“இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் புலம்பெயர்வாழ் தமிழ் பேசும் மக்களும் “



ஸ்ருட்கார்ட் கருத்தரங்கு
11-12 நவம்பர் 2006-சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை
ஸ்ருட்கார்ட் (ஜேர்மனி )
இளஞ்சேய்

இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் புலம்பெயர்வாழ் தமிழ் பேசும் மக்களும்

பாரதி நூற்றாண்டு விழா -1982 மட்டக்களப்பு சென்ட் மைக்கல் கல்லூரி

பாரதி நூற்றாண்டு விழா -31/03/1982
மட்டக்களப்பு சென்ட் மைக்கல் கல்லூரி
பாரதியின் சமூகப் பார்வை :எஸ்.எம்.எம்.பஷீர்

நிகழ்ச்சிகள்

சொற்பொழிவுகள்
தலைமை : உயர் திரு வித்துவான் எப்.எக்ஸ்.சி நடராசா

"துப்பாக்கிகளின் காலம்" : நூல் வெளியீடு =16/10/2005

இளைய அப்துல்லாவின் "துப்பாக்கிகளின் காலம்" நூல் வெளியீடும் பெண்ணிய எழுத்துக்கள் பற்றிய உரைகளும் தேசம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் அக்டோபர் 16ல் இடம்பெற்றது.இந்நிகழ்வு இலங்கை , இந்தியா , கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த பெண்ணிய வாதிகளையும் இலக்கிய     ஆர்வலர்களையும் சந்திப்பதற்கான  வாய்ப்பாக அமைந்திருந்தது.


பாலஸ்தீன பிறப்புச் சான்றிதழும் பரிதவிக்கும் பாலஸ்தீன மக்களும்




 எஸ்.எம்.எம்.பஷீர் 

“I give you the end of golden string;
Only wind it into a ball,
It will lead you in at Heaven’s gate,
Built in Jerusalem’s wall ”.
                                 William Blake (Jerusalem 1820)

"உனக்கு தங்கக் சரட்டின் அந்தத்தை தருகிறேன்
அதனை பந்தாக மாத்திரம் சுற்றிக் கொள் ;
அது உன்னை ஜெரூசலம் மதிலில்  எழுப்பப்பட்ட
சுவர்கத்தின் வாயிலுக்கு இட்டுச் செல்லும் "
ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ப்ளேக்  (கவிதை : "ஜெருசலம் 1820" )
                                           மொழியாக்கம் எஸ்.எம். எம். பஷீர் 
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசு அங்கத்துவம் கோரும் விண்ணப்பத்தை  பாலஸ்தீன அரசின் தலைவர் என்ற வகையிலும் , பாலஸ்தீன  விடுதலை அமைப்பின் நிறைவேற்றுக்  குழுவின் தவிசாளர் என்ற வகையிலும்  மஹ்மூத் அப்பாஸ்   ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு 2011 ஆண்டு   சமர்ப்பித்திருந்தார் . அந்த விண்ணப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுக் கூட்டத்தில் 29/11/1947 அன்று கொண்டு வரப்பட்ட 181  வது தீர்மானத்தின் அடிப்படையிலும் , அதன் பின்னர்    15/11/1988 அன்று பாலஸ்தீனம் மேற்கொண்ட பாலஸ்தீன தனிநாட்டுப்  பிரகடனத்தை  , 15/12/1988 அன்று   ஐக்கிய நாடுகளின்  பொதுச் சபை கூட்டத்தில்  43/177 இலக்க   தீர்மானத்தின் மூலம்  ஏற்றுக் கொண்டதன் பிரகாரமும் அந்த விண்ணப்பத்தை அப்பாஸ் சமர்ப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில் அவர் இரு நாட்டு தீர்வு மூலம் சமாதானமாக இஸ்ரேல் -பாலஸ்தீன  பிரச்சினைக்கான தீர்வு காண விழையும்  தனது உறுதியையும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...