ஜூன் 14, 2020

பெரும் தொற்று அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், அமெரிக்க மக்கள் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ‘கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று தாக்கி மரணிப்பதைவிட, போராட்டக் களத்தில் துணிந்து நின்று உயிரை இழப்பதே மேல்’ என்ற நிலைக்கு அமெரிக்க கருப்பினத்தவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு வாக்குரிமை உண்டு. அவர்களுக்கான சுதந்திரமும் உண்டு. ஆனால், அந்தச் சுதந்திரத்தால் கிடைக்கும் உரிமைகள் உண்டா? இதுதான் மெய்யான ஜனநாயகமா என்ற கேள்வியை எழுப்பி வெள்ளை மாளிகையை நோக்கி போராட்டக்காரர்கள் நியாயம் கேட்டு நிற்கிறார்கள்.