பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டு அரசியலில் அதிக
முக்கியத்துவமில்லை என்பதாலோ, அது மத அடையாளவாத கட்சி என்பதாலோ,
பாசிசத்தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸால் வழி நடத்தப்படுவது என்பதாலோ அந்தக்
கட்சியின் பண்பற்ற அரசியல் நடவடிக்கைகளை இயல்பானதாக எடுத்துக்கொள்ள
முடியாது, கூடாது. அதைத் தொடர்ந்து கண்டிக்க வேண்டும்.
ஏனெனில், அந்தக் கட்சிதான் கடந்த எட்டாண்டுகளாக ஒன்றிய அரசில் ஆட்சி
செய்து வருகிறது. அடுத்த 2024 தேர்தலிலும் அது வெற்றி பெறும் எனப் பலரும்
கருத்துக்கூறும் அளவுக்கு அது வலுவான கட்சி என்று நம்பப்படுகிறது. நிச்சயம்
வேறு எந்தக் கட்சியும் நினைத்துப் பார்க்கமுடியாத அளவு அது நன்கொடைகளை
வாங்கிக் குவித்துள்ளது. யார் நன்கொடை கொடுத்தார்கள் என்பது வெளியில்
தெரியாதவண்ணம், கொடுப்பதற்கான ஒரு தனிப்பட்ட சட்டத்தை இயற்றியிருந்தாலும்,
ஒன்றிய அரசதிகாரத்தின் மூலம் அந்தக் கட்சிக்கு உதவி செய்யும் கார்ப்பரேட்
நிறுவனங்கள்தான் நன்கொடையை அள்ளிக்கொடுத்திருப்பார்கள் என்பதை யூகிப்பது
கடினமல்ல. எத்தனை பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தாலும் கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு அளித்த வரிச்சலுகையை நீக்க மாட்டோம், வாராக்கடனை கேட்க
மாட்டோம், என்பதே அரசின் கொள்கையாக இருப்பதையும் இத்துடன் இணைத்துப்
புரிந்து கொள்ளலாம். இப்படி பெருமுதலீட்டிய ஆதரவுடன் செயல்படும் ஆட்சியின்
பிரதமர் மோடி உலக அரசியலில் உக்ரைன் போருக்குப் பிறகு எழுந்துள்ள
நெருக்கடியான சூழலில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இருக்கிறார்.
தமிழ்நாட்டின் அறிவுச் சூழலில் மார்க்ஸிய-பெரியாரிய
அறிஞர் எஸ்.வி.ராஜதுரை ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் குறிப்பிடத்தக்கவை. ஆயல்
கலை இலக்கியப் பண்பாட்டுக் களம் சார்பாக, வாழ்நாள் சாதனையாளருக்கான ஆயல்
விருது எஸ்.வி.ஆருக்கு வழங்கப்படவிருக்கிறது. அவர் ஒரு கம்யூனிஸ்ட்,
பெரியாரிஸ்ட். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா முழுமைக்குமான ஒரு சிறந்த
மனித உரிமைப் போராளி. சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழ்நாட்டின் வரலாற்றை
அறிந்துகொள்வதற்கு எஸ்.வி.ஆரின் வாழ்க்கையையும் எழுத்துகளையும் ஒருவர்
அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இளம் வயதில் திமுகவின் மீது குறிப்பாக ஈ.வெ.கி. சம்பத் மீது எஸ்.வி.ஆர்.
ஈடுபாடு கொண்டிருந்தார். 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப்
போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார். எஸ்.வி.ஆர். ஒரு முறை பெரியார்
பங்கேற்ற கூட்டத்துக்குத் தலைமைவகித்திருக்கிறார். நிகோலாய் ஆஸ்திரோவ்ஸ்கி
எழுதிய ‘வீரம் விளைந்தது’ நாவல்தான் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் ஆக்கியது என
அவர் சொல்வதுண்டு. சக மனிதர்களை நேசிப்பவர்களே கம்யூனிஸத்தை நோக்கி வர
முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு எஸ்.வி.ஆர்.
தொடர் வாசிப்பு அவரை மேலும் மேலும் இடதுபக்கம் திரும்பச் செய்தது.
எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி ஆகியோரோடு இணைந்து, கோவையில் சிந்தனையாளர்
மன்றத்தைத் தொடங்கி, அதில் தத்துவ உரையாடல்களை மேற்கொண்டார். இதன்
நீட்சியாக ‘புதிய தலைமுறை’ மார்க்ஸிய இதழ் தொடங்கப்பட்டது. தீவிர மார்க்ஸிய
– லெனினிய கட்சி செயல்பாடுகளில் நுழைந்தார். ‘பரிமாணம்’ இதழிலும் அவர்
தொடர்ச்சியாக எழுதினார். ‘இனி’ என்னும் சிறுபத்திரிகையை நடத்தினார்.
படைப்பிலக்கியத்தில் மிகப் பெரும் ஆளுமையாக வர வேண்டும் என்ற ஆசையும்
அவருக்கு இருந்தது. ‘மனோ’ என்னும் பெயரில் எழுதிவந்த மனோகரனுக்கு
எஸ்.வி.ஆர். என்ற புனைபெயரை வைத்தது அவரின் நெருங்கிய நண்பர் ‘க்ரியா’
ராமகிருஷ்ணன். 1980-களில் அவர் சென்னையில் வசித்தபோது, எஸ்.எஸ்.கண்ணனோடு
இணைந்து கார்ல் மார்க்ஸ் நூலகத்தைத் தொடங்கினார். ரோஜா லக்சம்பர்க் படிப்பு
வட்டத்தை ஏற்படுத்தி, அதில் தொடர்ச்சியாக மார்க்ஸிய உரையாடலை
முன்னெடுத்தார்.
