Organized violence against helpless and voiceless Muslims: Maithri-Ranil failed to prevent it By Latheef Farook



 | 20 May 2019

Senseless and shameful organised racist violence against voiceless and helpless Muslims in the island had shown that Maithri- Ranil continued Mahinda- Gota’s racist violence against the Muslims who pay the price for voting the two to power.
The entire episode of Easter Sunday bombings and killings have become a calculated conspiracy against the Muslim community.

For example, to begin with President Sirisena, Prime Minister Wickremasinghe and the government intelligence agents failed to prevent the tragedy despite repeated prior warnings from powerful sources. The question is WHY? Certainly, this can’t be an oversight. That means they allowed that to happen, perhaps, to put the Christians against Muslims to suit their western friends’ agenda against innocent Muslims.

In any other country president Sirisena and Prime Minister Wickremasinghe would have resigned accepting responsibility for the carnage. However here the two failed to do so showing the rapid decline of moral values.

Handful of those who committed the Easter Sunday carnage had Muslim names and the community had nothing to do with them or their crime.

UNMASKING ANOMALIES: TRAIL OF TERRORISM IN SRI LANKA S.M.M. Bazeer




The Easter Sunday attacks perpetrated by tens of suicide bombers and their associates, created a climate of fear all around the country. It is highly distressing that the entire Muslim population in Sri Lanka is under siege and subject to enormous challenges to conduct their day to day affairs.  Every morning is dawned with stories of harassment and attacks inflicted on the Muslims by majority communities, whether they are Christians or Buddhists. The tardiness and inefficiencies of the armed forces and the police in controlling attacks on the Muslims, their properties and Mosques are seen by the victims as a deliberate act of connivance. Muslims are vetted everywhere, whether it’s public or private institutions, treated with excessive suspicion and looked upon as suspects or potential suicide bomber. 





முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டவை!

லங்கையில் இவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், நட்சத்திர விடுதிகள் மீதும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களால் 250 இற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் இலங்கையர்களை மட்டுமின்றி, முழு உலக மக்களையும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியது.
அதைத் தொடர்ந்து தற்பொழுது வடமத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் முஸ்லீம் மக்களின், வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாயல்கள் என்பன தாக்கப்பட்டு பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என்னவெனில், கலகக்காரரை கட்டுப்படுத்த வேண்டிய பொலிசார் இந்தத் தாக்குதல்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமைதான்.

