Paarvaikal-எஸ்.எம்.எம்.பஷீர்

 DAN தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை (25-11-2011) இடம்பெற்ற பார்வைகள் நிகழ்ச்சியில் கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்ற நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கைகள் சம்பந்தமாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன, இந்த நல்லிணக்க நடவடிக்கைகள் சம்பந்தமாக எமது நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட பார்வைகள் நிகழ்ச்சியை நீங்கள் இங்கு காணலாம்


கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

நிறைவேற்று ஜனாதிபதியின் ஆணையும் நீர்த்துப்போன கள்ளியங்காட்டு முஸ்லிம்களின் பிரச்சினையும்





எஸ்.எம்.எம்.பஷீர்

"சுவாமி விபு லாநந்தர் யாழிசைநூ லோலிக்கும்
மஞ்சாரும் பொழில்மட்டு மாநாட்டில் நிலைக்கும்
வாழ்வுடையோர்க் கவர்மனம்போல் மனவளமும் இனிதே"

                             -புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை-



மட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத்தலமான பிர்தௌசியா பள்ளிவாயல் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக அங்கு ஒரு ஹிந்து தியான மண்டபம் பிரம குமாரிகள் ராஜ யோக நிலையம் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டு இரு வாரங்கள் ஓடிவிட்டன. அது கிளப்பிய சலசலப்பு ஓய்ந்து விட வேண்டும் என்று பலர் எண்ணுவது , கருத்துப்பகிர்வு செய்வது , அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்றவகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அங்கு காலங்காலமாக வாழ்ந்த சிலர் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் ஓயாமல் தமது உரிமையை நிலைநாட்ட உறுதியாக செயற்பட்டு வருகின்றனர். ஒரு சமூகத்தின் வழிபாட்டுத்தலம் , ஒரு சமூகத்தின் வரலாறு அடிச்சுவடு தெரியாமல் கள்ளியங்காட்டில் அழிக்கப்பட்டிருக்கிறது,

Demolished Kalliyankaadu (Muslim Colnony )Mosque - Masjithul Firthoz -Batticaloa


THEN AND NOW!! (அன்றும் இன்றும்!!)


அன்றைய  மஸ்ஜிதுல் பிர்தௌசியா  தகர்த்தெறியப்பட்டு இன்று அப்பள்ளிவாயல் இருந்த இடத்தில் பிரேம குமாரி ராஜயோக நிலையம்  கட்டப்பட்டு 9/11/2011 அன்று திறக்கப்பட்டுள்ளது !!!.

 
The Masjithul Firthousiya was demolished to build  a Preama Kumari Rajayoga Centre in its place. !!



 Masjithul Firthoz  (Kalliyankaadu -Muslim Colony)




மஸ்ஜித் எல்லை சுவர்
(Masjith Boundary wall)
Quran Madrasaa Moulavi with students (At Mosque )
( குரான் போதிக்கும் மதரசா-மௌலவியும் மாணவர்களும் )








NOW 2011
Prema Kumari Rajayoga Centre built over the demolished Mosque
பிரேம குமாரி ராஜயோக நிலையம் -கள்ளியங்காடு மட்டக்களப்பு    











பிர்தௌஸ் பள்ளிவாசல் மீதெழுப்பிய பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம்-முஸ்லிம் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் அரங்கேற்றம் !




எஸ்.எம்.எம்.பஷீர் 


"தவறான புரிந்துணர்வுகளால் துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகின்றன. உண்மையிலேயே அன்பானது தூய உணர்வுகளால் நிறைந்தது. அங்கு எதிர்பார்ப்புகளோ தன்னலமோ, சார்புகளோ, வரையறைகளோ இருக்க முடியாது. ஆகவே அன்பானது குறைகளைப் பார்க்காது பொது நலம் கருதுகின்ற எல்லையற்ற தூய உணர்வுகளால் நிறைந்தது. அன்பை நாம் வழங்கும்போது தான் அதிகரிக்கின்றது. இதனால் நாம் துன்பப்படவோ நம்மால் பிறர் துன்பப்படவோ மாட்டார்கள்.
                                                                - பிரம்மகுமாரி திருமணி- .

