How Israel deliberately targeted homes in Gaza killing over 500 children - Andrea Germanos
Israeli human rights organization says the hallmark of Israel's brutal assault on Gaza in Summer 2014 was its bombing of Palestinian residential homes.

ATTACKS in which the Israeli military deliberately targeted Palestinian homes were an "appalling hallmark" of the military offensive this summer and had the backing of top Israeli officials, an Israeli human rights organization charges in a report released Wednesday.
"ஊடக (அ)தர்மம்!" Suthan Nada
s.
s.
.
பிறரோடும் இணங்கி வாழ்தல்!
January 25, 2015
கிழக்கு
மாகாண சபைக்கு யார் முதலமைச்சராவது என்பதில் இன்னும் இழுபறி தொடர்கிறது.
‘தமிழ் பேசும் மக்கள்’ என்று அலங்காரத்திற்குச் சொல்லிக் கொள்கிறோமே தவிர,
ஒரே மொழியைப் பேசிக் கொள்வோரிடம் கூட இணக்கத்தைக் காணமுடியாதவர்களாக
இருக்கிறோம்.
How will the papadam crumble? = Editorial (The Island )
Editorial
How will the papadam crumble?
January 24, 2015, 6:57 pmநிறைவுற்றது ‘ஒப்பரேசன் ராஜபக்ஷ’ -யதீந்திரா
தெற்கை பதற்றத்திற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபத
ி
தேர்தல் மிகவும் அமைதியாக நிறைவுற்று முடிந்திருக்கிறது. பிரபாகரனை யுத்த
களத்தில் தோற்கடித்து, அவரை இல்லாமலாக்கிய ராஜபக்ஷவின் அதிகாரமும்
முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த ஒரு வருடகாலமாக மிகவும்
இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் ராஜபக்ஷ’ முடிவுக்கு
வந்திருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது புலம்பெயர்
ஆய்வாளர் தாமரைகாருண்யன் எழுதியிருக்கும் கட்டுரையொன்றை படிக்க நேர்ந்தது.

ஐம்பதுக்கு ஐம்பதுக்கும் அப்பால்-- தயான் ஜயதிலக
ஜனாதிபதி தேர்தலில் ஜூரிமார் குழுவின் தீர்ப்பு உள்ளது. அது எப்படி நடைபெற்
றுள்ளது
என்பதை தமிழர் எதிர்ப்பு அல்லது சிங்கள இனவாதி என்று விபரிக்க முடியாத ஒரு
சுவாராஸ்யமான வட்டாரத்தின் கூற்று கீழே தரப்பட்டுள்ளது. திரு.எரிக்
சொல்கைம் சொல்வதை கேளுங்கள்:

“;;;;…..ஸ்ரீலங்காவின்
அனைத்து சிறுபான்மையினரின் மாபெரும் ஆதரவின் காரணமாக தேர்தல் வெற்றி
சாத்தியமாகி உள்ளது. 160 தேர்தல் தொகுதிகளில் 90 தொகுதிகளை திரு.ராஜபக்ஸ
வென்றுள்ளார் மற்றும் சிங்கள ஆதிக்கம் நிறைந்துள்ள கிட்டத்தட்ட அனைத்து
மாவட்டங்களிலும் அவர் முன்னிலை பெற்றுள்ளார். திரு.ராஜபக்ஸ சிங்கள
வாக்குகளில் தோராயமாக 55 சதவிகிதத்தை வென்றுள்ளார். இது சிறிசேன வென்றுள்ள
சுமார் 80 விகிதமான தமிழ் வாக்குகள் மற்றும் பெரும் பகுதி முஸ்லிம்
வாக்குகளினால் ஈடு செய்யப்பட்டுள்ளது. இது திருப்பிச் செலுத்தும் சமயமாக
உள்ளது……” (தெரியாத தேவதையால் வழங்க முடியுமா? எரிக் சொல்கைம், த ஹிந்து,
ஜனவரி15,2015)
பண்டாரநாயக்க தம்பதிகளின் அரசியலும் அவர்களது பிள்ளைகளின் அரசியலும்-புனிதன்
இலங்கை மக்களைப் பொறுத்தவரையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.
