எஸ்.எம்.எம்.பஷீர்
“I
give you the end of golden string;
Only wind it into a ball,
It will lead you in at Heaven’s gate,
Built in Jerusalem’s wall ”.
William Blake (Jerusalem 1820)
"உனக்கு தங்கக் சரட்டின் அந்தத்தை தருகிறேன்
அதனை பந்தாக மாத்திரம் சுற்றிக் கொள் ;
அது உன்னை ஜெரூசலம் மதிலில் எழுப்பப்பட்ட
சுவர்கத்தின் வாயிலுக்கு இட்டுச் செல்லும் "
ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ப்ளேக்
(கவிதை : "ஜெருசலம் 1820" )
மொழியாக்கம் எஸ்.எம். எம்.
பஷீர்
ஐக்கிய
நாடுகள் சபையில் பாலஸ்தீன அரசு அங்கத்துவம் கோரும் விண்ணப்பத்தை பாலஸ்தீன அரசின் தலைவர் என்ற வகையிலும் , பாலஸ்தீன விடுதலை அமைப்பின் நிறைவேற்றுக் குழுவின்
தவிசாளர் என்ற வகையிலும் மஹ்மூத்
அப்பாஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்
பான் கீ மூனுக்கு 2011 ஆண்டு சமர்ப்பித்திருந்தார்
. அந்த விண்ணப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுக் கூட்டத்தில் 29/11/1947 அன்று கொண்டு
வரப்பட்ட 181 வது தீர்மானத்தின் அடிப்படையிலும் ,
அதன் பின்னர் 15/11/1988 அன்று பாலஸ்தீனம் மேற்கொண்ட பாலஸ்தீன தனிநாட்டுப்
பிரகடனத்தை , 15/12/1988 அன்று
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை
கூட்டத்தில் 43/177 இலக்க தீர்மானத்தின் மூலம் ஏற்றுக் கொண்டதன் பிரகாரமும்
அந்த விண்ணப்பத்தை அப்பாஸ் சமர்ப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில் அவர் இரு
நாட்டு தீர்வு மூலம் சமாதானமாக இஸ்ரேல் -பாலஸ்தீன பிரச்சினைக்கான
தீர்வு காண விழையும் தனது
உறுதியையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.