இன மீளிணக்கமா மீண்டெழும் இனவாதமா ?



எஸ்.எம்.எம்.பஷீர்

"இன்றுள்ள பிரதான கேள்வி என்னவென்றால் : நாட்டில் உள்ள எந்த அரசியல்,  சமூக சக்திகள் இலங்கையின் தேசிய அக்கறையின் பக்கம் உள்ளனர்;  அவர்கள் அதற்காக ஆதரவு வழங்க தயாராக இருக்கிறார்களா ?"
                                                                                                     
                                                                              தமரா குணநாயகம்


இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள்  பேரவையில் இறுதியாக எதிர்வரும் 30ஆம் திகதி  சமர்ப்பிக்கப்பட்ட  வரைவுத்  தீர்மானங்களில் பிரேரிக்கப்பட்ட கலப்பு நீதிமன்றம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்யும் செல்வாக்கு செலுத்தும் அமெரிக்க அரசுடன் இலங்கை அரசு சமரசம்  செய்து உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நடைமுறைப்படுத்த முயற்சித்துள்ளது , ஆனாலும் வெளிநாட்டு தலையீடு வேறு வடிவத்தில் இப்பொழுது வருகிறது. ஆனால் அமெரிக்கா உள்நாட்டு பொறிமுறையானது குறித்து இலங்கை அரசிடம் ஏமாந்து விடக் கூடாது என்று முன்னாள் மத போதகர் தரத்தில் பயிற்சி பெற்றவரும் சட்டத்தரணியும் , தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினருமான  ஏப்ரஹாம் சுமந்திரன் அமெரிக்காவிடமும் பிரித்தானியாவிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரைவுத் தீர்மானமே இறுதித் தீர்மானமாக இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் , தமிழ்  கூட்டமைப்பு விசாரணை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது என்றும்  எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

What the Ranil- Sirisena Government will nottell you! US draft resolution: A ‘system change’ by Tamara Kunanayakam

A US-sponsored draft resolution against Sri Lanka is back on the Human Rights Council agenda, this time with a vengeance and despite the Ranil-Sirisena government’s conciliatory and obsequious pro-Washington, pro-Western stance!
There is no more Mahinda Rajapaksa to blame, no more pro-Beijing foreign policy, no more Non-Alignment, no more ‘megaphone diplomacy’ or ‘megaphone diplomats’, no more corruption. History dawned in Sri Lanka only on 8 January, before that, there was only darkness, violence and obscurantism. Today, enlightened leaders have flooded the land with newness, goodness, transparency, and unity, along with privileged relations with a much-maligned West.
So, what went wrong? A generous response would be our new, enlightened leaders read all the signs wrong. An accurate response would be they have something to gain from subservience to Washington’s interests.

இறைமையுள்ள நாட்டின் மீது வெளிநாட்டு தலையீடுகள் ஐ.நா.அறிக்கையை ஏற்க முடியாது


-  இலங்கை சமசமாஜக் கட்சி  பொதுச் செயலாளர் திஸ்ஸ வித்தாரண
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்tissavitharanaடுள்ள அறிக்கை மற்றும் அது தயாரிக்கப்பட்டுள்ள முறை ஆகியவற்றை இலங்கை சமசமாஜக் கட்சி வன்மையாக கண்டிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

இலங்கை இறையாண்மை முற்றுகைக்குள்-வானவில


இம்மாதம் 16ந் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பாக மீண்டும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஐ.நா.மனித உரிமை பேரவையின் இவ்வாறான
அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் 2009 இல் ஒரு தடவையும் பின்னர் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாகவும் (2012-2015) வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும்ää 2011 இற்கு பின்னரே திடீரென்று ஐ.நா.ம.உ. பேரவை விழித்துக் கொண்டு இலங்கையின் மனித உரிமைகள் பற்றி கறாராகப் பேசத்  தொடங்கியுள்ளார்கள். அத்துடன் 9 ஆண்டு (2002-2011) காலப்பகுதியை மாத்திரமே தெரிந்து எடுத்து வைத்துக்கொண்டு ,இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக
சொல்கிறார்கள். குறிப்பாக இந்தக் காலப்பகுதியை தெரிந்தெடுத்ததின் பின்னணி என்னவாக இருக்கலாம் என்பதை  உணரக்கூடியவர்களால்தான், இலங்கை தொடர்பான இவர்களது
(அரசியல்) நிகழ்ச்சி நிரலையும் புரிந்து கொள்ள முடியும்.

