எஸ்.எம்.எம்.பஷீர்
“ஒரு
தவறு பல்கிப்
பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு
உண்மை தப்பாகிவிடமுடியாது.”
-
மஹாத்மா காந்தி -
“An error does not become truth by
reason of multiplied propagation, nor does truth become error because nobody
sees it.” - Mahathma Ghandi
இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று சொல்வர் எனக்கு பாடசாலையில் சமஸ்கிருதம் கற்பித்த
தியாகராஜ குருக்கள் கற்பித்த பல சம்ஸ்கிருத சொற்களும் , வாக்கியங்களும் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டன ஒரு
பாடம் என்ற வகையில் மட்டுமே சொல்லவும் எழுதவும் நேரிட்டவைகள் அவை., ஆனால் ஓரிரு சொற்கள் அல்லது வசனங்கள் மட்டும் மனதில்
செதுக்கப்பட்டதுபோல் பதிந்துவிட்டன அவற்றில் பிரதானமானது எனது கட்டுரைத் தலைப்பான
"சத்யமேவ ஜெயதே" எனும் "சத்தியமே வெல்லும்" என்ற அறம்சார்
கோட்பாடாகும்.