இந்தத் தாக்குதல்களால் முஸ்லீம் மக்கள் உட்பட முழு இலங்கை மக்களினதும் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. அரசாங்கம் என்னதான் நம்பிக்கையளிக்கும் வாக்குறுதிகளை வழங்கினாலும் நிலைமை வழமைக்குத் திரும்ப பல ஆண்டுகள் பிடிக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதைவிட மோசமான நிலைமை என்னவெனில், மேலும் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற நிலை இருப்பதுதான்.
ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து ஆயுதப்படையினர் நாடு முழுவதும் மேற்கொண்ட தேடுதல்களில் துப்பாக்கிககள், வெடிமருந்துகள், வாள்கள், சீருடைகள், பிரச்சார இறுவட்டுகள் என பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் தொகையைப் பார்க்கும்போது, இலங்கை மேலும் எத்தகைய அபாயங்களை எதிர்நோக்கி இருந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் படையினரின் சுற்றிவளைப்பின் போது தம்மைத்தாமே மாய்த்துக் கொண்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்படுவதோடு, பலர் கைது செய்யப்படலாம் என்ற நிலை தொடர்கின்றது.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையையும், பயங்கரவாதிகள பயன்படுத்திய பயற்சி முகாம்கள், அவர்களுக்கு நிதி வழங்கியோர், அவர்கள் பயன்படுத்திய அதிநவீன ஆயுதங்கள் என்பவற்றைப் பார்க்கும்போது, எவ்வளவு மிகப்பெரிய திட்டங்களை அவர்கள் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை அனுமானிக்க முடிகிறது.
அதேவேளை, இத்தகைய மிகப்பெரிய செயல்பாடுகளும், ஆயுதக் குவியல்களும் பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வாறு தெரியாமல் போனது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுவது நியாயமானது. இதில் எங்கேயோ சதித்திட்டம் ஒன்று மறைவாகச் செயல்பட்டுள்ளது என்பது புலனாகின்றது.
தற்போது வெளிவரும் தகவல்களைப் பார்த்தால் இந்தத் தாக்குதல்களுடன் அரச அதிகாரத்தில் இருக்கும், குறிப்பாக ஆளும் கட்சியுடன் இருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருந்தது தெரிய வருகிறது. இருந்தும் அரசு இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அசமந்தமாக இருப்பதிலிருந்து, இந்தத் தாக்குதலால் அரசாங்கமும் நன்மை அடைந்திருப்பது தெரிய வருகிறது.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரச இயந்திரமே தடையாக இருப்பதன் காரணமாகத்தான் சந்தேகத்துக்குரிய சில அமைச்சர்கள் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் காரணமாக சாதாரண அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு தொல்லைகள் கொடுப்பவர்கள், ஏன் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய செல்வாக்குமிக்க முஸ்லீம் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்ககின்றனர்? இதிலிருந்தே அரசின் கபடத்தனம் புரிகின்றது.
ஏப்ரல் தாக்குதல் நடந்தவுடன் பாரிய அளவில் முஸ்லீம் மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்படலாம் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டொரு அசம்பாவிதங்களைத் தவிர வேறு எதுவும் பெரிதாக நடக்கவில்லை. இதிலிருந்து ஒரு உண்மை தெளிவானது. அதாவது, கொழும்பு பேராயர் அவர்களின் சமயோசித நடவடிக்கைகளினாலும், பொதுமக்களின் சகிப்புத்தன்மையினாலும் பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை.
ஆனால், அதன்பின்னர் சுமார் இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், வடமேல் மாகாணத்தில் முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது பொதுமக்களின் தன்னெழுச்சியான தாக்குதல் அல்ல. அவர்கள் அவ்வாறு செய்வதானால் ஏப்ரல் 21 தாக்குதல் நடந்தவுடனேயே எதிர்வினையாற்றி இருப்பார்கள். எனவே இது திட்டமிட்ட ஒரு தாக்குதலாகும். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சில இனவாத சக்திகள் திட்டமிட்ட முறையில் தம்மைத் தயார்படுத்திக்கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
வேறு பகுதிகளிலிருந்து பஸ்களில் காடையர்களைக் கொண்டுசென்று இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. சரியாக இதேபோலத்தான் 1983 யூலையில் தமிழ்மக்கள் மீதும் வெவ்வேறு இடங்களிலிருந்து ஐ.தே.க. காடையர்களை பஸ்களில் ஏற்றிச்சென்று தாக்குதல் நடத்தியது ஐ.தே.க. ஆகையால்தால் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, “மீண்டும் ஒரு கறுப்பு யூலையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்” என அர்த்தபுஸ்டியுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் போலும்.
அதுமாத்திரமில்லாமல், 1983 யூலையில் தமிழ்மக்கள் தாக்கப்பட்ட பொழுது நடந்து கொண்டதைப் போலவே, முஸ்லீம் மக்களுக்கு எதிரான தற்போதைய தாக்குதல்களின் போதும், பொலிசார் தாக்குதல் நடைபெறும் வேளை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றனர். இவைகளையெல்லாம் பார்க்கும் போது, அதிகாரத்தில் உள்ள உயர்மட்ட சக்திகளின் ஆதரவில்லாமல் இப்படியான திட்டமிட்ட தாக்குதல்கள் நடக்க வாய்ப்பில்லை.
