தமிழ் சீரியல்கள் பார்ப்பதினால் நிம்மதியை விற்கிறோமா நாம்? –ஜா.தீபா

சென்னை வளசரவாக்கத்தில் ஒரு பூங்கா. காலை நேர நடைப் பயிற்சியில் ஒரு மனிதர் சத்தமாகத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார். “அந்த கேரக்டரை நாம முடிச்சுவிட்டுரலாம்… எமோஷனை ஏத்திவிட்டுருங்க… வெள்ளிக்கிழமை எபிசோட்ல கிரிஜா தூக்குல தொங்கப்போற மாதிரி காட்டிடலாம்… டெம்போ ஏறும்” என்று பேசிக்கொண்டே போனார். அவருக்குச் சூழல் குறித்த பிரக்ஞை இல்லை. இருக்கவும் தேவையில்லை. லட்சக்கணக்கானவர் தினமும் தொடர்ந்து ஒன்றிப்போயிருக்கும் சீரியல்களின் ஒரு பாகம் அவர். சொல்லப்போனால், தமிழ்நாட்டு மக்களின் நாடி பிடிக்கத் தெரிந்தவர்.
இவரைப் போன்றவர்கள்தான் தமிழக மக்களில் கணிசமானோரின் உளவியலில் விளையாடுகிறார்கள். காலை 10 மணிக்குத் தொடங்குகிற சீரியல் உலகம், இரவு 11 மணி வரை நீள்கிறது. சனிக்கிழமைதோறும் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்கூட அற்றுப்போய், சீரியல்களால் அந்த நேரங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த அளவுக்கு மக்கள் அதனோடு ஒன்றிப்போய்க் கலந்திருக்கின்றனர்.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை நேரம் எப்படியாக இருந்தது என்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் பேச்சுக் கச்சேரிகள் நடந்துகொண்டிருக்கும். தெருக்கள் பேச்சொலியாலும், குடும்பங்களின் உளவியல் பிரச்சினைகள் தீர்க்கும் இடங்களாகவும் மாறிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அதை இழந்துவிட்டோம். நிச்சயம் இதற்கு நம்மைத் தேடி அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்துகிற சீரியல்களுக்குப் பெரும் பங்கு உண்டு. வீட்டினுள் உரையாடல் குறைந்து, யாரோ யாரையோ தொடர்ந்து பழிவாங்குவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்புடிசம்பர் 19, 2019


Afbeeldingsresultaat voor குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள்



குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் வடிவத்தில் சமீபத்தில் மதச்சார்பின்மை மீதும் அரசமைப்புச் சட்டத்தின்மீதும் ஆட்சியினரால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், நாடு முழுதும் கடும் எதிர்ப்பினைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வட கிழக்கு மாநிலங்கள் முழுவதிலும், (இதில் அஸ்ஸாம் முன்னணியில் இருக்கிறது) மக்களின் எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது, இணைய தள இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவற்றால் எல்லாம் அனைத்துத்தரப்பு மக்களும் இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக வெகுண்டெழுந்து கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்திட முடியவில்லை.
பாஜக மாநில அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம், அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் இருந்த 1971 காலக்கெடு தேதியை (cut off date) பயனற்றதாகச் செய்திருப்பதன் மூலம், தங்களின் கேந்திரமான நலன்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்துவிட்டதாகவே அஸ்ஸாம் மக்கள் இதனைப் பார்க்கின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கான எதிர்ப்பில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இதில் மிகவும் விரிவான அளவில் மாணவர்கள் கிளர்ந்தெழுந்து கிளர்ச்சிகளைச் செய்து வருவதாகும். மாணவர்களின் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் இரு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றன. அரசமைப்புச் சட்டத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதற்கான ஒரு மாணவர் இயக்கமாக இது இருப்பதுடன், ஜமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அம்மாணவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் நாடு தழுவிய அளவில் நடைபெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. மேலும் இந்தக் கிளர்ச்சி ஆர்ப்பாட்டங்களில் ஐஐடி, ஐஐஎம் மற்றும் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science) போன்ற தொழில்முறை கல்வி நிறுவனங்களில் (professional institutions) படிக்கும் மாணவர்களும் தங்களை இணைத்துக் கொண்டிருப்பதாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து மாணவர்கள் வெளிவந்திருப்பது, உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

