சீனாவின் வளர்ச்சியும் இலங்கை – சீன உறவுகளும்--சங்கர சிவன்

 



‘கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சீன மக்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளாக இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம். அதில் ஒன்று, சீனாவிலிருந்து வறுமையை ஒழித்துக்கட்டியது. இரண்டாவது விடயம் புதிய பட்டுப்பாதை பொருளாதாரத் திட்டம் (தடம் மற்றும் பாதை முன்னெடுப்பு – Belt and Road Initiative). சீனா 800 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது. நூற்றுக்கும் அதிக நாடுகள் தடம் மற்றும் பாதை முன்னெடுப்பில் இணைந்துள்ளன.’

இவ்வாறு கூறியிருக்கிறார் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டதின் 65 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவருமான டியு குணசேகர. இது சம்பந்தமான நிகழ்வு கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் (Nelum Pokuna Theatre) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீன, ரஸ்ய, வியட்நாம், கியூப தூதுவர்களும் கலந்து கொண்டதுடன், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகத்தின் பல்வேறு மட்டப் பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சீனாவினால் முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது!

நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு தாமரை தடாக அரங்கில் 17.02.2022 அன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்க அவர்களினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

‘நான் எனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர், அனைத்து அன்பான வார்த்தைகள் மற்றும் அந்த வார்த்தைகளின் பின்னணியிலுள்ள செயல்பாடுகளுக்கு அதிமேதகு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்களிடையே நாம் பகிர்ந்து கொள்ளும் ஆழமான வேரூன்றிய நட்புறவால் நமது நாடுகளுக்கிடையேயான வலுவான பிணைப்புகள் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.

சீனா நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு. மேலும் இது ஒரு பெரிய வரலாறு. அந்த மாபெரும் வரலாற்றுக்கு கொன்ஃபியுசியஸின் தத்துவம் உதவியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சீன வரலாற்றில் மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சீனா ஒரு பெரிய நாடாக இருந்த போதிலும் எந்த நாட்டையும் ஒருபோதும் ஆக்கிரமித்ததில்லை. அதேபோன்று தனது தாய்நாட்டை எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய அனுமதிக்கவில்லை.

கடந்த காலங்களில், சீனாவைக் கைப்பற்றும் உலக வல்லரசுகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. சீனா தொடர்ச்சியாக ஐக்கிய அமெரிக்காவாக இருப்பதற்கு இன்றுவரை முடிந்துள்ளது.

சுமந்திரன் வகுத்த எதிர்க்கட்சியினருக்கான புதிய வியூகம்!--சங்கர சிவன்



லங்கையின் தற்போதைய தேசபக்த அரசாங்கத்தைக் கவிழ்த்து 2015 இல் செய்தது போன்ற ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகள் படாதபாடு படுகின்றனர். இதை அண்மையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய சக்திகள் முன்னர் நாட்டில் ஜனநாயகம் இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறுகிறது என்று அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தனர். பின்னர் கொவிட் தொற்றுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ‘சீன ஆதிக்கம்’ குறித்தும் பிரச்சாரம் செய்தனர். அதன் பின்னர் டொலர் பற்றாக்குறையால் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடும், விலைவாசி உயர்வும் ஏற்பட்ட பொழுது அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு இப்பொழுது அதை அரசுக்கு எதிராக ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

மாகாண சபைகளைப் பாதுகாத்துபலப்படுத்த வேண்டும்!

           

லங்கை தமிழ் அரசியல் அரங்கில் மாகாண சபைகள் பற்றிய விடயம் மீண்டும்சூடு பிடித்துள்ளது.

இலங்கை அரசியலில் இனம், மொழி, மதம் சம்பந்தப்பட்ட விடயங்கள் எப்போதுமே முக்கிய பேசுபொருள்களாக இருந்து வந்துள்ளன. இதில் முக்கியமாக தமிழ் மக்களின் இன மற்றும் மொழிப் போராட்டங்கள் முக்கியமான இடம் பிடித்து வந்துள்ளன.

