2018 பெப்ருவரி 10இல் இலங்கையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் எமது ‘வானவில்’ ஜனவரி மாத (85ஆவது) இதழ் வெளிவந்திருந்தது.
அந்த இதழில் முன்பக்க தலைப்புச் செய்தியாக, “ஜனாதிபதி – பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருந்தோம்.
அதேபோல அந்த இதழின் 6ஆம் 7ஆம் பக்கங்களில் “வடக்கின் உள்ளுராட்சித் தேர்தல் நிலைமை” என்ற தலைப்பில் புனிதன் என்பவர் எழுதிய கட்டுரையையும் பிரசுரித்திருந்தோம்.
அத்துடன் இந்த இதழின் 10ஆம் 11ஆம் பக்கங்களில் சயந்தன் என்பவர் எழுதிய “உள்ளுராட்சி தேர்தலின் பின் நாட்டில் அரசியல் – நிர்வாக ஸ்திரமின்மை உருவாகும் அபாயம்” என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றையும் பிரசுரித்திருந்தோம்.
நாம் பிரசுரித்திருந்த மூன்று கட்டுரைகளிலும் கூறப்பட்டிருந்த விடயங்கள் சரியானவை என்பதை உள்ளுராட்சித் தேர்தலின் பின் நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் தெட்டத் தெளிவாக நிரூபித்து வருகின்றன. நமது எதிர்வு கூறல்கள் சரியென்பதையிட்டு நாம் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம்.