இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக 2019 நொவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். புதிய ஜனாதிபதிக்கு சம்பிரதாய அடிப்படையிலும் மரியாதை நிமித்தமாகவும் ‘வானவில்’ சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் கோத்தபாயவை ஆதரித்து வாக்களித்திருக்கின்றனர். அதேநேரம் வடக்கு கிழக்கிலும், மலையகத்தின் நுவரெலிய பகுதியிலும் வாழும் தமிழ் – முஸ்லீம் மக்களில் பெரும்பாலோர் கோத்தபாயவுக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.