பொன்னான ஆண்டும் மண்ணான ஆண்டும்!டிசம்பர் 27, 2019 –பரிபூரணன்


ன்னும் 4 நாட்களில் 2019 ஆம் ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற இருக்கிறது.
இந்த 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியான நொவம்பர் 16 ஆம் திகதி பெரும்பாலான இலங்கை மக்கள் மகத்தான மாறுதல் ஒன்றைச் செய்துள்ளனர். அதாவது, 2015 ஜனவரி 8 ஆம் திகதியிலிருந்து நாட்டைப் பீடித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை தூக்கி வீசியிருக்கின்றனர்.
எங்கே இந்தியாவில் நடந்தது போல, மாலைதீவில் நடந்தது போல இலங்கையிலும் மீண்டும் ஏகாதிபத்திய சார்பான வலதுசாரி அரசாங்கம் ஒன்றை மக்கள் தெரிவு செய்துவிடுவார்களோ என அஞ்சியிருந்த வேளையில், அதற்கு எதிராக இலங்கை மக்கள் செயற்பட்டு மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
அந்த வகையில் இலங்கையின் பெரும்பான்மையான மக்களுக்கு 2019 ஆம் ஆண்டு ஒரு பொன்னான ஆண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை 2019 ஒரு மண்ணான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், நாட்டைப் பீடித்திருந்த பீடையை அகற்றும் பணியில் அவர்கள் பங்கெடுக்கவில்லை. அவர்கள் வழமைபோல தமது பிற்போக்கு தலைமையின் வழிநடத்தலில் ஏகாதிபத்திய சார்பு கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டிருக்கின்றனர்.

மகாகவி பாரதி 137-வதுபிறந்தநாள்- பூ.கொ.சரவணன்

மகாகவி பாரதி 137-வதுபிறந்தநாள்

-பூ.கொ.சரவணன்
Afbeeldingsresultaat voor மகாகவி பாரதியார் பிறந்தநாள்
மிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்..!
சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!
எட்டயபுரம், பிறந்த ஊர். சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர். மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!
சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பாலபாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!
எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17 ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி, ‘பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்து!’
ஏழு வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள். பாரதி என்றால் சரஸ்வதி.
இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்!
14 அரை வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண் டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்!
காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப் புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!

தினக்குரல் பத்திரிகையின் விசமத்தனம்!

“ராஜபக்சாக்களுக்கு ஐ.எஸ். ஊடன் தொடர்பா?”
அல் பக்தாதியின் கொலையை கண்டிக்காதது ஏன்? ரணில் கேள்வி 


கொழும்பிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் மின்பதிப்பை
(e-paper)  தினசரி பார்ப்பவர்கள் அங்கு ஒரு விசமத்தனம் இருப்பதைக்
கண்டுகொள்ள முடியும். அதாவது, இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெற்றது. அது நடைபெறுவதற்கு முன்னர் எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்சவுக்கும் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் அனைவருக்கும் எதிராக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அணியினர் மட்டுமின்றி, பல ஊடகங்களும் முன்னின்று பல பொய்யானதும் விசமத்தனமானதுமான பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.

இந்தப் பிரச்சாரங்களில் சிங்கள, ஆங்கில ஊடகங்களை விட தமிழ்
ஊடகங்களே முன்னணியில் நின்றன. முக்கியமாக கொழும்பிலிருந்து
வெளியாகும் தினக்குரல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும்
தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு
சொந்தமான உதயன் என்பனவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்


நல்லா இருந்த நாடும் நாசமாக்கும் சட்டங்களும்

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்”


 -என்பது வள்ளுவர் வாக்கு. நாடு முன்னெப் போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை விண்ணில் பறக்கிறது. வேலையின்மை கடுமையாக உயர்ந் துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி அதல பாதா ளத்தில் விழுந்து கிடக்கிறது.விவசாயம், தொழில், நெசவு என அனைத்துத் துறைகளும் கடும் சிரமத்தில் உள்ளன. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மோடி அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. மக்களின் கவ னத்தை திசை திருப்புவதற்காகவும், ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கா கவும் மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.

