லகின் உண்மையான ஆட்சியாளர்கள் ஒரு சில இலட்சாதிபதிகளும், பெரும் பணக்கார ஆதிக்கவாதிகளும் என்பது நன்கறிந்த விடயம். அவர்களே அமெரிக்காவின நிதி வளத்தைக் கட்டுப்படுத்துவதுடன், தமது நிதி சக்தியைப் பயன்படுத்தி அமெரிக்க ஜனாதிபதியாக வருபவரைத் தீர்மானிப்பதுடன், அதன் அரசாங்கத்தை உருவாக்குபவர்களாகவும் உள்ளனர். நீண்ட காலமாக அமெரிக்கா உலகின் முதல்நிலை பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதுடன், உலக பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் நிலையிலும் இருக்கின்றது. அமெரிக்காவின் டொலரே உலகளாவிய வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் நாணயமாக இருக்கின்றது. அமெரிக்கா சீனாவுக்கு பெரும் கடனாளியாக (3 றில்லியன் – Trillion – டொலர்கள் என கணிக்கப்படுகிறது) இருந்த போதிலும், அதைச் சமாளிக்க மேலதிக டொலரை அச்சிடுகின்றது. இந்த நிலைமையால் சீனா உலகின் முதல்தர பொருளாதார நிலைக்கு உயர்வதுடன், அதன் யுவான் (Yuan) நாணயம் உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நிலையும் உருவாகும். இது உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், பெரும் பல்தேசிய நிறுவனங்கள் (Multinational Corporations) மூலம் அது நடத்தும் சுரண்டலையும் முடிவுக்குக் கொண்டு வரும். அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சி முதலாளித்துவத்துக்கு உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்துவதுடன், கொவிட் – 19 (Covid – 19) பெருந்தொற்று நிலைமையையும் மேலும் மோசமாக்கும்.