இனப் பிரச்சினைக்கு மைத்திரி – ரணில் அரசின் தீர்வுத் திட்டம் என்ன?

செப்ரெம்பர் 25, 2015All community
மிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசு என்ன வகையான தீர்வு காணப் போகின்றது, எப்பொழுது காணப் போகின்றது, என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் எழுந்திருக்கின்றது.

ஐ நா மனித உரிமைக் காலக்கெடுவில் காணாமல் போன புலிகளின் காட்டுமிராண்டித்தனங்கள் : ஒரு நினைவுப் பகிரல்


எஸ்.எம்.எம்.பஷீர் 

"சில வேளைகளில்  ஒரு மனிதன் மாத்திரம் காணமல் போவது என்பது முழு உலகுமே குடியழிந்து போவது போலத் தோன்றும்"   அல் பொன்சே தே  லமர்டினே

இற்றைக்கு சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் , அன்றும் ஒரு ஹஜ்ஜுப் பெருநாள் தினம் (4 /07/1990) கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் எனும் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இருபத்தைந்து  வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம் வெறும் சோக நிகழ்வாக , பழைய சம்பவமாக காலவோட்டத்தில் மறக்கப்பட்டு போனாலும் புலிப் பயங்கரவாதிகள் நடத்திய காட்டு தர்பார் , காட்டுமிராண்டிதனங்கள்  முடிவுக்கு வந்து சுமார் ஆறு ஆண்டுகளும் கழிந்து விட்ட சூழ் நிலையில் அதிலும் குறிப்பாக இன்று ஆயிரக்கணக்கில்  புலிகளின் பினாமிகளும் ஆதரவாளர்களும்   ஜெனீவாவின் முன்றலில் இலங்கை அரசுக் கெதிராக போர்க் கொடி தூக்கி , மகிந்தவையும் , அவரின் கீழ் செயற்பட்ட இராணுவத்தினரையும் "தூக்கி " துவம்சம் செய்து விடலாம் ;  "தமிழ் ஈழத்"  தனி நாட்டை பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் பின்புலத்தில் அந்த நாட்கள் போல அநேக நாட்கள் எனது நினைவைக் கிளறுகின்றன. 

Can Jeremy Corbyn end 70 years of UK subservience to endless US warmongering?


Tim Gopsill .

A suffocating consensus has made Britain follow wherever the dictates of US foreign policy take it, says Tim Gopsill.


THE HOPES raised by Jeremy Corbyn’s wonderful win in the labour leadership election for people who oppose the UK’s wars are huge. More than in any other area, it will take a mighty effort to make those hopes real.

ஆரவாரமற்ற ஜெரமி கோபனின் "ஆங்கில வசந்தமும்" ஆர்ப்பாட்டங்களும் (2)


- எஸ்.எம்.எம்.பஷீர்
ஜெரேமி கோபன் இங்கிலாந்து  தொழிற்  கட்சியின் சுக்கானைக் கையில் எடுத்துள்ளார் , அவருக்கு முன்னாள் இருந்த சவால்களில் மிக முக்கியமானது கட்சிக்குள் இருந்த தனக்கு ஆதரவானவர்களை , அதிலும் குறிப்பாக தனக்கு எதிராக உள்ளவர்களையும் உள்வாங்கிக் கொண்டு  தொழிற் கட்சியை 2020 நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு இட்டுச் செல்வது. இந்த பயணம் ஒரு கடல் பயணம் போல தோன்றுகிறது , ஒரு படகின் மாலுமி , அதன் சுக்கானைக் கொண்டு, படகினை (தொழிற் கட்சியினை ) , அதன் ஸ்தாபக இலக்கை (கரையை) நோக்கி கொண்டு சேர்ப்பது என்பது ஒரு பாரிய சவாலாகும். தொழிற் கட்சித் தேர்தகளில் மையவாதிகளாக மாற்ற முற்றிருந்த தொழிற் கட்சி ஜாம்பவான்களான முன்னாள் தொழிற் கட்சி பிரதமர்கள் ( டோனி பிளேயர் , கோர்டன் பிரவுன் ) முன்னாள் தொழிற் கட்சித் தலைவர்கள் ( டேவிட் மில்லிபண்ட்  ,   லோர்ட் . நீல் கின்னேக் )  போன்றோரின் எதிர்வினைக் கருத்துக்களையெல்லாம்   மக்கள் தூக்கி எறிந்து விட்டு  ஜெரமியை  தொழிற் கட்சித் தலைவராக்கி  , அதனால் எதிர்க் கட்சித் தலைவராக்கி பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஒரு புதிய திசையை நோக்கி நகர்த்தி உள்ளனர்.

