இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி நடத்தும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜனதா விமுத்தி பெரமுனவினால் (மக்கள் விடுதலை முன்னணி – ஜே.வி.பி.) கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் 27 மேலதிக வாக்குகளால் தோற்றுப்போனது. இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
ஏனெனில், ஐ.தே.க. அரசாங்கத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதன் பாரம்பரிய சகபாடியான தமிழ்த்தலைமை – தற்போது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு – முண்டு கொடுத்து காப்பாற்றிவிடுவது வழமை. இந்தமுறையும் அதுதான் நடந்தது.