எஸ்.வி.ஆரின் தொடக்க கால நூலான ‘அந்நியமாதல்’ மார்க்ஸியம் பற்றிய பல
பிரச்சினைகளை முதல் முறையாகத் தமிழில் அறிமுகப்படுத்தியது. அது மட்டுமல்ல,
பல பிரச்சினைகளில் வழக்கமாக மார்க்ஸியவாதிகள் கொள்ளும்
அணுகுமுறையிலிருந்தும் அது விலகி நின்றது. எஸ்.வி.ஆரின் அறிவு நாட்டமும்
தேடலும் நமக்குப் பிரம்மிப்பை ஏற்படுத்தும். இணையவசதிகள் இல்லாத 1970-களில்
சார்த்தர் குறித்தும், இருத்தலியல் குறித்தும் பயின்று, அதை மற்ற
நண்பர்களுக்கும் போதித்தவர் எஸ்.வி.ஆர். தான் பெற்ற அறிவை மற்றவரும் பெற
வேண்டும் என்ற பெரும் ஆவல் கொண்டவர். அவருக்கு வாசிப்பைத் தவிர இசையும்
சினிமாவும் நாடகமும் கொள்ளைப் பிரியம். தான் வாழ்ந்துவரும் கோத்தகிரி
வீட்டில் பெரும் நூலகத்தோடு இசைத்தட்டுகளையும் அழகாகப் பராமரித்து
வைத்திருக்கிறார். எந்தவொரு அயல்மொழி திரைப்படம் குறித்தும், இசைமேதை
குறித்தும் அவருடன் நீங்கள் உரையாட முடியும். எஸ்.வி.ஆரிடம் நீங்கள் ஒரு
மாணவராக ஏராளம் கற்க முடியும்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் இணைந்து படைத்த கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கையையும், இளம் மார்க்ஸிய அறிஞரான மார்ஸெல்லோ முஸ்ட்டோவின் நூலையும்
தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். எஸ்.வி.ஆர். எழுதிக் குவித்த நூல்கள்
கிட்டத்தட்ட 80-க்கும் மேல் இருக்கும். கம்யூனிஸம், தத்துவம், சோவியத்
இலக்கியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம், பெண்ணியம் என்னும்
தலைப்புகளில் இந்நூல்களை அடக்கலாம்.
ஸ்டாலினிஸ சோவியத் ஒன்றியத்தை விமர்சனம் செய்த அதே நேரத்தில், லெனின்
காலத்திய போல்ஷ்விக் சோவியத் மரபை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில்
அவர் உறுதியாக இருந்தார். இச்சூழலில், அவர் உருவாக்கிய நூல்தான் ‘ரஷ்யப்
புரட்சியின் இலக்கிய சாட்சியம்’. அவருடைய வாழ்வை ஆக்கிரமித்திருந்த இரு
பெரும் பகுதிகளை இந்நூல் இணைத்தது. மார்க்ஸியம், ரஷ்யப் புரட்சி,
போல்ஷ்விக் மரபு, போல்ஷ்விக் முன்னோடிகள் குறித்த வாசிப்பும் அக்கறையும்
ஒரு பகுதி. தமிழ்ச் சூழலில் மார்க்ஸிய மரபை பெரியாரியத்தோடும், தமிழ்
அடையாள அரசியலோடும் இணைத்து எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் அவர்
வலியுறுத்துவார். மண்டல் கமிஷன் காலத்துக்குப் பிந்தைய சூழல் அவரை மெல்ல
பெரியாரியத்தை நோக்கி நகர்த்தியது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப்
பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற எஸ்.வி.ஆர்., ரோஜா
முத்தையா நூலகத்தோடு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, ‘குடிஅரசு’
இதழ்களைப் பதிவேற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். எழுத்தாளர்
வ.கீதாவோடு இணைந்து அவர் எழுதிய நூல் ‘பெரியார்: சுயமரியாதை – சமதர்மம்’.
ஆங்கிலத்திலும் வெளியான இந்நூல், தமிழ் அறிவுச் சூழலில் மட்டுமல்லாது
இந்தியா முழுமையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை தட்டையாகப்
புரிந்துகொள்ளப்பட்டிருந்த பெரியாரை நோக்கிப் பொதுவுடைமையர்கள்
நகர்ந்துவருவதற்கு இந்நூல் பெரும் உதவிபுரிந்தது. அது மட்டுமல்ல, இந்நூலில்
மார்க்ஸியத் தத்துவ அறிஞரான கிராம்சியோடு பெரியார்
ஒப்புமைப்படுத்தப்பட்டிருந்தார். பெரியாரியத்தைக் கோட்பாடாக்கும் முயற்சியை
இந்நூல் தொடங்கி வைத்தது.
மார்க்ஸிய – லெனினிய இயக்கங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்த
காலங்களில், அதன் நீட்சியாக மனித உரிமை மீட்புச் செயல்பாடுகளில் அவர் தன்னை
மிகத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். மரண தண்டனையிலிருந்து சன்னாசி
என்பவரைக் காப்பாற்றியதில் எஸ்.வி.ஆருக்குப் பெரும் பங்கிருந்தது. மரண
தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் நீதிபதி கிருஷ்ணய்யர், பாலகோபால்
உள்ளிட்டோரோடு சேர்ந்து பல இயக்கங்களைக் கண்டவர். நீண்ட நாட்கள்
சிறைபட்டிருந்த புலவர் கலியபெருமாளை விடுதலை செய்வித்ததில்
எஸ்.வி.ஆருக்குப் பெரும் பங்குண்டு. பெருஞ்சித்திரனார், புலவர்
கலியபெருமாள் மற்றும் 16 இயக்கங்களை இணைத்து ஒடுக்கப்பட்டோர் உரிமை
மீட்புக் கூட்டமைப்பைத் தொடங்கியதிலும் எஸ்.வி.ஆரின் பங்கு அளப்பரியது.
பெருஞ்சித்திரனார் தடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஐந்து
மாதங்களாகப் பிணை வழங்கப்படாதிருந்தபோது, அதற்கு எதிராக அப்போது தமிழ்நாடு
பி.யு.சி.எல். அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த எஸ்.வி.ஆர், நீதியரசர்
கிருஷ்ணய்யர் உள்ளிட்ட நாடெங்கும் இருந்த மனித உரிமைப் போராளிகளிடம்
கையெழுத்து இயக்கத்தை நடத்தி, நீதித் துறை வட்டாரங்களில் பெரும் சலசலப்பை
ஏற்படுத்தினார். அடுத்த ஓரிரு மாதங்களில் பெருஞ்சித்திரனாருக்குப் பிணை
கிடைத்தது. இக்காலகட்டத்தில் தமிழ்த் தேசியத்தின் மீதான விமர்சனத்தோடும்,
அவர்களோடு இணைந்தும் எஸ்.வி.ஆர். பணியாற்றியவிதம் சிறப்புக்குரியது.