பண்டாரநாயக்க அவர்களின் பெயர் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அதேபோல சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரைப் பொறுத்தவரையிலும் கூட அவர் நாமம் மறக்க முடியாத ஒன்று. அதற்கான காரணங்கள் பல என்ற போதிலும் முக்கியமான காரணங்கள் இரண்டு எனலாம்.
ஓன்று அவர் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தபோதும்ää அக்கட்சி பின்பற்றிய ஏகாதிபத்திய சார்புக் கொள்கைக்கு எதிராக
தேசப்பற்றுள்ளவராக இருந்தார்.
பண்டாரநாயக்க அவர்களின் பெயர் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அதேபோல சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரைப் பொறுத்தவரையிலும் கூட அவர் நாமம் மறக்க முடியாத ஒன்று. அதற்கான காரணங்கள் பல என்ற போதிலும் முக்கியமான காரணங்கள் இரண்டு எனலாம்.
ஓன்று அவர் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தபோதும்ää அக்கட்சி பின்பற்றிய ஏகாதிபத்திய சார்புக் கொள்கைக்கு எதிராக
தேசப்பற்றுள்ளவராக இருந்தார்.
தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு = பாலன் ( வானவில் தை 2015)
கடந்த 5 வருடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு தடவைகள் தமிழ்
மக்களின் நலன்களை ஒட்டுமொத்தமாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பேரினவாத அணிக்கு தாரைவார்த்து தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது.
2009இல் புலிகள் ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டப்பட்ட பின்னர் 2010இல்
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய
பங்கு வகித்தவரும் வடக்கில் இராணுவத்துக்கென உயர் பாதுகாப்பு
வலயங்களை உருவாக்கிய சூத்திரதாரியும் தமிழர்கள் இலங்கையில்
வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகலாமே தவிர உரிமைக் கோரிக்கை
எதனையும் எழுப்பக்கூடாது என ஆணவத்துடன் கனடிய ஊடகம்
ஒன்றுக்குப் பேட்டியளித்தவருமான முன்னாள் இராணுவத் தளபதி சரத்
பொன்சேகவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பகிரங்கமாக
ஆதரவளித்தனர்.
தமிழ் மக்களிடையே மாற்றம் நிகழ்வது எப்போது?-வானவில் தை 2015
08.01.2015 இல் இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில்
மைத்திரிபால சிறிசேனா வெற்றியீட்டியுள்ளார். இவர்
இலங்கையின் பிரதான ஆளுங்கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா
சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர். ஆனால்
நடந்து முடிந்த தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியின்
வேட்பாளர்ää சிறீலங்கா சுதந்திரக்கட்சித் தலைவர் மகிந்த
ராஜபக்சவிற்கு எதிராக பொது வேட்பாளராக அதிரடியாக
இவர் நிறுத்தப்பட்டார். இவரது திடீர் வேட்பாளர் நியமனம்
நாட்டின் முன்னேற்றப் பயணம் பின்தள்ளப்படும் அபாயம்!-வானவில் இதழ் 47, 48, 49 (ஜனவரி 18, 2015)
வானவில் இதழ் 47, 48, 49
ஜனவரி 18, 2015நாட்டின் முன்னேற்றப் பயணம்
பின்தள்ளப்படும் அபாயம்!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்பார்த்ததை விட அமைதியான முறையிலும், நேர்மையான முறையிலும் நடந்து முடிந்துள்ளது. தேர்தலின் பின்னரான அதிகார கையளிப்பும் சுமுகமாக நடந்துள்ளது.
Insight: Indian spy's role alleged in Sri Lankan president's election defeat-By John Chalmers and Sanjeev Miglani
Sri Lanka's President Mahinda Rajapaksa
reacts during his final rally ahead of presidential election in
Piliyandala January 5, 2015.
Credit: Reuters/Dinuka Liyanawatte
An Indian foreign ministry spokesman denied any expulsion and said that transfers were routine decisions. Rajapaksa, voted out of office in the Jan 8 election, told Reuters he did not know all the facts while the new government in Colombo has said it is aware of the reports but cannot confirm them.