படம்: ஜெரேமி கோபனுடன் கட்டுரையாளர் 

ஐ.நா பரிந்துரையானது - இனவாதத்தையே விதைக்கின்றது- இரயாகரன்


ஐ.நா பரிந்துரைகளை "தமிழ்" தேசியவாதிகள் ஏற்றுக்கொண்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதேநேரம் கூட்டமைப்பு மூலம் அதிகாரம் கிடைக்காதவர்கள், தங்கள் முரண்பாட்டை அரசியலாக்க சர்வதேச விசாரணை என்று ஒற்றைக்காலில் நின்று கூவுகின்றனர். இதற்கு அப்பால் புலிகளின் யுத்தக்குற்றம் குறித்தான பகுதி ஐ.நா பரிந்துரையில் இருப்பதால், புலி புலம்பெயர் குழுக்கள், பினாமிகள், ஆதரவுகள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். ஐ.நா விசாரணை வேண்டும் என்று கூறி ஐ.நாவை நோக்கி படையெடுத்தவர்கள் - தமக்கு எதிரான பரிந்துரைகளைக் கண்டு, ஐ.நா பரிந்துரையை தமது "தமிழ்" தேசிய வெற்றியாக பறைசாற்ற முடியாது நெளிந்தபடி - புலிகளின் யுத்தக்குற்றத்துக்கு சுயவிளக்கம் அளிக்க முற்படுகின்றனர்.

Jeremy Corbyn: Why I'm standing down as Chair of Stop the War Coalition


Jeremy Corbyn

I am genuinely sorry I cannot be with you today.  I think it must be the first Stop the War conference I have missed since it was set up.  I am sure you all understand the reasons – it is now my job to lead the Labour Party, including in the struggle for peace and international justice, and that is demanding my undivided attention.

We warned Mahinda of international regime change conspiracy - Prof. Vitarana




article_image
When it came to the presidential elections, we warned Mahinda that an American led regime change conspiracy was afoot in this country and we suggested ways out of this trap. But astrology outweighed scientific socialism and the country is now faced with this situation.


இன்டிகாவின் மறைவும் இடதுசாரிகளின் இழப்புக்களும் !

இன்டிகாவின் மறைவும் இடதுசாரிகளின் இழப்புக்களும் !

எஸ்.எம்.எம்.பஷீர் 

"சரியான செயல்களை செய் , அது சிலரை திருப்திப்படுத்தும் ஏனையோரை ஆச்சரியப்படுத்தும் "                   -மார்க் ட்வைன்



