ஐ.தே.க. அரசாங்கம் செஞ்சோற்றுக் கடனாக ஐ.தே.க. அரசாங்கம் செஞ்சோற்றுக் கடனாக சம்பந்தனுக்கு கொழும்பில் வழங்கிய சொகுசு மாளிகை!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் கட்சித் தலைவர் என்ற ரீதியிலும் சபாநாயகரின்
யோசனைக்கமையவே விசேட அமைச்சரவை அங்கீகாரத்துடன் பூரண
வசதிகளுடன் கூடிய உத்தியோகபூர்வ வாசஸ்தலம் பெற்றுக் கொடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்திருக்கிறார்.

சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரையில் இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைப் பயன்படுத்தத்தக்க கூடிய வகையிலேயே அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு-07, மஹகம சேக்கர மாவத்தையில் பீ.12 இலக்கத்தையுடைய இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலம் எதிர்க்கட்சித் தலைவருக்காக  போதும் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவி
வகித்த காலத்தில் அது எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக அமைந்திருக்கவில்லை.

அணிசேராக் கொள்கையே எமது வெளியுறவின் ஆணிவேர்!

ந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எமது இலங்கைத் தீவின் அமைவிடம் காரணமாக அதன் உலகளாவிய முக்கியத்துவம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
இரண்டு வகைகளில் இலங்கையின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. ஒன்று, வணிகரீதியிலானது. மற்றையது இராணுவ ரீதியிலானது. இதில் இரண்டாவது விடயமே பெரும் வல்லரசு நாடுகளின் அதீத அக்கறைக்குரியதாக இருக்கின்றது. அதனால்தான் கடந்த இரண்டு வாரங்களில் உலகின் முக்கியமான மூன்று முன்னணி நாடுகளின் இராஜதந்திரிகள் ஒருவர் பின் ஒருவராக இலங்கைக்கு படையெடுத்து வந்து போயிருக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi), மற்றையவர் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் அலைஸ் ஜி.வெல்ஸ் (Alice G.Wells), அடுத்தவர் ரஸ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் (Sergy Lavrov).

சுமந்திரன் கேட்பது நியாயமானதா? –பிரதீபன்









ரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசும் நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் கூறியிருக்கிறார். நல்லது. ஏனெனில் சுமந்திரன் போன்றவர்கள் தம்மை மறந்து கூறும் இத்தகைய வார்த்தைகள்தான் அவர்களது உண்மையான உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன.
அவரது கூற்றுப்படி, இலங்கை தமிழர்கள் மத்தியில் செயற்படும் ஏனைய கட்சிகளான .பி.டி.பி., கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விகனேஸ்வரன் தலைமையில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணி, முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் .வரதராசப்பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, ரெலோவிலிருந்து பிரிந்து வந்த என்.சிறீகாந்தா தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் கூட்டமைப்பு, அனந்தி சசிதரன் தலைமையிலான சுயாட்சிக் கழகம், ஈரோஸ் மாற்றுக் குழு, ரெலோ மாற்றுக்குழு போன்ற ஏனைய தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை சம்பந்தமாகப் பேசக்கூடாது என்பதுதான் அர்த்தம்.
சரி, அவரது இந்த ஏகப் பிரதிநிதித்துவ நிலைப்பாட்டை ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டாலும், கடந்த காலம் பற்றிய சில கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்லப்போகிறார்?
அதாவது, 1956 முதல் இன்றுவரை தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கே அதிகமான ஆசனங்களை நாடாளுமன்றத்தில் அளித்து வந்திருக்கிறார்கள். ஆனால் என்ன சாதனையை நிலைநாட்டினீர்கள்?
1956 முதல் 65 வரை சத்தியாக்கிரகம், சட்ட மறுப்புப் போராட்டம், கறுப்பு கொடி பறக்க விடுதல், திருமலை யாத்திரை என பலபோராட்டங்களைநடத்தினீர்கள். அதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா?
1965இல் தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக என்று சொல்லி டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் 1970 வரை 5 வருடங்கள் சேர்ந்திருந்தீர்கள். ஆனால் இறுதியில் தமிழ் மக்களுக்கு என்னத்தைப் பெற்றுக் கொடுத்தீர்கள்?
1970 முதல் 77 வரை ஆட்சியில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசுக்கு எதிராக பல விதமான சட்ட மறுப்புப் போராட்டங்களை நடத்தினீர்கள். 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தனித் தமிழ்நாடு தீர்மானமும் நிறைவேற்றினீர்கள். இவற்றால் என்னத்தைச் சாதித்தீர்கள்? குறைந்தபட்சம் நீங்கள் நிறைவேற்றிய தனித் தமிழ்நாடு தீர்மானத்துக்காவது விசுவாசமாக இருந்தீர்களா? (இப்பொழுது அதிலிருந்துறிவேர்ஸ்அடித்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிறீர்கள்)

