“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” தொடர்: பன்னிரெண்டு



எஸ்.எம்.எம்.பஷீர் 

ஒவ்வொரு நட்பின் பின்னாலும் சில சுய அக்கறை இருக்கிறது. சுய அக்கறையின்றி நட்பில்லை . இது ஒரு கசப்பான  உண்மை - சாணக்கியன்

There is some self-interest behind every friendship.   There is no Friendship without self-interests. This is a bitter truth.” 
Chanakya )
 பேராளர்களும்” “ போராளிகளும்”! 
முஸ்லிம் காங்கிரஸ் கட்சின் "போராளிள் " என்று சொல்லப்பட்ட நிசாம் காரியப்பர் பின்னாளில் பேராளர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் திட்டமிட்ட வகையில் ஓரங்கட்டப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக தன்னை , அதன் ஆறாவது மாநாட்டில்கொழும்பில் பாஷா  விழாவில் 29/11/1986 பிரகடனப்படுத்தி சில மாதங்களில் பிரதேசிய  சபைகளுக்கான தேர்தல்களை நடத்த அரசு பிரகடனப்படுத்தியது. முஸ்லிம் காங்கிரஸ் ஆரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக 11ம் திகதி மாசி மாதம் 1988ஆம் ஆண்டு  சட்டபூர்வமாக பிரகடனப்படுத்த முன்னரே அந்த தேர்தலில் சுயேட்சை குழுவாக பங்குபற்ற முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தனர்.   

லன்டன் மாநாட்டில் எச்சரிக்கை..." உதயன் ( இலண்டன் - செப்-அக்டோ 2006)



"லன்டன் மாநாட்டில் எச்சரிக்கை  
இலங்கையில் மனித உரிமைகளை மீறுபவர்கள்
சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்
"
 
குறிப்பாக முஸ்லிம் பிரநிதியான சையட் பசீர் பேசும்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு குழப்பி அவரது உரையை இடைநிறுத்தினர்

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மதிக்காது அதனை மீறினால்  சர்வதேச நீதிமன்றத்தில் யுத்தக் குற்றங்களுக்காக நிறுத்தப்படுவார்கள் என்ற எச்சரித்த  சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் தங்கள் தரப்பினரை வலியுறுத்தவேணடும் என்று கேட்டுக் கொண்டன.  ஓகஸ்ட் 5ல் சர்வதேச மன்னிப்புச்சபையும் (Amnesty International ) மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch  ) இணைந்து ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் அவ்வமைப்புகள் இதனை வலியுறுத்தின.  இலங்கை இனப் பிரச்சினைக்காக சமாதனச் தீர்வில் புலம்பெயர்ந்தவர்களையும் ஈடுபடுத்தும் முதலாவது நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

"இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்"

"இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்"
                                                                             (உயிர்நிழல் சஞ்சிகையிலிருந்து  )


"இனப் பிரச்சினை என்பதனை எப்போதும் ஒரே பரிமாணத்தில் வைத்துப் பேச முடியாது  பிரச்சினைகளும் தீர்வும் ஒரு சமன்பாட்டுக்கு உடபட்டதல்ல " எஸ்.எம்.எம்.பஷீர்
 
" "இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்"  பற்றிப் பேசிய எஸ்.எம்.எம்.பஷீர் , இனப் பிரச்சினை என்பது ஒரு நிரந்தரமான ஸ்திரத்தன்மை கொண்டதல்ல என்றும் அது அந்தந்த இனங்களின் , மாநிலங்களின் , இன்னும் பண்பாடுகளிற்கேற்ப அதற்கான பரிமாணங்களைக் கொள்ள முடியும்  என்றும் எனவே இனப் பிரச்சினை என்பதனை எப்போதும் ஒரே பரிமாணத்தில் வைத்துப் பேச முடியாது எனவும் பிரச்சினைகளும் தீர்வும் ஒரு சமன்பாட்டுக்கு உடபட்டதல்ல என்றும் கருத்துத் தெரிவித்தார். 

“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” தொடர்: பதினொன்று


சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!
                                                                               தொடர்:  பதினொன்று 
எஸ்.எம்.எம்.பஷீர் 
"என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்  என்பதே அரசியல் "     ஹரல்ட் லாஸ்வெல்

முதற் கோணல் முற்றும் கோணல்

காரியப்பருக்கு ஏற்பட்ட க(ச)தி பற்றியும் எழுத முன்னரே காரியப்பரே சில தகவல்களை வெளிப்படையாகவும் சொல்லிவிட்டார்

நிஸாம்: இரவு எடுத்த முடிவை அடுத்த நாள் காலையில் நடைமுறைப்படுத்துவதற்கு திராணியற்ற தலைமைத்துவம் இரண்டு வருடங்கள் கழித்து இதனை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை.

