எஸ்.எம்.எம்.பஷீர்
“எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு, அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை” ( ஒஸ்கார் வைல்ட் )
"மறப்போம் மன்னிப்போம்", எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை
விடவும் ,
அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget
and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும்
செயலே வரலாறாகி நிற்கிறது. அந்த
நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு “உஹத்”
எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது
சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழுது அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக்
கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக்
கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை
மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்).
உலகின் மிகப் பெரும் பழமை
வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென் ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த "மன்னிப்போம் மறப்போம்" நிகழ்வுகள் மனதை நெருடச்செய்வன.