Britain's permanent military base in Bahrain is aimed more at China than ISIS -Joe Glenton
Why is Britain expanding east of Suez with a new military base in Bahrain? Not for the reasons the government gives, says Joe Glenton

UK
Foreign Secretary Philip Hammond and his Bahraini counterpart Khalid
bin Ahmed Al Khalifa sign an agreement allowing the Royal Navy to
establish a permanent base in the Gulf state
Who is Sri Lankan President Maithripala Sirisena?
By
Sujeewa Amaranath and W.A. Sunil
16 January 2015
"Now that Sirisena has been elevated into power, Washington, the
International Monetary Fund and foreign capital expect him to deliver.
His regime will not bring peace, prosperity or democracy. Its
taskmasters are demanding intensified free market restructuring to
further open up Sri Lanka to imperialist investment and deeper austerity
attacks to drive down the living standards of the working class and
rural oppressed." BBC's Panorama programme plumbs new depths in its attack on Muslims by Chris Nineham
Not for the first time, the BBC's Panorama has been an outrider for the Islamophobia that is now so ingrained in the British establishment.

Charlie Hebdo, the hypocrisy of pencils and the limits of the free speech crusade- By Corey Oakley
.
Western politicians who lock up their own dissidents and survey the every movement of their citizenry will go on waxing lyrical about freedom of thought.

IT WAS Herald Sun cartoonist Mark Knight who tipped me over the edge.
To be fair, he wasn’t wholly responsible. If it wasn’t for all the lunacy that preceded him, I probably would have dismissed his cartoon as just another Herald Sun atrocity, more a piece of Murdoch-madness to be mocked rather than trigger for outrage. But context is everything. And after days of sanctimonious blather about freedom of speech and the Enlightenment values of Western civilisation, his was one pencil-warfare cartoon too many.
"நாசமறுவான் எப்போ சாவான்?" - எஸ்.எம்.எம். பஷீர்
“மாற்றங்களுக்கு ஏதேனும் உண்மையான பெறுமதி இருக்க வேண்டுமானால்,
அவை நிலைத்திருப்பதாகவும் இசைவுள்ளதாகவும் இருக்க வேண்டும்”
டோனி ராபின்சன்
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே... ம.அய்யம்பிள்ளை
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே
மக்கள் கருத்து -
- ம.அய்யம்பிள்ளை
முன்னர் ஆட்சியில் இருந்த (சந்திரிகா, ரணில், ஜே.ஆர், பிரேமதாஸ )அரசாங்கங்கள் எல்லாம் வெளிநாடுகளிடம் கடன் வாங்கிப் போரைச் செய்தன. அந்தப் போரின்போது எங்களின் வீடுகளுக்கு குண்டுகள் போடப்பட்டன. எங்கள் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டன. ஆனால், சரிபிழைகளுக்கு அப்பால் இந்த (மகிந்த ராஜபக்ஷ) அரசாங்கம் வெளிநாடுகளில் கடன்வாங்கி நாட்டைக் கட்டியெழுப்புகிறது. எங்களுடைய வீடுகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், குளங்கள், வீதிகள் போன்றவற்றைக் கட்டித்தந்திருக்கிறது. எங்களுக்கு மின்சாரத்தை வழங்கியிருக்கிறது. எங்களுக்கு மட்டுமில்லை. இலங்கை முழுவதிலும் உள்ள மக்களுக்கு மின்சாரத்தை வழங்கியிருக்கிறது.
ராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் – ரவி சுந்தரலிங்கம், ASATiC ஸ்தாபகர்
ஜனாதிபதி வேட்பாளர்களில் ராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் – ரவி சுந்தரலிங்கம், ASATiC ஸ்தாபகர்
ஜனவரி 3 2015இல் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நேர்காணலில் ரவி சுந்தரலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க எடுத்த முடிவை வன்மையாகக் கண்டித்த ரவி சுந்தரலிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் சொத்தாக இருக்கின்ற போர்க்குற்றங்களை; போர்க் குற்றவாளிகளுக்கு அரசியல் அந்தஸ்தை வழங்கி, தமிழ் மக்களின் அரசியல் சொத்துக்களை அழிப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் அவரை போர்க்குற்றத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றி இருந்தது. அந்த தைரியத்தில் தான் சரத் பொன்சேகா எந்த உயிர் இழப்பும் இல்லாமல் தாங்கள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக யாழ் மண்ணில் வைத்துத் தெரிவித்துள்ளார் என்றும் ரவி சுந்தரலிங்கம் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார். மைத்திரிபாலா சிறிசேனவோடு ஒப்பிடுகையில் மஹிந்த ராஜபக்ச உண்மையைப் பேசுவதாகக் குறிப்பிட்ட ரவி சுந்தரலிங்கம், யாழில் ராஜபச தெரிந்த பிசாசான தனக்கே வாக்களிக்க கேட்டள்ளார் என்பதைச் சுட்டிககாட்டினார். ரவி சுந்தரலிங்கம், இது அவர் உண்மையை உணரத் தலைப்பட்டு இருப்பதையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார். 13வது திருத்தச் சட்டம் பற்றிக் குறிப்பிட்ட ரவி சுந்தரலிங்கம், மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கின்ற சிங்ஹெள உறுமயவின் சம்பிக்க ரணவக்க, தான் மஹிந்த ராஜபக்சவுடன் இருந்து வெளியேறியமைக்குக் காரணம் அவர் 13வது திருத்தச் சட்டத்தை நீக்க முன்வராதது தான் என்று கூறியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார். இது மைத்திரிபால சிறிசேன அணி தமிழ் மக்களுக்கு உள்ள குறைந்தபட்ச உரிமையையும் இல்லாமற் செய்கின்ற நிலைக்கு செல்லாம் என்பதையே காட்டுவதாகத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா, எல்ரிரிஈ, சர்வதேசம் அனைவருமே யுத்தக் குற்றவாளிகள் எனத் தெரிவித்த ரவி சுந்தரலிங்கம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களை அடிமையாக வைத்திருக்கின்ற மஹிந்த ராஜபக்சவுக்கா? அல்லது எங்களை சர்வதேசத்திற்கு pimp – மாமா வேலைக்கு பயன்படுத்துகின்ற மைத்திரிக்கா வாக்களிக்க வேண்டும் என்று கேட்டால் அடிமையாக இருப்பதற்கே புள்ளடியிடுவேன் எனத் தெரிவித்தார்.
மூலம்: http://thesamnet.co.uk/?p=62317
Journalist Hafeel Farisz's interview with Mr. Maithreepala Sirisena - The issue of war crime !
"Only a genuine probe can reveal the extent and nature of such violations. In that respect the conduct of the man who served as acting defence minister for the last two weeks certainly deserves scrutiny.The fact that he is aspiring to presidential office necessitates such a probe.Maithripala Sirisena’s role in the last two weeks of war must be investigated."
What was the nature of the role played by Former Health minister and current Common Opposition Presidential Candidate Maithripala Sirisena during the final phase of the war conducted against the Liberation Tigers of Tamil Eelam (LTTE)?
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும்? -வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
இலங்கையில் மீண்டுமொரு ஜனாதிபதி தேர்தலை மக்கள் எதிர்நோக்கியுளPrasident election 2015்ளனர். இந்தமுறை ஜனாதிபதி தேர்தல் சற்று வித்தியாசமான முறையில் நடைபெறுகின்றது. அதற்கு காரணம் கடந்த 20 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசபக்த அரசாங்கத்தை எப்படியும் ஆட்சியிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்ற நோக்கம்தான்.
இந்த ஆட்சி மாற்ற அவாவில் பல்வேறு சக்திகள் ஒன்றிணைந்திருக்கின்றன. அவைகளாவன:
தமது பூகோள ரீதியிலான ஆதிக்கத்துக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருப்பதால் அதை எப்படியும் அகற்றிவிட வேண்டும் என முனைந்து நிற்கும் சர்வதேச வல்லாதிக்க சக்திகள்.
நீண்ட காலமாக ஆட்சி அதிகார சுவையை அனுபவிக்க முடியாமல் ஏங்கித் தவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முந்தைய அதிகாரத்தை இழந்துவிட்ட அல்லது புதிதாக அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்து தோல்வியுற்ற சக்திகள்.