                                                        தோழர்: இண்டிகா குணவர்த்தன
இலங்கையின் அரசியல் வரலாற்றில் நீண்ட கால இடதுசாரி அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பமாகத் திகழ்ந்த பிலிப் குணவர்த்தனாவின் மூத்த புதல்வர் இண்டிகா குணவர்த்தன  சிலதினங்களுக்கு முன்னர் ( 14/09/2015) காலமானார். இவரின் தகப்பன் பிலிப் குணவர்த்தனவும் , தாய் குசுமா குணவர்த்தனவும் இலங்கையில் முதன் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட  இடதுசாரி கட்சியான லங்கா லங்கா சமசமாஜ கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களாகும். இலங்கையில் சமவுடமை இயக்கங்களின் முன்னோடிகளான இவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்ட கால செயற்பாடுகள் தொடங்கி பின்னாளில் பிலிப் குணவர்த்தன சுதந்திர இலங்கையில் அமைச்சராகவிருந்து ஆற்றிய பணிகள் வரை சாமான்ய உழைக்கும் மக்களின் நலன் சார்ந்தவை. என்பது குறிப்படத்தக்கது.  . அவர் டட்லி சேனநாயக அரசிலும் சில காலம் அங்கத்துவம் வகித்துள்ளார். பின்னாளில் அவரின் கொள்கை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தன. எது எவ்வரெனினும் இவர் வாடகை விவசாயிகள் தொடர்பாக கொண்டு வந்த  நெற் காணிகள் சட்ட மூலம் . துறைமுகம்  பேரூந்து சேவையினை  தேசிய மயமாக்கல் ,  பல நோக்கு கூட்டுறவு சங்க இஸ்தாபிதம் , மக்கள் வங்கி உருவாக்கம் என்பன இலங்கையின் சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பொருத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்த சமூக மாற்றங்களுக்கு அடித்தளமிட்ட பணிகளாகும் .

இவரின் பெற்றோர்கள்   இருவரையும் போலவே இலங்கை நாடாளுமன்றறத்தில் இவரின் சகோதர்கள் இருவரும் , இன்டிகவும்  இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் என்பதும் , இவரின் சகோதரர்களான தினேஷ் குணவர்த்தனவும் , கீதாஞ்சனா குணவர்த்தனவும் அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். இவரின் சகோதரர் பிரசன்னா குணவர்த்தன கூட  கொழும்பு மேயராக இருந்துள்ளார்.மொத்தத்தில் இவர்களின் குடும்பமே ஒரு அரசியல் குடும்பமாகும்.

குணவர்த்தன குடும்பத்தின் மூத்த உறுப்பினரான  இவர் தனது 72 வயதில் காலமாகி காலமாகி உள்ளார் . இவர் சிலகாலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தமையால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டாமல் இருந்ததுடன் ஊடகங்களில் கூட இவர் தலை காட்டவில்லை. மீன்பிடி , கல்வி , தகவல் தொடர்பு அபிவிருத்தி , வீடமைப்பு என்று அப்ள அமைச்சுப் பதவிகளை இவர் வகித்துள்ளார். 

இண்டிக குணவர்த்தன தனது தந்தை பிலிப் குணவர்த்தன லங்கா சமசமாஜ கட்சியினை விட்டு நீங்கி உருவாக்கிய  மகஜன எக்சத் பெரமுனவின் இன்றைய தலைவராக இருப்பார் தினேஷ் குனவர்த்தனவாகும். ஆனாலும் இண்டிக இலங்கை கமுனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவே இருந்தார். இண்டிக குணவர்த்தன ஜே வீ பீ உடன் சேர்ந்து கொள்ள விரும்பியதாகவும் , ஆனால்  , அவரை ஜே வீ.பீ தலைவர் விஜேவீர ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றும் ஆனாலும் அவர் ஒரு பொதுவான ஆதரவை வழங்கியதாகவும் முன்னாள் ஜே வீ பீ உறுப்பினர் நினைவு கூர்ந்துள்ளார். இவர் சந்திரிக்கா அரசுடன் இணைந்து ஆட்சியில் அங்கத்துவம் வகித்ததுடன் ஒரு சிறந்த தொழிற் சங்க தலைவராகவும் திகழ்ந்துள்ளார். சந்திரிகா அரசின் தேர்தல் செலவீனங்கள் சம்பந்தமாக  சந்திரிகா அரசின் பின்னர் சில காலம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செலுத்திய பொழுது பல்வேறுபட்ட அரச நிதியினை தேர்தல் செலவுகளுக்கு  செலவிட்டதற்காக விசாரணைகளையும் எதிர் கொண்டார். அவர் சந்திரிக்கா அரசில் முதன் முதலில் நாடாளுமன்றத்தில்  மீன்பிடி அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரின் நியமனம் குறித்து நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தி ஒன்றிற்கு அவர் மறக்காமல் எனக்கு பதில் அனுப்பியிருந்தார்.  உழைக்கும் மக்களின் வாழ்க்கை தளத்தில் இக்குடும்பத்தினர் ஏற்படுத்திய பங்களிப்பு வரிசையில் இன்டிகாவின்  மக்கள் சார்ந்த செயற்பாடுகள் என்றும் நினைவு கூரப்படும் என்பதில் அவரின் அரசியல் செயற்பாடுகளை விமர்சிக்கும் பலரும் மறுதலிக்க முடியாத உண்மையாகும். 