ஆங்கிலத்தில் சம்பந்தப்பட்டவர் ஒரு விஷயம் பற்றி நேரடியாக அறிந்தவர் கூற கேட்டால் அதை குதிரையின் வாயிலிருந்து கேட்டதாக சொல்லுவார்கள். அந்த வகையில் அவர் பத்திரிக்கையாளர்களின் சில கேள்விகளுக்கு அளித்த பதிலைப் பார்த்தால் அதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.

கள்ளியங்காட்டு க (தை)தா நாயகன் பித்தன் ஷா (கலந்தர் லெப்பை முஹம்மது ஷா ( 31. 07.1921 – 15.12.1994): ஒரு நினைவோட்டம்

எஸ்.எம்.எம்.பஷீர்

 

உண்மையும் உருவமற்றுப் போய்விட்டதோ? எல்லாமே பைத்தியக்காரத்தனம் சீ…!”-  பித்தன்    (பாதிக் குழந்தை)

மட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் வாழ்ந்து , உள்நாட்டில் ஏதிலியாகி அங்கேயுள்ள முஸ்லிம் மையவாடியில் அடக்கப்பட்ட (கிழக்கிலங்கையின் சிறு கதை இலக்கிய முன்னோடியான மறைந்த பித்தன் ஷா மரணித்து இன்றுடன்  பதினேழு   வருடங்களாகின்றன. கள்ளியங்காட்டு கிராமத்தின் உயிர்நாடியாய் திகழ்ந்த கிழக்கின் முஸ்லிம் சிறுகதை இலக்கிய பிதாமகனை   கள்ளியங்காடு முஸ்லிம் மக்களின் பள்ளிவாயலும் இறுதியாய் இழந்து போன இன்றைய நிகழ்வுகளை நினைவில்  கொண்டு நினவு கூர்கிறேன்  )

கிழக்கிலங்கையின் மூத்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான கலந்தர் லெப்பை மீராஷா தனது இயற்பெயரால் அறியப்பட்டதைவிட  தானே தனக்கு சூட்டிக்கொண்ட  பித்தன் ஷா எனும் அடைமொழிப் பெயருடன்தான் அதிகம் தமிழ் இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்டவர்.

முஸ்லிம் கொலனி (கள்ளியங்காடு) பள்ளிவாயலின் முந்திய கதையும் பிரம்ம குமாரிகள் நிலையத்தின் பிந்திய கதையும்


                                எஸ்.எம்.எம்.பஷீர் 

"வந்தாரை வாழ வைத்து
சொந்த மண்ணில் பிறந்தாரை
சாகடிக்கும் சிங்காரமான
மட்டக்களப்புச் சீமையான்
வேறு என்ன சிரைப்பான்"
                           (  மறைந்த கிழக்கு கவிஞன்  வீ ஆனந்தன்)

கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி பள்ளிவாயல் முன்னாள் தலைவர் ஒருவர் நிறைவேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிய முறைப்பாட்டினை அடுத்து ஜனாதிபதியின் செயலாருக்கான , உதவிச் செயலாளர் அன்டன் பெரேரா காணி ஆணையாளர் நாயகத்துக்கு  அந்த முறைப்பாடு தொடர்பில் தலையிட்டு அமுலில் இருக்கும் விதிகள் ஒழுங்குகள்  பிரகாரம் விவகாரத்தை தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். அதன் பிரதி மட்டக்களப்பு பிரதேச செயலாளருக்கு அவசியமான நடவடிக்கைகளுக்கும் முறைப்பாட்டாளருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

சிதைக்கப்படும் சதாம் ஹுசைன் கிராமத்தின் கதை !



 
எஸ்.எம்.எம்.பஷீர்

"உங்களை நான் இராக்கியனாக இருக்க வேண்டுகிறேன்,
எனக்கு மரணம் எனத் தீர்ப்பளித்தால்,
என்னை ஒரு பொது குற்றவாளிபோல் தூக்கிலிடக் கூடாது , நான் ஒரு இராணுவத்தினன் என்னை சுடும் படையணியினால் சுட்டுக் கொல்ல வேண்டும்  "
 (  சதாம் ஹுசைன் தன்னை விசாரித்த நீதிபதிகளிடம்  கூறியது) .

ஏறாவூரின் வட மேற்கு எல்லை கிராமமாக அமைந்துள்ள சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை இராக் கிராமம் என்று மாற்றம் செய்யப் போவதாக செய்தி வந்து, அதுவும் அப்படி பெயர் மாற்றினால்தான் இராக் அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்த உதவிகளை மீண்டும் பெற முடியும் என்ற காரணம் வேறு சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து ஓரிரு தினங்களின் பின்னர் ஏறாவூரிலுள்ள ஈராக் கிராமத்திற்கு இங்கையிலுள்ள ஈராக் தூதுவர் ஹக்தான் தாகா கலப் செவ்வாய்க்கிழமையன்று (29.11.2011) விஜயம் செய்தமை , அங்குள்ள மக்களுக்கு உதவி செய்யப் போவதாக வாக்குறுதியமைத்தமை "மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே" எனும் கதையை சொல்லாமல் சொல்லி நின்றது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...