தப்புமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு?-–பிரதீபன்



மிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் பூசல்கள் கிளம்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதைய அதன் பங்காளிக் கட்சிகளில் இரண்டு கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ என்பன கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வேறு சில கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளும், உடைவுகளும் ஏற்படுவது இதுதான் முதல்தடவையல்ல.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் தமது அரசியல் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. ஆரம்பத்தில் அதில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், ரெலோ என்பன அங்கம் வகித்தன. பின்னர் அதில் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பனவும் உள்வாங்கப்பட்டன.
ஆனால் வெவ்வேறு கட்டங்களில் ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமாரும் தமது கட்சிகளை கூட்டமைப்பிலிருந்து விலக்கிக் கொண்டனர். பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தனது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை விலக்கிக் கொண்டார். அதேநேரத்தில் கூட்டமைப்பின் ஆதரவால் வடக்கு மாகாணசபை முதலமைச்சராக பதவி வகித்த விக்னேஸ்வரனும் கூட்டமைப்பை விட்டு விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அமைப்பொன்றை உருவாக்கிக் கொண்டார்.
கூட்டமைப்பிலிருந்து காலத்துக்குக் காலம் விலகிய கட்சிகள் எல்லாமே அதன் தலைமை மீது இரண்டு பிரதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஒன்று, தமிழரசுக் கட்சி மற்றைய கட்சிகளின் கருத்துக்களைக் கேட்காமல் தன்னிச்சையாக ‘பெரியண்ணனாக’ செயல்படுகின்றது என்பது. இரண்டாவது, கூட்டமைப்பின் தலைவர்களாக இருக்கும் சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோர் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்குத் துரோகம் இழைத்து ஆளும் வர்க்கத்துக்கு சோரம் போயுள்ளார்கள் என்பது.

சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம் தயாராகிறோமா? –ரிச்சர்ட் செய்மூர்






மூக ஊடகங்கள் பிறர் எழுதியவற்றைப் படிப்பதற்கு மட்டுமல்ல, நாம் எழுதுவதற்கும் மேடை அமைத்துத் தந்துள்ளன. நம் நண்பர்கள், அலுவலக சகாக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பயங்கரவாதிகள், காமசூத்திரக் கலைஞர்கள் என்று நாம் விரும்பும் எவருடனும் பேச முடிகிறது.
நாம் அவர்களுடன் நேரடியாகப் பேசுவதில்லை; இயந்திரத்தின் வாயிலாகவே பேசுகிறோம். நாம் எழுதுகிறோம்; அந்த எழுத்துகளைப் பதிவுசெய்து பத்திரப்படுத்திக்கொண்டு, யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு அது அனுப்புகிறது.
ஒவ்வொரு நாளும் சமூக ஊடகத்தில் மணிக்கணக்காக நாம் எழுதுவதற்கான ஊக்குவிப்புதான் என்ன? செய்யும் தொழில்களை விட்டுவிட்டுத் தற்காலிக வேலையாக சமூக ஊடகங்களில் எழுதத் தொடங்குகிறோம். இதற்கு யாரும் ஊதியம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை, இதற்காக வேலை ஒப்பந்தங்களும் கிடையாது.
ஊதியத்துக்குப் பதிலாக இங்கே என்ன கிடைக்கிறது? நாம் ஏன் இவற்றால் ஈர்க்கப்படுகிறோம்? அங்கீகாரம், கவனக்குவிப்பு, பதிலுரைகள், பகிர்தல்கள், ஏற்புகள்!