எஸ்.வி.ஆர். மிகவும் கறாரானவர். கோபக்காரர். குழந்தை மனம் கொண்டவர். மிக
மோசமான உடல்நலத்தைச் சகித்துக்கொண்டு, கடந்த 20 ஆண்டுகளில் அவர் எழுதிக்
குவித்தது ஏராளம். அதன் ரகசியத்தை நீங்கள் கேட்டால் சகு (துணைவியார்)
என்பார். மிகச் சிறந்த மார்க்ஸிய – லெனினியக் கவிஞரான கோரக் பாண்டே
மரணித்தபோது, அவர் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். சோவியத் உடைவுக்குப்
பிறகு அங்கிருந்து வெளியான நாவல்களும் நூல்களும் விவரித்திருந்த சோவியத்
காலக் கொடுமைகளை அவர் வாசித்தபோது, அவர் கடுமையான மனத்துன்பத்தை அடைந்தார்
என அவரது தோழரான எழுத்தாளர் வ.கீதா கூறுவார். ஒரு அசலான மார்க்ஸியவாதியை
நீங்கள் எஸ்.வி.ஆரின் பிம்பத்தில் காண முடியும்.
சீனாவில் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டுக் குளிர் காயலாம் என்று முயற்சி செய்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கைகளைப் பிசைந்து செய்வதறியாமல் நிற்கின்றன. சீனாவில் எந்த மதத்தையும் மக்கள் பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது. இங்கு புத்தமதம், தாவோயிசம், இஸ்லாம், கத்தோலிக்கம் மற்றும் கிறித்தவ சீர்திருத்த மதம் ஆகியவை இங்குள்ள பெரிய மதங்களாகும். எந்த மதத்தையும் சுதந்திரமாக தேர்வு செய்து கொள்ளவும், தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொள்ளவும், தாங்கள் இந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவும் சீன மக்களுக்கு உரிமை இருக்கிறது.
பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 10 கோடி இருக்கும் என்று அதிகாரபூர்வ புள்விவிபரம் தெரிவிக்கிறது. மத செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக 85 ஆயிரம் இடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சீனா-வத்திக்கான் உடன்பாடு வத்திக்கான் உடன்பாடு வத்திக்கான் உடன்பாடு சீனாவில் உள்ள கிறித்தவ தேவாலயங்களை நிர்வகிப்பது தொடர்பாக வத்திக்கானோடு நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் முதல் உடன்பாடு போடப்பட்டது. பின்னர் அந்த உடன்பாடு செப்டம்பர் 2021ல் புதுப்பிக்கப்பட்டது. அந்த உடன்பாடின்படி, ஆயர்களை நியமிக்கும் அதிகாரம் போப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தில் மக்கள் சீனம் தலையிடுவதில்லை என்பதற்கு இந்த உடன்பாடு அடையாளமாகச் சொல்லப்பட்டது. ஆனால், டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் இந்த உடன்பாட்டிலிருந்து வெளியேறுமாறுபோப்பை வலியுறுத்தி வந்தனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினை இப்பொழுது அரசியல் பிரச்சினையாகவும் மாற்றமடைந்திருக்கிறது. இதில் பொருளாதாரப் பிரச்சினை என்பது நீண்டகாலமாக உருவாகி வந்த ஒன்று. ஆனால் அரசியல் பிரச்சினை என்பது திடீரென திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று.
பொருளாதாரப் பிரச்சினையால் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது உண்மையே. உணவுப் பொருட்கள், எரிபொருள், சமையல் வாயு, மருந்துகள் என்பனவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், அவற்றின் விலைகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
இவற்றில் எரிபொருள், சமையல் வாயு, மருந்துகள் என்பனவற்றுக்கு இறக்குமதியில் தங்கியிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இவற்றை இறக்குமதி செய்வதானால் அமெரிக்க டொலர் வேண்டும். ஆனால் இலங்கைக்கு வழமையாக வந்த வெளிநாட்டு செலாவணியான டொலர் வருவது நின்று விட்டது. அதற்குப் பல காரணங்கள் இருப்பினும் டொலர் இல்லாமையால் பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. அதுவே இன்றைய மோசமான நெருக்கடி நிலைமைக்குக் காரணம்.
ஆனால் உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை இலங்கை திட்டமிட்டுச் செயற்பட்டிருந்தால், அவற்றுக்கு இறக்குமதியில் பெருமளவு தங்கியிருக்காமல் சுயசார்பாகவே ஓரளவு நிலைமையைச் சமாளித்திருக்க முடியும். ஆனால் அந்த வகையில் இதுவரை பதவியில் இருந்த அரசாங்கங்கள் (சிறீமாவோ பண்டாரநாயக்க அரசைத் தவிர) எதுவும் செயற்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு ராஜபக்சாக்கள் தான் முழுக்க முழுக்க காரணகர்த்தாக்கள் என்ற பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகளும் அவர்களுக்குச் சார்பான ஊடகங்களும் செய்து வருகின்றன. ஆனால் உண்மை என்ன?
இலங்கையின் பொருளாதார நெருக்கடி 1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி ஏற்பட்ட கையோடேயே ஆரம்பமாகிவிட்டது. 1970 – 77 காலகட்டத்தில் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சியில் இருந்த மக்கள் முன்னணி அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கையை ஜே.ஆர். அரசாங்கம் ‘திறந்த பொருளாதாரக் கொள்கை’ என்ற பெயரில் பதவிக்கு வந்ததும் உடனடியாக நீக்கிவிட்டது. அதன் காரணமாக கண்ட கண்ட பொருட்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றை இறக்குமதி செய்வதற்காக இலங்கை பெரும் தொகை பணத்தை (டொலர்களை) வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கியது. அந்தக் கடன் வாங்கும் கொள்கையை தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் மேற்கொண்டன.
சிறீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கை காரணமாக உள்ளுர் விவசாயம் செழிப்படைந்தது. அதனால் விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டினர். குறிப்பாக வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, கரட், பீட்ருட் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வந்த வட பகுதி விவசாயிகள் அதிக வருமானம் பெற்றனர்.