1957 இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘சிங்களம் மட்டும்’ சட்டம் மூலம் மொழிப் பிரச்சினை தீவிரம் அடைந்தது. அது பின்னர் சுமார் 30 வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்தது.

ஆனால், இனப் பிரச்சினை சம்பந்தமான தீர்வு இன்னமும் அனுமான் வாலாக இழுபட்டுச் செல்கிறது. நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது ஆட்சிக் காலங்களில் தமிழ் தலைமைகளுடன் இனப் பிரச்சினை குறித்து சில ஒப்பந்தங்களைச் செய்த போதிலும் அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. இனவாதமே ஆட்சிக்கு வருவதற்கான குறுக்கு வழியாக இருந்ததால், ஆட்சியில் இருக்கும் கட்சி தமிழர் தரப்புடன் இனப் பிரச்சினை சம்பந்தமாக ஒரு தீர்வுக்கு வந்தால், எதிரணியில் இருக்கும் பிரதான கட்சியோ அல்லது கட்சிகளோ சேர்ந்து அதைக் குழப்புவது ஒரு வழமையாக இருந்தது. அது மாத்திரமின்றி, வெளியில் உள்ளவர்கள் குழப்பாமல் ஒப்பந்தத்தைச் செய்த ஆட்சியாளர்களே தம்மால் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தாமல் தட்டிக் கழித்த வரலாறும் உண்டு.

இந்தச் சூழ்நிலையில்தான் 1976 இல் தமிழ்த் தலைமை ‘தமிழ் மக்களுக்கென ஒரு தனிநாடு அமைப்பதே தமிழர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வு’ என்ற தூரதிருஸ்டி அற்ற முடிவை எடுத்து அதை நோக்கிப் போராடும்படி தமிழ் இளைஞர்களைத் தூண்டிவிட்டது. அந்தச் சூழ்நிலையில் 1977 இல் ஆட்சிக்கு வந்த அமெரிக்கா சார்பான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு, ஒரு பக்கத்தில் தமிழ் மிதவாத தலைமையுடன் கூடிக்குலாவிக் கொண்டு, மறு பக்கத்தில் தமிழ் இளைஞர்களின் போராட்டங்களை ஒடுக்குவது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது.

சண்முகா வித்தியாலய அதிபர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்!--ஜிப்ரி கரீம் (ஓட்டமாவடி, மட்/மம/மாஞ்சோலை அல் ஹிரா பாடசாலையின் அதிபர்)

 



திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், அக்கல்லூரியின் அதிபருக்கு, ஓட்டமாவடி, மட்/மம/மாஞ்சோலை அல் ஹிரா பாடசாலையின் அதிபர் ஜிப்ரி கரீம் பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அவரது Facebook பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள குறித்த மடல் வருமாறு,

மரியாதையாதைக்குரிய சண்முகா வித்தியாலய அதிபர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரியை சகோதரி பஃமிதா அவர்களுக்கும் ஓர் மடலினை வரைந்திருந்தேன் ஆனாலும் உங்களுக்கு அப்படியொரு மடலினை வரைய வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்குத்தோன்றவில்லை ஆயினும் உங்களது தன்னிலை விளக்கமளிக்கும் காணொளி ஒன்றினை முகநூலில் காணக்கிடைத்ததும் எழுதாமல் இருக்கவும் என்னால் முடியவில்லை

‘வெள்ளையனே வெளியேறாதே!’ – இதுதான் தமிழ் தலைமையின் சுதந்திர தின கோசம்!!--மண்மகன்



லங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் – தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் – இலங்கையின் சுதந்திர நாளான பெப்ருவரி 4 ஆம் திகதியை தமிழ் அரசியல்வாதிகள் சிலர் துக்க நாளாக வர்ணித்து கொண்டாடி வருவது தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு சம்பிரதாயம். அன்றைய தினத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களில் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுவதும் ஒரு வழக்கம்.

