பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் சாதனை படைப்பார்களா?



டுத்த மாதம் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சம்பந்தமாகவே இப்பொழுது பலரினதும் அக்கறை திரும்பியுள்ளது. குறிப்பாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கின்ற தமிழ் மக்கள் இந்தத் தேர்தல் முடிவுகளை வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் காத்திருப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன.
இதுவரை காலமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ தேசியக் கூட்டமைப்பே தனிப்பெரும் கட்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்று வந்திருக்கிறது. ஆனால் பொதுமக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததிற்கு ஏதுவாக கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதில் உறுதியாகச் செயல்பட்டதா என வினவினால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.

பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!- இரா.சிந்தன்


உலகம் இதற்கு முன்பு பார்த்திருக்காத ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை 2019 டிசம்பர் இறுதியில் சீனா முதன் முதலில் எதிர்கொண்டது. பிறகு அது உலகம் முழுவதும் பெருந்தொற்றாக பரவியது.
கொரோனா வைரசை முதன் முதலாக எதிர்கொண்ட நாடு என்ற வகையிலும்,குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்திருக்கும் நாடு என்ற வகையிலும் சீன அனுபவங்கள் தனித்துவமானவை. அடுத்தடுத்து புதிய கிருமிகளால் ஏற்படும் கொள்ளை நோய்களை எதிர்கொள்ள
வேண்டியிருக்கும் என்ற அறிவியலாளர்களின் எச்சரிக்கையை மனதில் கொண்டால் சீனாவின் உடனடி செயல்பாட்டின் படிப்பினைகள் உலக
மக்களுக்கு முக்கியமானவை என்பது புரியும். மேலும் இது சோசலிசத்தின்
மேன்மையையும் உணர்த்துகிறது.

சோசலிசமும் பொது சுகாதாரமும்: சோசலிசமும் பொது சுகாதாரமும்:
1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளுர தொற்று நோய் பரவியது. முதல்
உலகப்போரைத் தொடர்ந்து இந்த தொற்று கோடிக்கணக்கான உயிர்களை
குடித்தது. அப்போதுதான் உருவாகியிருந்த சோசலிச சோவியத்
குடியரசிலும் நோய் பாதிப்பு இருந்தது. வி.இ.லெனின் இதற்கென பொது சுகாதார அமைச்சகத்தை ஏற்படுத்தினார். மேலும் அவர் “உள்நாட்டு யுத்தத்தை எதிர்கொள்வதில் பெற்ற அனுபவம் அனைத்தையும் தொற்று நோய்களை எதிர்கொள்வதில் பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டார்.

LSSP Leader puts his foot down in opposition to SOFA, MCC and ACSA

 

article_image
LSSP leader Prof. Tissa Vitharana, who is on the SLPP National List yesterday strongly opposed SOFA, MCC and ACSA agreements with the US.

"If these agreements become a reality, the USA can make Sri Lanka a military base and the whole country a colony. If we agree to these terms we shall loose our independence, sovereignty and territorial integrity," Prof Vitharana warned in a statement issued to media.

The following is the text of the statement issued by Prof. Vitharana: President Gotabaya Rajapaksa had requested the Cabinet of Ministers to submit their opinions on the Prof. Lalithasiri Gunaruwan Report on the Millennium Challenge Corporation (MCC) agreement with the USA. This has now been extended for a further two weeks. Though not a Cabinet Minister, but as the leader of the Lanka Sama Samaja Party (LSSP), which is a member of the Sri Lanka Freedom Podujana Alliance (SLFPA), I wish to express the opinion of the LSSP on this controversial proposal.   

CJE condemns attempted assault on photojournalist at Colombo High Court


 

The Centre for Journalism and Education (CJE) has, in a press statement, strongly condemned former OIC of the Police Narcotics Bureau (PNB) Neomal Rangajeewa attempting to assault photojournalist Akila Jayawardana, attached to Ceylon Today newspaper, at the Colombo High Court premises.

Rangajeewa is a defendant in a case, which alleges his involvement in the killing of inmates at Welikada during the prison riot there in 2012.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன?

லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்ணயித்துள்ளது. கொடிய கொரனோ நோயின் தாக்கமே இந்தத் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படாமைக்குக் காரணம் என வெளியுலகத்திற்கு கூறப்படுகிறது. ஆனால் ‘வானவில்’ பத்திரிகைக்கு அது மட்டும் காரணம் அல்ல எனத் தெரிய வருகிறது.
கடந்த வருடம் நொவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமோக வெற்றியீட்டி ஜனாதிபதியானார்.
மறுபக்கத்தில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச, 2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த அதே தமிழ் – முஸ்லீம் கட்சிகளினது ஆதரவைப் பெற்றிருந்தும் கூட தோல்வியைத் தழுவிக் கொண்டார்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...