இலங்கையின் இன வன்செயல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் தன்னெழுச்சியாக ஒருபொழுதும் இன வன்செயல்களில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை. 1958, 1977, 1981 (மலையக மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள்), 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை இனவாத வன்செயல் தாக்குதல்களையும் ஐ.தே.க.தான் பின்னணியில் இருந்து செயல்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
அதுமட்டுமல்லாமல், கடந்த ஆட்சிக்காலத்திலும், இன்றைய ஆட்சிக்காலத்திலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக சில பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதும் அரசியல்வாதிகளே பின்னணியில் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அதாவது சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் ஒருவரோடுவர் பின்னிப்பிணைந்து கலந்தே வாழ்கின்றனர். உதாரணமாக, இலங்கைத் தமிழர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகள் தமது தாயகம் என்றும், அதற்கு சுயாட்சி வேண்டும் என்றும் கூறினாலும், வடக்கு கிழக்கிற்கு வெளியேதான் கூடுதலான தமிழர்கள், அதாவது 52 வீதமான தமிழர்கள் வாழ்கிறார்கள். எனவே அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் மற்றைய இனங்களுடன் பின்னிப்பிணைந்ததாகும். எனவே அவர்கள் காரணமின்றி ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் தேவையில்லை.
ஆனால் சகல இனங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகள் அப்படியல்ல. அவர்கள் இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான காலத்தில் தமது அரசியல் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் இனவாதம்தான் ஒரேயொரு ஊக்குவிப்பு மருந்து எனக்கண்டுபிடித்து அதையே தமது நிரந்தர செயல்பாடாகக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில உதாரணங்கள் இருக்கின்றன.
1956இல் பண்டாரநாயக்க முதன்முறையாக ஐ.தே.கவைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய பொழுது, ஐ.தே.க. அவரை வீழ்த்துவதற்கு தீவிர சிங்கள இனவாதத்தைத்தான் கையில் எடுத்தது.
பண்டாரநாயக்க பிற்போக்கு சக்திகளால் 1957 இல் கொல்லப்பட்ட பிறகு அவரது துணைவியார் சிறீமாவோ ஆட்சிக்கு வந்தபொழுது ஐ.தே.க. இராணுவச்சதி மூலம் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற முயன்ற அதேவேளை, தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகம் என்ற போர்வையில் தமிழ் இனவாதத்தைக் கையில் எடுத்தது.
பின்னர் 1970இல் சிறீமாவோ தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்தபோது, ஐ.தே.க. மீண்டும் இனவாதத்தைக் கையில் எடுத்தது. அந்தத் தேர்தலில் தமிழரசு, தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தோல்வியடைந்ததால், அவை இரண்டும் தமது நீண்டகாலப் பகைமையை மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற போர்வையில் கூட்டுச் சேர்ந்து ‘தமிழ் ஈழம்’ என்ற போர்வையில் தமிழ் இனவாதத்தைக் கையில் எடுத்தன.
அதன் பின்னரான காலத்தில் 1977இல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.கவும், தமிழர் விடுதலைக் கூட்டணியால் தூண்டிவிடப்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்களும் தொடர்ச்சியாக இனவாதச் செயல்களை முன்னெடுத்து நாட்டை யுத்தம் என்ற அழிவுப்பாதையில் இழுத்துச் சென்றனர்.
இந்த வரலாற்று அனுபவங்களை வைத்துப் பார்க்கையில், மீண்டும் சில அரசியல சக்திகளுக்கு இனவாதச் செயல்பாடுகள் அவசியப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, அடுத்த ஜனாதிபதி, மாகாணசபை, பொதுத்தேர்தல் என்பனவற்றில் தோல்வியடைவோம் என்ற பயத்தில் உள்ள சிங்கள – தமிழ் அரசியல் சக்திகளுக்கு தம்மைத் தோல்வியிலிருந்து காப்பாற்றுவதற்கு இனவாதம் தேவைப்படுகின்றது.
அவர்களுடைய இந்த இனவாதத் தேவையும் செயல்பாடுகளும் தனியனே அவர்களது சொந்த செயற்பாடு அல்ல. அவர்களை எந்த அந்நிய சக்திகள் தமது நலன்கருதி 2015 ஜனவரியில் ஆட்சியில் இருத்தினார்களோ, அந்த அந்நிய சக்திகளுக்கும் இதில் பங்குண்டு.
எனவே தற்போது நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை வெறும் இனவாதச் செயல்களாகக் கருதாமல் இதன் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்களையும் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத வன்செயல்கள் நாளை வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்துவிடப்படலாம். எனவே சிறுபான்மைத் தேசிய இன மக்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பதுடன், பெரும்பான்மை சிங்கள மக்களுடன் நேசபூர்வமாகவும் இருப்பது அவசியம்.
இனவாத அரசியல் சக்திகளினால் வழிநடத்தப்படும் காடையர் கூட்டம் பொய் வதந்திகளைப் பரப்பி, மக்களை தவறாக வழிநடத்தி, அவர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தி, இனவன்செயல்களைத் தூண்டிவிட முயற்சிப்பார்கள். எனவே அவர்களது சதி நோக்கங்களில் சிக்காமல் மக்கள் விழிப்பாகவும், நிதானமாகவும். இன ஒற்றுமையுடனும் இருப்பது இன்றைய காலகட்டத்தின் அத்தியாவசிய தேவையாகும்.
நாம் அவ்வாறு செயல்படாதுவிட்டால் மீண்டும் ஒரு ‘கறுப்பு யூலை’ உருவாகுவதும், நாட்டில் இரத்த ஆறு ஓடி, நாட்டில் நிரந்தரமாக இருள் சூழ்வதும், அதனைப் பயன்படுத்த அந்நிய சக்திகள் தலையீடு செய்வதும் சாத்தியமாகிவிடும்.

