எஸ்.எம்.எம்.பஷீர்
“நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா”
நேரு மென்று நினைத்திடல் வேண்டா”
சுப்ரமணிய பாரதி
புலிகளின் யுத்த பயிற்சி கையேடு பல தரப்பட்ட படையணிகளையும் அதற்க்கான பயிற்சி பொறிமுறைகளையும் கொண்டிருந்தது சகலரும் அறிந்ததே . அவ்வாறான யிற்சிகளையும் தாக்குதல்களையும் நடத்த நியமிக்கப்பட்ட தலைவர்களின் கீழ் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் வெளியிட்ட கையேட்டில் மிகக் கவனமாக தலைமைத்துவத்தை போற்றும் , அத்தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்படும் "போராளிகள்' எதனை தலைமைத்துவத்திடம் எதிர்பார்க்கலாம் எவ்வாறு தலைமைத்துவத்துக்கு பக்தியோடு இருக்கலாம் என்பது பற்றியெல்லாம் புலிகளின் “வழிகாட்டி” (Guidelines) கூறுகிறது. ஆனால் அவ்வழிகாட்டியின் (கையேட்டின்) தலைமைத்துவம் பற்றிய தலைப்பு மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ளது. இங்குதான் புலிகளின் தலைமைத்துவத்தின் கபடத்தனத்தையும் பட்டவர்த்தனமாக காணக் கூடியதாகவுள்ளது. “வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது” என்று குறிப்பிடும் அந்த கையேட்டின் “தலைமை” பற்றிய தலைப்பானது வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் தலைவருடையது என்பதை உண்மையில் கொண்டிருந்திருக்க வேண்டும். அதனையே நிதர்சனமாக வரலாறு இன்று நிரூபித்திருக்கிறது. பிரபாகரனின் தோல்வி புலிகளின் தோல்வியாக தமிழ் தேசிய வக்கிரத்தினதும் வன்முறையினதும் தோல்வியாக சகல தோல்விகளும் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றாலும் அது புலிகளின் தலைவரின் தோல்வியாக அடையாளப்படுத்திமட்டும் பார்க்க முடியாதவாறு தமிழர் தேசியஜனநாயக சக்திகளும் தங்களை இணைத்து அடையாளப்படுத்தி வந்துள்ளனர். தமிழர் தலைமைகளும் தங்களின் இறுக்கமான குறுகிய தமிழ் தேசிய வாதத்தால் அரசியல் நகர்வுகளிலும் தோல்வியுற்ற தலைமைகள்தான்.