புதிய ஜனாதிபதிக்கு முன்னால் உள்ள அவசர பணிகள்!


இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக 2019 நொவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். புதிய ஜனாதிபதிக்கு சம்பிரதாய அடிப்படையிலும் மரியாதை நிமித்தமாகவும் ‘வானவில்’ சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் கோத்தபாயவை ஆதரித்து வாக்களித்திருக்கின்றனர். அதேநேரம் வடக்கு கிழக்கிலும், மலையகத்தின் நுவரெலிய பகுதியிலும் வாழும் தமிழ் – முஸ்லீம் மக்களில் பெரும்பாலோர் கோத்தபாயவுக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.


ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (4)-பிரதீபன்



(பகுதி – 4)
Afbeeldingsresultaat voor tna and sajith cartoons
1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஒரு விசித்திரமான அறிக்கையை விடுத்தார். அதில் அவர், “தமிழ் மக்களைக் கடவுள்தான் இன்மேல் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
தமிழ் மக்களைக் காப்பாற்றும் பரமாத்மாக்களாக இருந்த தமிழரசுக் கட்சியினர் அந்தராத்மாக்களாக மாறி கடவுளின் மேல் பழியைப் போட்டது எதற்காக என்று விளங்காத சில தமிழ் தேசிய அறிவு சூன்யங்கள் இன்றும் எடுத்ததெற்கெல்லாம் செல்வநாயகம் சொன்ன வார்த்தைகளை மேற்கோள் காட்டி வருகின்றனர்.
ஆனால் “தந்தை” என அழைக்கப்பட்டு வந்த செல்வநாயகம் ஏன் அன்று அப்படிச் சொன்னார்?
1970 பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ‘தளபதி’ என அழைக்கப்பட்டு வந்த அ.அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியிலும், ‘விண்ணன்’ என அழைக்கப்பட்டு வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலும், ‘இரும்பு மனிதன்’ என அழைக்கப்பட்டு வந்த டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் நல்லூர் தொகுதியிலும், ‘உடுப்பிட்டி சிங்கம்’ என அழைக்கப்பட்டு வந்த மு.சிவசிதம்பரம் உடுப்பிட்டித் தொகுதியிலும், ‘அடலேறு’ என அழைக்கப்பட்டு வந்த மு.ஆலாலசுந்தரம் கிளிநொச்சித் தொகுதியிலும் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (3பிரதீபன்)




1958இல் எஸ்.டபிளயு.ஆர்.டி.பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர், 1960 யூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க நாட்டின் பிரதமரானார்.
அவர் பிரதமரான பின்னர் தமிழரசு கட்சி தனது இனவாத செயற்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தத் தொடங்கியது. இருந்தும் சிறீமாவோ, தமிழரசு கட்சி முன்வைத்த கோரிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்தார். தமிழரசுக் கட்சியினர் அவரது அழைப்பை நிராகரித்துவிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்த அரச செயலகங்களின் முன்னால் ‘சத்தியாக்கிரகம்’ என்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அங்கு அரச சேவையை முடங்கச் செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில் பிரதமர் சிறீமாவோ தனது பிரதிநிதியாக கம்பஹா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.பண்டாரநாயக்க அவர்களை யாழ்ப்பாணம் அனுப்பி தமிழரசுக் கட்சித் தலைவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தமிழரசு தலைவர்களோ எந்தவிதமான சமரசத்துக்கும் உடன்பட மறுத்துவிட்டனர்.
தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் கட்டுமீறிச் சென்ற நிலையில் அக்கட்சியின் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கும் சூழ்நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. அத்துடன் சத்தியாக்கிரகம் ஒரு முடிவுக்கு வந்தது.

