ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய இந்திய விவசாயிகள் !- -பிரபாத் பட்நாயக்



சில குறிப்பிட்ட போராட்டங்களுக்கு, உடனடி முக்கியத்துவத்தைத் தாண்டியும், கூடுதலான முக்கியத்துவங்கள் உருவாகின்றன. அந்தப் போராட்டம் நடக்கும்போது களத்தில் இருந்தவர்களும் கூட அதன் முக்கியத்துவத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டிருப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு போர்க்களம்தான் பிளாசி. பிளாசியில் நடைபெற்றதனை யுத்தம் என்று கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு புறத்தில் படைக்கு தலைமையேற்ற தளபதி, கையூட்டு பெற்றுக்கொண்டு தனது படையை முன் நடத்தாமல் இருந்துகொண்டார்; இருந்தாலும் கூட, பிளாசியின் காடுகளுக்குள் போர் நடைபெற்ற அந்த நாள், உலக வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

விவசாயிகள் இயக்கத்திற்கும், மோடி அரசாங்கத்திற்கும் இடையே நடந்த போராட்டமும் அந்த வகையிலான ஒன்றுதான். கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் வியப்புக்குரிய உறுதிப்பாட்டிற்கு முன்பாக மோடி அரசாங்கம் மண்டியிட நேர்ந்திருப்பது, வெளிப்படையாகத் தெரிகிறது. இன்னொரு மட்டத்தில், இது நவ தாராளமயத்தினை பின்னடையைச் செய்துள்ளது. வேளாண்மை துறையில் கார்ப்பரேட் நுழைவு அதிகரிக்கும் போது, விவசாயிகளின் வேளாண்மை கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணிந்ததாகிறது. நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலில் இது மிக முக்கியமான விளைவு ஆகும். அந்த விளைவினை உருவாக்குவதுதான் வேளாண் சட்டங்களுடைய நோக்கமும் ஆகும்.

ஏகாதிபத்தியத்தின் விருப்பம்:

மேலே குறிப்பிட்ட இரண்டு பார்வைகளும் தெள்ளத் தெளிவானவையே. ஆனால் அவைகளுக்கு அப்பாற்பட்ட மூன்றாவது ஒரு நிலையும் இருக்கிறது, அது விவசாயிகளின் வெற்றிக்கு கூடுதலான முக்கியத்துவம் தருகிறது. இதுவரை அது போதுமான அளவு கவனிக்கப்படவில்லை. மிகவும் அடிப்படையான பொருளில், ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான் விவசாயிகளின் இந்த வெற்றி என்ற உண்மையோடு அது தொடர்புடையது. எனவே, பின்னடைவைச் சந்தித்த மோடி அரசாங்கத்தின் மீது, மேற்கத்திய ஊடகங்கள் வைத்த விமர்சனங்கள்  யாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்காது.

New York state judge issues prior restraint order against New York Times Eric London

 On Friday, New York Republican trial judge Charles Wood issued an order preventing the New York Times from publishing legal memoranda its reporters had acquired pertaining to Project Veritas, a right-wing publication which is presently suing the Times for libel.

 

The New York Times building in 2010 (Wikimedia Commons)

 

The order is an exercise in prior restraint and constitutes an extreme form of state censorship. The order requires the Times to remove references to the memos in question from its website, refrain from publishing any references to them in the future, and also orders the Times to “immediately delete/destroy” any copies of the documents. The documents “shall not be shown, transmitted, or disseminated in any manner to any persons absent written order of this Court,” the order states.

Making a killing: Pfizer’s domination of the market for COVID jabs Jean Shaoul

 

Pfizer, the pharmaceutical giant that dominates the market for COVID vaccines in the imperialist countries of North America, Europe and Japan, with bilateral agreements for more than six billion doses, is also set to become the main supplier to COVAX, the global vaccine programme to the world’s poorer countries.

Its displacement of AstraZeneca, whose shot is cheaper and easier to deliver, comes despite many receiving countries lacking the cold storage facilities needed to keep the Pfizer/BioNTech vaccine. Of the 600 million or more shots delivered to nearly 150 countries, more than 220 million are AstraZeneca’s and about 160 million Pfizer/BioNTech’s. But according to Gavi, the vaccine alliance that runs COVAX, Pfizer is far ahead in terms of “allocated” jabs, with about 470 million doses delivered or ready for delivery in the next few months, against 350 million from AstraZeneca.

