொழிப் பிரச்சினையும் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும் –சுப்பராயன்

மொழிப் பிரச்சினை என்பது இலங்கையில் ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இப்பொழுது இலங்கையில் சிங்களத்துடன் தமிழும் அரச கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தாலும், அந்த நிலையை அடைவதற்கு நீண்ட காலம் போராட வேண்டியிருந்ததை அனைவரும் அறிவர்.

 

மொழிப் பிரச்சினையால் இரண்டு பகுதியினர் இலாபம் அடைந்தனர். ஒரு தரப்பினர் சிங்கள இனவாத அரசியல்வாதிகள். மறு தரப்பினர் தமிழ் இனவாத அரசியல்வாதிகள். அதிலும் தமிழ் இனவாத அரசியல்வாதிகளே கூடுதலான இலாபம் ஈட்டினர். குறிப்பாக, தமிழரசுக் கட்சியினர் மொழிப் பிரச்சினையை வைத்தே தமது கட்சியை வளர்த்துக் கொண்டனர் எனவும் கூறலாம்.

இலங்கையில் மொழிப் பிரச்சினையைத் தொடக்கி வைத்தவர் ஐக்கிய தேசியக் கட்சியின் அபகீர்த்திமிக்க தலைவர்களில் ஒருவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தான். அவர் இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே பிரித்தானியர் அமைத்திருந்த சட்டசபையில் ஒரு உறுப்பினராக இருந்த காலத்திலேயே இலங்கையின் ஆட்சி மொழியாகவும், பாடசாலைகளில் போதனா மொழியாகவும் சிங்களம் மட்டுமே இருக்க வேண்டும் என்றொரு தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அன்றைய காலகட்டத்தில் இனவாதம் பெரிதாக மேலோங்கி இருக்காத காரணத்தால் அதிர்ஸ்ட்டவசமாக அவரது தீர்மானம் தோற்றுப்போனது.

பின்னர் 1956 பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் முன்னதாக ஐ.தே.க. களனியில் நடத்திய மாநாட்டில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் சிங்களம் மட்டுமே அரசகரும மொழியாக இருக்கும் என்றொரு தீர்மானத்தை அதே ஜே.ஆரே முன்மொழிந்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை பற்றி பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேஸ்பி பிரபு நிகழ்த்திய உரையின் முக்கியமான பகுதிகள்

 ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் கடந்த மே 19ந் திகதி கடந்த மே 19ந் திகதிநடைபெற்ற நடைபெற்ற ராணியின் உரை விவாதத்தின் போது, ராணியின் உரை விவாதத்தின் போது, அனைத்துக் கட்சிக் குழுவின் அனைத்துக் கட்சிக் குழுவின் (இலங்கை) இணைத் தலைவராக (இலங்கை) இணைத் தலைவராக இருக்கும் மைக்கேல் நே இருக்கும் மைக்கேல் நேஸ்பிபிரபு, 2009 இல் ஆயுத மோதல் முடிவுக்கு வந்தபின்னர் நல்லிணக்கத்தை
அடைவது குறித்த அடைவது குறித்தஇலங்கையின் இலங்கையின்
சவால்கள் மற்றும் முன்னேற்றம் சவால்கள் மற்றும் முன்னேற்றம்
தொடர்பான முக்கியமான உள்ளார்ந்த உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார். உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார்.

See the source image
 Photo; Courtesy: newsfirstlk Lord Naseby

அவரது உரையின் அவரது உரையின்சில பகுதிகள் சில பகுதிகள் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன: தரப்பட்டுள்ளன:

எனது பிரபுக்களே, மேன்மைதங்கிய உரையை நான் வரவேற்கிறேன். எனது
விமர்சனங்கள் உலகளாவிய பிரித்தானியா பற்றி குறிப்பாக இந்தோ –
பசுபிக் கூடாரம் பற்றி இருக்கும். நான் இந்தியா, பாகிஸ்தான், சிறீலங்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வேலை செய்ததின் காரணமான எனது சொந்த பின்னணி காரணமாகவும் மற்றும் ஆசியாவின் இதர பகுதிகள் பற்றியும் நான் நன்கு அறிவேன். சிறீலங்கா சம்பந்தமான அனைத்துக் கட்சி இணைத்தலைவர்
என்ற வகையில் விசேடமாக சிறீலங்கா பற்றி உரையாற்ற உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அமெரிக்கா வெளியே போயுள்ள நிலையில் பிரித்தானியா தலைமைப்
பொறுப்பு வகித்த மூலக்குழு ஒன்றினால் இலங்கை இராணுவம் இழைத்த போர்க் குற்றங்கள் சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக இலங்கையில் இன்று பெரும் பதட்டம் உருவாகியுள்ளது.2009 யுத்தம் என்பது ஒரு சிறிய கலகமல்ல. எனவே சர்வதேச மனிதாபிமானம் என அறியப்படும் ஆயுத மோதல் சம்பந்தமான அடிப்படையில் மதிப்பீடுகள் கட்டாயமாக அமைய வேண்டும். இந்த யுத்தம் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்துக்கும் இரண்டு
ஜனாதிபதிகள், அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பல
மிதவாதத் தமிழ் தலைவர்கள் ஆகியோரைக் கொலை செய்த உலகின் மிகவும் பிசாசுத்தனமான பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒன்றாகும்.

போராட்டமும் வரலாறும் அம்பலத்தான்

 See the source image

 Photo: courtesy: buzzing.com

சாதிப் பிரச்சினை பற்றிப் பேசுகின்ற சிலர் பழந் தமிழிலக்கியங்களிலே ஆங்காங்கு காணப்படும் சில ‘மனிதாபிமான’க் கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, பெரும் பெரும் புலவர்கள் எல்லாம் சாதிமுறையை எதிர்த்தே
வந்திருக்கின்றனர் என்று தமக்குத் தாமே ஒருவகையான மனஅமைதியைத்
தேடிக்கொள்வதைக் காணலாம். சங்கப் புலவர்களிலிருந்து இராமலிங்கர் வரை “சாதி சமயச் சழக்குகளை” கண்டித்துப் பாடியவர் பலர் உள்ளனர் என்பது உண்மையே. ஆனால் அக்கண்டனத்தின் தன்மையே கூர்ந்து
நோக்கத்தக்கது. சாதி முறை கூடாது என்பதை எடுத்துக் கூறுவதற்குப்
பெரும்புலமையோ, பேரறிவோ தேவையில்லை. நிலைமையை மாற்றுவதற்கு ஏற்ற வழிவகைகளைக் கூறுவதிலேயே முந்தையோர் பெரிதும்
வேறுபடுகின்றனர்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...