மோசமான ‘வைரல்’ கலாச்சாரம்
ட்விட்டரின் நோக்கமே, மக்கள் உடனுக்குடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான். எதை உள்ளீடாக அளித்தாலும் உடனே அது பலமடங்காகப் பதில்களைப் பெருக்க வேண்டும். ட்விட்டரில் இட்டது வைரலாகப் பரவவில்லை என்றால், உடனடியாக மறக்கப்பட்டுவிடும்.
ட்விட்டரில் வெளியாகும் கருத்தைப் படிப்பது, பதிலுக்குப் பின்னூட்டமிடுவது, அதன்பேரில் விவாதிப்பது, மீண்டும் அவற்றுக்குப் பதில்களை இடுவது என்பதன் மூலம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து செயலில் ஈடுபடுகின்றனர்.
இதில் புதிதாக ‘ஹேஷ்டாக்’ உருவாவது, ‘டிரெண்ட்’ ஆவது எல்லாம் தனிநபர்களின் குரல்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை உணர்த்துகின்றன. ஒரு கருத்து வெளியானவுடன் அதன் முழுப் பின்னணியும் அல்லது உண்மைகளும் தெரிவதற்குள்ளாகக் கூட்டாக எல்லோரும் பொங்கி எழுந்து கருத்திடுவது இதன் தனிச்சிறப்பு.
யார் சொன்னார்கள், எதற்காகச் சொன்னார்கள் என்றெல்லாம் ஆராயாமல், ‘சொல்லப்பட்டது இது – இதன் மீது என்னுடைய கருத்து இதோ’ என்று எல்லோரும் பதிவிடுகின்றனர். சமூக ஊடகங்களில் ஊசலாட்டங்களுக்கும் மதிப்பு இருக்கிறது. அதிக குழப்பம் – அதிக பலன்! சமூக ஊடகத்துக்கு நாம் அடிமையா? நாம் நினைக்கிறோமோ இல்லையோ… அது அப்படித்தான் நம்மை நடத்துகிறது.

Afbeeldingsresultaat voor social media slaves

போதையூட்டும் இயந்திரம்
சமூக ஊடகம் என்பது போதையூட்டும் இயந்திரம் என்றால் அந்த நடத்தையானது சூதாட்ட மனோபாவத்துக்குச் சமமானது. பெரும்பாலான நேரங்களில் சூதில் வைத்த பணத்தை இழந்து வெறும் கையராக வீடு திரும்ப நேரலாம். சூதாடிகளின் தனிச்சிறப்பு எதுவென்றால், தொடர்ந்து இழக்கும்போது கைப்பணம் முழுவதையும் வைத்து இழந்ததை மீட்க ஒரு இறுதி முயற்சியை மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
சமூக ஊடகங்களில் சில வார்த்தைகளைத் தேடி வாக்கியம் அமைப்பீர்கள், குறியீடுகளைச் சேர்ப்பீர்கள், அனுப்புக என்ற பொத்தானை அமுக்கி உங்கள் கருத்துகளைச் சுற்றுக்குவிடுவீர்கள். நீங்கள் யார், உங்களுடைய பயணம் எதை நோக்கி என்பதை இணையதளம் மற்றவர்களுக்கு உணர்த்தும். அதைப் பகிர்வதும் எதிர்ப்பதும் தொடரும்.
சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற நினைத்தாலும் ஏன் முடிவதில்லை என்று 2015-ல் ஆய்வு நடத்தப்பட்டது. ஃபேஸ்புக்கிலிருந்து 99 நாட்களுக்கு விலகிவிடுவது என்று பலர் கூட்டாக முடிவெடுத்தனர். இவர்களில் ஒருசிலரால் ஓரிரு நாட்களுக்குக்கூட வைராக்கியமாக இருக்க முடியவில்லை. ஃபேஸ்புக்கை விட்டுவிட்டு ட்விட்டரை நாடினர்.
போதையை வேறு வடிவுக்கு மாற்றினர். உண்மையிலேயே வெளியேறியவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் ஆழ்ந்தனர்; தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டனர்.
சமூக ஊடகங்களில் நாம் இடுகையிட்டால் நம்மைப் பாராட்டுவார்கள் என்று நினைப்பவர்கள், அப்படி ஆதரவாகவோ பாராட்டியோ இடுகைகள் வராதபோது மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். பியுங்-சுல் ஹான் என்ற கலாச்சாரக் கருதுகோலாளர் இது ‘முதலாளித்துவத்தின் விளையாட்டியல்’ என்கிறார்.
சூதாடியையும் சமூக ஊடகத்தை விட்டு வெளியேறியவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. கூகுள் நிறுவனத்தின் வடிவியல் துறையில் பணியாற்றிய டிரைஸ்டான் ஹாரிஸ், ‘உங்களிடம் இருப்பது ஸ்மார்ட்போன் அல்ல; பொருட்களை அவ்வப்போது விற்கும் கையடக்கக் கருவி’ என்கிறார்.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அடிக்கடி அதை எடுத்துப் பார்த்து, அதில் விளையாட்டுக்கு ஏதாவது ஆஃபர் வந்திருக்கிறதா, போட்டி எதையாவது அறிவித்து பரிசு என்னவென்று போட்டிருக்கிறார்களா, விற்பனைக்கு வரும் பொருட்களில் தள்ளுபடி எவ்வளவு என்றெல்லாம் அடிக்கடி தெரிந்துகொள்கிறார்கள். லைக் என்ற பட்டன் ஸ்மார்ட் போனில் இருப்பதால், ஒவ்வொரு கருத்திடலின்போதும் அதை வைத்திருப்பவர்கள் சூதாடுகிறார்கள் என்கிறார் ஆடம் ஆல்டர்.

