எஸ்.எம்.எம்.பஷீர்
“ஒவ்வொரு நட்பின் பின்னாலும் சில சுய அக்கறை இருக்கிறது. சுய அக்கறையின்றி நட்பில்லை . இது ஒரு கசப்பான உண்மை” - சாணக்கியன்
“There is some self-interest behind every friendship. There is no Friendship without self-interests. This is a bitter truth.”
Chanakya )
“பேராளர்களும்” “ போராளிகளும்”!
முஸ்லிம் காங்கிரஸ் கட்சின் "போராளிள் " என்று சொல்லப்பட்ட நிசாம் காரியப்பர் பின்னாளில் பேராளர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் திட்டமிட்ட வகையில் ஓரங்கட்டப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக தன்னை , அதன் ஆறாவது மாநாட்டில், கொழும்பில் பாஷா விழாவில் 29/11/1986 பிரகடனப்படுத்தி சில மாதங்களில் பிரதேசிய சபைகளுக்கான தேர்தல்களை நடத்த அரசு பிரகடனப்படுத்தியது. முஸ்லிம் காங்கிரஸ் ஆரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக 11ம் திகதி மாசி மாதம் 1988ஆம் ஆண்டு சட்டபூர்வமாக பிரகடனப்படுத்த முன்னரே , அந்த தேர்தலில் சுயேட்சை குழுவாக பங்குபற்ற முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தனர்.