400 வருட அந்நியர் ஆட்சி – முடிவுக்கு வந்த தினம்தான் பெப்ருவரி 4 ஆம் திகதி. குறிப்பாக இலங்கையை ஆண்ட கடைசி காலனித்துவவாதிகளான (குள்ளத் தந்திரம் மிக்க) பிரித்தானியர் ஆட்சி அதிகாரத்தை இலங்கையர்களிடம் (1947 பெப்ருவரி 4 இல்) கை மாற்றிவிட்டு வெளியேறிய தினம்தான் பெப்ருவரி 4 ஆம் திகதி.

இலங்கையின் சுதந்திரம் என்பது தனியே ஒரு இனத்துக்கு உரியதல்ல. அது இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனத்தவர், மதத்தினர் அனைவருக்கும் உரிய நாள். அதைத் பெறுவதற்காக சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர், மலே இனத்தவர் என அனைவரும் ஒன்றிணைந்து போராடியது வரலாறு. ஆனால் இனவாதம் பேசும் தமிழ் தலைமைகள் இந்த மகத்தான தினத்தை கறுப்பு நாளாக அனுட்டித்து வருகின்றனர். இதன் அர்த்தம் என்ன? இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்திருக்கக்கூடாது, தொடர்ந்தும் அந்நியராட்சி இருக்க வேண்டும் என்பது தானே?

Qatar: Arbitrary Travel Bans Security Authorities Appear to Defy Courts

From Left to Right: Saud Khalifa al-Thani, Najeeb al-Nueimi, Abdullah al-Mohannadi, Muhammad al-Sulaiti.  © Private 2022

(Beirut) – Qatari state security authorities have imposed indefinite arbitrary travel bans against at least four citizens without a judicial process or a clear legal basis, Human Rights Watch and the Gulf Centre for Human Rights (GCHR) said today. State security forces arrested one of the men in October 2020 after he posted tweets criticizing arbitrary travel bans against himself and others, and he remains in detention.

Human Rights Watch and GCHR interviewed three of the men and sources close to the fourth and reviewed relevant documents for all four, which revealed that state security authorities are applying the travel bans outside of any legal procedure, and in some cases effectively defying court orders. One man also suffered financial sanctions, including freezing of his bank accounts. These arbitrary sanctions have resulted in material and psychological harm to the men involved and their families.

போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் யு.என்.எச்.ஆர்.சி (UNHCR)


(கொழும்பிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் வெளியான ஆசிரியர் பீட தலையங்கத்தின் சாராம்சம்)

ந்த மாதக் கடைசியில் எமது நாடு மீண்டுமொரு முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை என்ற சித்திரவதைக் கருவியில் சிக்கவுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளினால் போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி மனோ ரீதியிலான சித்திரவதைக்கு உள்ளாக உள்ளது.

நாடுகளோ அரசுகளோ போர்க் குற்றங்கள் அல்லது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்திருந்தால் அவற்றுக்கெதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாம் எதிர்க்க முடியாது. ஆனால் நடவடிக்கைகள் தேர்ந்தெடுத்த சில நாடுகள் மீதும் மட்டுமாக இருக்கக்கூடாது.

கவலைக்குரிய விதத்தில் போர் என்பதே ஒரு குற்றம். எல்லாப் போர்களும் தவிர்க்கவியலாதவாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களைக் கொல்வதில் சென்று முடிகின்றன. ஒரு துப்பாக்கி ரவையோ அல்லது வானத்திலிருந்து வீசப்படும் ஒரு குண்டோ போரிடுபவரிலிருந்து பொதுமக்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு எவ்வித வழிவகையும் இல்லை.

இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தை முற்றாகப் புறக்கணிக்கும் அம்பிகா சற்குணநாதன்!

 


2022 ஜனவரி 27ஆந் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவில் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த கருத்துப் பரிமாற்றத்தின் போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி திருமதி. அம்பிகா சற்குணநாதனின் சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல தவறான அறிக்கைகள் கவலையளிப்பதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இலங்கை அரசாங்கம் பல முனைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தை திருமதி. சற்குணநாதனின் சாட்சியம் முற்றாகப் புறக்கணிக்கும் அதே வேளையில், குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றுடன் நீண்டகால ஒத்துழைப்பில் ஈடுபட்டு, உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வழங்கும் நேரத்தில், அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் நேர்மை குறித்த சந்தேகங்களை உருவாக்குகின்றது.