வானவில் : மே 2019 இதழ் 101

"Sri Lanka: Government must act to protect religious minorities against violence" -I CJ

Sri Lanka: Government must act to protect religious minorities against violence


The ICJ today condemned a series of the acts of violence directed against the Muslim community in the aftermath of the Easter attacks on 21 April in Sri Lanka directed at churches and other places.
In the most recent attacks on 13 May, at least one person was killed in anti-Muslim mob violence in Nattandiya.  In addition, various attacks have resulted in the looting and destruction of mosques, Muslim-owned businesses and houses in several parts of the island including Negombo, Chilaw, Kurunegala and Gampaha.
The ICJ called upon the State authorities to conduct independent, impartial and effective investigations into the attacks and bring all perpetrators to justice in line with international standards. Furthermore, the ICJ urges the Government of Sri Lanka to send a clear public message that acts of violence against any religious minorities are not tolerated.

Anti-Muslim Attack - Minuwangoda (Sri Lanka) 13-05-2019




நேஸ்பி பிரபு (Lord Naseby) சொல்வது சரியானதா? -விடாக்கண்டன்


பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை உறுப்பினரும், பிரித்தானிய சிறீலங்கா பாராளுமன்ற குழுவின் தலைவருமான நேஸ்பி பிரபு இலங்கை விவகாரங்களில் அதிக அக்கறையுள்ள ஒருவராவார். அவர் அடிக்கடி பிரித்தானிய பிரபுக்கள் சபையிலும், இலங்கை சம்பந்தமான கருத்தரங்குகளிலும், ஊடகங்களிலும் இலங்கை விவகாரங்கள் சம்பந்தமான கருத்துக்களை துணிகரமாகவும், கறாராகவும் முன்வைத்து வருகின்றார்.
ஆனால், நேஸ்பி பிரபுவின் கருத்துக்கள் பெரும்பாலான மேற்குலக அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் முன்வைக்கும் கருத்துகளை விட எப்பொழுதும் வித்தியாசமானவையாக இருக்கின்றன.

