ஃபிடல் கஸ்ட்ரோவின் மகன் தற்கொலை செய்து கொண்டாரா?-எஸ்.பி.ராஜேந்திரன்


டாக்டர் பிடல் காஸ்ட்ரோ தியாஸ் பலார்ட், (Fidel Castro Diaz-Balart) 2018 பிப்ரவரி 1 அன்று மரணததைத் தழுவினார்.

‘பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை’ என்று உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. கியூபப் புரட்சியின் மாபெரும் தலைவரது மகன் கடைசியில் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனார் என இழிவுபடுத்துவதே இந்த தலைப்பின் நோக்கமாக இருந்தது.
உண்மையில் டாக்டர் பிடல் தற்கொலை செய்து கொண்டாரா?
கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘கிராண்மா’ வெளியிட்ட செய்தியில், தற்கொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

“பிடலிட்டோ (டாக்டர் பிடல் காஸ்ட்ரோவின் செல்லப்பெயர்; அவரை ‘லிட்டில் பிடல்’ என்றும் அழைப்பார்கள்) கடந்த சில மாதங்களாக மன அழுத்தம் சார்ந்த உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்த நிலையில் வியாழனன்று (2018,பிப்ரவரி 1) அதிகாலை மரணமடைந்தார். தோழர் பிடலிட்டோ, தனது வாழ்நாள் முழுவதையும் அறிவியலுக்காக அர்ப்பணித்தவர். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த பல அங்கீகாரங்களை பெற்றிருந்தவர்” என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

அம்பாறை வன்செயலும் நவீன நீரோ மன்னர்களும்! -இத்ரீஸ்

“ரோமாபுரி தீப்பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்” என்றொரு பழமையான சொற்றொடர் வழக்கில்
உண்டு. அதுபோல் கிழக்கில் உள்ள அம்பாறை நகரில் முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல், வாகனங்கள் என்பன எரிக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் வன்செயல்கள் நிகழ்கையில்
விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும் அதன் காவல்துறையும் ஏனோதானோ என்று இருந்த நிலை நடந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த அரசாங்க காலத்தில் அளுத்கமவில் முஸ்லீம் மக்களுக்கு
எதிராக வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது,  வானத்துக்கும்
பூமிக்குமாகத் துள்ளிக் குதித்து ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய முஸ்லீம்
அரசியல்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளையும் சொத்துச் சுகங்களையும் பாதுகாப்பதற்காக இந்தப் பாரிய சம்பவம்
சம்பந்தமாக அடக்கி வாசிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று நாட்கள் கடந்துவிட்ட போதிலும் முஸ்லீம்
மக்களுக்கெதிரான இந்தச் சம்பவம் என்ன காரணத்தால் நடைபெற்றது என இந்தப் பத்தி எழுதும் வரை அரசாங்கமோ முஸ்லீம் தலைமைகளோ எதனையும் தெரிவிக்கவில்லை. அம்பாறையில் இத்தகைய சம்பவங்கள்
நடப்பது இதுதான் முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் பல சம்பவங்கள்
நடந்துள்ளன. அதற்குக் காரணம் அம்பாறை எப்பொழுதும் சகல தரப்பு இனவாதிகளாலும் கொதி நிலையில் வைத்திருக்கப்படுவதுதான்.

உள்ளூராட்சித் தேர்தலில் எதிரணியினர் இனவாதம் பேசியா வெற்றி பெற்றார்கள்? புனிதன்


 பெப்ருவரி 10 இல் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்று அதில் கூட்டு
எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘நல்லாட்சி’ அரசுக்குச்
சார்பானவர்களும்ää தமிழ் தேசியம் பேசியோரும்ää ஏகாதிபத்திய
அடிவருடிகளும் அதிர்ச்சியில் உறைந்து போனதை அவதானிக்க முடிந்தது. இந்த அதிர்ச்சி இன்னமும் நீங்கியதாகத் தெரியவில்லை. குறிப்பாக,  தமிழ் ஊடகங்கள், முக்கியமாகப் பத்திரிகைகள்,  இந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில நாட்கள் பிடித்தன. தேர்தல் முடிவுகள் முழுவதுமாக அறிவிக்கப்பட்டு நாலைந்து நாட்களாகிவிட்ட பின்னர் கூட அவைகளால் அதைச் சீரணிக்க
முடியாமல் திண்டாடின. பல பத்திரிகைகள் புதிய செய்திகளை
பதிவேற்றம் செய்யாமல் ஸ்தம்பித்துப் போய் இருந்தன. உதாரணமாக,
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ‘சப்றா’ புகழ் ஈ.சரவணபவனுக்குச் சொந்தமான
‘உதயன்’ நாளிதழ் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக அறிவிக்கப்படுவதற்கு
முன்னர் வெளியிட்ட “முல்லைத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
முன்னணியில்” என்ற தலைப்புச் செய்தியுடன் நீண்ட நாட்களாகத் தவம்
இருந்தது.

