காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!
எஸ்.எம்.எம்.பஷீர்
"உண்மையான
மனக்குறை ஏதாவது ஒரு சமூகத்திற்கு இருக்குமாயின் , அது கண்டிப் பிரதேச
சமூகத்திற்கும் , அத்தோடு முஸ்லிம் சமூகத்திற்குமேயாகும் , இன்றுள்ள
பிரதிநிதித்துவ முறை , நாலு லட்சம் முஸ்லிம்களுக்கு , ஐந்து லட்சத்து
ஐம்பது ஆயிரம் இலங்கை தமிழர்களுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து , இந்த
கவுன்சிலில் உரிய பிரதிநிதித்துவத்தை பெற முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது.
இன்றுள்ள நிலைமை என்ன ? இராஜாங்கக் கவுன்சிலில் இலங்கைத் தமிழர்களுக்கு
ஏழு ஸ்தானங்கள் இருக்கின்றன.ஆனால் தமிழர்களுக்கு அடுத்தபடியாக ,
ஜனத்தொகையில் சொற்பமே குறைவாகவுள்ள முஸ்லிம்களுக்கு பிரதேசவாரியாக
பிரதிநிதித்துவம் வகிக்க ஒரு தொகுதிகூட இல்லை . ஒன்றோ இரண்டோ அங்கத்தவர்களை
நியமனம் செய்யும் கவர்னரின் தயவில் அவர்கள் தங்கி இருக்க வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது. இதுதான் அவர்களின் உண்மையான மனக்குறையாகும் " எஸ்.டப்ளியு.
ஆர் .டி . பண்டாரநாயகா
(
1939 ஆம் அண்டு இராஜாங்க கவுன்சிலில் திரு எஸ்.டப்ளியு. ஆர் .டி .
பண்டாரநாயகா உறுப்பினராகவிருந்தபோது ஆற்றிய உரையில் ஒரு சிறு பகுதி இது.
)
மாகாணசபை
சட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்று கூறும் பிரதான தமிழ் அரசியல் தரப்பினர் ,
இப்போது கிழக்கில் மாகான சபைகள் விரும்பியோ விரும்பாமலோ செயற்பட்டுக்
கொண்டிருக்கும் சூழலில் , வடக்கிலும் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறும் சூழல்
தோன்றுவதாலும் , மறுபுறம் மாகாணசபை அதிகாரங்களை பூரணமாக அமுல் படுத்தக்
கோருவதையும் , வட கிழக்கு இணைப்பை கோருவதையும் அண்மைக்கால செய்திகளாகவே
கேட்டு வருகிறோம்.