அர்ஜூனா மகேந்திரனின் பிரச்சினையில் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? – புனிதன்


லங்கையின் வரலாற்றில் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் ஒருபோதும் நடைபெறாத அளவுக்கு பாரிய நிதி மோசடி இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்றிருக்கிறது. இந்த மோசடியில் இலங்கை பல்லாயிரம் கோடி ரூபாவை இழந்திருக்கிறது. இந்த மோசடியைச் செய்தவர் இன்றைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் இலங்கை வங்கி ஆளுநர் அர்ஜூனா மகேந்திரன்.
2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு வெற்றியீட்டினார். மைத்திரி வென்றவுடனேயே ஜனநாயக சம்பிரதாயங்களை மீறி அன்று பதவியில் அறுதிப் பெரும்பான்மையுடன் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்துவிட்டு, வெறுமனே 47 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு வழிவகுத்தார்.

மன்னார் மனிதப் புதைகுழி அளித்த ஏமாற்றம்! -பங்கிராஸ்

ன்னார் நகரில் அகழப்பட்ட மாபெரும் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 350 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த எலும்புக்கூடுகள் யாருடையவை என்பது பற்றிய சரியான விபரங்கள் இதுவரை தெரிய வராத போதிலும், இவை யுத்த காலத்தில் – குறிப்பாக இறுதியுத்த நேரத்தில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்களின் எலும்புக்கூடுகள் என்றும், இவற்றை இராணுவமே புதைத்திருக்கலாம் என்றும் தமிழர் தரப்பின் சில பகுதிகளால் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
மறுபக்கத்தில், இந்த எலும்புக்கூடுகள் புலிகளால் கொல்லப்பட்ட – குறிப்பாக இந்திய அமைதிப்படை வெளியேறிய 1990 ஆண்டுக் காலப்பகுதியில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற போது கடலில் புலிகளால் பிடிக்கப்பட்ட பல நூறு மாற்று இயக்கப் போராளிகளின் குடும்பத்தினரின் எலும்புக்கூடுகள் என்ற ஊகங்களும் வெளிப்படுத்தப்பட்டன.
இந்த எலும்புக்கூடுகளின் மாதிரிகள் இலங்கை அரசாங்கத்தால் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஆய்வுக்கூடத்துக்கு காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த ஆய்வறிக்கை இலங்கைக்கு கிடைத்து அது மன்னார் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகள் இலங்கைக்கு பயனளிக்குமா? -டேவிட் ராஜ்

லங்கையில் தேர்தல்கள் வரப்போகும் ஒரு சூழ்நிலையில் சீர்திருத்தக் கொள்கைகளை இலங்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வொசிங்டனில் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் இலாகாவின் உதவி பணிப்பாளர் Anne-Marie Gulde அம்மையார் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
அத்துடன் தேர்தல் வரவுள்ள சூழலில் இலங்கை கட்டாயமாக புத்திசாலித்தனமான கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

Date: மார்ச் 28, 2019 Author: manikkural 0 பின்னூட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான சகல சக்திகளும் ஓரணியில் திரட்டப்பட வேண்டும்!

லங்கையைப் பொறுத்தவரை இந்த ஆண்டை தேர்தல் ஆண்டு எனக் குறிப்பிடலாம்.
ஏற்கெனவே காலம் முடிந்துபோன பல மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை இருக்கின்றது. தோல்விப் பயம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அவற்றுக்குத் தேர்தல் நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது.
அண்மையில் ஐ.தே.க. அமைச்சர் ஒருவர் இந்த ஆண்டிலும் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடக்காது என்று திமிர்த்தனமாகக் கூறியிருக்கிறார். ஐ.தே.க. அரசு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்கு தோல்விப் பயம் மட்டும் காரணமல்ல.
இனப் பிரச்சினைக்கான தீர்வாக தீவிரமான யுத்தத்துக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகவே மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது. அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வேண்டா வெறுப்பாகவே இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
அவருக்குப் பின் ஐ.தே.க. சார்பில் ஜனாதிபதியான ஆர்.பிரேமதாச, இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிட்ட புலிகளுக்கு சகல வழிகளிலும் உதவியதுடன், ஒன்றிணைந்த மாகாண சபையையும் கலைத்து, இந்திய அமைதிப்படையையும் வெளியேற்றினார். ஆக, ஒட்டுமொத்தமாக ஐ.தே.கவும் புலிகளும் மாகாண சபை முறைக்கு எதிராகவே செயல்பட்டனர்.