அதேபோல வெளிநாட்டுத் துணிகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதித்ததால், நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த (பெரும்பாலும் முஸ்லீம் மக்கள்) கிழக்கிலங்கை மற்றும் வட பகுதி மக்கள் அதிக நன்மை பெற்றனர். அந்தக் காலத்தில் பண்டத்தரிப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் உற்பத்தி செய்த தரம் வாய்ந்த காற்சட்டைத் துணியை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அதுமாத்திரமின்றி, சிறீமாவோ அரசு மேற்கொண்ட இறக்குமதிக் கட்டுப்பாட்டுக் கொள்கையால் கடல் உணவு உற்பத்தியும் அதிக அளவில் பெருகி மீனவ சமூக மக்களும் பல நன்மைகளைப் பெற்றனர்.
இன்னொரு புறத்தில் உள்நாட்டு சிறு தொழில் உற்பத்திகளும் பல்கிப் பெருகின.
இந்த நிலைமை உருவாவதிற்கு அன்றைய அரசின் முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகளே அடிப்படைக் காரணங்களாக இருந்தன. ஏனெனில் அந்த அரசின் பங்காளிகளாக ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வில் வளர்ந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், சோசலிசக் கொள்கைகளைக் கொண்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி என்பனவும் இருந்தன.
ஆனால், 1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர். தலைமை தாங்கிய ஐ.தே.க. அவ்வாறானதொரு கட்சி அல்ல. அது முழுக்கு முழுக்க அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவான, உள்நாட்டில் பெரும் முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு கட்சி. எனவே அக்கட்சி தேசிய மற்றும் மக்கள் நலன்களை விட, மக்களைச் சுரண்டுகின்ற உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகளின் நலன்களையே பாதுகாத்து நின்றது. அதன் காரணமாகவே 77 இல் ஜே.ஆர். அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் நவ தாராளவாதக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டின் அற்ப சொற்ப சுயசார்புப் பொருளாதாரத்தையும் இல்லாதொழித்தது. அதன் காரணமாக உள்ளுர் உற்பத்தி படுத்து, வெளிநாட்டுக் கடன்களும் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த நவ தாராளவாதக் கொள்கையைக் காட்டிக் காப்பதற்கே 1978 இல் ஜே.ஆர். அரசு நிறைவேற்று ஜனாதிபதி முறையுள்ள எதேச்சாதிகார அரசியல் சட்டத்தையும் நிறைவேற்றியது.
ஜே.ஆருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஆர்.பிரேமதாச, சந்திரிக குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச போன்றோர் உட்பட இன்றைய கோத்தபாய ராஜபக்ச வரை, ஜே.ஆர். கொண்டு வந்த நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையையோ, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கொண்ட அரசியல் அமைப்பையோ மாற்ற முயற்சிக்கவில்லை. அது மட்டுமின்றி, நாட்டின் இன்னொரு முக்கியமான தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாகவும் ஆட்சியில் இருந்த எல்லா அரசாங்கங்களும் ஒரே விதமான கொள்கையையே பின்பற்றி வந்துள்ளன. இந்த நிலைமைகளின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகும்.
எனவே, இன்றைய நெருக்கடிக்கு ராஜபக்சாக்கள்தான் காரணம் என்ற கருத்து மிகவும் தவறானதாகும். ஆனால் இந்த நெருக்கடி உருவானதில் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு. ஏனெனில் மகிந்த ராஜபக்ச 10 ஆண்டுகள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்துள்ளார். இப்பொழுது அவரது தம்பி கோத்தபாய ராஜபக்ச 3 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருக்கின்றார். ஆனால் இவர்கள் இருவருக்கும் மக்கள் செல்வாக்கும், பாராளுமன்றப் பெரும்பான்மையும் இருந்துள்ளது. இவர்கள் நினைத்திருந்தால், நாட்டில் இப்படியான நிலைமைகள் உருவாகலாம் என்பதை முன்கூட்டியே உய்த்துணர்ந்து பொருளாதாரத் துறையிலும் அரசியல் அமைப்புத் துறையிலும் அடிப்படையான மாற்றங்களைச் செய்திருக்கலாம்.
உலக அரங்கில் அமெரிக்க ஆதிக்கத்தை வலுப்படுத்தவும்,எழுச்சி பெற்று வரும் சீனப் பொருளாதாரத்தை சிதைக்கவும் அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தோ பசிபிக் பொருளாதார அமைப்பு என்ற கூட்டணியால் இந்தியா பெறப் போகும் பலன் என்ன? பாதகம் என்ன? என ஒரு அலசல்!
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அரசும் அதன் அதிபர் ஜோ பைடனும் ஏற்படுத்த இருக்கும் இந்தோ பசிபிக் பொருளாதார அமைப்பு -Indo Pacific Economic Framework- என்ற கட்டமைப்பில் இந்தியாவும் இணையும் என்று நமது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பத்து தினங்களுக்கு முன்பு கடந்த மே 1-2 தேதிகளில் ஜெர்மனி சென்ற மோடி “உலகின் பசிப்பிணியை போக்க இந்தியா உதவும் , பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கோதுமை போன்ற உணவு தானியங்களை இந்தியா அளிக்கும் ” என்று அடித்துக் கூறினார் ; ஆனால் நடந்தது என்ன? அறிவித்த சில நாட்களில்பல ஆயிரம் டன் கோதுமை ஏற்றுமதிக்காக துறைமுகங்களை அடைந்த நிலையில் நமது பிரதமர் மோடி “கோதுமை ஏற்றுமதிக்கு தடை” என்று தடாலடி அறிவிப்பு செய்தார்.
வீட்டில் தனது பாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு, அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் 19 குழந்தைகளையும், ஓர் ஆசிரியரையும் சுட்டுக் கொன்ற அமெரிக்க இளைஞனின் செயல், உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாத நாடு எதுவென்று கேட்டால் நாம் எதையெதையோ யோசிப்போம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அது அமெரிக்காவைத் தவிர வேறில்லை.
அதற்கு மிகமுக்கியமான காரணம் என்னவென்றால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்லவேண்டும் என்றால், காவல்துறையினரும் துப்பாக்கியைக் கையில் எடுக்கலாம், காவல்துறையில் இல்லாத மக்களில் ஒருவரும் துப்பாக்கியைத் தூக்கலாம்.