‘புலம் பெயர் தமிழர்கள்’ என்ற போர்வையில் செயற்படுகின்ற பாசிச புலிகளின் ஆதரவாளர்கள்.
இலங்கையில் இருந்து செயற்படுகின்ற தமிழ் - முஸ்லீம் இனவாத சக்திகள்.
இவை தவிர ஒரு சிறு எண்ணிக்கையிலான ‘இடதுசாரி’ சந்தர்ப்பவாதிகளும், பதவி வேட்டைக்காரர்களும்.
இந்த சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பொது எதிரணி என்ற பெயரில், ஆனால் இலங்கையின் படுபிற்போக்கான, ஏகாதிபத்திய சார்பான, இனவெறி கொண்ட ஐ.தே.கவின் தலைமையில் ஒன்றுபட்டுள்ளன.
இந்தப் பொது எதிராணி என்ற ஐ.தே.க அணி “100 நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்”, “நல்லாட்சியை வழங்குவோம்” போன்ற நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளை மக்கள் முன் அவிழ்த்துக் கொட்டி வாக்கு பிச்சை கேட்கின்றனர். (இதேபோலத்தான் 1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஆட்சிபீடம் ஏறிய ஐ.தே.க சொன்னது. ஆனால் பின்னர் 17 வருடங்களாக எத்தகைய நரக ஆட்சியை மக்களுக்கு வழங்கியது என்பதை மக்கள் மறந்திருக்க முடியாது)
இதில் முக்கியமான விடயம் என்னவெனில், அவர்கள் கூறுவது போல அவர்களிடம் பொது எதிரணி என்ற ஒன்றும் கிடையாது என்பதே. காலம் காலமாக ஐ.தே.கவுக்கு ஆதரவளித்து வந்த பிற்போக்கு இனவாத சக்திகளே வௌ;வேறு பெயர்களில் பொது எதிரணி என்ற மகுடத்தின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளன.
ஆனால் ஒரு விடயம் தெளிவானது. அதாவது ஐ.தே.கவுக்கு இனிமேல் இலங்கையில் அரசியல் எதிர்காலம் இல்லை என்பதே அது. அதுவும் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைவராக இருக்கும் வரை அக்கட்சி ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பது இருபதுக்கும் மேற்பட்ட தடவைகள் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் சர்வதேச பிற்போக்கு சக்திகள் 2010 ஜனாதிபதி தேர்தலில் தமது உத்தியை மாற்ற வேண்டி வந்தது.
அத்தேர்தலில் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியின் பங்காளி எனக் கருதப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகவை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டிக்கு நிறுத்திப் பார்த்தார்கள். அவர் அதற்கு முந்திய தேர்தலில் ரணில் எடுத்த வாக்குகளுக்கு அண்மித்ததாக கூட வாக்குகளை பெறவில்லை. எனவேதான் இம்முறை ஆளும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை உடைத்தெடுத்து அவரை ஒரு ‘யூதாஸ்’ ஆக மாற்றி களமிறக்கியுள்ளனர். அத்துடன் தனது குடும்ப வாரிசை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர துடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையும் தம்முடன் இணைத்து கொண்டுள்ளனர்.
இதுதவிர ஆளும் கட்சியிலிருந்து எதிரணிக்கு தாவியவர்கள் என இவர்கள் ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம் காங்கிரஸ் உட்பட தனிப்பட்ட நபர்கள் அனைவருமே அனைவருமே முன்னர் ஐ.தே.கவிலிருந்து பதவிக்காக ஆளும் கட்சிக்கு தாவியவர்கள்தான். தமிழ் தேசிய கூட்டமைப்பும் பாரம்பரியமாக ஐ.தே.கவின் அரசியல் சகபாடிதான். இவை தவிர சிறீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியமான தலைமைத்துவ உறுப்பினர்களோ, அக்கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களோ அல்லது அதன் கிராமப்புற வெகுஜன அடித்தளமோ எந்த மாற்றத்துக்கும் உட்படாமல் ஆளும் கட்சியுடனேயே தொடர்ந்தும் தங்கியுள்ளன. எனவே இத்தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட விடயம்.