புஸ்வாணம்! - தினமணி தலையங்கம்


இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும், dinamaniஅதில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
இலங்கையின் தற்போதைய குற்ற வழக்கு விசாரணை நடைமுறைகள் போதுமான வலு பெற்றிருக்கவில்லை என்பதால் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்' என்று இந்தப் பரிந்துரை குறிப்பிட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றம் பன்னாட்டு நீதிபதிகள், உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆரவாரமற்ற ஜெரமி கோபனின் “ஆங்கில வசந்தமும்” ஆர்ப்பாட்டங்களும்

 எஸ்.எம்.எம்.பஷீர்

 “நாங்கள் இங்கே வெறுமனே முதலாளித்துவுத்தை நிர்வகிப்பதற்காக இருக்கவில்லை, மாறாக  சமூகத்தை மாற்றுவதற்கும், அதன்  உயர்ந்த பெறுமானங்களை விவரிக்கவும் இருக்கிறோம் “
( கடின இடதுசாரி என அறியப்பட்ட  முன்னாள் மறைந்த தொழிற் கட்சி எம். பீ டோனி பெண் -தனது நாடாளுமன்ற இருத்தல் குறித்து குறிப்பிட்டது )



  படத்தில் ஜெரேமி கோபனுடன் கட்டுரையாளர்.

அண்மைக்கால உலக அரசியல் வரலாற்றில் மத்திய கிழக்கில் அரபு வசந்தம், மக்கள் எழுச்சியின் விளைவாய் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியவையாகும். அவ்வரசியல் மாற்றங்கள் பற்றிய விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, ஐரோப்பாவில் ரொமானியாவில் (1989) ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பின்னர் மத்திய கிழக்கில் இன் நூற்றாண்டில் ஏற்பட்ட அரபு வசந்தம் ஏற்படுத்திய மாற்றம் போலவே தீவிர இடதுசாரி அரசியல்வாதியான பிரித்தானிய தொழிற் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் அக்கட்சியில் சுமார் 32 வருடங்களாக நாடாளுமன்ற  உறுப்பினராய் இருந்தவருமான ஜெரேமி கோபன் தொழிற் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு சுமார் 60 வீத வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.





தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி பெண்னைப்  போலவே   இடதுசாரி  அரசியல் கொள்கையில் ஜெரேமி கோபன் மிகவும் உறுதியாக விருந்தார். இவரின் வெற்றி முழு ஐரோப்பாவில்  உள்ள இடது சாரி அல்லது இடதுசாரி சார்பு அரசியல் கட்சிகளுக்கு ஒரு உற்சாகமளிக்கும் செய்தியாகவே உள்ளது. தொழிற் கட்சியில்  தன்னுடன் போட்டியிட்ட மூன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரிகளான முன்னணி உறுப்பினர்களையும் (ஏவத் கோபர், லிஸ்  கெண்டல், அண்டி பெர்ன்ஹாம் ) பின்தள்ளி, அவர்களின் தனக்கு எதிரான பிரச்சாரங்களை முறியடித்து, வெற்றி ஈட்டி உள்ளார். தனது கட்சிக்கு உள்ளேயே, நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் 232 தொழிற் கட்சி உறுப்பினர்களில் வெறுமனே 20 பேரின் ஆதரவுடன் மிகப் பெரிய உட்கட்சி எதிர்ப்பை மிகத் துணிச்சலுடன் எதிர்கொண்டு கட்சித் தலைவர் தேர்தலில்  ஜெரமி பெற்ற வெற்றி மகத்தானது.