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (2) பிரதீபன்


-
(பகுதி – 2)
லங்கை தமிழர்களின் தலைமை, குறிப்பாக யாழ்ப்பாணிய தலைமை, ‘இன விடுதலைக்காகப் போராடுகிறோம்’ என்று சொல்லிக்கொண்டு, அதேநேரம் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையின் படுபிற்போக்கான வலதுசாரி முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க.) கூட்டுச் சேர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை தமிழ் மக்கள் பலர் அறியாமல் இருக்கின்றனர்.
இலங்கை அரசியலில் ஐ.தே.கவின் வகிபாகம் இரண்டு வகைப்பட்டது. ஒன்று, அதன் இலங்கை தேசியத்துக்கு எதிரான ஏகாதிபத்திய சார்பு போக்கு. மற்றது, அதன் தமிழின விரோதப் போக்கு.
தமிழ் தலைமைகளைப் பொறுத்தவரை ஐ.தே.கவின் இந்த இரு போக்குகளுடனும் அன்றிலிருந்து இன்றுவரை கூட்டுச் சேர்ந்தே செயல்பட்டு வந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியே இன்று இரா.இசம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என எடுத்திருக்கும் முடிவு.

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (1)


பிரதீபன்
(பகுதி – 1)


“சுற்றிச்சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்ளே” அல்லது “பழைய குருடி கதவைத் திறவடி” என்பது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீண்டுமொருமுறை ஐக்கிய தேசியக் கட்சியிடம் சோரம் போயுள்ளது. 2019 நொவம்மர் 16இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.க. சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவது என்ற துரோகத்தனமான, வெட்கக்கேடான முடிவை எடுத்திருக்கிறது.
ஏற்கெனவே அவர்கள் இந்த முடிவை எடுத்திருந்தாலும், தமிழ் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு பல விதமான – பலகட்ட நாடகங்களை நடத்திவிட்டே தமது முடிவை அறிவித்திருக்கின்றனர்.

சீனா ஒரு பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்திருக்காவிட்டால் உலகில் இன்று என்ன நடந்திருக்கும்? டியு குணசேகர கேள்வி


(சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் புரட்சி நடந்து அங்கு  ஒரு சோசலிச அரசு ஏற்பட்ட 70ஆவது ஆண்டு (1949 ஒக்ரோபர்  1 – 2019 ஒக்ரோபர 1) நிறைவையொட்டி கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  தோழர் டியு குணசேகர நிகழ்த்திய உரையை கீழே தந்திருக்கிறோம்)


சீன மக்கள ; நீண்ட, பெருமைக்குரிய 3600 வருட வரலாற்றுப்
புகழுக்குரியவர்கள். பதிவு செய்யப்பட்ட இந்த வரலாற்றுடன, சீன மக்கள ;
இப்பொழுது தமது பிரமாண்டமான சாதனைகளுடன ; பொன்மயமான
காலகட்டம் ஒன்றினுள் பிரவேசித்துள்ளனர். புதிய சீனாவின்  முதலாவது
திருப்புமுனை புரட்சிகர ஆண்டான 1949இல் தலைவர ; மாஓவின்
தலைமையில் நிகழ்ந்தது. முதல் 31 வருடங ;களில் சீனாவின ; சமூக –
பொருளாதார மாற்றங்கள் சர்வதேச சவால்கள்  மற்றும் உள்நாட்டு குழப்ப
நிலைகள் நிலவிய காலகட்டத்தில் நிகழ்ந்தது. கொரியா,வியட்நாம் போன்ற
நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தங்கள்  சீனாவின்
அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க இடையூறுகளை விளைவித்தன. ஐக்கிய
நாடுகள ; சபையில் சீனாவுக்குரிய உறுப்புரிமை 22 நீண்ட வருடங்களாக
தடுக்கப்பட்டு வந்தது. 1971இல் தான் புதிய சீனாவை அமெரிக்க அரசாங்கம்
அங்கீகரித்தது. அந்த நாடு சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்
படுத்தப்பட்டிருந்தது. தடைகள் முற்றுகைகள் ,வியாபாரத்தடை என்பன
அந்த நாட்களில் விதிக்கப்பட்டன. இந்த எதிர ;மறையான சூழ்நிலைகளில் சீனப் புரட்சி முன்னேறிச் சென்றது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...