புலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கும் தமிழக முஸ்லிம் அரசியல், சமூக தலைமைத்துவங்கள்.

- எஸ்.எம்.எம் பஷீர்

“எண்ணிலா நோயுடையார் - இவர்

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்

கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்

காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்”

- சுப்பிரமணிய பாரதியார்

இன்று தமிழ்நாட்டில் இடம்பெற்றவரும் “ஈழத்தமிழர்களுக்கான” போராட்டங்களில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லை ஏன்? தமிழக முஸ்லிம்கள் ஏன குரல் கொடுக்கவில்லை? என்ற கேள்விக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக ஸ்தாபர்களில் ஒருவரும், இஸ்லாமிய அறிஞருமான பி ஜெயினுலாப்தீன்  அவர்கள் அளித்த பதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் ஈழம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் கருத்தியல் மாற்றத்தினையும், புலிகளின் பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்ற அவர்களின் நிலைப்பாட்டினையும் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. பி.ஜே கடந்த காலங்களில் புலிகள் தொடர்பான தனது எதிர்க்கருத்தினை பல்வேறு சந்தர்ப்பங்களில் “உணர்வு "  பத்திரிகையின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

சிலவருடங்களுக்கு முன்னர் இவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவரது பதிலினை முடிந்தளவு அவரது பேசுமொழியில் பதிவுசெய்யும் நோக்கில் இக்கட்டுரை நீள்வதும் தவிர்க்கமுடியாததே.

“இலங்கைப் பிரச்சினையை தமிழர் பிரச்சினையென்று சிலபேர் சொல்லிககொண்டிருக்கின்றார்கள் ஆனால் உண்மை அதுவல்ல இந்தியாவிலிருந்து அங்கு சென்று வாழும் மலையகத் தமிழர்கள் ஒருசாரார், அங்கு வாழும் பூர்வீகத் தமிழர்கள் மறுசாரார். பூர்வீகத் தமிழர்கள் வடக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் சிங்கள அரசினால் தமது உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதற்காக அதனை ஆயதந்தாங்கித்தான் போராடவேண்டமென்று கருதி பல குழக்கள் உருவாகின. இன்று நடைபெறும் யத்தம் மலைநாட்டு மக்களுக்கு எதிரான யுத்தமல்ல பொதுமக்களுக்கு எதிரான யுத்தமுமல்ல. யார் ஆயதம் தரித்திருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதத்தினைக்கொண்டு அரசாங்கம் அதனை ஆயதத்தின்மூலம் அடக்கும்.

நம் நாட்டில் இருக்கும் ஒரு சாரார் இராணுவத்திற்கு எதிராக ஆயதம் தாங்கினால் இந்த மானில அரசாங்கம் என்ன செய்யும்? இந்த மானிலத்தின் முதல்வராக வை.கோ இருந்தாலும் சரி கருணாநிதி, ஜெயலலிதா ஏன் நெடுமாறன் இருந்தாலும் சரிதான். ஒரு சாரார் ஆயதம்தாங்கி வன்முறையில் ஈடுபட்டார்களேயானால் அரசாங்கம் அதனை சரியென்று சொல்லுமா? இங்கே தண்ணீர்கேட்டு, மின்சாரம் கேட்டு சட்டப்படி கோரிக்கை வைப்பவனுக்கே ஆர்ப்பாட்டம் பண்ணினால் அடிக்கிறாங்கள். அரசாங்கம் என்றால் ஒரு கட்டுக்கோப்பு இருக்கவேண்டும். பொலிஸாரை, இராணுவத்தினரை எதிர்த்து மக்கள் வந்தால் எப்படி சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது. நம் நாட்டில், நம் மானிலத்தில் அப்படியொரு கூட்டம்வந்தால் நாம் எப்படி அணுகுவோம் அது யாராக இருக்கட்டும். தமிழனாகத்தான் இருக்கட்டும், நக்ஸலைட் வந்தால் அது எந்த அரசாங்கமாக இருக்கட்டும் எப்படி அடக்குகிறீர்கள், ஏன் அவனும் உரிமைக்காகத்தான் போராடுகின்றான் அவனை கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒடுக்கத்தான் செய்கின்றார்கள். இன்று விடுதலைப் புலிகளுக்கு குரல் கொடுப்போர் ஏன் தமிழ் நக்ஸலைட்டுகளுக்க குரல் கொடுக்கவில்லை.