ஆக கைது, விசாரணை, வழக்கு, நீதிமன்றம், தீர்ப்பு, நீதி, நியாயம் எதுவுமே தேவைப்படாமல் அதிகாரம் படைத்த எவரும் துப்பாக்கியை எடுத்து அவரவருக்கான (அ)நியாயத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
அமெரிக்காவின் மக்கள் தொகை தோராயமாக 33 கோடி. அதேவேளையில் அமெரிக்காவில் இருக்கும் ஒட்டுமொத்த துப்பாக்கிகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா? ஏறத்தாழ 40 கோடி. காவல்துறையினரும் இராணுவத்தினரும் வைத்திருக்கும் துப்பாக்கிகளை இதில் கணக்கில் சேர்க்கவில்லை. ஆக, 33 கோடி மக்களின் கைகளில் 40 கோடி துப்பாக்கிகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்திய சூழலில் வைத்து இதனை யோசித்தால் அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? நம்முடைய பெரும்பாலானோரின் வாழ்க்கை முழுவதிலும் நாம் ஒரேயொரு துப்பாக்கியைக் கூட தொட்டுப்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் இத்தனை கோடி துப்பாக்கிகள் மக்களின் வீடுகளில் சர்வசாதாரணமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
அதனால் தான் ஒரு வீட்டுத் தோட்டத்திலிருந்து ஒரு செடி வளர்ந்து பக்கத்துவீட்டில் நுழைந்துவிட்டால் கூட கோபப்பட்டு துப்பாக்கி எடுத்து சுட்டுத்தள்ளும் நிகழ்வெல்லாம் நடக்கிறது அமெரிக்காவில். தங்கள் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளை வைத்தே தங்களுக்குத் தேவையான தீர்வுகளைக் கண்டடைந்துகொள்வதுமாக அவர்கள் நினைக்கிறார்கள்.
கடந்தகாலங்களில் கறுப்பின மக்களை அடிமைகளாக வைத்திருந்து வேலை வாங்கிய வெள்ளையின அமெரிக்கர்களின் கைகளில் எப்போதும் துப்பாக்கிகள் இருந்தன. கருப்பின மக்கள் தப்பித்து ஓடிவிடக்கூடாது என்பதற்காகவும், அப்படியே ஓடமுயற்சி செய்தால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதற்காகவும், அதையும் மீறி ஓடினால் அவர்களை சுட்டுவீழ்த்துவதற்காகவும் துப்பாக்கிகளை வெள்ளையின ஆதிக்கவெறியர்கள் வைத்திருந்தனர். அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டபின்னரும், சுதந்திரமாக சுற்றும் கருப்பின மக்கள் எப்போது வேண்டுமென்றாலும் தங்களைத் தாக்கலாம் என்று நம்பி, ஏற்கனவே வைத்திருந்த துப்பாக்கிகளை கீழேபோடாமல் தொடர்ச்சியாக அவற்றை வைத்துக்கொண்டனர் வெள்ளையின அமெரிக்கர்கள். அதனால் தான் க்ளூ க்ளக்ஸ் க்ளான் போன்ற வெள்ளையின வெறி அமைப்புகள் ஏராளமான துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு கண்ணில்படுகிற கருப்பின மக்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர்.
ஆனால் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் இன்றைய ஜனநாயக உலகிலும் கூட யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்பதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது தானே. ஆனால் அமெரிக்காவுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதால் துப்பாக்கிக் கலாச்சாரம் இன்றும் தொடர்கிறது.
அதிலும், மாஸ் ஷூட்டிங் என்றழைக்கப்படுகிற துப்பாக்கிச்சூடுகள் மிகப்பிரபலமாகி இருக்கின்றன. அதென்ன மாஸ் ஷூட்டிங்? மக்களில் ஒருவரோ ஒரு குழுவோ இணைந்து துப்பாக்கிகளை ஏந்திக்கொண்டு நான்கிற்கும் மேற்பட்ட மக்களைச் சுட்டால் அதற்கு மாஸ் ஷூட்டிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதே மாஸ் ஷூட்டிங்கை ஒரு பள்ளிக்கூடத்தில் போய் நடத்தில் அதற்கு “ஸ்கூல் ஷூட்டிங்” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். குற்றத்தைத் தடுக்கிறார்களோ இல்லையோ, பேரெல்லாம் நன்றாக வைக்கிறார்கள்.
2021 இல் மட்டும் 45000 பேர் அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் ஒன்றுகூட காவல்துறையினரோ இராணுவத்தினரோ சுட்டுக்கொல்லப்பதல்ல. அந்த புள்ளிவிவரம் தனிக்கதை. அதே 2021 இல் எத்தனை துப்பாக்கிகள் விற்பனையாகி இருக்கின்றன தெரியுமா? 2 கோடி துப்பாக்கிகள். ஆக, ஒவ்வொரு ஆண்டும் அதிகமான துப்பாக்கிகள் விற்பனையாவதும், ஆயிரக்கணக்கான மக்கள் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு சாவதும் தான் நடக்கிறது. துப்பாக்கி வியாபாரிகள் பலனடைவதும், துப்பாக்கி முனையில் தொடர்ச்சியாக அடிமைத்தனம் நிலைநிறுத்தப்படுவதும் தான் அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரத்தின் மையப்புள்ளி.
நமக்கெல்லாம் ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றி தான் தெரியும். ஆனால் வெள்ளையின பயங்கரவாத அமைப்புகள் அதைவிடவும் மோசமான பயங்கரவாதிகள் என்பதை நமக்கு சொல்லாமல் உலக ஊடகங்கள் தவிர்க்கின்றன. அமெரிக்காவில் அவ்வப்போது நடக்கிற மாஸ் ஷூட்டிங் பலவற்றையும் இந்த வெள்ளையின வெறியர்கள் தான் நடத்துகின்றனர். கடந்த மாதம் அமெரிக்காவின் பஃபலோ நகரின் சூப்பர்மார்க்கட் ஒன்றில் நுழைந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனை நடத்தியதும் அதே வெள்ளையின வெறியர்கள் தான். அதேபோல கடந்த ஆண்டும் அமெரிக்க மசூதிகளில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கென்றே பிரத்யேகமாக இயங்கும் தேவாலயங்களில் கூட புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள் வெள்ளையின வெறிக்கூட்டத்தினர். அவர்களைப் பொறுத்தவரையில் ஜீசஸும் தேவாலயங்களும் அமெரிக்காவும் முழுமையாக வெள்ளையினத்தவருக்கு மட்டும் தான் சொந்தமாம்.