அதுமாத்திரமின்றி, தற்போதைய அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமய இப்பொழுது மைத்திரிபாலவின் கடிவாளத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அக்கட்சியின் செயலாளர் சம்பிக்க ரணவாக்க அண்மையில் தாம் ஆட்சிக்கு வந்தால் மாகாணசபைகளுக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்பட மாட்டாது எனவும், மகிந்த ராஜபக்ச தவறவிட்ட எஞ்சிய புலிகளையும் தேடிப்பிடித்து அழிப்போம் எனவும் பகிரங்கமாக பிரகடனம் செய்துள்ளார். இதன் மூலம் எதிரணி தற்செயலாக வெற்றிபெற்றால் தேசிய இனப்பிரச்சனையில் எந்தத் திசையில் - அதாவது ஐ.தே.கவின் 17 வருட தமிழ் இன அழிப்புத் திசையில் பயணிக்கும் என்பதும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
அத்துடன் இன்னொரு சிங்களப் பேரினவாதியாகிய சரத் பொன்சேகவும், இடதுசாரி போர்வையில் இருந்துகொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வுகளை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் ஜே.வி.பி என்பனவும் கூட மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் கூடாரத்துக்குள் இணைந்து கொண்டுள்ளனர்.
தற்போது பதவியில் உள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை முற்றுமுழுதான ஒரு முற்போக்கான அரசாங்கம் என்று சொல்லிவிட முடியாது என்பது உண்மையே. ஆனால் இன்று தம்மை எதிரணி என்று கூறிக்கொள்ளும் ஐ.தே.க தலைமையிலான அணியினருடன் ஒப்பிடுகையில் இன்றைய அரசு படமடங்கு முற்போக்கானது என்பதிலும் சந்தேகமில்லை. அதற்குக் காரணங்கள் பலவுண்டு.
முதலாவதாக ஏகாதிபத்திய சார்பு வலதுசாரி ஐ.தே.கவுக்கு எதிராக உருவாகிய சிறீ.ல.சு.கட்சியே தற்போதைய அரசாங்கத்தின் முதுகெலும்பாக உள்ளது. அக்கட்சியுடன் 1964 முதல் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டுத் தொடர்கிறது. சிறீ.ல.சு. கட்சி தனியாகவும், இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்தும் பல ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளையும், முற்போக்கு நடவடிக்கைகளையும், மக்கள் சார்பு நடவடிக்கைகளையும் எடுத்த வரலாறு அந்த அணிக்கு உண்டு. இடையிடையே இந்தக் கூட்டணியுடன் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாதக் கட்சிகள்; பதவி நோக்கம் காரணமாக இணைந்திருந்தாலும், அந்த அரசின் ஓரளவு முற்போக்கான கொள்கைகள் காரணமாக இடையிலேயே விலகிச் சென்றுள்ளன. இது ஒன்றே அந்த அரசின் மக்கள் சார்பு கொள்கைகளுக்கு போதுமான சான்றிதழாகும்.
இதுதவிர, இலங்கையில் நிலவிய பிரிவினைவாத, பாசிச, பயங்கரவாத புலிகள் இயக்கத்தை முற்றுமுழுதாகத் தோற்கடித்து நாட்டின் தேசிய சுதந்திரத்தையும், இறைமையையும், ஜனநாயகத்தையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது இன்றைய அரசாங்கமே. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய யுத்த அழிவுகள், இடப்பெயர்வுகள் என்பனவற்றுக்கு முடிவுகட்டி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக நிறைவேற்றி வைத்ததும் இன்றைய அரசாங்கமே. அத்துடன் தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்தத்தின் வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வுக்கான நிர்வாக அலகுகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கு தேர்தலை நடாத்தியதும் இன்றைய அரசே.
மறுபக்கத்தில் சர்வதேச ஏகாதிபத்திய சக்திகள் இலங்கை அரசாங்கத்தை நிலைகுலைய வைக்கவும், அதன் பொருளாதார வளர்ச்சியை முறியடிக்கவும் பல்வேறு சூழ்ச்சிகள், நெருக்கடிகளைக் கையாண்ட போதிலும் தேசப்பற்றுடனும், துணிகரமாகவும் இன்றைய அரசாங்கம் நின்று பிடித்து அவற்றைத் தடுத்து வந்துள்ளது.