அவனும் தமிழர் படையென்றுதான் பெயர் வைத்திருக்கின்றான.; அவனை அரசாங்கம் அடக்கும்போது ஏன் நீங்கள் இந்த மண்ணிலுள்ள அவர்களுக்கு குரல் கொடுக்கவில்லை? இந்த வழிமுறை தப்பாகத் தெரியவில்லையா? அந்த நாட்டுக்காரனுக்கு அது தப்பாகத்தானே தெரியணும். நீங்கள் எல்லாம் உணர்ச்சிவசப்பட்ட பேசிக்கொண்டுபோனால் நாடு என்ன கதிக்கு உள்ளாகும். நாட்டில் சட்டம், ஒழுங்கு என்பதனை பார்ப்போமேயானால் ஆயதத்தினை தூக்கினால் அதனை எல்லா அரசும் தடுக்கும். ஏன் காஷ்மீரில் சுடுகிறீர்கள் இராணுவத்தினைக்கொண்டு இறக்குகிறீர்கள் அது எதற்கு அதற்க எதிராக போராடுவீர்களா? இங்கே தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் ஒன்றாய்ச்சோந்து காஸ்மீரைவிட்டு வெளியே போ என்று நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்த நாங்கள் போராட்டம் பண்ணினால் நீங்கள் எங்களுக்கு என்ன முத்திரை குத்துவீர்கள. நமக்கு எது சரியென்று படுகின்றதோ அடுத்தவனுக்கும் அது சரியென்று படணும். அன்னிய நாட்டுக்காரன் நம்மை ஆக்கிரமித்தால் மாத்திரம்தான் எதிர்ததுப் போராடுவதனை உலகம் எற்றுக்டிகொள்ளுமே தவிர உள்நாட்டில் இருக்கிறவன் இராணுவத்தை, பொலிஸை எதிர்த்துப் போராடினால் அதனை நீங்கள் நியாயப்படுத்தினால் உங்கள் நாட்டில், உங்கள் மானிலத்தில் அதற்கு என்ன விடை?.

தமிழ் நாட்டில் ஒருவன் இந்தமாதிரி கிளம்பிவந்தா அவனை சுட்டுக்கொன்றீர்களேயானால் அவனும் தமிழனாகத்தானே இருப்பான். அப்ப தமிழனாக இருப்பதன் காரணத்தினால் அவன் ஆயதத்தினை தூக்கினாலும் குண்டுவாங்கி சாவு என்று சொல்லுவீங்களா? இவங்க (புலிகள்) இராணுவத்தினருடன் மட்டும் போராடுபவாகளா?. அப்பாவி மக்களை கொல்லுகிறான், கொல்லுகிறான் என்று சொல்கிறீர்களே விடுதலைப் புலிகள் குண்டுவைத்து கொன்றவர்கள் எல்லாம் இராணுவத்தினரா? பஸ்ராண்டில், பள்ளிக்கூடத்தில் குண்டுவைக்கவில்லையா? நம்ம நாட்டில் பிரதமர் ராஜீவ் காந்தியை குண்டுவைத்து கொல்லவில்லையா? சக போராளி இயக்கங்களை கொல்லவில்லையா இதனை மனிதன என்று பார்ப்பதா அல்லது தமிழன் என்று பார்ப்பதா? தமிழன்போய் எந்த அப்பாவிச் சிங்களவனைக் கொன்றாலும் எங்களுக்கு கவலை வராதா? சிங்களவன்போய் கொல்கிறான் என்றால் மட்டும்தான் கவலைவருமா? இது மனிதாபிமானமா? இவன் (புலி) என்னமோ சாத்வீகமான ஆள் மாதிரி நினைத்துக்கொண்டு நாம் இங்கு போர் நிறுத்தம் என்கின்றோமே அது எப்படி அவன் யுத்தம் நடத்தும்போது போர் நிறுததுவான்.! அது அந்து நாட்டினுடைய பிரச்சினை. அதில்போய் தலையிடமுடியுமா யுத்தம் தொடங்கியிருக்கிறோம் குண்டுபோடப்போகிறோம் என்று பொதுமக்களை எல்லாம் வெளியே வாங்க என்று அவங்க அறிவிப்பு செய்றாங்க கஸ்டத்தை சகித்துக்கொண்டு பொதுமக்கள் வெளியே வரத்தான் வேண்டும.;