போலியான எதிரியை காட்டி பொது எதிரியை மறக்கச்செய்வதையே தற்போது செய்கிறார்கள் . முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம்


kumar kunaratnamஇனவாத  மதவாத மோதல்கள், வன்செயல்கள்  மூலம்  சிங்கள, தமிழ்,  முஸ்லீம்  மக்களின் பொது  எதிரி  அவர்களுக்கு  மறக்கடிக்கப்பட்டிருப்பதாக   முன்னிலை  சோஷலிஸக்  கட்சியின் அமைப்பு  செயலாளர் குமார் குணரட்னம்  கூறுகிறார். தற்போதுள்ள   முறுகல்  நிலைமை  தொடர்பாக  ” திவயின”  ஞாயிறு பத்திரிகை   அவரை  தொடர்பு கொண்ட வேளை அவர் இவ்வாறு  தெரிவித்தார்.  கீழே  வருவது  அவருடனான  நேர்காணல்  ஆகும்
  • கேள்வி :  நாட்டில் தற்போது  ஏற்பட்டிருக்கும்  கலவர நிலைமையை  முன்னிலை  சோஷலிஸக்  கட்சி  எவ்வாறு  பார்க்கிறது. ?

பதில் :  நாட்டின் பொது  முற்போக்கு  மக்கள் நினைப்பது  போலவே  எம்மிலும்   இது தொடர்பாக  பெரிய   அதிர்ச்சி  காணப்படுகிறது. இந்த  பிரச்சினையை  உடனடியாக  தீர்க்கவேண்டும்  என்ற  நிலைப்பாட்டில்   நாம்  இருக்கிறோம் . இது  முற்றுமுழுதாக  இனவாதத்தை  அடிப்படியாகக்கொண்டது.  எமது  நாட்டில்   இனவாதமானது  காலத்திற்குக்காலம்  அந்தந்த  அரசியல்  கட்சிகளின்  தேவைக்கு  ஏற்ப  வளர்த்து விடப்படும்  சூழ்நிலை  காணப்படுகிறது.
  • கேள்வி :  நீங்கள்  குறிப்பிட்டீர்கள்  இது  இனவாத  பிரச்சினை என்று . ஒவ்வொரு  இனமும்  ஒவ்வொரு  இனத்தவரை  இனவாதிகள்  என்று  குற்றம்சாட்டிக்  கொண்டுள்ளனர்.

தேர்தல் தோல்வியின் வெளிப்பாடே முஸ்லீம் மக்களுக்கெதிரான வன்முறை!

வானவில் இதழ் 87

தேர்தல் தோல்வியின் வெளிப்பாடே


நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் மக்களுக்கெதிரான இன வன்முறை மீண்டுமொருமுறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்தக் கோர நடவடிக்கைகள் குறித்து விளங்கிக் கொள்வதற்கு இன்றைய அரசியல் சூழ்நிலையைப் புரிந்த கொள்வது அவசியம். அதன் அடிப்படையில் பார்த்தால் –
நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக ‘நல்லாட்சி’ என்ற பெயரில் நடந்து வந்துள்ள ஐ.தே.க. – சிறீ.ல.சு.க. கூட்டரசாங்கம் சகல வழிகளிலும் எமது நாட்டைச் சீரழித்து வந்ததால், பெப்ருவரி 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அரசுக்கு தகுந்த பாடம் புகட்டினர்.

Attacks on Muslims only help justify Washington’s demand: Kunanayakam

2018-03-13 18:34:08
 1
 6184
Sri Lanka's former permanent representative to the UN Tamara Kunanayakam said yesterday the attacks targeting a particular ethnic or religious group would only help justify Washington’s demand that universal jurisdiction or external intervention be applied to Sri Lanka through implementation of its 2015 Human Rights Council.

Recent anti-Muslim violence and how best to curtail them By Laksiri Fernando




article_image


Compared to anti-Muslim violence at Aluthgama in June 2014, both the government action against the racist mobs in Kandy and the condemnation by almost all important political leaders against the incidents give some hope that there are possibilities of curtailing communal violence in Sri Lanka in the future, if the determination and political resolve are not diminished, and necessary actions are taken impartially and consistently. This is not the time for me to criticise the government.

The prevention of communal violence and violence in general are national as well as humanitarian tasks beyond politics, religion or ethnicity.

This is not at all to defend the delays, perhaps hesitations, inefficiency of the police, or political point scoring which might even exacerbate as the time passes, detrimental to our hope for curtailing communal violence in the future. What might be most important are (1) not to lose attention after the mobs are controlled, and (2) seek both short term and long term ‘scientific’ or evidence based solutions.

Those solutions have to be sustainable and acceptable to all communities and political parties as much as possible. Here we are talking about true ‘national reconciliation’ which we have been talking about now for some time.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...