ஊர்ப்பட்ட ஊகங்களும் கிழக்கின் இரண்டாவது முதல்வர் தெரிவும்!!




எஸ்.எம்.எம்.பஷீர்

என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்  என்பதே அரசியல் "    
                                                                                  ஹரல்ட் லாஸ்வெல்
கிழக்கின் மாகான சபைத் தேர்தல் மிகுந்த பரபரப்புடன் , இலங்கையின் தேர்தல் உற்சவங்களில் நடைபெறும் களியாட்டங்களுடன் மட்டுமல்ல ஆங்காங்கே சில வன்முறைகளுடனும்  நடைபெற்று முடிந்திருக்கிறது, முடிவுகள் ஒன்றும் பிரமிப்பூட்டுவனவாக இல்லை  போட்டியிட்ட சகல தரப்பினருக்கும் தேசிய சுதந்திர  முன்னணி (NFF) தவிர தேர்தல் முடிவுகள் பொதுவாகவே சகல கட்சியினருக்கும் ஏமாற்றத்தையே  அளித்திருக்கிறது. எனினும் தேர்தலின் முடிவின் பின்னர் ஆட்சி அமைப்பதிலும் முதலமைச்சரைத் தேர்வதிலும் உள்ள அரசியல் போட்ட போட்டிகளும் , ஆதங்கங்களும் , ஊகங்களும் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.  நாளுக்கு நாள், கிழக்கில் தங்களை ஆட்சி செய்யப்போகும் முதலமைச்சர் யார் என்ற  ஊகங்கள் மக்களை ஆட்சி செலுத்த  தொடங்கியுள்ளன.

அரசியல் கயிறிழுப்பில் அல்லாஹ் யாரின் பக்கம் ?


 எஸ்.எம்.எம்.பஷீர்

'அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! திருக்குர்ஆன் -அல் இம்ரான் 3:103)

சுமார் 23 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்த மரச் சின்ன அடையாளத்துடன் போட்டியிட்ட வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மீண்டும்  தனித்து பிரிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்  மரச் சின்னத்தில் மீண்டும் முதன் முறையாகப் போட்டியிடுகிறது . இம்முறை நடைபெறும் கிழக்கு மாகான சபைத் தேர்தலில்  இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசியலை செய்பவர்கள் நாங்களே என்று பிதுரார்ஜித உரிமை கோரும் மத முனைப்புப் பெற்ற அரசியல் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு சூழல் முன்னைய தேர்தல்களை விட இப்போது அதிகமாகக் காணப்படுகிறது.  

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...