
சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஈழத்து முக்கிய திறன் ஆய்வாளர்களில் ஒருவருமான கே.எஸ். சிவகுமாரன் காலமானார்.
1936 ஒக்டோபர் 01ஆம் திகதி கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு புளியந்தீவு, சிங்களவாடி பிரதேசத்தில் பிறந்த கைலாயர் செல்லநைனார் சிவகுமாரன், கொழும்பு நகரில் நீண்டகாலம் வாழ்ந்து வந்த நிலையில் இவர் 15.09.2022 அன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
மரணிக்கும் போது அவருக்கு 85 வயதாகும்.
இவரது பெற்றோர் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்களாவர். இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிய இவர், மாலைதீவிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.