தேசிய கீதமும் தமிழர்களும்-–கே.மாணிக்கவாசகர்



Afbeeldingsresultaat voor தேசிய கீதம்
லங்கையில் 2020ஆம் ஆண்டு தேசிய தினம் (பெப்ருவரி 04) கொண்டாடப்படும் போது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடப்படும் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை அந்த ஊடகத்துக்கு யார் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.
அப்படியான ஒரு முடிவை ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அமைச்சரவையோ எடுத்ததாகவும் தெரியவில்லை. அப்படியான ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என முன்னாள் தேசிய மொழிகள் அமைச்சரும், தற்போதைய இராஜாங்க அமைச்சர்களில் ஒருவருமான வாசுதேவ நாணயக்கார மறுத்திருக்கிறார். கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் மறுத்துள்ளார்.

காசிம் சுலைமான் கொலையில் குளிர்காயும் அமெரிக்கா?: உலகளவில் ஷியா, சுன்னி முஸ்லிம்கள் பிளவு பெரிதானது- க.போத்திராஜ்


-
Gerelateerde afbeelding
ஈரானின் முஸ்லிம் புரட்சிகரப்படைத் தளபதி (ஐஆர்ஜிசி) காசிம் சுலைமான் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டபின் உலகளவில் சுன்னி, ஷியா முஸ்லிம்களிடையிலான பிளவு இன்னும் பெரிதாகியுள்ளது.
ஷியா பிரிவைச் சேர்ந்த காசிம் சுலைமான் கொல்லப்பட்டதற்கு எதிராக சுன்னி பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் மலேசியா தவிர்த்து ஒருநாடும் வாய்திறக்கவில்லை.
முஸ்லிம்களில் இரு பெரும் பிரிவுகளில் உலகளவில் 85 சதவீதம் சுன்னி பிரிவினரும், 15 சதவீதம் மட்டுமே ஷியா பிரிவினரும் வாழ்கின்றனர். இந்த இரு பெரும் பிரிவுகளுக்கு இடையிலான போராட்டம், பிளவு நேற்று இன்று உருவானது அல்ல, 7-ம் நூற்றாண்டில் இருந்தே இந்த இருதரப்புக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது.
இதில் சுன்னி பிரிவு முஸ்லிம்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு ஆசியா, சீனா, தெற்காசியா, ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளில் வசிக்கின்றனர்.
இராக், பஹ்ரைன், ஈரான், அசர்பைஜன் ஆகிய நாடுகளில் ஷியா பிரிவினரும், சிரியா, குவைத், ஏமன், லெபனான் பாகிஸ்தான், குவைத், சிரியா ஆகிய நாடுகளில் அரசியல்ரீதியாக முக்கியத்துவமான பதவிகளில் ஷியா பிரிவினரும் வசிக்கின்றனர்.
இரு பிரிவுகளுக்கும் இடையே பிளவு தொடர்ந்து வந்தபோதிலும் கடந்த சில ஆண்டுகளாகச் சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ளது. அதாவது இந்த இரு நாடுகளும் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் நாடுகளில் நடக்கும் உள்நாட்டு குழப்பங்கள், போர்களில் யார் அதிகமாக ஆதரவு தருவது என்ற போட்டி நாளுக்கு நாள் அதிகரித்தது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...