“யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே”




எஸ்.எம்.எம்.பஷீர்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
     நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் ( உலகநாதர்)

அண்மையில் கிழக்கு மாகாணத்துக்குரிய   உள்ளுராட்சி ஆணையாளராக தகுதி வாய்ந்த அரச ஊழியரான எம்.வை.சலீம் எனும் முஸ்லிம் ஒருவரை இலங்கை அரசாங்கம் நியமித்ததைப் பற்றி  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் தங்களின் ஆட்சேபனையை கிழக்கு மாகாண ஆளுனருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் சொல்லப்பட்ட  விடயங்களில் "தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உள்ளூராட்சி என்ற விடயம் மிக முக்கியமானது  என்பதை குறிப்பிட்டு வேறு சமூகத்தவரை (முஸ்லிம் அல்லாத ஒருவரை) நியமிப்பது அல்லது பதவியில் உள்ள உள்ளூராட்சி ஆணையாளரின் பதவியை நீடிப்பது " தங்களின் கோரிக்கையாகும் என்பதை வலியுறுத்தி இருந்தனர். 

செய்திகள் சொல்லும் சேதி என்ன ?




எஸ்.எம்.எம்.பஷீர்

              

நாம் அவர்களை பொதுமக்கள் அரங்கிலிருந்து தள்ளி வைக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் அதிகம் மந்தமானவர்களாக இருப்பதுடன் அவர்கள் உள்ளிட்டால் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். அவர்களின் பணி "பார்வையாளர்களாக" இருப்பதே ஒழிய "பங்கு கொள்பவர்களாக" இருப்பதல்ல.
                                                                              நோம் சொம்ஸ்கி

( எது  பெருவோட்ட ஊடகத்தை பெருவோட்டம் ஆக்குகிறது -இசட் மகசின் அக்டோபர் 1997 )

 ‘ We have to keep them out of the public arena because they are too stupid and if they get involved they will just make trouble. Their job is to be "spectators," not "participants."
                                                                                           -  Noam Chomsky

              ( What Makes Mainstream Media Mainstream- Z Magazine, October, 1997)

"இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழு: இந்தியா அச்சம்" என்ற தலைப்பில் ஒரு செய்தி தமிழ் மிரர் (Tamil Mirror) எனும் பத்திரிகையில் திங்கட்கிழமை, 30 டிசெம்பர் 2013 அன்று வெளியானது , அச்செய்தி அவ்விதழின் ஆங்கில இணையமான டெய்லி மிரரில்(Daily Mirror)  "India fears Muslim militant attacks in SL " என்ற தலைப்பில் அன்றைய தினம் வெளியான செய்தியின் தமிழாக்கமாகும் . அச் செய்தியின் இறுதிப் பகுதியில் ஆங்கிலத்தில்  "Interestingly the statement comes a few weeks after a meeting the high commission officials had with Sri Lankan Muslim leaders where comments made by Defence Secretary Gotabaya on threats by extremist Muslim elements, was discussed extensively." என்று வெளியிடப்பட்டிருந்தது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...