இவ்வருடம் மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இதுவரை வெற்றிடமாக இருந்த எதிர்கட்சித் தலைவர் பதவியை ஜெரமி கோபன் இனிமேல் வகிக்கப் போகிறார். இவருக்கு  எதிராக செயற்பட்ட வலதுசாரி சர்வதேச உள்நாட்டு ஊடகங்கள், ஆட்சியில் உள்ள வலதுசாரி அரசாங்கம் உட்பட  உலகின் வலதுசாரி நாடுகள் பல இவரின் வெற்றி கண்டு அச்சமடைந்திருக்கிறார்கள்.   இந்த பாரிய எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து, தனது சொந்தக் கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் எதிர்த்து ஜெரமி வெற்றி பெற முக்கிய காரணம், சென்ற வருடம் தொழிற் கட்சித் தலைவர் தெரிவு சம்பந்தமாக கொண்டு வரப்பட்ட புதிய சட்டமுமாகும். அதன்படி  தொழிற் கட்சி அங்கத்தவர்கள் அல்லாதவர்களும் வாக்களிக்க விண்ணப்பிக்க தங்களை பதிவு செய்து கொள்ள முடியும், அதன் மூலம் வாக்களிக்கும்  உரிமையைப்  பெற முடியும் என்பதாகும். தொழிற் சங்கங்களின்    ஆதரவும், மாற்றம் வேண்டி நிற்கும் இளைஞர்கள்,  இன்றைய ஆட்சியாளர்கள் அரசியல் கட்சிகள் மீது, அவற்றின் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்திருக்கும், பொதுவாகவே, தேர்தல்களை புறக்கணிக்கும், அக்கரையற்றிருக்கும்    வாக்காளர்கள் என பலரின் கவனத்தை இடதுசாரி மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் மூலம் ஜெரேமி ஈர்த்துக் கொண்டார்.
 
குறிப்பாக அவரின் வெளிநாட்டுக் கொள்கைகளும் அவரின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளாகும். ஜெரமியின்  வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான பகிரங்கமான வெளிப்பாடுகள் அவரின் இந்த வெற்றிக்கு   உதவியிருக்கிறது. 

அதிலும் ஜெரேமி குறிப்பாக “சட்டபூர்வமான யுத்தங்கள்” என்ற போர்வையில் கடந்த காலங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் அதன் நேச அணிகளும் இராக், லிபியா ஆப்கானிஸ்தான் என தொடராக நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்த்தவர், இப்பொழுது நிகழ்காலத்தில் நடைபெறும் சிரியா மீதான இராக் மீதான சகல வித தாக்குதல்களையும் கண்டிப்பவர், அதற்கெதிராக போராடி வருபவர். அதிலும் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கும் அடாவடிதனங்களுக்கும் எதிராக குரல் கொடுப்பவர், அவர்களின் தார்மீக போராட்டத்துக்கு ஆதரவை தொழிற் கட்சியின் தலைமையையும் மீறி துணிந்து முன் வைப்பவர். ஒருதலைப்பட்ச அணுவாயுத குறைப்பு பற்றிய தனது கொள்கையை வலியுறுத்துபவர். நேட்டோ (NETO) நாடுகளின் கூட்டமைப்பு இராணுவ விஸ்தரிப்பு நடவடிக்கைகளை இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் அவசியமற்றது என்று கருதுபவர்.

இவரின் யுத்த எதிர்ப்பு, உலக சமாதானம், உலக இடது சாரி இயக்கங்கள் மற்றும், அத்தகைய அரசுகளுடன் கருத்திணக்கம் கொள்பவை என்பன ஒரு நீண்ட வரலாற்றக் கொண்டவை. தென் ஆப்ரிக்காவின் நிறவெறி அரசுக் கெதிரான கொள்கைகளுடன் அவரை அடையாளம் காண முடியும்.


தொடரும்

Comrade A Vaidialingam: A First generation of communist of Ceylon.