அவங்களுக்கான உதவிகளைப்பற்றி பேசினால் பரவாயில்லை அதற்கு ஏன் போர்நிறுத்தம்பற்றி பேசுறீங்க. நம்ம நாட்டிலேயே வன்முறையை அவிழ்த்துவிட்ட ஒரு கூட்டம் எந்தவொரு நீதி, நேர்மையுமில்லாமல் ஆயுதத்தை தூக்கிக்கொண்டு அப்பாவி மக்களை கொல்லுவதையோ, சுடுவதையோ கொள்கையாகக் கொண்டுள்ள ஒரு கூட்டம் இது பயங்கரவாதமாக தெரியவில்லையா? இந்தமாதிரி ஒரு கலாச்சாரத்தை நீங்கள் விதைப்பீர்களேயானால் இங்கே இருப்பவர்களுக்கும் அந்தமாதிரி சிந்தனை வருமே! நாங்கள் முஸ்லிம்கள் சிந்திக்கிறோம். நாங்கள் ஒரு நாட்டில் இருக்கிறோமா அந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும். சட்டதிட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் ஜனநாயக வழியிலே போராடவேண்டும் அவர்கள் (புலிகள்) ஆயதம் தூக்கினார்கள் என்னும் பொழுது அரசாங்கம் திருப்பி ஆயதம் தூக்கினால் அதை எப்படி தப்பு என்று கூறமுடியும், ஆயதம் தூக்காதவனையே மண்டையை உடைக்கிறீங்க , பொய் வழக்குப்போட்டு உள்ளே தள்ளுறீங்க. அப்ப ஆயுதம் தூக்கியவனை அவன் தமிழன் விட்டிடுங்க என்றால் அதனை எப்படி எற்றுக்கொள்ளமுடியும்.. அப்ப இவங்களால (புலிகளால) கொல்லப்பட்ட தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா. புத்மநாபா, சிறீ சபாரட்ணம் எல்லாம் தமிழர்கள் இல்லையா? ரெலோ, டெஸோ என்றெல்லாம் எத்தனையோ இருந்தன அவங்களையெல்லாம் அனுப்பிட்டாங்க. அந்த அமைப்புக்களெல்லாம் தமிழர்கள் இல்லையா?

இப்போது நாங்கள் என்ன சொல்லுகிறோம், நியாயம், நேர்மையை மழுங்கவைத்துவிட்டு ஏதோ நம்மளை ஒரு மூடர்களாக எல்லோரும் சேர்ந்து வழிநடத்திச் செல்கிறார்களோ என்ற அளவுக்கு இந்த நடவடிக்கை இருக்கின்றது. இதை நாங்கள் ஆதரிக்க முடியாது. தமிழர்களுக்க உதவவேண்டுமென் கிறீர்களே நீங்கள் எப்படி உதவுவீர்கள் நம் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இலங்கைக்காரன்வந்து உதவவேண்டுமென்றால் நம் நாடு ஒத்துக்கொள்ளுமா? ஓவ்வொரு நாட்டிற்கும் ஒரு இறையாண்மை உண்டு என்னதான் நீங்கள் வசூல் பண்ணினாலும் நிதி திரட்டினாலும் அத்துமீறி கொடுக்க முடியுமா? எங்கமக்களுக்கு நாங்கள் கொடுப்போம் நீ போயா என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்