இப்படியாக சராசரியாக ஆண்டுக்கு 45000 பேர் கொல்லப்படுவதில் 60% த்திற்கும் மேற்பட்டோர் கறுப்பின மக்கள் தான். அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் வெறுமனே 13% மக்களாக இருக்கிற கறுப்பினத்தவர்கள் தான் ஒட்டுமொத்த துப்பாக்கிச்சூட்டில் 60% கொல்லப்படுகிறார்கள்.
இது போதாதென்று, அமெரிக்க வாழ்க்கையினால் மன அழுத்தம் பெற்றவர்கள், தனிநபர் பிரச்சனையில் இருப்பவர்கள், வாழ்க்கையே வெறுத்துப்போனவர்கள், தோல்விகளை சந்திப்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் துப்பாக்கி தான்.
அப்படியாக நேற்று டெக்சாசில் ஒரு 18 வயது இளைஞன் துப்பாக்கிய எடுத்து, தன் பாட்டியை சுட்டுவீழ்த்திவிட்டு, அப்படியே கார் போன போக்கில் சென்று ஒரு பள்ளியில் நிறத்த, உள்ளே நுழைந்து 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றுபோட்டிருக்கிறான். அமெரிக்க காவல்துறை இப்படியான எல்லா நிகழ்வுகளிலும் செய்வதென்ன தெரியுமா? சம்பவ இடத்திலேயே கொலைகாரர்களைக் கொன்றுவிடுவது தான். ஆக துப்பாக்கியால் துவங்குவதை துப்பாக்கியால் அன்றே முடித்துவிடுவார்கள். மீண்டும் அடுத்த துப்பாக்கிச் சூடு வேறொரு ஊரில் நடக்கும். மீண்டும் இதே கதை தான்.
துப்பாக்கிகளை முழுவதுமாகப் பறித்து, அன்பை விதைப்பது தான் இதற்கெல்லாம் தீர்வு என்று அமெரிக்க அரசுக்கு யார் எடுத்துச் சொல்வது?
உலகம் முழுக்க ஆயுதத்தைத் தூக்கிச்சென்று யேமனிலும், சிரியாவிலும், ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும், தென்னமெரிக்காவிலும் அனுதினமும் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றுபோட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்க அரசிடம் துப்பாக்கிகளைக் குறைக்கச் சொல்லி எப்படிப் பாடமெடுப்பது?
அதனால் தான் சொல்கிறேன். உலகின் மிகமோசமான பயங்கரவாத ஆட்சி நடப்பது அமெரிக்காவில் தான். அதனை சரிசெய்வதற்கு மக்களில் இருந்து தான் ஒரு புதிய அரசியல் மாற்றம் வந்தாகவேண்டும். இல்லையேல் அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல் உலக மக்களும் அவர்களின் ஆயுதங்களுக்கு தொடர்ச்சியாக பலியாகிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
Many in Kashmir believe that the decision to remove Sheikh Abdullah’s legacy is rooted in the divisive politics of the BJP, which is aimed at disempowering the people of Kashmir.
Image Courtesy: Wikimedia Commons
Srinagar: Authorities in Jammu and Kashmir on Monday announced that the police medal for gallantry and meritorious service will no longer bear the image of Sheikh Mohammad Abdullah and will be replaced with the national anthem, a move that many see as part of the Bharatiya Janata Party (BJP)-led government’s acrimony against the region’s famed political icon.
“It is hereby ordered that in modification to the Para 4 of the Jammu & Kashmir Police Medal Scheme, the Sher-i-Kashmir Sheikh Mohammad Abdullah embossed on one side of the medal shall be replaced with ‘The National Emblem of Government of India’ and the other side inscribed with the J&K State Emblem shall be inscribed as “Jammu and Kashmir Medal for Gallantry” and “Jammu and Kashmir Police Medal for Meritorious Service” in case of Gallantry/Meritorious Medal, as the case may be,” the government said in an order dated May 23.
Lucknow: No new madrassa will be given a grant by the Uttar Pradesh government, the state cabinet has decided.
UP minister of state for minority welfare Danish Azad Ansari told PTI on Wednesday that the decision was taken at the state cabinet meeting chaired by Chief Minister Yogi Adityanath a day earlier.
The minister said that the madrassas currently receiving government grants will continue to get it, but no new beneficiary will be included in the list.
The decision came days after the singing of the national anthem was made compulsory at all madrassas in the BJP-ruled state.
Representational image. | Image courtesy: Wikimedia Commons from newsclick.ind
Ram Dhani is angry and frustrated. “Why are you asking me to lower the rates? If you want fair prices, you should go to the government, which is busy in communal politics,” is his refrain when asked by customers to lower the prices of the vegetables he sells.
Dhani is one of the several angry voters in Prime Minister Narendra Modi’s home turf of Banaras and its peripheral districts who are livid asconsumer price index-basedinflation in April spikedto an eight-year high of 7.79% and see through the Bharatiya Janata Party’s (BJP) communal agenda.
ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவரான “தெணியான்”என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் 22.05.2022 அன்று மாலை வல்வெட்டித்துறை – பொலிகண்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன், இலக்கிய உலகில் பிரவேசித்ததும் ‘தெணியான்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.
1953 இல் ஒரு பெரிய ஊர்வலத்தில் என்.எம். பெரேரா உரையாற்றுகிறார்
1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தையும் ஊடகங்களில் ஒப்பிட்டு எழுதும் விபரீதமொன்று நிகழ்ந்து வருகின்றது. அன்று ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராகவே ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இன்றோ, ஏகாதிபத்திய சக்திகள் இலங்கையைத் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரவே இளைஞர்களைத் தூண்டி விட்டிருக்கின்றனர். அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இலங்கையில் ஆட்சியிலமர்வதற்காக தற்போதைய போராட்டத்தை ஆதரிக்கின்றனர்.இந்த உண்மையைத் தெரியாமல் இரண்டு போராட்டங்களையும் பலர் ஒப்பிட்டு வருகின்றனர்.
1953 ஆம் ஆண்டு ஹர்த்தால் பற்றிய பூரண விளக்கத்தினை அறிந்து கொள்வதற்காக, ‘வானவில்’ இதழ் 104 இல் வெளிவந்த இக்ககட்டுரையை பிரசுரம் செய்கின்றோம்.
இலங்கை 1948 பெப்ருவரி 4ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கையின் முதலாளித்துவ சுதேச ஆட்சியாளர்களுக்கு எதிராக காலத்துக்குக் காலம் பல மக்கள் போராட்டங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.