எனவே இன்றைய அரசுடன் ஒப்பிடுகையில் எதிரணி என்று சொல்லப்படும் கோஸ்டிகளுக்கு அவ்விதமான எவ்வித முற்போக்கு, தேசப்பற்று தன்மைகளும் கிடையாது. ஒருவேளை மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிகவும் சிறீ.ல.சு.கட்சியின் இப்போதைய தலைமையின் மீது அதிருப்தி கொண்டு பிரிந்து சென்று உண்மையான முற்போக்கு சக்திகளின் அணியாக இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அதைப்பற்றி யோசிப்பதற்கு மக்களுக்கு ஒரு சிறு காரணமாவது இருந்திருக்கும். ஆனால் அவர்கள் ஐ.தே.கவுடனும் பேரினவாத சக்திகளுடனம் சேர்ந்ததின் மூலம் அந்தத் தகுதியை இழந்துவிட்டார்கள். இந்த கணிப்பீடே எதிரணியுடன் சேர்ந்த ஏனைய சக்திகளுக்கும் பொருந்தும்.
இந்த நிலைமையில் இன்றைய அரசை விட மேலும் முற்போக்கான, ஏகாதிபத்திய எதிர்ப்பான, மக்கள் சார்பான அணி ஒன்று தோன்றும் வரை இந்தத் தேர்தலில் மட்டுமின்றி, எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய தேர்தல்களிலும் இந்த அரசை வழிநடாத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையே மக்கள் ஆதரிக்து வாக்களிக்க வேண்டும் என்பதே சரியான முடிவாக இருக்கும்.
http://www.thenee.com/html/040115-7.html
அமெரிக்காவின் குறியில் அன்று பிரபாகரன். இன்று மகிந்த ராஜபக்ஸ -- வடபுலத்தான்
புலிகளை அழித்த அமெரிக்காவும் இந்தியாவும்தான் இப்பொழுது மகிந்த mahinda2016ராஜபக்ஷவையும் ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கிறன.
இது ஒன்றும் ரகசியமாக விடயம் அல்ல.
அப்பொழுதும் இப்பொழுதும் வெளிச்சக்திகளுக்கு ஆதரவளித்த தமிழ்த்தலைமைகள் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் - இப்பொழுதும் இதற்கு ஒத்துழைக்கின்றன.
இதுதான் வரலாற்றின் துயரமும் வேட்கக்கேடுமாகும்.
அப்பொழுது பிரபாகரனை ஒழிப்பதற்காக மகிந்த ராஜபக்ஷவைப் பயன்படுத்திய இதே வல்லரசுகள், மகிந்த ராஜபக்ஷவை அகற்றவதற்காக மைத்திரியைப் பயன்படுத்துகின்றன.
இது ஒன்றும் புதிய விசயம் அல்ல. வரலாற்றில் இப்படித்தான் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
மற்றவர்கள் கையாளக் கடினமானவர் பிரபாகரன்.
மகிந்த ராஜபக்ஷவும் அப்படியான ஒருவரே.
பிரபாகரனை வளைத்து அவருடைய இடுப்பில் இருக்கும் துப்பாக்கியையும் அவர் அணிந்திருக்கும் புலிச் சீருடையையும் களைந்து, வெள்ளைச் சட்டை போட்டு மிதவாத – ஜனநாயக – அரசியலுக்குப் பயிற்றுவிக்க முயற்சித்தது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம்.
ஆனால், புலி புல்லைத்தின்னாது என்று பிடிவாதமாகவே மறுத்து விட்டார் பிரபாகரன்.
பிரபாகரனுடைய மேற்கு நாட்டுப் பிரதிநிதிகள் எவ்வளவோ வாதாடியும் அவர் தன்னுடைய பிடியைக் கைவிடத்தயாராக இருக்கவில்லை.
அதனால் மேற்குலகம் அவரைக் களத்திலிருந்து அகற்ற முனைந்தது.