Afbeeldingsresultaat voor social media slaves
ஒற்றைக் கை கொள்ளையர்கள்
திரைப்படங்களில் நீங்கள் பார்த்த அந்தக் கால சூதாட்ட விடுதிகளைப் போன்றவை அல்ல இக்கால சூதாட்டக் களங்கள். இப்போது மேஜை – நாற்காலிகள் போட்டு சூதாடுவதில்லை. அவரவர் பைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் மூலமே சூதாட்டம் நடக்கிறது.
‘ஒற்றைக் கை’ கொள்ளைக்காரன் சிரித்துக்கொண்டே சூதாடி எல்லாவற்றையும் சுருட்டிச் செல்லும் காட்சிகளை இனி காண முடியாது. பாக்கெட்டில் இருக்கும் பணம், கண்ணுக்குத் தெரியாமலேயே சூதாட்டம் நடத்துவோருக்குக் கோடிக்கணக்கில் போக ஆரம்பித்துவிட்டது.
இயந்திரமும் காலமும் முக்கியமான அம்சம். சூதாட்டக் களங்கள் அனைத்தையுமே, வெளியில் பொழுது சாய்ந்துவிட்டதா, வெளிச்சம் வந்துவிட்டதா என்றெல்லாம் பார்க்க முடியாதபடிக்கு வாயில் கதவு, ஜன்னல்கள் எல்லாவற்றையும் மூடியே வைத்திருப்பார்கள்.
சூதாடும் இடங்களில் ஜன்னல்கள் இருக்காது, இருட்டைப் பகலாக்கும் விளக்குகள் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும். சூதாடிகளுக்கு அவ்வப்போது பானங்களும் சிற்றுண்டிகளும் உள்ளேயே சூடாகவும் சுவையாகவும் தரப்பட்டுவிடும். நேரம் காலம் போவது தெரியாமல் சூதாடிகள் தங்களை மறந்து ஆடிக்கொண்டிருப்பார்கள்.
ட்விட்டர் இயந்திரத்தில் திரைச்சீலைகளை இழுத்து மூடவோ, கதவுகளை அடைக்கவோ அவசியமே இல்லை. இங்கே சாளரத்தைத் திறந்து வைக்கும் வாடிக்கையாளர் தன்னுடைய வேலையை, தன்னுடைய சூழலை, தன்னை மறந்தவராகிவிடுகிறார். வேளைக்குச் சாப்பிடுவதில்லை, உடற்பயிற்சி செய்வதில்லை, மற்றவருடன் பேசுவதில்லை, காலார நடப்பதில்லை, விளையாடுவதில்லை.
தொடர்ந்து சாளரத்தில் தெரியும் காட்சி மாற்றங்களையும் கருத்துப் பதிவுகளையுமே பார்த்துக்கொண்டிருக்கிறார். இதில் பெரும்பாலான நேரம் அவர் உற்சாகமாகவும் இருப்பதில்லை. சூதாடிகளுக்கும் சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கும் போதை உச்சத்துக்குப் போவதும் கீழிறங்குவதும் ஒன்றுபோலவே நடக்கின்றன. ட்விட்டர் எப்போதும் நேரம், தேதி ஆகியவற்றைக் காட்டாது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறவர்களில் சிலர், இது தங்களுடைய தொழிலையும் உறவுகளையும் நாசப்படுத்திவிட்டதாக மனம் திறந்து ஒப்புக்கொண்டுள்ளனர். புகார்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் தொடர்ந்து கவனச் சிதறலுக்கு ஆளாகின்றனர், ஆக்கபூர்வமான உற்பத்தி அல்லது செயல்பாட்டைத் தருவதில்லை, எப்போதும் பதற்றமாகவே காணப்படுகின்றனர், மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர், மற்றவர்களின் உதவி, வழிகாட்டல், துணை இல்லாமல் எதையும் செய்ய முடிவதில்லை. இத்தனைக்கும் இடையில் விளம்பரங்களுக்கும் அவர்கள் இரையாகின்றனர். சமூக ஊடகத்தில் ஆழ்ந்துவிடுவதால் மன உளைச்சல் அதிகமாகிவிடுகிறது. பதின்பருவக் குழந்தைகளின் தற்கொலைகள் அதிகரிக்க இது முக்கியக் காரணமாகத் திகழ்கிறது.


நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட பூச்சிகள்
நறுமணம் வீசும் ஒருவகை நஞ்சைத் தன்னகத்தே கொண்ட செடி, காற்றில் அந்த வாசனையைப் பரப்பி சிறு பூச்சிகள், வண்டுகள், சிறிய பிராணிகளை ஈர்த்து அவற்றைச் சுற்றி வளைத்துக் கொன்று சீரணிப்பதைப் போலத்தான் சமூக ஊடகங்களும் என்கிறார் ஆலன் கர்.
செடியின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்ட பூச்சிகள், சர்க்கரை போன்ற இனிப்புத் தன்மையுள்ள விஷத்தை நக்கிக்கொண்டே வழுவழுப்பான மெழுகு போன்ற அதன் தண்டு வழியே ஆழத்தில் போய் விஷம் கலந்த திரவத்தில் மூழ்கி இறந்துவிடுகின்றன.
சமூக ஊடகங்கள் அளிக்கும் இன்பமும் சிறிது நேரத்துக்குத்தான். இதில் பிரச்சினை என்னவென்றால், சமூக ஊடகத்தில் நெடுநேரம் ஆழ்ந்துவிடுவதால் என்ன தீமைகள் என்று தெரிந்துகொண்டே அதை நீண்ட நேரம் பயன்படுத்துவோர் அதிகமாகிவருவதுதான்.
நாம் அனைவரும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவருகிறோம் என்றால், அந்த ஊடகம் நன்றாகச் செயல்படுகிறது என்று பொருள். நம்முடைய வாழ்க்கை நாசமாகிவிட்டது என்றால், அவை மேலும் நன்றாகச் செயல்படுகின்றன என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்!
சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம் தயாராகிறோமா என்பது அடுத்த கேள்வி. மெதுவாகத்தான் சாவோம் என்று தெரிந்துகொண்டு, நஞ்சு கலந்த செடிக்குள் குதிக்கிறோமா? புற்றுநோய் பற்றிய எச்சரிக்கையும் புகைப்படங்களும் சிகரெட் அட்டையில் அச்சிட்டு விற்கப்படும் நிலையிலும், அப்பழக்கத்தை விடாமல் தொடர்ந்து புகைப்பதன் மூலம் நாம் தெரிவிக்கும் செய்தி என்ன? கஞ்சா புகையை உள்ளே இழுத்துவிடும்போது கிடைக்கும் பரவச நிலைக்காகவே, அதன் தீமை தெரிந்தும் போதைப் பழக்க நோயாளிகள் அதைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனரா? என்றைக்காவது ஒருநாள் தங்களுடைய உத்தி பலன் அளித்து பெரிய அளவில் பணம் சம்பாதிப்போம் என்ற நம்பிக்கையில்தான் சூதாடிகள் தினம் பணம் வைத்து ஆடி இழக்கின்றனரா? இவற்றையெல்லாம் விளக்குவது கடினம்.
பெரிய தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள், பிற துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள, விளைவுகளைச் சிந்திக்காமல் ட்வீட் செய்துவிடுகிறார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் மேரி பியர்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
அவருடைய ட்விட்டரில் ஏற்கும்படியான செல்ஃபி படங்களும் இடதுசார்புள்ள மையவாதக் கருத்துகளும் ஆதரவாளர்களுடனான உரையாடல்களும் நிறைந்திருக்கும். ஆக்ஸ்ஃபாம் எய்ட் ஊழியர்கள் ஹைதியில் குழந்தைகளைப் பாலியல்ரீதியாகச் சீரழிக்கிறார்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டைப் பொதுவெளியில் இட்டு, அது தொடர்பாகத் தனது கருத்தையும் தெரிவித்தார்.
‘மிகவும் இடர்ப்பாடுள்ள இடங்களில் நாகரிக நடத்தையுடன் எல்லோரும் நடப்பார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை’ என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். அதை அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக எடுத்துக்கொண்டு அதிர்ச்சியடைந்தனர்.
‘பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளை நிறச் சிறுமிகள் என்றால், மேரி பியர்ட் இப்படிக் கூறியிருப்பாரா?’ என்று கேட்டனர். மேரி இதை நிற அடிப்படையில் பார்த்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், கருத்து தெரிவித்தது ட்விட்டரில். இதனால், அவருடைய மதிப்பு ஒரே நாளில் குலைந்தது.