மனித உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பயன்படுத்த வேண்டும் என திருமதி. சற்குணநாதன் வழங்கிய பரிந்துரைகளில் அமைச்சு ஏமாற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்வாதாரம் ஏற்கனவே கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கை இழந்தால், அதனால் ஏற்படும் இழப்புக்கள் வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை அதிகரிக்கும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முக்கிய தொழில்களில் மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நெருக்கடிகளால் நாடு நிறைந்திருப்பது தெரிந்தே நாட்டை நான் பொறுப்பு ஏற்றேன்; மீட்டெடுத்தே தீருவேன்’


இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய முழு உரை:

சுதந்திரமான ஒரு நாட்டின் கௌரவம்மிக்க ஒரு பிரஜையாக வாழ்வதற்குள்ள உரிமையை முன்னிட்டு, வரலாறு முழுவதும் பல நாடுகளின் மக்கள் கலவரங்களை நடத்தியுள்ளார்கள். போர்களை முன்னெடுத்துள்ளார்கள். பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளார்கள்.

இலங்கையிலும், 2,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றின் பல காலப்பகுதிகளில், வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய துட்டகைமுனு, வலகம்பா, மஹா பராக்கிரமபாகு, விஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு போன்ற சிறந்த மன்னர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்டு நாட்டை ஒன்றுபடுத்தினார்கள்.

இறுதியாக, ஏறத்தாழ 450 ஆண்டு காலமாக இருந்து வந்த ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகளிலிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்று தற்போது 74 ஆண்டுகள் கடந்துள்ளன. சுதந்திரத்தின் பின்னரும்கூட 3 தசாப்தங்களுக்குக் கிட்டிய காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடொன்றினூடாக இந்நாட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க முயன்றமைக்கு எதிராகப் போராடவும் எமக்கு நேர்ந்துவிட்டது.

நேட்டோவே, வெளியேறு!


ராக்கின் சதாம் ஹுசேனை தூக்கிலிட்டு படுகொலை செய்தது போல, லிபியாவின் மும்மர் கடாபியை வெட்டி படுகொலை செய்து சாக்கடையில் தூக்கியெறிந்தது போல, இன்னும் இந்த உலகின் பல நாடுகளது தலைவர்களை கொன்று ஒழித்தது போல, ஜனாதிபதி விளாடிமிர் புடினை அழித்துவிடத் துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தி யம். ஆனால் ரஷ்ய ஜனாதிபதி புட்டினோ, இவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். 

ரஷ்யாவின் மீது, அது இப்போது சோசலிச சோவியத் ஒன்றியமாக இல்லை என்ற போதிலும், கொலை வெறியுடனும், ஆத்திரத்துடனும் வன்மத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கி றது அமெரிக்கா. ரஷ்யாவை சுற்றிலும் நேட்டோ ராணுவப் படைகளை குவிப்பது; முன்னாள் சோவி யத் குடியரசு நாடுகளில் ஒன்றான உக்ரைனில் முழுமையாக நேட்டோ துருப்புகளை இறக்கி அந்த நாட்டை தனது கைகளுக்குள் கொண்டு வருவது; அதைத் தொடர்ந்து ரஷ்யாவை சுற்றி வளைக்கும் விதமாக அதன் எல்லைகளையொட்டி ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேட்டோ மற்றும் அமெரிக்க துருப்புகளை இறக்குவது என்ற ஒரு விரிவான சூழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் உக்ரைனுக்குள் நுழைந்திருக்கிறது.

இலங்கையில் 27 அரசியல் கைதிகள் விரைவில் விடுவிப்பு!


யங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டோர் (அரசியல் கைதிகள்) 27 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என நீதி அமைச்சர் அலி சப்ரி 30.01.2022 அன்று தமிழ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள அவர், தனியார் விடுதியில் அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...