காட்டுமிராண்டித்தனமான புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முறியடிக்க த.தே.கூ, ஜே.வி.பி. கட்சிகள் உதவுமா? -புனிதன்



ணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தற்பொழுது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டம் (Counter Terrorism Act – CTA) ஒன்றைக் கொண்டு வருவதில் தீவிரமாக முனைப்புக் காட்டி வருகின்றது. தற்பொழுது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டமும் 1978 ஆம் ஆண்டில் அப்போதைய அரச தலைவர், ரணில் விக்கிரமசிங்கவின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டதே.
தற்போதைய சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் அந்தக் காலகட்டத்தில் உருவாகி வந்த அரசுக்கு எதிரான தமிழர்களுடைய போராட்டத்தை நசுக்குவதற்காகவே என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் அந்தச் சட்டம் தமிழர்களுக்கு எதிராக மட்டுமின்றி, தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் என எல்லாவற்றுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டதுதான் வரலாறு. ஆனால் அந்தச் சட்டத்தால் மிகவும் அதிகமாகவும் மோசமாகவும் பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே.

இலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் பின்நோக்கும் என்ன?

லங்கையில் கிறிஸ்தவர்களின் பெருநாளான ஈஸ்டர் – ஏப்ரல் 21ந் திகதி – ஞாயிற்றுக்கிழமையன்று சில தேவாலயங்களிலும், தலைநகர் கொழும்பிலுள்ள சில நட்சத்திர விடுதிகளிலும் பயங்கரவாத சக்திகளினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் – தற்கொலைத் தாக்குதல் உட்பட – முன்னூறுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஆராயப் புகுமுன்னர், இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட, காயமடைந்த அனைத்து மக்களுக்கும் அவர்களின் உறவுகளுக்கும் ‘வானவில்’ சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கிழக்கு மாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களே இந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் காத்தான்குடியில் பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் பின்பற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமாக இன்னொரு மதக் கோட்பாட்டைப் பின்பற்றும் ஒரு பள்ளிவாயிலை அங்கு நடத்தி வந்ததாகவும், அங்கு வைத்தே சிலருக்கு பயங்கரவாதப் பயிற்சி வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

ஜனநாயகத்தை நசுக்கவும் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும் ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – மகிந்த ராஜபக்ஸ



தற்போதைய அரசாங்கம், ஐநா மனித உரிமைச் சபையின் ஒக்ரோபர் 2015 தீர்மானம் 30ஃ1 ஊடாக அவர்களின் வெளிநாட்டுத் எஜமானார்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று, 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்குப் பதிலாக புதிய ஒன்றை மாற்றீடு செய்யப்படும் என்று. இந்த நோக்கத்துக்காக பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் வரைபு, அரசியல் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. அதற்கான காரணம் அது பயங்கரவாதம் என்று வரையறை செய்யும் பதம் சட்டபூர்வமான அரசியல் மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகளையும் அதேபோல ஊடகங்களின் வழியாகத் தகவல்களைப் பரப்புதல் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்றவை பயங்கரவாத செயற்பாடுகள் என்று பெயரிடப்படுவதுதான். உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர், அரசாங்கம் அவர்களின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் ஸ்ரீலங்காப் பிரஜைகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுவதைத் தடை செய்வதற்கான பிரிவுகள் அதில் அடங்கியுள்ளதாகக் கூறி அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...