கோட்டமுனையில் வாழ்ந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் நகருக்குள் உள்ள இடப்பற்றாக்குறை , அங்கே காணிகள் வாங்குவதில் உள்ள பொருளாதார இயலாமை காரணமாக அரச காணியான கள்ளியங்காடு எனும் பகுதியில் காடு வெட்டி குடியேறிய பகுதிதான் முஸ்லிம் கொலனி எனப்பட்ட கள்ளியங்காடு. கள்ளி மரங்கள் நிறைந்திருந்ததால் இப்பகுதி கள்ளியங்காடு என்ற பெயர் பெற்றிருந்தாலும் முஸ்லிம்களின் குடியேற்றத்தின் பின்னர் முஸ்லிம் தமிழ் சமூகம் அங்கு குடியிருந்தபோது முஸ்லிம் கொலனி என்றே பரவாக அறியப்பட்டு வந்தது. எனினும் பல நூற்றாண்டுகளாக மட்டக்களப்பு புளியந்தீவு, கோட்டமுனை பகுதிகளில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களின் மையவாடியாக கள்ளியங்காடு விளங்கியது, அதுபோலவே ஹிந்துக்களின்  மயானம் , கிறிஸ்தவர்களின் சேமக்காலை ஆகியனவும் அருகருகே கள்ளியங்காட்டில் அமைந்துள்ளன. இங்கே மட்டக்களப்பில் வாழும் மூன்று பிரதான மதத்தை சேர்ந்தோரும் இறந்து போனபின் " சமரசம் " காணும் இடங்கள் அமைந்திருப்பதும் இப்பிரதேசத்தின்ஒரு தனித்துவமாகும். இந்த பள்ளிவாயல் அரசினர் வைத்தியசாலையில் வெளியூரிலிருந்து வந்து வைத்தியம் பெறும் முஸ்லிம் நோயாளிகள் மரணித்தாலோ அவர்களும் அங்கே அடக்கபடுவத்தும் , அப்பள்ளியிலே இறுதி பிரார்த்தனை நடைபெறுவதும் வழக்கமான நடைமுறையாகும். மேலும்  மட்டக்களப்பு புகையிர நிலையத்துக்கு அருகாமையில் இருப்பதால் முஸ்லிம் பயணிகள் பலர் தங்குவதற்கும் இப்பள்ளிவாயல் உதவியிருக்கிறது.  


“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” ( தொடர்: எட்டு)



                                                                              
 எஸ்.எம்.எம்.பஷீர் 


நாங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால் நாங்கள் அனுபவத்திலிருந்து  ஒன்றையும் கற்றுக் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான்”     - சின்னு அச்சபே -

”The only thing we have learnt from experience is that we learn nothing from experience.”  ( Chinua Achebe)



ஹிஸ்புல்லாவின் நாடாளுமன்ற செயலாளர் இப்திகார் செய்த போலீஸ் முறைப்பாடும் அதனை தொடர்ந்த சட்ட நடவடிக்கைகளும் சடுதியாக நிறுத்தப்பட்டுப் போயின. வழக்கும் கைவிடப்பட்டுப் போயிற்று. இந்நிலையில் முஹைதீன் அப்துல் காதர் ஏமாற்றமடைந்தார். ஹிஸ்புல்லாவிற்கு எதிரான ஒரு துரும்பாக கருதிய குற்றவியல் வழக்கு கைநழுவிப் போனதால் , அஸ்ரப் மீதும் கட்சி மீதும் அப்துல் காதர் நபிக்கை இழந்து போனார். ஆகவே அவரின் ஊர்க்காரர்கள் கட்சியை விட்டு விலகி அஸ்ரபுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று மொஹிதீனுக்கு ஆலோசனை வழங்கினர். தனது மக்களின் அரசியல் சமூக தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தேவையும் மொஹிதீனுக்கு ஏற்பட்டது. ஏனெனில் பெரும்பான்மையான ஓட்டமாவடி மக்கள் காலங்காலமாக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சராகவிருந்த கே டப்ளியு .தேவநாயகம் என்பருக்கு இன பேதமற்று கல்குடா தேர்தல் தொகுதியில் வாக்களித்தவர்கள் . அதுமட்டுமல்ல தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை தோற்கடித்து முஸ்லிம்களின் வாக்குகளை கொண்டே  கே டபிளியு தேவநாயகம் அறுபத்தைந்தாம் (1965) ஆண்டு தொடக்கம் கல்குடா தொகுதி இல்லாமல் போகும் வரை அவரே அம்மக்களின் தெரிவாக இருந்தார். ஆனால் இம்முறை புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் கல்குடாவையும் இணைத்ததாய் விகிதாசாரப் பிரதிநித்திதுவ தேர்தல்   நடைபெற்றதால் தங்களுக்கும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி வரும் வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸின் கணவான் ஒப்பந்தத்தின் மூலம் ஓட்டமாவடி மக்கள் நம்பியிருந்து ஏமாற்றப்பட்டார்கள் . இந்நிலையில் முன்னாள் கப்பற்துறை வணிகத்துறை அமைச்சர் ஏ .ஆர்.எம். மன்சூர் மூலம் தனது ஊர் தேவைகளை நிறைவேற்றி வந்த மொஹிதீன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்வாங்கப்பட்டார். இன்னொரு விதமாக பார்த்தால் பிரேமதாசாவின் அனுசரணையும் ஆதரவும் பெற்ற ஹிஸ்புல்லா மற்றும் பிரேமதாசாவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்த அஸ்ரப் ஆகியோரின் ஆபத் பாந்தவனாக விளங்கிய பிரேமதாசாவின் கட்சிக்குள் இவரும் எதோ ஒரு விதத்தில் காரணம் எதுவாகவிருப்பினும் இணைந்து கொண்டார். மொத்தத்தில் பிரேமதாதா எனும் அரசியல் கடலில் அன்று இவர்கள் எல்லோரும் சங்கமமாயினர். புலிகளும் பிரேமதாசாவுடன் இணைந்து அவரின் ஆலோசனைப்படி அரசியல் கட்சி யொன்றையும் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி”( People’s  Front of Liberation Tigers ) என்ற பெயரில் (1989)  பதிவு செய்தனர்.  1990ம் ஆண்டு தொடக்கத்திலேய  புலிகள் வட கிழக்கில் முஸ்லிம் காங்கிரசின் நடவடிக்கைகளை தடை செய்தனர். மேலும் ஐம்பதுக்கும்  மேற்பட்ட முஸ்லிம்களை (முஸ்லிம் காங்கிரஸ் தீவிர ஆதரவாளர்களை )  தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கைதியாக வைத்திருந்தனர் . அந்த வேளையில் புலிகளுடன் அரச அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்தச் செய்து அவர்களை விடுவிக்க முஸ்லிம் காங்கிரசுக்கு பிரேமதாசா உதவினார் .  ஆக பிரேமதாசாவுடனான நெருக்கம் வலுப்பெற இது போன்ற பல பல காரணங்களை நான் இங்கு கட்டுரையின் நீளமும் , அதற்கான சந்தர்ப்பமும்  (Context) இதுவல்ல என்பதால் தவிர்த்துள்ளேன். பிரேமதாசாவின் புலிகளுடனான உறவே இறுதியில் அவரின் உயிரைப் பறித்தது. புலிகள் யாருடன் சேர்ந்தாலும் எதிர்த்தாலும் அவர்களின் மாறாத குணமே அவர்களைக் கொல்வதே என்பதில் இவரும் சேர்த்தி, பின்னர் சேராதிருந்த அஸ்ரபுக்கும் அதுவே நடந்தது.


