லங்கைக்கு ஏற்பட்ட டொலர் தட்டுப்பாட்டால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலையுயர்வும் ஏற்பட்டு, நாடு பெரும் பொருளாதார நெருக்கடியையும் மக்கள் பெரும் அவலங்களையும் சந்தித்து நிற்கின்றனர்.

இதன் காரணமாக பிரதமர் பதவி வகித்த மகிந்த ராஜபக்சவும் அவரது முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டிய சூழல் உருவானது. அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டு புதியதொரு அமைச்சரவையும் பதவி ஏற்றது.