Afbeeldingsresultaat voor social media slaves

ட்விட்டரின் இந்த தனித்தன்மை கருதியே ட்விட்டர் பரிசும் வழங்கும், தண்டனையும் வழங்கும் என்று சுட்டிக்காட்டுகிறார் அமெரிக்க கணினி அறிவியலாளர் ஜேரன் லேனியர். சமூக ஊடகங்கள் மக்களுக்காக மட்டுமல்ல பாதி சாப்பாட்டிலும் உரையாடல்களுக்கு நடுவிலும் காலை கண் விழித்தவுடனேயும் ஸ்மார்ட்போன் எங்கே என்று தேடுவதற்குக் காரணம், அந்த சாதனத்தின் மீதான மோகமும், லேசாக ஒளிர்ந்து நம் கவனத்தை ஈர்க்கும் அதன் வடிவமைப்பும்தான். நம்முடைய வாழ்க்கை என்பது தீர்க்கக்கூடிய சவால்கள், அவற்றைத் தீர்ப்பதால் அடையக்கூடிய பரிசுகள், அதற்கான முயற்சிகள் என்று பலவற்றை ஒரு வரிசையில் கொண்டது.
ஆனால், ஸ்மார்ட்போனில் உள்ளவை பலதரப்பட்டவை. பிறரின் அந்தரங்கத்தைப் பார்க்கும் இன்பம், மற்றவர்களுடைய கருத்துகளை ஏற்பது – நிராகரிப்பது, விளையாட்டு, செய்தி, நினைவேக்கத் தகவல்கள், சமூகமாவதற்கான வாய்ப்புகள், சமூக ஒப்பிடல்கள் என்று பல அம்சங்களைக் கொண்டவை. இவற்றுக்கு நாம் அடிமையாகிவிட்டால் சூதாடுதல், பொருட்களைக் கொள்முதல் செய்தல், நண்பர்களை வேவுபார்த்தல் என்று பிறவற்றையும் இதிலேயே செய்துகொள்ளலாம்.
இந்த சமூக ஊடகங்கள் தங்களுடைய உண்மையான வாடிக்கையாளர்களான பிற நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டவை, மக்களுக்காக மட்டுமல்ல. நம்முடைய எதிர்வினைகளிலிருந்து சிலவற்றை அறிந்துகொண்டு, சந்தைக்கேற்ப நம்மைத் தயார்செய்கின்றன.
நாம் அவற்றுடனேயே நீண்ட நேரம் இருக்க வேண்டுமென்று அவை கட்டாயப்படுத்துவதில்லை, நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் அவை கூறுவதில்லை. போதை மருந்திலிருந்து விஷத்தை ஏற்றிக்கொள்வதுகூடப் பயனாளிகளால்தான் நடக்கிறதே தவிர, போதை மருந்துகளால் அல்ல.
-இந்து தமிழ்
2019.11.11
தி நியூயார்க் டைம்ஸ், சுருக்கமாகத் தமிழில்: சாரி


டிசம்பர் 2, 2019

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...