UK Johnson government takes no new measures against pandemic Robert Stevens

 

 

Britain’s government is in full herd immunity mode, taking no further measures yesterday to combat the staggering spread of COVID in England, after supposedly reviewing hospital data.

Conservative Prime Minister Boris Johnson met with his chief medical and scientific advisers to discuss data on the length of stay in hospitals for COVID patients, their transition rates to Intensive Care Units and new daily COVID death figures.

Health Secretary Sajid Javid then ruled out any new COVID restrictions, if any were to be imposed, until the New Year. Johnson confirmed later in a tweet that “there will be no new restrictions introduced in England before the New Year.”

 

A man walks past a COVID-19 vaccination tent at St Thomas' Hospital, near the National Covid Memorial Wall in London, Monday, December 27, 2021. Over 12.2 million people have been infected with COVID in the UK and over 173,000 are dead from the disease. (AP Photo/David Cliff)

The decision was a fait accompli. Johnson is under instruction from his party’s most fascistic wing in the COVID Recovery Group (CRG) to ignore numerous warnings that the Omicron variant of the virus is surging out of control, infecting millions and rapidly overwhelming the National Health Service (NHS).

Sky News cited information seen by COVID data expert Tim White on the situation in England’s hospitals. As of Sunday, just one month after Omicron was first detected in Britain on November 27, “there were 7,536 COVID patients in English hospitals—up 17.1 percent” week-on-week.

சிலியின் இளம் வயது ஜனாதிபதியாகின்றார் கேப்ரியல் போரிக்


தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் புதிய அதிபராக, முன்னாள் மாணவ இயக்கத்தின் தலைவர் கேப்ரியல் போரிக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 35 வயதாகும் கேப்ரியல் போரிக் (Gabriel Boric), சிலி நாட்டின் மிக இளம் வயது அதிபர் எனும் பெருமையைப் பெறுகிறார்.

தற்போதைய அதிபர் செபஸ்தியான் பினேராவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்ற இடதுசாரித் தலைவரான போரிக்கின் வெற்றி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சிலியின் தெற்குப் பகுதியில் உள்ள பூன்டா அரேனாவைச் சேர்ந்தவர் கேப்ரியல் போரிக். சான்டியாகோவில் உள்ள சிலி பல்கலைக்கழகத்தில் படித்த போரிக், மாணவர் கூட்டமைப்புக்குத் தலைவராக இருந்தவர். கல்வியை மேம்படுத்தவும், கல்விக் கட்டணங்களைக் குறைக்கவும் கோரி 2011-ல் நடந்த மாணவர் போராட்டங்களின் வழியே கவனம் ஈர்த்தவர். 2014-ல், கீழவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு 25 கூட ஆகவில்லை.

13வது திருத்தமும் தமிழ் சமூகமும்

 


லங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 13ம் திருத்தம் காரணமாகவே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதையும் அது தற்போது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக ஆகி இருப்பதையும் நாம் அறிவோம். கடந்த இரண்டு வருடங்களாக பேசப்படாமல் இருந்த இந்த 13ஆவது திருத்தம் தற்போது தமிழ் அரசியலில் பேசு பொருளாக மாறி இருப்பதால் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தமிழர்கள் அதிகாரங்களைக் கேட்பது இலங்கையில், குறிப்பாக தேசிய அரசியலில், கெட்ட வார்த்தையாக மாறியிருப்பதால், தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையான 13ம் திருத்த சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த வேண்டும் என்பது தென்னிலங்கையில் வெவ்வேறான பிரதிபலிப்புகளை ஏற்படுத்த முடியும். இதை வைத்தே மற்றொரு இனவாத அரசியலை கட்டி எழுப்பவும் முடியும்.

புதிய யாப்பு தொடர்பான வரைவு பணிகள் நடைபெற்று வருவதாக அரசாங்கம் தெரிவித்ததையடுத்தே பல்வேறு யூகங்கள் கிளம்பத் தொடங்கின. அவற்றில் முக்கியமானது, புதிய வரைவில் 13ம் திருத்தத்தை முற்றிலுமாக நீக்கி விடுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்ற ஊகமாகும். பாராளுமன்றத்தில் ஒரு திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 13ம் திருத்தத்தை செல்லுபடியற்றதாக்கலாம் என்பது உண்மையானாலும் அது ஒரு பெரிய அரசியல் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதோடு இந்தியாவுடனான நட்புறவில் ஒரு கசப்புணர்வையும் உருவாக்கிவிடும் என்பதால் ஓசையில்லாமல் புதிய அரசியலமைப்பில் 13ம் திருத்தத்தை உள்ளடக்காமல் விட்டுவிடலாம் என அரசு கருதி அதன்படியே நடந்து கொள்ளப்போகிறது என்றெழுந்த ஊகத்தையடுத்தே தமிழ் அரசியலில் 13 ஒரு பேசு பொருளாகி இருக்கிறது.