அதைப்போல மகிந்த ராஜபக்ஷவும் இலங்கையை மேற்கின் ஈர்ப்பிலிருந்து மீட்டு, ஆசிய மையக் கூட்டில் சீனாவின் ஆதரவோடு ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்.
மேற்கின் ஈர்ப்பு விசைக்கும் அதன் நலனுக்கும் அவர் நெகிழ்ந்து கொடுக்க விரும்பவில்லை.
ஆனால் அமெரிக்கா இதை லேசில் விட்டு விடுமா?
எத்தனை தடவை தோற்றாலும் சற்றும் சலிக்காத விக்கிரமாதித்தனாக – மகிந்த ராஜபக்ஷவை வீழ்த்துவதற்கு அது தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது.
அதற்காகவே அது கடந்த தடவை நடந்த ஜனாதிபதித்தேர்தலில் சரத் பொன்சேகாவைக் களமிறக்கியது. அதற்காகவே அது சரத்துக்கும் அந்த அணிக்கும் தாராளமாகப் பணத்தை அள்ளிக் கொட்டியது.
ஆனால், அந்தத் தேர்தலில் அமெரிக்கா தோற்றது. இந்தியாவும்தான்.
இலங்கை மக்கள் விழிப்பாக இருந்து தங்களின் தெரிவாக மகிந்த ராஜபக்ஷவைத் தேர்ந்தனர்.
பிரபாகரனைப்போல நினைத்த மாத்திரத்தில் இந்த அணியினால் மகிந்தவைத் தோற்கடிக்க முடியவில்லை.
ஆனாலும் அது சும்மா இருந்து விடுமா?
இதோ இந்தத் தடவை மீண்டும் அது கடுமையாக முயற்சிக்கிறது.
இதற்காக அது தேர்தல் கண்காணிப்பாளர்கள் முதல் ஊடகங்கள், தொண்டு அமைப்புகள், அரசியற் கட்சிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், நிறுவனங்கள் என்று பல தரப்பையும் வாங்கியிருக்கிறது. அல்லது அவற்றுக்கிடையில் ஊடுருவியிருக்கிறது.
இதற்கு முதலே அது தனக்கு இசைவாகச் சிந்திக்கக் கூடியமாதிரியான கல்வி முறையையும் ஊடகச் சிந்தனை முறையையும் உருவாக்கி விட்டது.
மாற்றம், ஜனநாயகம் என்று சிந்திப்போரின் உலகமும் உளவியலும் இந்த அடிப்படையிலானதே.
எந்த நாட்டிலும் உறுதியான – ஆளமை உள்ள தலைவர்களை அமெரிக்கா அனுமதிக்காது.
இதுதான் அமெரிக்காவின் உலக அரசியல் நெறி.
இதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு.
இதுதான் அமெரிக்காவின் கொள்கை.
இதுதான் அமெரிக்காவின் ஜனநாயகம்.
தனக்குச் சேவகம் செய்யக் கூடிய, தன்னை அனுசரிக்கக் கூடிய பொம்மைத் தலைவர்களையே அது விரும்புகிறது.
இது இன்று நேற்று ஏற்பட்ட அமெரிக்க விருப்பமோ, அமெரிக்க நிலைப்பாடோ, அமெரிக்கக் கொள்கையோ அல்ல.
கடந்த பலஆண்டுகளாக தென் அமெரிக்க நாடுகளிலும் அரபு நாடுகளிலும் இதை ஆபிரிக்க நாடுகளிலும் இதைச் செய்து வருகிறது அமெரிக்கா.
இந்த நாடுகளில் ஆளுமை மிக்க தலைவர்கள், தமது நாட்டின் சுய நிலைப்பாட்டுடன் செயற்பட்டால் அவர்களை அழித்து விடும் அமெரிக்கா.
இதற்கு எடுபடுவதுதான் விடுதலையா? அதுதான் ஜனநாயக அரசியலா?
http://www.thenee.com/html/010115.html
Subscribe to:
Posts (Atom)
மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்
எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...

-
எஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...
-
எஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...
-
எஸ் . எம்.எம்.பஷீர் “I give you the end of golden string; Only wind it into a ball, It will lead you in at Heaven’s gate, ...