Comrade A  Vaidialingam: A First generation of communist of Ceylon.  
In the pre-independent Ceylon, Dr. Wikramasinghe's Suriya-Mal Movement  played a significant role in helping the poor during natural disasters, thus consolidating their place among those who harboured anti-imperialist sentiment. 
The first generation leftist in Sri Lanka took root in the social movement of “Suriya Mal” which later turned out to be the first Lanka left party, Lanka Sama Samaja Party.  The LSSP proved to set the leftists in motion in pre-independent Sri Lanka. 
 Vaithilingam_A_Memorial_01

"மகிந்த ராஜபக்ஸ சந்திரிகா குமாரதுங்கமீது தாக்குதல் தொடுத்துள்ளார்"


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது இணையத் தளத்தில் வாக்காளரின் கவனத்துக்காகMahindaChandrikaப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அறிவிப்பு, அவரது முன்னாள் சகாவான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பலத்த அடி கொடுத்துள்ளது, சமீபத்தில் வெளிநாட்டு ஊடகத்துக்கு திருமதி குமாரதுங்க வழங்கிய கருத்துக்கள் மொத்தத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு த ஹிந்து பத்திரிகைக்கு திருமதி குமாரதுங்க வழங்கிய நேர்காணலைக் குறிப்பிட்டு ராஜபக்ஸ தெரிவித்திருப்பது, “தற்போது நான் உள்ள சூழ்நிலையில் திருமதி குமாரதுங்கவுக்கு சொல்லக்கூடியது, என்மீது அவருக்குள்ள தனிப்பட்ட குரோதம் அவரது கண்ணை மறைப்பதற்கு அனுமதிக்க வேண்டாம், மற்றும் எங்கள் அங்கத்தவர்களை உலகெங்கும் செல்ல முடியாமல் அவமானப் படவைக்கவும் மற்றும் எங்கள் சொந்தக் கட்சியை தரம் தாழ்த்தவும் அந்த நேர்காணல் மூலமாக வழிவகை செய்துள்ளார்” என்று.

Obama is setting a terrifying precedent for the next president to kill people in secret


Trevor Timm

These types of strikes backfire on the US, sowing hatred in the populations of bombed countries and breeding sympathy for al-Qaida

US drone graffiti in Yemen
Yemeni man looks at graffiti showing a US drone

THE OBAMA administration is again allowing the CIA to use drone strikes to secretly kill people that the spy agency does not know the identities of in multiple countries - despite repeated statements to the contrary.
That’s what we learned this week, when Nasir ­al-Wuhayshi, an alleged leader of al-Qaida, died in a strike in Yemen. While this time the CIA seems to have guessed right, apparently the drone operators didn’t even know at the time who they were aiming at - only that they thought the target was possibly a terrorist hideout.

How the US and Britain help the slaughter of civilians in Yemen's hidden war


Iona Craig

The United Nations has been asked to investigate violations of international law by all sides in Yemen, including by the US and Britain.

Yemen civilian killed
Mohammed Hussein Othman, posing for a selfie (L), was later killed by an airstrike that hit the public bus he was traveling in on April 25 in Lahj, Yemen.

SP Jamaldeen's Killing by the LTTE


தமிழர்களும் எதிர்க் கட்சித்தலைமைப் பதவியும்- - அவதானி


 டிங்கிரி  டிங்காலே  மீனாட்சி... டிங்கிரி  டிங்காலே... உலகம்போற  போக்கப்பாரு  தங்கமச்சில்லாலே...."
 தந்தை வந்தார் - தளபதி  வந்தார்  - தேசியத்தலைவர் வந்தார்   -   இவர்கள்  வழியில்    அய்யா  வந்துள்ளார்.
                                       -      அவதானி
" சிங்கத்தமிழர்  நாமென்றால்  சிங்கக்கொடியும்  நமதன்றோ..."  என்ற பாணியிranil and sampanthanல்  யாழ்ப்பாணத்தில்  பொது மேடையில்  ரணில் விக்கிரமசிங்காவுடன்  இணைந்து  சிங்கக்கொடியை  தூக்கி  அசைத்த இராஜவரோதயம்  சம்பந்தன்  அய்யா  அவர்கள்  எட்டாவது பாராளுமன்றத்தில்   எதிர்க்கட்சித்தலைவராகியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகியிருக்கிறார்.