அத்தகைய போராட்டங்களில் மிகப் பெரியதும், இலங்கையின் வரலாற்றில் தீர்க்கமான தாக்கத்தை விளைவித்ததுமான போராட்டம் என்றால், அது 1953 ஓகஸ்ட் 12ஆம் திகதி நடைபெற்ற மாபெரும் ஹர்த்தால் போராட்டமே.
காலிமுகத்திடலில் அசௌகரியத்தை விரும்பாத உயர் மத்திய வர்க்கம் எரிவாயு, பெற்றோல் இல்லாமையால் போராட புறப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னதாகவே மத்திய கிழக்கு நாடுகளில் கணணி இளைஞர்கள் அந்நாடுகளில் இடம்பெற்று வந்த லஞ்சம், ஊழல் தொடர்பில் முறுகல் நிலையில் இருந்தனர். அதற்குப் பொறிதட்டும் வகையில் 2010 டிசம்பரில் ருனிசியாவில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவரிடம் பொலிசார் லஞ்சம் கேட்டு அவமானப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அத்தொழிலாளி தீக்குளித்து மரணித்தார். அத்தொழிலாளி தன் மீது வைத்த தீ, மத்திய கிழக்கில் பல நாடுகளுக்கும் பரவியது. பரப்பப்பட்டது. போராட்டங்கள் வெடித்தது.
புரட்சி வெடித்துவிட்டதாக, நவகாலனித்துவம் சரிந்து விட்டதாக கீ போட் மார்க்ஸிட்டுக்கள் ‘தண்ணி அடிக்காமலேயே உளற ஆரம்பித்தனர். கட்டுரை, கட்டுரையாக எழுதித் தள்ளினர். ஒருபடி மேலே போய் முதலாளித்துவத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டதாகவும் எழுதினர். ருனிசீயா, எகிப்து, யேமன், லிபியா என சிரியாவுக்கும் பரவிய இப்புரட்சியில் அமெரிக்க – பிரித்தானிய முதலாளித்துவக் கூட்டும் குளிர்காய்ந்தது. இந்த ‘அராபிய புரட்சி’யில் 180,000 பேர் உயிரிழந்தனர். ஆறு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். ருனிசியா தவிர்ந்த அரப் ஸ்பிரிங் நடைபெற்ற நாடுகள், அவை முன்னிருந்த நிலையைக் காட்டிலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டன. வாழ்நிலை மிகக் கீழ்நிலைக்கு சென்றது மட்டுமல்ல, இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் அவை முன்னைய நிலைக்கு வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
சுழற்றி அடிக்கும் பொருளாதார நெருக்கடி- கடன் சுமை: எச்சரிக்கும் உலக வங்கி
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலையில், இதே போன்ற நெருக்கடியை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக வங்கி, ஐ.நா. போன்றவை எச்சரித்துள்ளன. உணவுத்தட்டுப்பாடு மட்டுமின்றி கடன் சுமையும் இந்த நாடுகளை மூழ்கடித்து வருகின்றன.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மேற்குக் கரை பகுதிகளில் மணல் மேடான சாலையில் சரிந்து கிடத்த ஷிரீனை காக்கும்படி அருகிலிருக்கும் மற்றொரு பெண் பத்திரிகையாளர் கதறுகிறார். அவர் ஷிரீன் உடல் அருகே செல்லும் போதெல்லாம் துப்பாக்கிச் சூடு சத்தம் தீவிரமாக கேட்கிறது. இதனைக் கண்ட அப்பகுதி பாலஸ்தீன இளைஞர் ஒருவர் ஷிரீனின் உடல் அருகே செல்கின்றார். பின்னர் அருகிலிருந்து பெண் பத்திரிகையாளர்களை அங்கிருக்கும் தடுப்பு சுவர் ஏறி தப்பிக்கச் சொல்கிறார். பின்னர் துப்பாக்கிச் சத்தங்களுக்கு மத்தியில் குனிந்தபடி ஷிரீனின் உடலை தாக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்கிறார்.
இப்போது நான் கூறிய இந்தக் காட்சிகள்தான் அல் ஜசீரா (Al Jazeera) பத்திரிகையாளர் ஷிரீனின் கடைசி நிமிடங்கள்.
இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஜெனின் பகுதியில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தபோது ஷிரீன் 11.05.2022 அன்று இஸ்ரேல் ராணுவத்தால் தலையில் சூடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். போர் பதற்றம் அதிகமிக்க இடங்களில் பத்திரிகையாளர்கள் அணியும் ஹெல்மேட், கவச உடை என அனைத்தையும் ஷெரீன் அணிந்திருக்கிறார். அவரது கவச உடையில் ’PRESS’ என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதை எல்லாம் மீறியே ஷிரீன் கொல்லப்பட்டிருக்கிறார். உண்மையில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அத்துமீறலை தகவல்களை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றதற்காகவே ஷிரீன் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் மற்றொரு பத்திரிகையாளரான அலி அல் சாமம்வுதியும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இஸ்ரேல் நடத்திய இந்த படுகொலை சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களிடத்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இஸ்ரேலுக்கு வலுவான கண்டனங்களும் எழுந்து வருகின்றனர்.
ஷிரீனின் உயிரிழப்புக்கு இதுவரை இஸ்ரேல் சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. மாறாக நடந்த சண்டையில் ஷிரீன் பாலஸ்தீனத்தாலும் சுடப்பட்டிருக்கலாம் என்ற பொறுப்பற்ற பதிலையே எப்போதும் போல் இஸ்ரேல் வழங்கி இருக்கிறது. மேலும் ஷிரீனின் மரணம் குறித்து கூட்டு விசாரணைக்கு இஸ்ரேல் அனுமதி கோரி இருந்தது. ஆனால் இதனை பாலஸ்தீனம் மறுத்துவிட்டது.
யார் இந்த ஷிரீன் அபு அக்லே: ஷிரீன் ஜெருசலேமில் 1971 ஆம் ஆண்டு பிறந்தார். ஜோர்டானில் உள்ள யார்மவுக் பல்கலைகழகத்தில் இதழியல் பயின்றவர். இதழியல் முடிந்தவுடன் 1997 ஆம் ஆண்டு அல் ஜசீரா செய்தி நிறுவனத்தில் இணைகிறார்.
