பிரேசில், ஆர்ஜன்ரீனா,கொலம்பியா, சிலி, பெரு, சூரினாம் ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகப் பணி பரிந்த இலங்கை முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியாவிற்கு எதிராக போர்க்குற்ற
விசாரணை நடைபெற்றால்ää அவருக்கு எதிராக சாட்சியங்களை
வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக, இலங்கையின் இன்னுமொரு முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இலங்கைத் தூதுவர் பணியிலிருந்து கடந்த ஓகஸ்ட் 31ந் திகதி ஓய்வுபெற்ற ஜகத் ஜயசூரியா மீதுää பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் சில மனித உரிமை
குழுக்கள் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. சரத் பொன்சேகா இராணுவத்தளபதியாக பதவி வகித்த இறுதி யுத்தத்தின்போதுää வவுனியா கட்டளைத்தளபதியாக ஜகத் ஜயசூரியா பணி புரிந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.