யாரை யார் நோகுவது  என்ற இரண்டும் கெட்டான் நிலையில் நிலைமைகள் நடந்தேறினும் மொஹிதீன் தனது முஸ்லிம் காங்கிரஸ் உறவை முற்றாக அறுத்த நிலையில் , ஐக்கிய தேசிய கட்சியுடன் சங்கமமான சந்தர்ப்பத்தில் சேகு  இஸ்சதீனையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தியது.

“சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! “ (தொடர் ஐந்து )




                                                                                                                                         எஸ்.எம்.எம்.பஷீர் 


சிலர் தங்களின் கட்சியை தங்களுடைய கொள்கைகளுக்காக மாற்றிக் கொள்கிறார்கள் ; வேறு சிலர் தங்களின் கொள்கைகளை தங்களின் கட்சிக்காக மாற்றிக் கொள்கிறார்கள் -வின்ஸ்டன் சர்ச்சில் 

( “ Some men change their party for the sake of their principles; others their principles for the sake of their party.”-Winston Churchill )
 

        

எப்போதுமே தேர்தலின் பின்னர் ஹிஸ்புல்லாஹ் தன்னை எம்.எல்.ஏ .எம்.ஹிஸ்புல்லாஹ் என்றுதான் எழுதிக் கொள்வார் அல்லது எழுதுவதை , அவ்வாறே சகல ஆவணங்களிலும்  வெளிவருவதை வழக்கமாக்கி கொண்ட ஹிஸ்புல்லாஹ் அந்த தேர்தலின் பின்னர் ஆலிம் முஹம்மத் ஹிஸ்புல்லாஹ் எம்.எல் என்று தனது தகப்பனின் தொழிலை முன்னிறுத்தி , எழுதினாலும் தனது பெயரை அவ்வாறு வேறு அதிலும் எங்கும் அவர் பயன்படுத்துவதில்லை. நாடாளுமன்ற எம்.பிக்கள் பட்டியலிலும் அவரின் பெயர் ஹிஸ்புல்லாஹ் எம.எல்.ஏ .எம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. '' ( A- ஆலிம் என்பதை குறிக்கும் முதல் எழுத்து ) அவரின் இனிஷியலிலும் (Initials-  தலைப்பெழுத்துகள் ) மூன்றாவது இடத்திலே பயன்படுத்தப்படுவதை யாரும் அவதானிக்காமல் இருக்க முடியாது. இதை ஏன் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றால் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பம் முதலே அரசியலில் தனது சூட்சுமங்களை பயன்படுத்தி அரசியல் செய்து வருபவர் என்பதை சுட்டிக் காட்டவேயாகும்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...