"ஊரில் அக்கறை உள்ளவர் நடப்பாய்
மாரித் தவளை முகாரி எடுப்பாய்
நாரியுந் தெறிக்க முழக்க மிடுவார்
சேரியைச் சுற்றி சேவையும் தொடுப்பார்"
கவிஞர் அனலக்தர்
மாரித் தவளை முகாரி எடுப்பாய்
நாரியுந் தெறிக்க முழக்க மிடுவார்
சேரியைச் சுற்றி சேவையும் தொடுப்பார்"
கவிஞர் அனலக்தர்
முஸ்லிம் காங்கிரஸ்
உட்பட்ட சகல முஸ்லிம் கட்சிகளும் இவ்வருட ரமலான் மாதத்தில் அரசியல் நன்மைகளை கொள்ளை கொள்ள
தங்களின் மாகான சபைத் தேர்தல் பணிகளை பிள்ளையார் சுழி போட்டு , மன்னிக்கவும் 786 போட்டு (
இந்த இலக்கம் எண்ணியல்
படி இறைவனின் பெயரால் ஆரம்பிப்பதாக உள்ள அரபு சொற்றொடரான " பிஸ்மில்லா .. "
எனும் சொற்றொடரின் எழுத்துக்களின் எண் கூட்டுத் தொகையே
786 என்று கூறப்பட்டாலும் இது ஒரு
பிழையான சமாச்சாரம் என்பது ஒருபுறமிருக்க ) தங்களின் தேர்தல் பணிகளை பூர்வாங்கமாக
ஆரம்பித்து வைத்துள்ளார்கள் . எதுவாயினும் நமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு
பிழையான சுயநல வியாபார அரசியலுக்கு பிழையானதே சரியானதுதான்.