"உள்ளக விசாரணையும் சர்வதேச விசாரணையும்" - தாயகம்


Be careful what you wish for, you might just get it.
ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வாக்கியம் இது. நீங்கள் காணும் கனவுகள் நனவாகும்போது, அவற்றோடு சேர்ந்து வரும் எதிர்மறையான விடயங்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கை அது. சினிமா நட்சத்திரங்கள் மேல் காதல் கொள்வோருக்கு, அவர்களின் திருமணங்களில் ஏற்படும் அவலங்கள் பற்றித் தெரிவதில்லை.
இன்றைக்கு தமிழ் அரசியல், ஊடக, இணைய, முகப்புத்தகப் பரப்பில், பரவலாக விவாதிக்கப்படுவது சர்வதேச விசாரணை, உள்ளக விசாரணை பற்றிய குடுமிப்பிடிச் சண்டை. இது போதாதென்று கையெழுத்து வேட்டை ஈழத்திலும், அதுதான் யாழ்ப்பாணத்திலும், ஆரம்பித்து விட்டது. இதற்கு முன்னால் மில்லியன் கையெழுத்து வைக்காவிட்டால், தமிழ் இரத்தம் ஓடாதவர்கள் என்றெல்லாம் புலன் பெயர்ந்த நாடுகளிலும் முகப்புத்தகத்திலும் நடந்தது. (அதற்கு என்ன நடந்தது என்ற தகவலே இல்லை!) நாடு கடந்த அரசாங்கமும் விசாரணைக்காகவென பல்வேறு ஆதாரங்களை முன்வைத்தது. அது என்னாச்சு என்றே தெரியாது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை வலதுசாரிகளின் பிடியில் சிக்கியுள்ளது! – அரசியல் நிருபர்



லங்கையில் இவ்வருடம் ஜனவரி 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஆரம்பித்த அரசியல் சதி சூழ்ச்சி நடவடிக்கைகள், அண்மையில் ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளில் கடந்த காலங்கள் போல ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க) பெரும் பங்கு எதனையும் வகிக்கவில்லை. அந்தக் கட்சிக்கு பதிலாக பண்டாரநாயக்க – சிறீமாவோ தம்பதிகளின் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக குமாரதுங்கவே நாடகத்தின் பிரதான கதாபாத்திரமாக இருந்து விடயங்களை நடாத்தி முடித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அரசியல் வரலாறு காணாத துரோக செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. உண்மையில் கழுத்தறுப்புகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும், கட்சி தாவல்களுக்கும் பெயர்போன இந்திய அரசியல்வாதிகளே மூக்கில் விரலை வைத்து அதிசயப்படும் அளவுக்கு, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் சந்திரிகாவினதும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

இலங்கையில் விவசாய இரசாயனங்களால் 5 இலட்சம் பேருக்கு சிறுநீரக நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது! – வீரக்கொடி


toxic
லங்கையில் சுமார் 5 இலட்சம் பேர் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் மற்றும் உர வகைகளாலேயே இந்த நோய் ஏற்பட்டுள்ளதாக, இந்த நோய் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரத்தில், இந்த நோய் ஏற்படுவதற்கு ஐ.நா. சபையின் உணவு விவசாய ஸ்தாபனமே (FAO) காரணகர்த்தா என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படைத் தளத்தில் மயங்கி விழுந்த இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர!


diego garcia1
சீனாவின் தென்கடல் பகுதியில், அமெரிக்க போர் விமானம் பறந்த பிரச்சினை, அந்தப் பகுதியில் போர் மேகம் சூழும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தென் கடற்கரை, சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மிகுந்தது. ஆகவே, போர் விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ள, சீனாவின் தென் கடல் பகுதியில் அமெரிக்காவின் படைக் கண்காணிப்பு விமானம் அண்மையில் வந்து கண்காணித்தது.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே, அக்கடல் பகுதி மீது பறந்து 
கண்காணித்ததாக அமெரிக்கா அளித்த ‘பெரியண்ணன்’ தோரணை பதில், சீனாவிற்கு ஆத்திரமூட்டியுள்ளது. இதனால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகம் சூழத் துவங்கியுள்ளது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...