அடுத்த மாதம் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சம்பந்தமாகவே இப்பொழுது பலரினதும் அக்கறை திரும்பியுள்ளது. குறிப்பாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கின்ற தமிழ் மக்கள் இந்தத் தேர்தல் முடிவுகளை வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் காத்திருப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன.
இதுவரை காலமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ தேசியக் கூட்டமைப்பே தனிப்பெரும் கட்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்று வந்திருக்கிறது. ஆனால் பொதுமக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததிற்கு ஏதுவாக கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதில் உறுதியாகச் செயல்பட்டதா என வினவினால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.