இலங்கையில் அரிசி மாபியாக்கள் எவ்வாறு உருவாகின்றனர்? -சதானந்தன்

 

 

 

 

 

லங்கையில் வாழ்கின்ற மக்களில் 90 சத விகிதத்துக்கும் அதிகமானோர் அரிசியையும், அரிசியை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பொருட்களையுமே தமது நாளாந்த உணவாக உட் கொள்கின்றனர். ஆனால் இப்பொழுது ஏனைய பொருளாதார நெருக்கடிகளுடன் அரிசித் தட்டுப்பாடும் விலையுயர்வும் நாட்டில் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி கிடைப்பதை உத்தரவாதம் செய்வதற்காக அரிசிக்கு உத்தரவாத விலையை நிர்ணயித்து செப்ரெம்பர் 28 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது. ஆனால், அரிசி ஆலை முதலாளிகள் அரிசி உற்பத்தியை நிறுத்தியதுடன், அரிசி வர்த்தகர்கள் தமது அரிசிக் கையிருப்புகளைப் பதுக்கிவிட்டு, கள்ள மார்க்கட்டில் அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட ஒன்றரை மடங்கு அதிக விலைக்கு அரிசியை விற்கத் தொடங்கினர். இதனால் பொதுமக்கள் அரிசியைப் பெற முடியாமல் திண்டாடியதுடன், வாங்க முடிந்தவர்களும் அதிக விலை கொடுக்க வேண்டி ஏற்பட்டது. இதனால் அரசாங்கம் விலை நிர்ணயம் செய்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவினதும் சீனாவினதும் ஜனநாயகங்கள்!--சங்கரன்

 

 

 

 


சீனாவின் சோசலிச ஜனநாயகம் அமெரிக்காவின் முதலாளித்துவ ஜனநாயகத்தை விட உண்மையானதும் பலமானதும் என சீனாவின் அரசியல்வாதிகளும், ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். சமீபத்தில் சீனா தனது நாட்டின் ஜனநாயக செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அது பற்றி கருத்து வெளியிடுகையிலேயே சீனத் தரப்பினர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், அமெரிக்காவில் அரசியல்வாதிகள் தமது நலன்களில் அக்கறையுள்ள குழுக்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஆனால் சீனாவில் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள் முழு நாட்டு மக்களினதும் நலன் கருதியே அமுல்படுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அவர்கள் இரு நாடுகளிலும் செயல்படும் அரசமைப்பு முறைகளை ஒப்பீடு செய்து இதை விளக்கிக் கூறியுள்ளனர்.

ஐக்கியம் முழுமையானதாகவும் மனப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும்!

 

 

 

 

 

ண்மையில் கொழும்பில் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும், வேறு சில தமிழ் உதிரிக் கட்சிகளும், சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசும், மனோ கணேசனின் முன்னணியும் தமிழ் பேசும் மக்களிடையே ஒற்றுமை உருவாகிவிட்டது எனப் பிரகடனம் செய்துள்ளன.

அவர்களது இந்தப் பிரகடனத்தைப் பார்க்கும் போது, சில கட்சிகள் மட்டும் கூடிப் பேசினால், முழுத் தமிழ் பேசும் மக்களினதும் ஐக்கியம் உருவாகி விடுமா என்ற கேள்வி எழுகின்றது. வடக்கு கிழக்கில் செயல்படுகின்ற ஏனைய முக்கிய கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் சமூக ஐனநாயகக் கட்சி, மலையகத்தின் பிரதான கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இன்னொரு கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஏன் இந்த தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் பங்குபற்றவில்லை. அவர்கள் அழைக்கப்படவில்லையா? அல்லது அழைத்தும் அவை பங்குபற்றவில்லையா? இந்தக் கட்சிகளை சில்லறைக் கட்சிகள் என ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் இக்கட்சிகளுக்கும் 10 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...