அப்படியென்றால் ஐ.நா தலையிடாதா ஆனால் வங்களாதேசத்தில் இந்தியா தலையிட்ட மாதிரி தலையிடுங்க எங்கிறாங்க. அதுக்கு அந்தநாட்டு மக்களே திரண்டு நின்று தலையிட இந்தியாவை தட்டிக்கேட்க முடியாத சூழ்நிலை அனறு இருந்தது. இரண்டு வல்லரசுகள் இருந்தன. இந்தியாவைக் கேட்க முடியவில்லை இன்றைக்கு அமெரிக்கா தவிர எந்தநாடாவது நுழைய முடியுமா? ஈராக் குவைத்திலே தலையிட்டானே என்ன நடந்தது. இதெல்லாம் உதாரணமாகக் காட்டமுடியாது. இலங்கையிலேபோய் இறங்கினால் பார்த்துக்கொண்டிருக்க மாட்டாங்க அன்றிருந்த சூழ்நிலைவேறு இன்றைக்க உலகம் வேற மாதிரி போய்க்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் உதாரணமாக காட்டுவதைவிட இது சரியா, பிழையா என்று பாhக்கவேண்டும். அதையும்விட இன்னுமொன்றையும் நாங்கள் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். முஸ்லிம்களைப் பொறுத்தவரைக்கும் பிரத்தியேகமாக நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது ஏன் முடியாது? வடக்குப் பகுதியிலே யாழ்ப்பாணத்திலே தமிழர்கள் இந்துக்களாக மட்டும் இருக்கவில்லை ப+ர்வீகமான தமிழர்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள். அந்த மூவரும் சேர்ந்தே பூர்வீகக்குடிகள். இவர்கள் யாவரும் அந்த மண்ணில் பிறந்தவர்கள்தான் விடுதலைப் புலிகள் என்ன பண்ணினாங்க 24 மணித்தியால அவகாசம் கொடுத்து வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாத்தையும் விட்டுவிட்டு கோடி, கோடியாய் அவர்கள் சம்பாதித்த நகமும் சதையுமாக அந்த மண்ணை வளர்த்த  எல்லாவற்றையும் போட்டிட்டு வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேறினார்கள். அணிந்திருந்த ஆடையோடு அந்த மக்கள் வெளியேறி இன்றைக்கு புத்தளம் என்ற இடத்திலே அகதிகளாயிருக்கிறாங்கள். அவர்களை ஏன் வெளியேற்றினீங்க, அவர்கள் தமிழர்கள் இல்லையா? அங்கு இநதுத் தமிழர்கள் இருக்கிறாங்கள், கிறிஸ்தவ தமிழர்கள் இருக்கிறார்கள் மதத் துவேசத்தோடு முஸ்லிம்களை வெளியேற்றினார்கள் .முஸ்லிம்கள் தமிழன்கிடையாதா. முஸ்லிம்களை விரட்டியவாகள் யார்? விடுதலைப் புலிகள், எங்களால் உளப்பூர்வமாக அந்த அநியாயக்காரர்களை ஆதரிக்கமுடியாது. கிழக்கு மாகாணத்திலே சிங்களவனுக்கு பயங்காட்டுகிறோம் என்ற பெயரிலே பள்ளிவாசல்களுக்குள் முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள். நாங்கள் காத்தான்குடிக்குப் போனபோது இங்கே அந்த பள்ளிவாசலைப் பார்த்தோம் குண்டு தளைத்த இடங்களைப் பார்த்தோம். சஹீதானவர்களின் மக்பறாவை பார்த்தோம் அதிலே தப்பின ஒரு பெரியவரை பேட்டிகண்டு