பாலஸ்தீன – அமெரிக்கரான ஷிரீன் அபு அக்லே 25 ஆண்டுகளாக அல் ஜசீரா செய்தி நிறுவனத்தில் பாலஸ்தீனத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்தவர். 2008, 2009, 2012, 2014, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த காசா போரின் போது அங்கிருந்து செய்திகளை வழங்கியவர். தற்போது 51 வயதான ஷிரீன் பாலஸ்தீன மக்களின் குரல்களை தொடர்ந்து தைரியமாக பதிவு செய்து வந்தவர்.
2000 ஆம் ஆண்டிலிருந்து ஷிரீன் அபு அக்லே உட்பட இதுவரை 45 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
ஷிரீன் மரணமும், பாலஸ்தீனர்களும்: ஷிரீனின் மரணம் பாலஸ்தீனர்களின் நம்பிக்கையை சரித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் சொந்த இடங்களிலிருந்து துரத்தப்பட்ட மக்களை ஓடி ஓடி சென்று பதிவுச் செய்தவர் ஷிரீன். குறிப்பாக பாலஸ்தீன பெண்களின் வேதனைகளை உலகின் முன் நிறுத்தியதில் ஷிரீனுக்கு முக்கிய பங்குண்டு. ஷிரீனின் இந்த மரணம் பாலஸ்தீன பெண்களை கைவிடப்பட்டவர்களாக உணரச் செய்துள்ளது என்றால் அவை மிகையல்ல.
ஷிரீன் கொல்லப்பட்ட இடத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.காசாவில் பல்வேறு இடங்களில் அவருடைய ஓவியங்கள் வரைப்பட்டுள்ளன. ஷிரீனின் இறுதி ஊர்வலத்தில் நீதி நிச்சயம் பெறப்படும் என்று அந்த இளைஞர் கூட்டம் உறுதி மொழி எடுக்கிறது. அவரது பணியை தொடருவோம் என பாலஸ்தீன் பத்திரிகையாளர்கள் கோஷமிடுக்கின்றனர். இவற்றுக்கு நடுவேதான் ஷிரீனின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்தது. ஷிரீனின் உடல் தாங்கிய சவப்பெட்டியை தாங்கிக் கொண்டிருந்தவர்களை நோக்கியும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஷிரீனின் உடலை தாங்கிய சவப்பெட்டியும் சரிந்தது…
சவுதியின் பத்திரிக்கையாளர் ஜமால் காஷோகியின் மரணம் சர்வதேச அளவில் எத்தகைய அதிர்வலையை ஏற்படுத்தியதோ அதே அதிர்வலையை ஷிரீனின் மரணமும் எற்படுத்தி இருக்கிறது.
”நான் மக்களுடன் நெருக்கமாக இருக்கவே பத்திரிகை துறையை தேர்வு செய்தேன். யதார்த்தத்தை மாற்றுவது எளிதல்ல, ஆனால் குறைந்த பட்சம் மக்களின் குரலை உலகிற்கு கொண்டு வர முடியும். நான் ஷிரீன் அபு அக்லே.” ஓவ்வொரு முறையும் செய்தியை நிறைவு செய்யும்போது ஷிரீன் அபு அக்லே கூறிய வார்த்தை இவை.
தனது மரணத்தின் மூலமும் ஷிரீன் இதனையே நிகழ்த்தி இருக்கிறார்.
PRESIDENT AND NEW PRIME MINISTER NEED TO ACT URGENTLY AND CONSENSUALLY TO OVERCOME NATIONAL CRISIS
Sri Lanka has a new prime minister but there is controversy over the choice. There is criticism that President Gotabaya Rajapaksa continues to use his presidential powers in an arbitrary manner in a continuation of practices that have led to the present crisis. In facing the unprecedented economic and political crisis that grips the country, and widespread public protests, President Rajapaksa pledged to set up an interim government in consultation with party leaders in parliament. However, he did not do so but appointed UNP leader Ranil Wickremesinghe as Prime Minister much to the consternation of all opposition political parties and thereby ended efforts of other parliamentarians to form a national unity government.
----------
The new prime minister brings to his job many years of experience as a five-time prime minister with an unbroken record of more than four decades in parliament. However, he has a very challenging task ahead of him. As the prime minister’s party has only a single seat in parliament, he needs to work in parliament with those from other political parties who are professionals and have a different ethos and have different political interests, but also have the welfare of the country at heart. It must be remembered that this is not a usual government but one established for the revival of the country from moral and economic collapse. Thus, it needs to be very different in those it chooses to hold public office whether from within or from outside parliament.
The National Peace Councilwishes Prime Minister Wickremesinghe success in restoring economic and political stability and emphasises that facilitating the restoration of the broken trust between the government and people should be one of his important objectives. It is an opportunity given to the new prime minister to prove himself beyond parochial and familial affiliations and politics, as his success or failure will determine the future of Sri Lanka. For this he needs to build a consensus within parliament that includes the opposition political parties. It is our wish that all support him in this common task of recovery.
The National Peace Council also highly appreciates the commitment of the civic and political activists who have been engaging in public protest and advocacy at Galle Face and elsewhere for over a month without a break, and whose sacrifice has made political change possible. We denounce the use of violence by government-sponsored goons and by anti-government groups and individuals. The killing of people and the torching of buses and private property, including hotels that gave employment to hundreds of people, is especially unacceptable in a time of economic downturn. We are mindful that the resignation of former Prime Minister Mahinda Rajapaksa was forced upon him due to the attack on peaceful protestors by local politicians from the ruling party who were instigated to violence. It would also be important to ascertain who else was responsible for fomenting the violence and hold them accountable before the law.
We call for a structural transformation within the country in which corruption, bigotry and violence is made impermissible. We also call upon President Gotabaya Rajapaksa to honor the commitments he has recently made. The first of these would be to repeal the 20th Amendment without delay and within the next two weeks and transfer executive powers to parliament. We also call for a short time frame to be announced by the president and prime minister regarding the abolishing of the presidency and the holding of fresh general elections.
Governing Council
The National Peace Council is an independent and non partisan organization that works towards a negotiated political solution to the ethnic conflict in Sri Lanka. It has a vision of a peaceful and prosperous Sri Lanka in which the freedom, human rights and democratic rights of all the communities are respected. The policy of the National Peace Council is determined by its Governing Council of 20 members who are drawn from diverse walks of life and belong to all the main ethnic and religious communities in the country.