எஸ்.எம்.எம்.பஷீர்
“ என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்
என்பதே அரசியல் "
ஹரல்ட் லாஸ்வெல்
கிழக்கின் மாகான சபைத் தேர்தல் மிகுந்த
பரபரப்புடன் , இலங்கையின்
தேர்தல் உற்சவங்களில் நடைபெறும் களியாட்டங்களுடன் மட்டுமல்ல ஆங்காங்கே சில வன்முறைகளுடனும் நடைபெற்று
முடிந்திருக்கிறது, முடிவுகள்
ஒன்றும் பிரமிப்பூட்டுவனவாக இல்லை
போட்டியிட்ட சகல தரப்பினருக்கும் தேசிய சுதந்திர முன்னணி
(NFF) தவிர
தேர்தல் முடிவுகள் பொதுவாகவே
சகல கட்சியினருக்கும் ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.
எனினும் தேர்தலின் முடிவின் பின்னர் ஆட்சி அமைப்பதிலும் முதலமைச்சரைத் தேர்வதிலும்
உள்ள அரசியல் போட்ட போட்டிகளும் , ஆதங்கங்களும்
, ஊகங்களும்
இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. நாளுக்கு
நாள், கிழக்கில்
தங்களை ஆட்சி செய்யப்போகும் முதலமைச்சர் யார் என்ற
ஊகங்கள் மக்களை ஆட்சி செலுத்த
தொடங்கியுள்ளன.