வந்திருக்கிறோம். பொல்லநறுவையிலே இன்னும் பல இடங்களிலே புலிகள் அப்படிச் செய்தாங்க பள்ளிவாசலிலே தொழுதவர்களை கொன்றார்களேயானால் கிறிஸ்தவ தமிழர்கள், இந்த தமிழர்களிடம் கேள்வி கேக்கணும் தமிழன் என்கிற போர்வையை போhத்திக்கொண்டார்களேயானால் அவாகள் யாரை அழித்தாலும் பரவாயில்லையா? எத்தனை அப்பாவிகளைக் கொன்றாலும் பரவாயில்லையா? சிறுபான்மை மக்களை அடிச்சி நாசமாக்கினாலும் பரவாயில்லையா? நீங்கள் குரல் கொடுக்கின்றது தப்பு என்று சொல்கிறோம். இங்க ஒரு நாடகம் நடக்கிறது போர் நிறுதம் செய்யச் சொன்னாங்க போர் நிறுத்திட்டானா? போர் நிறுத்தாட்டி ராஜினாமாச் செய்வோமெண்டு சொன்னாங்க இராஜினாமாப் பண்ணிட்டானா? போர் நிறுத்தப்பட முடியாதது. ஆயதம் தாங்கியவர்களை எந்த நாடாக இருந்தாலும் அவர்களை ஒடுக்கிவிட்டுத்தான் பேச்சவார்த்தை நடத்தும.; எந்த நாடாக இருந்தாலும் ஆயதத்தை கீழேபோட்டிட்டுவா உனது உரிமையைப்பற்றி பேசவோம் வா அறவழியிலே போராடு, ஜனநாயக வழியிலே போராடு இந்தமாதிரி கன்சப்டிலே (எண்ணைக்கருவிலே) நம்மை மக்களை வளாத்து எடுத்துப் போனார்களேயானால் இந்தியா என்ற ஒருமைப்பாடு இருக்கும் இல்லாவிட்டால் அவனவன் கிளம்பிட்டு எனக்குப் பிரிச்சுக்கொடு என்று பறப்பட்டு;டுவான் இன்று இந்தியா பெரிய வல்லரசு என்று சொல்லுகிறீர்களே அது எல்லாம் புஷவாணமாகிவிடும். விடுதலைப் புலிகளுக்கான சப்போட்டை எந்தக் காலத்திலும் ஆதரிக்கமுடியாது. யுத்தகால கஸ்டங்களை தவிர்க்கமுடியாது. அந்த மக்களுக்கு உதவவேண்டுமென்று நீங்கள் கோரினால் அதை நாங்கள் ஆதரிக்கலாம போரை நிறுத்தச் சொன்னால் அது புலிக்குத்தான். தமிழர்களோடு போர் நடக்கவில்லை போரை நிறுத்துவதற்கென கோரிக்கை வைப்பார்களேயானால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது அதனை நாங்கள் ஆதரிக்கவில்லை. " 
பி ஜெயினுலாப்தீன் 


இதேவேளை இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் எம்;.பியான கே.எம் காதர் முகைதீனும் தனது அண்மைய ஆசியன்றிபியூன் பேட்டியின்போது இந்திய அரசின் நிலைப்பாட்டை வலியுறத்தி புலிகள் அயுதங்களைக் கைவிட்டு யுத்த நிறுத்தத்திற்கு வரவேண்டுமென்று கோரியிருப்பினும் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளில் பல பிரிவினையை ஆதரிக்கின்ற வேளையில் அதனைதாங்கள் ஆதரிக்கவில்லை என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றமை பொதுவாக தமிழக முஸ்லிம்களின் புலிகளுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
March 2009 Unmaikal

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...